எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

கனகரட்னம் குறித்து உண்மை நிலை என்ன?

kanagaratnam.jpg
முள்ளிவாய்க்கால் மோதல் பகுதியில் அகப்பட்டிருந்த வன்னி மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரத்தினத்தின் நிலை குறித்து அறியத்தருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். சபாநாயகர் பிள்யூ. ஜே. எம். லொக்குபண்டாரவுக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர் சதாசி்வம் கனகரட்னம் கடந்த ஒருவார காலத்துக்கு முன்னர் தம்முடன் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டிருந்ததுடன், அதன் பின்னர் அவருக்கும் தமக்குமிடையிலான தொடர்புகள் துண்டிக்கப்பட்டதாகக் கூட்டமைப்பினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்தோனேசியாவில் விமான விபத்து-97 பேர் பலி

indo.jpgஇந்தோ னேசியாவின் ஜாவா பகுதியில் உள்ள கிராமத்தில் விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியது. இதில் அதில் பயணம் செய்த 97 பேர் உயிரிழந்தனர்.

இந்த விமானம் இந்தோனேசிய ராணுவத்திற்குச் சொந்தமானதாகும். ஜகார்த்தாவிலிருந்து, ஜாவாவுக்குப் பறந்து கொண்டிருந்தபோது, மடியுன் என்ற இடத்தில் விமானம் கீழே விழுந்து நொறுங்கியது.

அழகிரி, கனிமொழிக்கு மந்திரி பதவி?

alagiri.jpgமுதல்வர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.அழகிரிக்கு சாலை போக்குவரத்து துறையும், மகள் கனிமொழிக்கு சுகாதாரத்துறையும் வழங்கப்படும் என்று தெரிகிறது. ஹெலன் டேவிட்சன் (கன்னியா குமரி), ஏ.கே.எஸ்.விஜயன் (நாகை) ஆகியோருக்கு இணை அமைச்சர் பதவி கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது. முதல்வரின் பேரன் தயாநிதி மாறன், டி.ஆர்.பாலு, ராசா ஆகியோருக்கு மந்திரி பதவி கிடைப்பது சந்தேகம் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

தீவிரவாத ஒழிப்பில் இலங்கையை எந்த நாட்டுடனும் ஒப்பிட முடியாது – அனுர பிரியதர்ஷன யாப்பா.

SL_Army_in_Final_Phaseமூன்று தசாப்தங்களாக நிலவிய தீவிரவாதத்தை  உலகின் எந்த நாட்டுடனும் ஒப்பிட முடியாதளவுக்கு இலங்கை அரசு இரண்டரை வருடங்களில் முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது என தகவல் ஊடகத்துறை அமைசச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா கூறினார்;.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். அமைச்சர் இங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் கொல்லப்படவில்லை. அவர் உயிருடன் இருக்கிறார்  என சில சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளபோதிலும் அவரது கதை முடிந்து விட்டது. அவரது அமைப்பும் அடியோடு அழிக்கப்பட்டுள்ளது. தமிழக மக்களும் பிரபாகரனை நிராகரித்து விட்டனர் என்பதை இந்தியாவின் தேர்தல் முடிவுகள் தெளிவாகக் கர்ட்டுகின்றன என்றும் அமைச்சர் கூறினார்.

இடம்பெயர்ந்த மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்க உதவுவோம் – ஜோன் ஹோல்ம்ஸ்

john-holmes.jpg இலங்கையில் மோதல்கள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டால் மோதல்கள் நடைபெற்ற பகுதியிலிருந்த மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப் படவேண்டும் அவர்களுக்கான உதவிகள் வழங்கப்படவேண்டும் இதற்கு நாமும் உதவிசெய்வோம்” என ஐக்கிய நாடுகள் மனிதநேய விவகாரங்களுக்கான செயலாளர் ஜோன் ஹோல்ம்ஸ் நியூயோர்க்கில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் பூர்த்திசெய்யப்பட்டிருப்பதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில்,  இடம்பெயர்ந்திருக்கும் ஆயிரக்கணக்கான மக்களின் நிலைமைகள் குறித்துத் தாம் உன்னிப்பாக அவதானித்து வருகிறோம். இலங்கையில் நிலைமை மாறிவருகிறது இதனால் தகவல்கள் எதுவும் தெளிவாகவில்லை.

தற்போது காணப்படும் நிலையை எம்மால் உடனடியாகத் தம்மால் உறுதிப்படுத்தமுடியாதிருக்கின்றது.  மோதல் பகுதிகளிலுள்ள மக்கள் அனைவரும் அந்தப் பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டுவிட்டார்கள் என நாம் நம்புகிறோம் என்றார்.

பிரபாகரன் இன்று இரவு பேட்டி!!-எஸ்.எம்.எஸ். பரபரப்பு

Pirabakaran_Vவிடுதலைப் புலிகள்  இயக்கத் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாகவும், அவர் இன்று இரவு டிவியில் பேட்டி அளிக்கவுள்ளதாகவும் ஒரு எஸ்.எம்.எஸ். உலா வந்து கொண்டுள்ளது. இதனால் இந்தியாவில் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பிரபாகரன் குறித்து தினசரி ஒரு புதுத் தகவல் வெளியாகி பரபரப்பை எகிற வைத்துக் கொண்டிருக்கிறது. பிரபாகரனின் உடல் என்று இலங்கை அரசு வெளியிட்ட வீடியோ படமும் பெரும் சர்ச்சைகளைக் கிளப்பி வருகிறது.

இந் நிலையில் பிரபாகரன் உயிருடன் இருப்பதாகவும், இன்று இரவு அவர் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு நேரடியாக பேட்டி அளிக்கவிருப்பதாகவும் ஒரு எஸ்.எஸ்.எஸ். படு இந்தியாவில் வேகமாக உலா வந்து கொண்டுள்ளது.

அந்த எஸ்.எம்.எஸ்.ஸில் கூறப்பட்டுள்ளதாவது..

”மகிழ்ச்சிகரமான செய்தி. நமது தமிழ் தேசிய தலைவர் பிரபாகரன் மரணமடையவில்லை. இது உண்மை. இன்று இரவு 10.30 மணிக்கு நமது தலைவர் தொலைக்காட்சிகளுக்கு சிறப்பு பேட்டி அளிக்கவுள்ளார். பழ. நெடுமாறனும் அதுகுறித்துப் பேசவுள்ளார். ஜீ தமிழ் தொலைக்காட்சி மற்றும் ராஜ் தொலைக்காட்சியில் இதை காணத் தவறாதீர்கள். இதை அனைத்து உண்மைத் தமிழர்களுக்கும் தெரிவியுங்கள்” என்று அந்த எஸ்.எம்.எஸ். கூறுகிறது.

புதிய அரசு அமைக்க மன்மோகன் சிங்கிற்கு அழைப்பு விடுத்தார் ஜனாதிபதி

manmohan_soniya.jpgபுதிய அரசு அமைக்குமாறு மன்மோகன் சிங்கிற்கு ஜனாதிபதி பிரதிபா பாட்டீல்முறைப்படி அழைப்பு விடுத்தார். நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றன. இதையடுத்து புதிய ஆட்சி அமைக்கும் பணியில் காங்கிரஸ் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று மாலை ஜனாதிபதி பிரதிபா பாட்டீலை, ராஷ்டிரபதி பவனில் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா ஆகியோர் நேரில் சந்தித்து ஆட்சியமைக்க அழைக்குமாறு கேட்டுக்கொண்டனர். தனிப்பெரும் கட்சியாகவும், தனிப்பெரும்பான்மை பெற்ற கூட்டணியாகவும் உள்ள தங்களை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். தங்களது அரசுக்கு ஆதரவளிக்கும் 322 எம்.பி.,க்கள் பட்டியலையும் அவர்கள் அப்போது ஜனாதிபதியிடம் வழங்கினர்.

இதையடுத்து, மன்மோகன் சிங்கை அரசு அமைக்க அழைக்கும் கடிதத்தை ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், மன்மோகன் சிங்கிடம் வழங்கினார். இதை ராஷ்டிரபதி பவனில் கூடியிருந்த செய்தியாளர்களிடம் மன்மோகன் சிங் தெரிவித்தார். அதன்படி, மன்மோகன் சிங் மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்ட ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், தனிப்பெரும்பான்மை பெற்ற கட்சி மற்றும் பெரும்பான்மை பெற்ற தேர்தலுக்கு முந்தைய கூட்டணி என்ற முறையிலும் ஆட்சியமைக்க வருமாறு அழைப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 22ம் தேதி பதவியேற்பு விழா நடைபெறும் எனவும் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் பாராளுமன்றம் முன் போராட்டம்: 10 தமிழர்கள் கைது

இலங்கையில் போர் நிறுத்தம் கோரி இங்கிலாந்து பாராளுமன்றம் முன்பு அங்குள்ள தமிழர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். தற்போது பிரபாகரன் கொல்லப்பட்டதாக வெளியாகும் தகவல்களை அவர்கள் மறுத்து வருகின்றனர். இந்நிலையில் லண்டனில் உள்ள பாராளுமன்ற கட்டிடம் முன்பு நேற்று நூற்றுக்கணக்கான தமிழர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

அப்போது போலீசாருடன் மோதல் ஏற்பட்டது. அந்த மோதலில் 3 போலீஸ் அதிகாரிகள் காயம் அடைந்தனர். அதைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 10 தமிழர்களை லண்டன் போலீசார் கைது செய்தனர். இங்கிலாந்தில் மட்டும் 3 லட்சம் தமிழர்கள் வசித்து வருகின்றனர். இலங்கையில் மீண்டும் விடுதலைப்போராட்டம் தொடரும் என்று அவர்கள் கூறுகின்றனர்.

இலங்கை தமிழர்களுக்கு தேவையான நிவாரண உதவி வழங்கப்படும்: கருணாநிதியிடம் பிரதமர் உறுதி

karunanithi.jpg முதல் அமைச்சர் கருணாநிதியை இன்று காலையில் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி இல்லத்தில் மத்திய அரசின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் சந்தித்து பேசினார். பின்னர் நிருபர்களுக்கு கருணாநிதி பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு: 

கேள்வி: இன்று காலை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் உங்களை சந்தித்துப் பேசியதைப் பற்றி?

பதில்: நேற்றைய தினம் பிரதமருடனும், சோனியா காந்தியுடனும் நான் பேசிய தின் தொடர்ச்சியாக இன்றைக்கு அவர் இலங்கைக்கு செல்கிறார். அங்குள்ள சூழ் நிலைகளை அறிந்து வந்து மீண்டும் என்னைச் சந்தித்து விவரங்களை கூறுவார்.

கேள்வி: இலங்கைக்கு நிவாரணம் அளிப்பது பற்றி குறிப்பிட்டு ஏதாவது கேட்டிருக்கிறீர்களா?

பதில்: இலங்கை தமிழர் பகுதிகளில் நிவாரணத்திற்காக எவ்வளவு தேவையோ அவ்வளவையும் நிறைவு செய்வோம் என்று பிரதமர் சொல்லியிருக்கிறார்.

சிவ்சங்கர் மேனன் மற்றும் நாராயணன் – இலங்கை விஜயம்

menon-narayan.jpgஇந்திய வெளியுறவுச் செயலர் சிவ்சங்கர் மேனன் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகர் எம்.கே நாராயணன் ஆகியோர் இன்று இலங்கை வரவுள்ளனர்.இலங்கை அரசாங்கம் பயங்கரவாதத்தை தோற்கடித்து உள்ளதாகவும் விடுதலைப் புலிகளின் தலமையை அழித்துள்ளதாகவும் அறிவித்துள்ள நிலையில் இந்தியாவின் உயர்மட்ட அதிகாரிகள் இலங்கை வரவுள்ளனர்.

இவர்கள் இலங்கை வருவதற்கு முன் தமிழ் நாடு முதல்வர் மு.கருணாநிதியை சந்தித்து கலந்துரையாடி ஆலோசனைகள் பெற்றுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.