செய்திகள்

செய்திகள்

செய்திகள்

எமது நாட்டுக்கே உரிய ஒரு அரசியல் தீர்வை முன்வைக்க அரசு நடவடிக்கை -மஹிந்த சமரசிங்க

mahinda_samarasinghe_.jpgநாட்டு மக்கள் அனைவருக்கும் பொதுவானதும் எமது நாட்டுக்கே உரியதுமான ஒரு அரசியல் தீர்வை மிக விரைவில் முன்வைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக இடர் முகாமைத்துவ மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஜெனீவாவில் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 11வது அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

நாட்டின் ஏனைய பகுதி மக்கள் அநுபவிக்கும் உரிமைகளை வடபகுதி மக்களுக்கும் பெற்றுக்கொடுக்க வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்துள்ளார். எனவே, அவர்களுக்கான அரசியல் தீர்வை உலகில் எந்த நாடும்,  அரசாங்கமும் கொண்டுவராத வேகத்தில் முன்வைக்க வேண்டும். ஆனால் அது வேறு ஒரு நாட்டின் மூலம் பெற்றுக்கொண்டதாக இருக்காது. வேறு நாடுகளின் தீர்வு யோசனைகளை ஆராய்ந்துகொண்டிருப்பதற்கு எமக்கு நேரமில்லை.

எனவே,  எமது நாட்டுக்கே உரிய ஒரு தீர்வையே நாம் காணவேண்டும். அது அனைத்து மக்களாலும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்க வேண்டும். இந்தத் தீர்வுக்காக நாம் சர்வதேச சமூகத்தின் ஆதரவினை எதிர்பார்க்கின்றோம்; மாறாக இடையூறுகளை அல்ல,  உலகம் வெற்றிகொள்ள முடியாத சவால்களை நாம் வெற்றிகொண்டிருக்கும் வேளையில்,  தீர்வொன்றைக் காண்பதற்கு எமக்கு முடியாது என சர்வதேச சமூகம் சந்தேகிக்கின்றதா? இல்லை. எமக்கு இதைச் செய்ய முடியும்’ என்றும் அமைச்சர் சமரசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

தேசிய வெற்றி விழாவில் ஜனாதிபதி தமிழில் உரை

he_speech_ranaviru_.jpgஎல்.ரீ.ரீ.ஈ.  யினரைத் தோற்கடித்து பாதுகாப்புப் படைவீரர்கள் பெற்றுத் தந்த வெற்றி எமது நாட்டில் வாழும் எல்லா மக்களினதும் வெற்றியாகும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழில் தெரிவித்தார்.  படைவீரர்களின் வெற்றியைக் கொண்டாடும் தேசிய வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.

கொழும்பு,  காலிமுகத்திடலில் தற்போது மிகவும் கோலாகலமாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் இவ்வைபவத்தில் சற்றுநேரத்துக்கு முன்னர் உரையாற்றிய ஜனாதிபதி தனது உரையின் ஆரம்பத்தில் சிங்களத்தில் சில வார்த்தைகளைக் கூறிவிட்டு தமிழ் மொழியில் உரையாற்றினார். ஜனாதிபதி தமதுரையில் குறிப்பிட்ட தமிழ் வாசகங்கள் கீழே.

அன்பர்களே,  இது நம் எல்லோருடைய தாய்நாடு. இந்த நாட்டில் நாம் எல்லோரும் ஒருதாய் மக்களாக சகோதரர்கள் போல் வாழ வேண்டும். இங்கே எந்தவித பேதமும் இருக்க முடியாது.

எல்.ரீ.ரீ.ஈ. யினருடன் நடத்திய யுத்தம் தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தம் அல்ல. எல்.ரீ.ரீ.ஈ. யினரின் பிடியிலிருந்து அப்பாவி சகோதர தமிழ் மக்களைப் பாதுகாக்க எமது படைவீரர்கள் உயிர் நீத்தார்கள். அவர்கள் செய்த சேவை மறக்க முடியாதது.

எல்.ரீ.ரீ.ஈ. யினரைத் தோல்வி பெறச் செய்து நாம் பெற்ற வெற்றி இந்த தேசத்தின் வெற்றி. நீங்கள் பெற்றுத் தந்த பெருவெற்றி. எமது நாட்டில் வாழும் எல்லா மக்களின் வெற்றி.

அன்பான படைவீரர்களே,  இப்போது பயங்கரவாதிகளுடன் செய்த யுத்தம் முடிந்துவிட்டது. இனி நாம் எமது தமிழ் மக்களுடைய உள்ளங்களை வெற்றிகொள்ள வேண்டும். தமிழ் பேசும் மக்களைப் பாதுகாக்க வேண்டும். அவர்கள் பயம்,  சந்தேகம் இல்லாமல் வாழ வேண்டும். அதுதான் நம் எல்லோருடைய கடமை.

இந்நாட்களில் கடலில் குளிப்பது மிகவும் ஆபத்தானது

sea.jpgஇந் நாட்களில் கடலில் குளிப்பது மிகவும் ஆபத்தானது என சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை எச்சரித்துள்ளதுடன் இவ்வாறு கடலில் குளிக்கச் செல்லும் சிறுவர்களைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பெற்றோர்கள் ஆசிரியர்கள் மற்றும் பொறுப்பு வாய்ந்தவர்களை கேட்டுள்ளது.

கடந்த சில நாட்களில் கடலில் மற்றும் நீர்த்தேக்கங்களில் குளிக்கச் சென்ற பலர் விபத்துக்குள்ளாகியுள்ளனர். கவனயீனமே இவ்வாறான விபத்துக்களுக்கு கூடுதலான காரணம் என்று அதிகாரசபை தெரிவிக்கின்றது.

படைவீரர்களின் வெற்றியைக் கொண்டாடும் தேசிய வைபவம் இன்று

nationalflagflatteringsss.gifநாட்டி லிருந்து தீவிரவாதத்தை முழுமையாக முறியடித்த படைவீரர்களின் வெற்றியைக் கொண்டாடும் தேசிய வைபவம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று கொழும்பில் மிகவும் கோலாகலமாக நடைபெறவுள்ளது.

மிகவும் பிரமாண்டமான முறையில் கொழும்பு,  காலி முகத்திடலில் இன்று காலை நடைபெறவுள்ள இவ்வைபவத்தை முன்னிட்டு கொழும்பு நகரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் போக்குவரத்தும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இன்றைய வைபவத்தில் பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்க,  சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம். லொக்குபண்டார, பிரதம நீதியரசர் சரத் என். சில்வா,  அமைச்சர்கள்,  பாராளுமன்ற உறுப்பினர்கள்,  மாகாண ஆளுநர்கள், முதலமைச்சர்கள்,  உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தூதுவர்கள் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

பாதுகாப்புப் படையினரின் வெற்றியைப் பாராட்டும் வகையிலும், அவர்களது சாகசங்களை வெளிப்படுத்தும் வகையிலும் முப்படையினர் மற்றும் பொலிஸாரின் மரியாதை அணிவகுப்புக்களும் இன்று இடம்பெறவுள்ளன. அணிவகுப்பின்போது யுத்த நடவடிக்கைகளில் அங்கவீனமுற்ற படைவீர்ரகளும் சக்கர நாற்காலிகளில் இருந்தவாறு பங்கேற்கவுள்ளனர்.

இந்த அணிவகுப்பின்போது யுத்தத்தில் படையினரால் பயன்படுத்தப்பட்ட கனரக ஆயுதங்களின் பவனியும்,  கடல் மற்றும் விமானப் படையினரின் சாகசங்களும் இடம்பெறவுள்ளன.

இந்த நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விசேட உரையாற்றவுள்ளதுடன் வடக்கு,  கிழக்கு மீட்பு நடவடிக்கைகளின்போது களமுனையிலிருந்து செயற்பட்ட படைவீரர்கள் மற்றும் படைத் தளபதிகள் கௌரவிக்கப்படவுள்ளனர்.

இதுதவிர பாடசாலை மாணவ, மாணவிகளின் அணிவகுப்புக்களும்,  கலாசார பாரம்பரியங்களைப் பிரதிபலிக்கும் வகையிலான அணிவகுப்பும் இடம்பெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் முக்கிய பங்காளி இந்தியா – அமைச்சர் போகொல்லாகம

rohitabogallaagama.jpgஅரசிய லமைப்பின் 13 ஆவது திருத்தத்திலும் கூடுதலாக புதிய தீர்வுத்திட்ட யோசனையானது இப்போது “தீர்மானிக்கப்படும் கட்டத்தில்’ இருப்பதாக வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லாகம தெரிவித்திருப்பதுடன், இதன் மூலம் அதிகாரப் பகிர்வு நடவடிக்கைகள் அதிகளவில் “உறுதிப்படுத்தப்பட்டவை’யாக அமையும் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.  சிங்கப்பூரில் இடம்பெற்ற ஆசிய பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொண்ட அமைச்சர் போகொல்லாகம “இந்து’ பத்திரிகைக்கு இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இலங்கையின் எதிர்காலத்தைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளில் “இந்தியாவை முக்கியமான பங்காளியாக’ இலங்கை பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை இதனைக் கூறியுள்ள அமைச்சர் போகொல்லாகம; “”உள்நாட்டில் உருவாக்கப்படும் (அரசியல்) நடவடிக்கைகளில் இந்தியா எப்போதும் அங்கமாக உள்ளது’ என்று குறிப்பிட்டார். ஆனால் விடுதலைப் புலிகளுக்குப் பின்னரான முன்முயற்சிகளை இலங்கை உருவாக்குவது தொடர்பாகவோ அல்லது துரிதமாக முன்னகர்த்துவது குறித்தோ இந்தியா எந்தவிதமான பங்களிப்பை வழங்கமுடியும் என்பது பற்றி அவர் விசேடப்படுத்திக் குறிப்பிட்டிருக்கவில்லை.

புதுடில்லியானது யோசனைகள் உள்நாட்டு மட்டத்திலிருந்து உருவாக்கப்படுவதற்கு மதிப்பளித்துள்ளது. இலங்கை இந்திய உடன்படிக்கையிலிருந்தே அதிகாரப்பகிர்வு தொடர்பான 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் வடிவமைக்கப்பட்டது. ஆனால், உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட நடவடிக்கைகள் மூலமான விளைவையே சட்டமூலம் ஏற்படுத்தியுள்ளது.

புதிய சூத்திரமான “13 ஆவது திருத்தத்திலும் கூடுதலானது’ இப்போது தீர்மானிக்கப்படும் கட்டத்தில் இருக்கிறது. இது அதிகாரப்பகிர்வு ஏற்பாடுகளை அதிகளவுக்கு உறுதிப்படுத்தப்பட்டதாக கொண்டதாக அமையும் என்றும் போகொல்லாகம கூறியுள்ளார்.

தற்போதைய நடவடிக்கையானது மத்தியில் பிராந்திய மட்டப் பிரதிநிதித்துவத்தை விரிவானதாக்குவதற்கும் வழி வகுக்கக்கூடும். அதாவது இரு சபைகள் என்ற அணுகுமுறை மூலம் பிராந்திய மட்ட பிரதிநிதித்துவத்தை மத்தியில் விரிவுபடுத்துவதற்கு வழிசமைக்கக்கூடும் என்று அவர் கூறியுள்ளார்.

இந்தக் கொள்கையை உருவாக்குவது தொடர்பாக ஜனாதிபதியின் விசேட உரிமையின் பரிமாணம் குறித்து அவர் வெளிப்படுத்தவில்லை. பொருளாதார ரீதியில் இப்போது அபிவிருத்தி நிகழ்ச்சிநிரல் விரிவுபடுத்தப்பட்டிருப்பதாக அவர் கூறியுள்ளார். தற்போது இந்தியாவுடன் இருக்கும் வர்த்தக உடன்படிக்கை தொடர்பாக அவர் இதனைக் கூறியுள்ளார்.

இலங்கையில் சீனா, பாகிஸ்தானின் ஏதாவது அரசியல், அபிவிருத்தி நிகழ்ச்சி நிரல்களில் சம்பந்தப்பட்ட பங்களிப்புகள் குறித்து கருத்துத் தெரிவித்த அவர்; வர்த்தகத் துறைமுகத்திற்காக கடனடிப்படையில் சீன அரசு உதவியுள்ளதாகவும் இது சீன ஒப்பந்தக் காரர்களால் நிர்மாணிக்கப்படுவதாகவும் அதற்கு அப்பால் வேறு எதுவும் இல்லை எனவும் அவர் கூறினார். பொதுவாகக் கூறினால் எமது பாதுகாப்புத் தொடர்பான தேவைகள், நாம் பெற்றுக்கொள்பவை பற்றி இந்தியாவுக்கு நன்கு தெரியும். ஆதலால், எமது பாதுகாப்பு தேவைகளை நாம் எவ்வாறு கையாள்கிறோம் என்பது தொடர்பாக பகிரங்கமாக ஒலிபரப்புவதற்கான தேவை இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் 5 ஆம் திகதி

மூன்றாண்டுகளாக பிற்போடப்பட்டு வரும் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் ஐந்தாம் திகதி வெள்ளிக்கிழமை காலை யாழ்ப்பாண செயலகத்தில் நடைபெறவுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கே.கணேஷ் அறிவித்துள்ளார். யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் கடைசியாக 2006 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 16 ஆம் திகதி நடைபெற்றது. இதன் பின்னர் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தைக் கூட்ட அரசாங்க அதிபர் மூன்று முறை அறிவித்திருந்தும் பின்னர் ஒத்திவைக்கப்பட்டது.

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்துக்கு சமூக சேவை மற்றும் சமூக நலத்துறை அமைச்சரும் வடமாகாண விசேட செயலணிக் குழுத் தலைவருமான டக்ளஸ் தேவானாந்தா தலைமை தாங்குவார். கூட்டத்தில் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், வட மாகாண ஆளுநர், வடமாகாண சபையின் செயலாளர் ஆகியோர் பங்கு கொள்வரென அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழறிஞர் முனைவர் இரா.திருமுருகனார் இயற்கை எய்தினார்

ira1thiru.JPGபுதுவைத் தமிழறிஞர் முனைவர் இரா.திருமுருகனார் 03.06.2009 விடியற்காலை 1 மணிக்குப் புதுச்சேரியில் உள்ள தம் இல்லத்தில் இயற்கை எய்தினார் இன்று(03.06.2009.) மாலை 4 மணிக்கு உடல் நல்லடக்கம் செய்யப்படும். புதுவைத் தமிழறிஞர் முனைவர் இரா.திருமுருகனார் பற்றிய சில குறிப்புகள்

இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய இலக்கணப் புலவர்களில் முனைவர் இரா.திருமுருகனார் அவர்கள் குறிப்பிடத் தகுந்தவர் ஆவார். இயற்றமிழும் இசைத்தமிழும் வல்ல அறிஞர் இவர். இவர் குழல் இசைப்பதில் தனித்திறம் பெற்றவர்.அதுபோல் வாய்ப்பாட்டிலும் தேர்ந்தவர். புதுச்சேரி அரசுப் பள்ளியில் பல காலம் ஆசிரியராக இருந்து தமிழ்ப்பணியாற்றியவர்.

புதுச்சேரி மாநிலத்தில் கூனிச்சம்பட்டு என்னும் ஊரில் 16.03.1929 இல் பிறந்தார்.இவர்தம் பெற்றோர் பெயர் அ.அரசு,இரா.அரங்கநாயகி. திருமுருகனாரின் இயற்பெயர் இரா.சுப்பிரமணியன் என்பதாகும்.தனித்தமிழ் ஆர்வம் ஏற்பட்ட பிறகு தம் பெயரைத் திருமுருகன் என மாற்றிக்கொண்டவர்.

இவர் பண்டிதம்(1951),கருநாடக இசை-குழல் மேனிலை(1958), பிரஞ்சு மொழிப்பட்டயம் (1973),கலைமுதுவர்,கல்வியியல் முதுவர்,மொழியியல் சான்றிதழ்(1983),முனைவர்(1990) உள்ளிட்ட பல பட்டங்கள் சான்றுகளைப் பெற்றவர்.44 ஆண்டுகள் அரசுப்பணியாற்றிய பின்னர் ஓய்வுக்குப் பின் தமிழ் வளர்ச்சி சிறகத்தின் தனி அலுவலர் பணிபுரிந்து புதுச்சேரியில் தமிழ் வளர்ச்சிக்கு வேண்டிய ஆக்கப்பணிகளில் ஈடுப்பட்டவர்.

தமிழ் வளர்ச்சி நடவடிக்கைக்குழு என்னும் அமைப்பின் சிறப்புத் தலைவராகவும், புதுவைத் தமிழன்பர்கள் தமிழ்ப்பணி அறக்கட்டளையின் நிறுவுநராகவும், தெளிதமிழ் என்னும் திங்கள் ஏட்டின் சிறப்பு ஆசிரியராகவும், தமிழ்க்காவல் என்னும் இணைய இதழின் ஆசிரியராகவும் பணிபுரிபவர்.

சென்னைப் பல்கலைக்கழக இசைத்துறைப் பாடத்திட்டக் குழுவில் உறுப்பினராகவும்,புதுவை அரசின் ஆட்சிமொழிச் சட்ட நடைமுறை ஆய்வுக்குழு உறுப்பினராகவும் விளங்குபவர். பல்வேறு பல்கலைக் கழகங்களில் அறக்கட்டளைப் பொழிவுகள் செய்த பெருமைக்கு உரியவர்.தமிழ் செம்மொழி ஆய்வு நிறுவனத்திற்குப் பழந்தமிழ்ப் பனுவல்களை ஒலி வட்டாக்கிய குழுவில் முதன்மையிடம் பெற்றவர்.

இன்றைய தமிழுக்குப் புதிய இலக்கணம் உருவாக்குவதிலும்,இசைத்தமிழ் யாப்பிலக்கணம் உருவாக்குவதிலும்,தமிழ்நலம் கெடும் இடங்களிலில் தலையிட்டுக் கிளர்ச்சி செய்வதிலும் ஈடுபட்டு வருபவர்.

தமிழ்ப்பணிகளின் பொருட்டு இவர் பிரான்சு, செருமனி, உரோமை, மலேசியா, சிங்கப்பூர்,இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று வந்த பெருமைக்கு உரியவர்.என் தமிழியக்கம் என்னும் பெயரில் ஐயா உருவாக்கியுள்ள நூல்களில் இவர்தம் நாற்பதாண்டுக் கால பணிகள் பதிவாகியிள்ளன. சிந்துப்பாடல்களின் யாப்பிலக்கணம் தொடர்பிலான இவர்தம் முனைவர் பட்ட ஆய்வேடு முதன்மையானது. சிந்துப்பாவியில் என்னும் இவர்தம் நூலும் சிந்து இசை பற்றிய இலக்கணத்தை அரிதின் எடுத்துரைக்கும் நூலாகும்.இவர்தம் தமிழ்ப்பணிகள் கண்டு பல நிறுவனங்கள் இவரைப் பாராட்டியுள்ளன.

இலக்கணச்சுடர்,இயலிசைச்செம்மல்,முத்தமிழ்ச்சான்றோர்,நல்லாசிரியர்(நடுவணரசு),மொழிப்போர் மறவர், சிந்திசைச்செம்மல், பாவலர் அரிமா, தமிழ்க்காவலர், கலைச்செல்வம்,பாவேந்தர் பைந்தமிழ்க்காவலர் உள்ளிட்ட பட்டங்ஙகளும் விருதுகளும் குறிப்பிடத்தகுந்தன.

முனைவர் இரா.திருமுருகனாரின் தமிழ்க்கொடைகளுள் குறிப்பிடத்தகுந்தன:

01.நூறு சொல்வதெழுதல்கள்,1957
02.இனிக்கும் இலக்கணம்,1981
03.கம்பன் பாடிய வண்ணங்கள்,1987
04.இலக்கண எண்ணங்கள்,1990
05.பாவேந்தர் வழி பாரதி வழியா?,1990
06.சிந்து இலக்கியம்,1991
07.சிந்துப்பாடல்களின் யாப்பிலக்கணம்,1993
08.சிந்துப்பாவியல்,1994
09.மொழிப்பார்வைகள்,1995
10.பாவலர் பண்ணை,1997
11.மொழிப்புலங்கள்,1999
12.இனிய தமிழைப் பிழையின்றி எழுத எளிய வழிகள்,2001

மொழி வளர்ச்சி

13.என் தமிழ் இயக்கம்-1, 1990
14.என் தமிழ் இயக்கம்-2, 1992
15.தாய்க்கொலை,1992
16.என் தமிழ் இயக்கம்-3, 1994
17.என் தமிழ் இயக்கம்-4, 1996
18.என் தமிழ் இயக்கம்-5, 1998
19.எருமைத் தமிழர்கள்,1998
20.இன்றைய தமிழர்கள் மொழிப்பற்று உள்ளவர்களா?,1999
21.கழிசடைகள்,2002
22.என் தமிழ் இயக்கம்-6, 2005
23.என் தமிழ் இயக்கம்–7,2006
24.இலக்கிய எண்ணங்கள்,1998
25.புகார் முத்தம்,1991
26.கற்பு வழிபாடு,1994

பாடல்

27.ஓட்டைப் புல்லாங்குழல்,1990
28.கம்பனுக்குப் பாட்டோலை,1990
29.பன்னீர்மழை,1991
30.அருளையா? பொருளையா?,1999

இசை

31.பாவேந்தரின் இசைத்தமிழ்,1990
32.இசுலாம் வளர்த்த இசைத்தமிழ்,1996
33.ஏழிசை எண்ணங்கள்,1998
34.சிலப்பதிகாரம்-தமிழன் படைத்த கலைக்கருவூலம்,2000

வரலாறு

35.புதுச்சேரி பாண்டிச்சேரியுடன் போராடுகிறது,1994
36.பாவாணர் கண்ட இன்றைய தமிழின் இலக்கணங்கள்,2003

தகவல் ; முனைவர் மு.இளங்கோவன்

விமானம் விபத்துக்குள்ளான இடம் தெரிந்தது

01-air-france.jpgவிபத்துக் குள்ளான ஏர் பிரான்ஸ் விமானத்தின் பாகங்கள் பிரேசிலுக்கு 650 கி.மீ. வட கிழக்கே அட்லாண்டிக் கடலில் கிடப்பது தெரியவந்துள்ளது. அந்தப் பகுதியில் பிரான்ஸ், பிரேசில் விமானப் படையினரும் கடற்படையினரும் நடத்திய தேடுதல் வேட்டையில் பயணிகள் யாரும் உயிர் தப்பவில்லை என்று தெரியவந்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை 228 பயணிகளுடன் AF 447 என்ற அந்த விமானம் இரவு 11.30 மணிக்கு பிரேசிலில் இருந்து புறப்பட்டது. ஆனால், நள்ளிரவு 2.33 மணிக்கு அந்த விமானத்துடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இந்த நேரத்தில் விமானம் விபத்துக்குள்ளானதாகக் கருதப்படுகிறது.

நேற்று மாலை பிரேசிலின் பெர்னான்டோ டி நொரோன்ஹா என்ற தீவுக்கு 650 வட கிழக்கே விமானத்தின் சிதறிய பாகங்கள் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு விமான சீட், ஒரு மிதவை, ஒரு இறக்கைத் துண்டு உள்ளிட்ட பாகங்கள் அங்கு மிதக்கின்றன. அப் பகுதியில் விமான எரிபொருளும் கசிந்து கிடக்கிறது. விமானத்தின் கருப்புப் பெட்டியை மீட்கும் முயற்சிகளும் நடந்து வருகின்றன. அதை ஆய்வு செய்தால் தான் விமானம் விபத்துக்குள்ளானதற்கான சரியான காரணம் தெரியவரும்.

இப்போதைக்கு கடும் காற்றோட்டம் காரணமாக ஏற்பட்ட திடீர் அதிர்வினால் அல்லது மின்னல் தாக்கியதால் விமானத்தின் கருவிகள் செயலிழந்து விபத்துக்குளாகியிருக்கக் கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது. விமானத்தில் 3 பைலட்டுகள் இருந்தும் கூட கடைசி நிமிட பிரச்சனை குறித்து தரைக்கட்டுப்பாட்டு நிலையத்துக்கு தகவல் தரக் கூட கால அவகாசம் இல்லாத அளவுக்கு படுவேகத்தில் விபத்து நடந்து முடிந்துள்ளது.

விபத்தின்போது விமானத்தின் உள் காற்றழுத்தம் (pressure) குறைந்துவிட்டதாகவும், பல மின்சார எந்திரங்கள் செயல்படவில்லை என்றும் அதன் கம்ப்யூட்டர்கள் தரைக்கட்டுப்பாட்டு நிலையத்துக்கு தகவல் தந்தது குறிப்பிடத்தக்கது. தயாரிக்கப்பட்டு 4 வருடமே ஆன இந்த விமானத்தில் கடந்த ஏப்ரலில் வழக்கமான பராமரிப்புப் பணியும் நடந்துள்ளது.

இன்று கருணாநிதியின் 86வது பிறந்த நாள்

karunanithi.jpgமுதல்வர் கருணாநிதியின் 86வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அண்ணா அறிவாலயத்தில் அவர் தொண்டர்களை சந்தித்து வாழ்த்து பெறுகிறார்.

இன்று காலை பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார் ஆகியோரின் நினைவிடங்களுக்குச் சென்று அஞ்சலி செலுத்திய முதல்வர் பின்னர் அண்ணா அறிவாலயம் வந்தார். அங்கு அவரை ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வரிசையில் நின்று சந்தித்து வாழ்த்து தெரிவிக்கின்றனர்.

முஸ்லிம் தலைமைகளிடமுள்ள ஒற்றுமை தமிழ் தலைவர்களிடம் இல்லை – அமைச்சர் முரளி

karuna0000.jpgஅமைச்சர் விநாயக மூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) காத்தான்குடிக்கு நேற்று முன்தினம் மாலை விஜயம் செய்தார். புலிகள் இயக்கத்திலிருந்து அவர் பிரிந்ததன் பின்னரும், அமைச்சரானதன் பின்னரும் காத்தான்குடிக்கு அவர் மேற்கொள்ளும் முதலாவது விஜயம் இதுவாகும்.

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ்வின் அழைப்பின் பேரில், அவரது மாகாண அமைச்சில் காத்தான்குடி காரியாலயத்தில் பிரதேச முக்கியஸ்தர்கள், கல்விமான்கள், பள்ளிவாயல் தலைவர்களைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

இங்கு உரை நிகழ்த்திய அமைச்சர் முரளிதரன், பிரபாகரனின் முட்டாள்தனமான நடவடிக்கைகளினாலேயே தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் இந்த நிலைக்குச் சென்றுள்ளது. பல தடவைகள் ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டுவிட்டு பேச்சின் மூலம் தீர்வைக் காண்போம் என நான் கூறிய போதெல்லாம் அவற்றை எல்லாம் அவர் உதாசீனம் செய்துவிட்டார். எனது கருத்துக்களை அவர் உள்வாங்கியிருந்தால் அவருக்கு இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது உயிருடனும் இருந்திருப்பார். ஆயுதப் போராட்டத்தின் மூலம் எதனையுமே சாதிக்க முடியாது.

ஜனநாயக வழியில் தேசிய ரீதியில் ஆழுகின்ற அரசுகளுக்கு ஆதரவு வழங்கியதனாலேயே முஸ்லிம் பிரதேசங்கள் அபிவிருத்தியடைந்துள்ளன. 30 வருடங்களாக முஸ்லிம் சமூக பிரதிநிதிகள் தமது பிரதேசங்களை அபிவிருத்திச் செய்துள்ளனர். ஆனால் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களால் எதையுமே செய்ய முடியவில்லை. முஸ்லிம் தலைமைகளிடம் ஒற்றுமை உண்டு தனது சமூகத்திற்கு ஏதுமென்றால் ஒன்றாகி விடுவார்கள்.

ஆனால் தமிழ் தலைமைகள் அவ்வாறில்லை. 14 தமிழ் அரசியல் கட்சிகள் உள்ள தலைமைக்காக மோதுவதைத் தவிர எதையுமே ஆரோக்கியமாகச் செய்தவரலாறில்லை. ஜனாதிபதி கூட்டிய சர்வகட்சி மாநாட்டின் போதும் தமிழ் அரசியல் தலைமைகள் மோதுகின்ற அளவிற்கு வேற்றுமை மாத்திரமே மிஞ்சியிருக்கிறது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் 22 நாடாளுமன்ற உறுப்பினர்களும் என்ன செய்கிறார்கள். வெறும் பசப்பு வார்த்தை பேசிக் கொண்டு தமிழ் மக்களை ஏமாற்றிக் கொண்டு திரிகின்றனர். தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையினை ஆளும் கட்சியான சு.க. ஊடாக அதிகரிப்பதே எனது இலக்கு. கிழக்கில் மாத்திரமல்ல வடக்கிலும் ஆளும் கட்சியூடான தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை ஆதரிக்கவேண்டும்.

தமிழ், முஸ்லிம் சமூக வேற்றுமைகளை மறந்து, ஐக்கியத்துடன் செயற்பட வேண்டும். அதற்காகவே தேசிய நல்லிணக்க அமைச்சைப் பொறுப்பேற்றேன். யுத்தம் முடிந்துவிட்டது. இனி இனங்களிடையே ஒற்றுமையைக் கட்டி எழுப்ப வேண்டும். அமைச்சர்களான ஹிஸ்புல்லா, அதாஉல்லா, அமீர்அலி, ரிஷாட் பதியுதீன் ஆகிய முஸ்லிம் அமைச்சர்களின் சேவைகளைப் பாராட்டுகின்றேன். வன்னியில் இடம்பெயர்ந்து வவுனியா நலன்புரி நிலையங்களில் தங்கியிருக்கும் தமிழ் மக்களுக்கு அங்கேயே நின்று ரிஷாட் அமைச்சர் அம்மக்களின் நலன் விடயங்களில் அக்கறைகாட்டி வருகின்றார். ஒரு முஸ்லிம் அமைச்சராக இருந்து கொண்டு அவர் அங்கு ஆற்றிவரும் சேவையானது வரவேற்கத்தக்கதாகும்.

அமைச்சர் ஹிஸ்புல்லாவும் தமிழ், முஸ்லிம் வேறுபாடில்லாமல் சேவையாற்றி வருகின்றார். இந்த நேரத்தில் அவர் பாராளுமன்றத்தில் இருந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். அன்று நான் பிரபாகரனிடத்தில் அடிக்கடி கூறுவேன் முஸ்லிம்களை புறக்கணிக்காதீர்கள், முஸ்லிம் தலைவர்களுடன் பேசுங்கள் என்று. அதுதான் அவர் இறுதியில் முஸ்லிம் தலைவர்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தமாகும்.