ஜனாதிபதி தேர்தலில் முறைகேடு: ஈரானில் கலவரம்

president-ahamadinejad.jpgஈரான் ஜனாதிபதி தேர்தலில் முறைகேடு நடந்ததாகக் கூறி, ஜனாதிபதி அகமதி நிஜாத்தை எதிர்த்துப் போட்டியிட்ட மவுசாவியின் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஈரானில் கடந்த 12ஆம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடந்தது. தற்போதைய ஜனாதிபதி முகமது அகமது நிஜாத்தை எதிர்த்து மவுசாவி போட்டியிட்டார். இந்த தேர்தலில் முகமது அகமதி நிஜாத் 62.6% வாக்குகள் பெற்று மீண்டும் ஜனாதிபதி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட மவுசாவிக்கு 33.7% வாக்குகள் கிடைத்தன.

ஆனால் தேர்தல் முடிவை எதிர்க்கட்சியினர் ஏற்கவில்லை. தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக மவுசாவி ஆதரவாளர்கள் புகார் கூறியதுடன், ஜனாதிபதி அகமதி நிஜாத் ஆதரவாளர்களுடன் பல இடங்களில் மோதினர்.

டெக்ரான் நகரில் கல்வீச்சு, தீ வைப்பு சம்பவங்கள் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பல இடங்களில் காவல்துறையினர் மீது எதிர்கட்சியினர் கல்வீசி தாக்கினர். இதற்கிடையே ஈரான் மதத் தலைவரும், நாட்டின் உயர்ந்த தலைவராக கருதப்படுவருமான அயதுல்லா கொமேனி ‘ஜனாதிபதி தேர்தல் முடிவை மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *