எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

வடபகுதி விவசாயிகளின் கடன்களுக்கு இலவச காப்புறுதி

வடபகுதி விவசாயிகளுக்கு இலங்கை வங்கி வழங்கு கின்ற சகல கடன்களுக்கு இலவசமாக காப்புறுதி வழங்க அவ்வங்கி முடிவு செய்துள்ளது. வடபகுதி விவசாயிகளின் மேம்பாட்டுக்கு உதவும் நோக்கில் இந்த காப்புறுதித் திட்டத்தை நடை முறைப் படுத்துவதற்கு இலங்கை வங்கி நடவடிக்கை எடுத்திருக் கிறது.

இலங்கை வங்கியும், விவசாய காப்புறுதி சபையும் இணைந்து இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவிருக் கின்றன. விவசாய கடன் பெறுபவர்கள் வரட்சி, வெள்ளம், விவசாய பாதிப்பு போன்ற இயற்கை அழிவுகளால் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாது போகும் பட்சத்தில் இந்த காப்புறுதி மூலம் நிவாரணமளிக்கப்படும் என இலங்கை வங்கித் தலைவர் காமினி விக்கிரமசிங்க தெரிவித்தார்.

திருகோணமலையில் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் கண்டெடுப்பு – பிரிகேடியர் உதய நாணயக்கார

udaya_nanayakkara_brigediars.jpgஇலங்கையின் கிழக்கே திருகோணமலை மாவட்டத்தில் மறைத்து வைக்கப்ப்ட்டுருந்த ஏராளமான ஆயுதங்களை இலங்கை போலீசார் நேற்று கைப்பற்றியுள்ளனர்.

முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் வழங்கிய தகவல்களின் அடிப்படையில், திருகோணமலையில், சேருநுவர பொலிஸ் பகுதியில், பொலிஸார் ஒரு தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டபோது இந்த ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக இலங்கை இராணுவம் சார்பாகப் பேசவல்ல பிரிகேடியர் உதய நாணயகார தெரிவித்துள்ளார்.

T56 ரக துப்பாக்கிகள் 210, இலகுரக இயந்திர துப்பாக்கிகள் மற்றும் தற்கொலை அங்கிகள் ஆகியவை அங்கு கைப்பற்றப்பட்டுள்ளன. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்ட பிறகு கிழக்கு மாகாணத்தில் ஒரு இடத்தில், ஒரே நாளில் கைப்பற்றப்பட்ட பெரும் தொகையான ஆயுதங்கள் இவையாகும் 

இலங்கையில் சுமார் 37 ஆயிரம் சட்டவிரோத வெளிநாட்டவர் – கைது செய்ய உதவுமாறு கோரிக்கை

இலங் கையில் சுமார் 37 ஆயிரம் வெளிநாட்டவர்கள் சட்டவிரோதமாக தங்கியுள்ளதாக குடிவரவு குடியகல்வுத் திணைக்கள கட்டுப்பாட்டாளர் பி.பி. அபேகோன் நேற்று தெரிவித்தார். ஒரு மாதகால வீஸாவில் இலங்கைக்கு வருகை தரும் இவர்கள் வீஸாக்காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக இலங்கையில் தங்கியிருப்பதாகவும் அவர் கூறினார்.

இலங்கையில் சட்டவிரோத மாக தங்கியுள்ள இவர்களில் பலர் இங்கு தொழில் புரிவதாகவும் அறிவிக்கப்படுகிறது. இவர்களை கைது செய்ய திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதோடு அவ்வாறு சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டவர்களை கைது செய்ய உதவுமாறு திணைக்களம் பொதுமக்களையும் கோரியுள்ளது. ஒரு மாத வீஸா மூலம் இலங்கைக்கு இலகுவாக வர வாய்ப்பு உள்ளதாகவும் இவர்களில் பலர் ஆசிய நாட்டவர்கள் எனவும் அறிவிக்கப்படுகிறது.

திருகோணமலையில் மீன்பிடித் தடைகள் நீக்கப்படுவதாக இலங்கை அரசு அறிவிப்பு

fishermen.jpgகிழக்கு மாகாணக் கடலில் மீன்பிடிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நீக்குவதற்கு அரசாங்கம் முடிவு செய்துள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விஷேட அறிவுறுத்தலின் படி இம்மீன்பிடித் தடை நேற்று முதல் நீக்கப்பட்டதாக ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரான பசில் ராஜபக்ஷ எம்.பி. மூதூர் மற்றும் திருமலை மீனவர்களை நேற்று நேரில் சந்தித்துக் கூறினார்.

சுமார் ஐந்து வருடங்கள் கிழக்கு கடலில் மீன்பிடிப்பது மட்டுப்படுத்தப்பட்டும், தடைவிதிக்கப்பட்டும் இருந்தது தெரிந்ததே. தற்போது அமைதி நிலைமை ஏற்பட்டிருப்பதால் மீனவர்களின் நலன் கருதி இத்தடையை நீக்குவதற்கு ஜனாதிபதி முடிவு செய்ததாகவும் அவர் கூறினார். இதன்படி திருமலை துறைமுகத்திற்கு வெளியே கடலில் 24 மணி நேரமும் மீன்பிடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. தெப்பம் தவிர்ந்த படகுகளுக்கு இந்த அனுமதி வழங்கப்பட்டிருக்கின்றது.தெப்பங்களில் மீன்பிடிப்பவர்கள் அதிகாலை 4.00 மணிமுதல் மாலை 6.00 மணி வரையும் மீன்பிடிக்க இடமளிக்கப்பட்டுள்ளது.

டிங்கி படகுகளுக்கு 15 குதிரை வலு கொண்ட இயந்திரங்களைப் பாவிப்பதற்கு இதுவரை வழங்கப்பட்டிருந்த அனுமதி 25 குதிரைவலு வரையான இயந்திரங்களைப் பாவிக்கவும் இப்போது அனுமதிக்கப்பட்டிருக்கிறது.மீனவர்கள் திருமலைத் துறைமுகத்தின் ஊடாக கடலுக்குச் சென்று மீன்பிடிக்கவென கொரிடோரும் அமைக்கப்படவுள்ளது.

திருமலை துறைமுகத்தினுள் மீன்பிடிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த மட்டப்படுத்தலை ஐந்து மடங்கு வரை தளர்த்துவதற்கும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இப்பகுதியில் பெரிய வலைகளைப் பாவித்து மீன்பிடிப்பதில் ஈடுபடுபவர்கள் இரவு 8.00 மணிக்குள் கரைக்கு திரும்பிவிடும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இத்தீர்மானங்கள் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ எம்.பி. தலைமையில் கடற்படை தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட, அமைச்சர்கள் நஜீப் ஏ மஜீத், சுசந்த புஞ்சிநிலமே, கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத் துரை சந்திரகாந்தன், மாகாண அமைச்சர் துரையப்பா நவரட்னராஜா உட்பட்ட முக்கியஸ்தர்களால் திருமலை மூதூர் மீனவர்களுக்கு எடுத்துக் கூறப்பட்டது.

புலிகளின் மற்றொரு நீர்மூழ்கி வெள்ளைமுள்ளி வாய்க்கால் கடலில் மீட்பு

தொடர்ந்து தேடுதலில் ஈடுபட்டுவரும் பாதுகாப்புப் படையினர் நேற்று மாலை முல்லைத்தீவு, வெள்ளை முள்ளி வாய்க்கால் பகுதிக்கு அண்மித்த கடலில் புலிகளின் மற்றொரு நீர் மூழ்கியொன்றை கண்டெடுத்திருப்பதாக இரா ணுவப் பேச்சாளர் அலுவலக அதிகாரி யொருவர் தெரிவித்தார்.

நான்கு அடிகள் உயரமும், 24 அடிகள் நீளமும் கொண்ட இந்த நீர்மூழ்கி வெள்ளைமுள்ளி வாய்க்கால் பிரதேசத்தின் கரையிலிருந்து சில மீட்டர்கள் தூரத்தில் கடலிலிருந்து மீட்கப்பட்டிருப்பதாகவும் அவ்வதிகாரி கூறினார்.

இராணுவத்தின் எட்டாவது விசேட படையணிக்குக் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையிலேயே இந்த நீர்மூழ்கி மீட்கப்பட்டுள்ளது. இந்நீர்மூழ்கி ஏற்கனவே பாவிக்கப்பட்டிருப்பதாகவும் ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

3 ஓட்டங்களால் இந்திய அணியை வீழ்த்தியது இங்கிலாந்து அணி

t20-world-cup.jpgசுப்பர் 8 சுற்றில் இந்திய  மற்றும் இங்கிலாந்து  அணிகளுக்கிடையில் இடம்பெற்ற போட்டியில் இங்கிலாந்து அணி 3 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகளை இழந்து 153 ஓட்டங்களை பெற்றது. பதிலுக்கு துடுப்பாடிய  இந்திய  அணி 150 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.

கிழக்கு, தென் கிழக்கு, மன்னார் கடற் பரப்பில் கொந்தளிப்பு – இடியுடன் கூடிய மழை; மீனவர்களுக்கு எச்சரிக்கை

fishing_peoples.jpgகிழக்கு, தென் கிழக்கு மற்றும் மன்னார் குடா கடற் பரப்புக்கள் அடுத்துவரும் இரண்டொரு தினங்களுக்கு கொந்தளிப்பாக இருக்கும் என்று வானிலை அவதான நிலையத்தின் வானிலையாளர் பிரித்திகா ஜயக்கொடி நேற்றுத் தெரிவித்தார். அதேநேரம் கிழக்கு, ஊவா மற்றும் வட மத்திய மாகாணங்களில் அடுத்து வரும் இரண்டொரு தினங்களுக்கு இடியுடன் கூடிய மழை பிற்பகலில் பெய்யும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில், மேல், மத்திய, சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் அடுத்துவரும் சில தினங்களுக்கு அடிக்கடி மழை பெய்யக் கூடிய காலநிலை ஏற்பட்டிருக்கிறது.

இந்தக் காலப் பகுதியில் கிழக்கு, தென் கிழக்கு மற்றும் மன்னார் குடா கடற்பரப்புக்களில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 30- 40 கிலோ மீட்டர் வேகத்தில் காணப்படும். அது சில சமயங்களில் 50 கிலோ மீட்டர் வரையும் அதிகரிக்க முடியும்.

இதன் காரணத்தினால் இப்பிரதேச கடல் பரப்பு கொந்தளிப்பாக இருக்கும். ஏனைய பிரதேச கடற்பரப்புக்கள் இடையிடையே கொந்தளிப்பு நிலையை அடையும். அதன் காரணத்தினால் இந்த நாட்களில் கடலுக்குச் செல்லும் மீனவர்கள் மிகுந்த முன் அவதானத்துடன் நடந்து கொள்ளுவது அவசியம். இதேவேளை நேற்றுக் காலையுடன் முடிவுற்ற 24 மணி நேர மழை வீழ்ச்சிப் பதிவில் லபுகமவிலேயே அதிக மழை பெய்துள்ளது என்றார்.

போராடி வென்றது இலங்கை அணி

t20-world-cup.jpgசுப்பர் 8 சுற்றில் இலங்கை மற்றும் அயர்லாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்ற போட்டியில் இலங்கை அணி 09 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 9 விக்கெட்டுகளை இழந்து 144 ஓட்டங்களை பெற்றது. பதிலுக்கு துடுப்பாடிய அயர்லாந்து  அணி 135 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. இப்போட்டியை  இலங்கை அணி போராடியே வென்றது.

யாழ். ரயில் நிலைய வளாகத்தில் தங்கியுள்ளவர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் – யாழ். அரசாங்க அதிபர் உத்தரவு.

yaal-devi.jpgயாழ்ப் பாண ரயில் நிலையத்திலும் ரயில் நிலைய விடுதிகளிலும் தங்கியுள்ளவர்கள் எதிர்வரும் 29ஆம் திகதிக்கு முன்னர் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டுமென யாழ்.அரசாங்க அதிபர் உத்தரவிட்டுள்ளார். வவுனியாவுக்கும் காங்கேசன்துறைக்குமிடையே மீண்டும் ரயில் சேவையை ஆரம்பிக்கும் நோக்கிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வலிகாமம் வடக்குப் பிரதேசம் 1990ஆம் ஆண்டு உயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டதையடுத்து அங்கு வசித்துவந்த பல குடும்பங்கள் அங்கிருந்து இடம்பெயர்ந்து ரயில் திணைக்களத்துக்குச் சொந்தமான இடங்களில் குடியிருந்ததுடன் அங்கு தற்காலிகக் கொட்டகைகளையும் குடியிருப்புக்களையும் அமைத்திருந்தனர்.

அரசாங்கம் முன்னெடுத்து வரும் வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வரையான ரயில் சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கும் பணிகளை போக்குவரத்து அமைச்சு மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

ஜனாதிபதி தேர்தலில் முறைகேடு: ஈரானில் கலவரம்

president-ahamadinejad.jpgஈரான் ஜனாதிபதி தேர்தலில் முறைகேடு நடந்ததாகக் கூறி, ஜனாதிபதி அகமதி நிஜாத்தை எதிர்த்துப் போட்டியிட்ட மவுசாவியின் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஈரானில் கடந்த 12ஆம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடந்தது. தற்போதைய ஜனாதிபதி முகமது அகமது நிஜாத்தை எதிர்த்து மவுசாவி போட்டியிட்டார். இந்த தேர்தலில் முகமது அகமதி நிஜாத் 62.6% வாக்குகள் பெற்று மீண்டும் ஜனாதிபதி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட மவுசாவிக்கு 33.7% வாக்குகள் கிடைத்தன.

ஆனால் தேர்தல் முடிவை எதிர்க்கட்சியினர் ஏற்கவில்லை. தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக மவுசாவி ஆதரவாளர்கள் புகார் கூறியதுடன், ஜனாதிபதி அகமதி நிஜாத் ஆதரவாளர்களுடன் பல இடங்களில் மோதினர்.

டெக்ரான் நகரில் கல்வீச்சு, தீ வைப்பு சம்பவங்கள் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பல இடங்களில் காவல்துறையினர் மீது எதிர்கட்சியினர் கல்வீசி தாக்கினர். இதற்கிடையே ஈரான் மதத் தலைவரும், நாட்டின் உயர்ந்த தலைவராக கருதப்படுவருமான அயதுல்லா கொமேனி ‘ஜனாதிபதி தேர்தல் முடிவை மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.