எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

தேசிய தொடர்புசாதன வலையமைப்பு

mahinda-rajapaksha.jpgதேசிய தொடர்புசாதன வலையமைப்பை அமுல்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்பித்திருந்தார்.

தொலைத் தொடர்புகள் கட்டளைகள் ஆணைக்குழுவுக்கு இதனை அமுல்படுத்துவதற்கான அதிகாரம் வழங்கப்படுகிறது. அத்துடன் தகவல் மற்றும் தொடர்புசாதன தொழில்நுட்ப நிறுவனத்துடன் செய்துகொள்ளப்பட்டுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு ஏற்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

தேர்தல் முடிவுகளை எதிர்த்து ஈரானில் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டம் – ஈரான் விடயத்தில் தலையிடவில்லையென அமெரிக்கா அறிவிப்பு

president-ahamadinejad.jpgஈரான் அரசாங்கத்தின் உத்தரவை ஏற்க மறுத்த எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் நேற்று வியாழக்கிழமை பாரிய ஆர்ப்பாட்டமொன்றுக்குத் தயாராகினர். தேர்தலில் தோல்வியடைந்த ஹுஸைன் மூஸாவி ஆர்ப்பாட்டத்துக்கான அழைப்பை விடுத்தார்.

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளைக் கண்டித்து அமைதியான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் மீது தாக்குதல் நடாத்தப்பட்டது. இதில் 07 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். ஆர்ப்பாட்டத்தில் பலியானோருக்கு துக்கம் தெரிவிக்கும் வகையில் நேற்று வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

அனைவரையும் கறுப்பு நிற ஆடைகளை அணியுமாறு ஹுஸைன் மூஸாவி கேட்டுள்ளார். அரச தொலைக் காட்சியொன்று ஆர்ப்பாட்டத்துக்குத் தயாராகிக் கொண்டிருந்த சனக் கூட்டத்தைக் காட்டியது. ஆனால் வெளிநாட்டு ஊடகங்கள் ஆர்ப்பாட்டக் காரர்களின் செய்திகளைத் திரட்டவோ அல்லது அவ்விடங்களுக்குச் செல்லவோ அனுமதிக்கப்படவில்லை.

ஈரானில் நடந்த ஜனாதிபதித் தேர்தல் முறைகேடாக நடந்தது. வாக்குகள் மீள எண்ணப்பட வேண்டுமென மூஸாவியின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். பல நாட்களாக இந்த அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இடம் பெறுகின்றன. அரசாங்கத்தின் உத்தரவை மீறியும் வன்முறைகளும், ஆர்ப்பாட்டங்களும் இடம் பெறுகின்றன.

ஜனாதிபதி அஹ்மெதி நெஜாதுக்கு ஆதரவாகவும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன. இந்நிலையில் வாக்குகளை மீள்எண்ணும்படி ஆன்மீகத் தலைவர் ஆயதுல்லாஹ் அலி கொமெய்னி உத்தரவிட்டுள்ளார்.

ஈரானில் இரண்டு தடவைக்கு மேல் ஒருவர் ஜன திபதியாக முடியாது. அஹ்மெதி நெஜாத், இரண்டாவது முறையாகவும் ஜனாதிபதியாகியுள்ளார். இவரின் வெற்றியை ஹுஸைன் மூஸாவியால் பொறுத்துக் கொள்ளமுடியவில்லை. அமெரிக்கா, மேற்குலக நாடுகளின் ஆதரவுடன் மூஸாவி ஈரானின் அமைதியைக் குழப்புவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அமெரிக்கா இதை நிராகரித்துள்ளது. ஈரானின் உள் விவகாரங்களில் தலையிடும் தேவையோ, நோக்கமோ எமக்கில்லையென அமெரிக்கா அறிவித்துள்ளது. ஈரானில் நடப்பதை அவதானிக்கின்றோம். ஆனால் அதில் தலையிடவில்லையென ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்தார். வாக்குகள் மீள எண்ணப்பட்டாலும் அஹ்மெதி நெஜாதே வெல்வார் என நம்பப்படுகின்றது.

உலக கிண்ண கால்பந்தாட்டத்துக்கு வடகொரியா முதற்தடவையாக தகுதி

football.jpgவடகொரியா 43 வருட இடைவெளிக்குப்பின்னர் முதற் தடவையாக உலக கிண்ணத்துக்கான கால்பந்தாட்ட இறுதிச் சுற்றில் விளையாட தகுதிபெற்றுள்ளது. 1966 ஆம் ஆண்டுக்குப் பின்னர் அந்த அணிக்கு இந்த வாய்ப்புக் கிட்டியுள்ளது.

ரியாத் நகரில் மன்னர் பஹத் விளையாட்டரங்கில்; 66 ஆயிரம் பார்வையாளர்கள் மத்தியில் நேற்று நடைபெற்ற சவூதி அரேபியா அணியுடனான தகுதிகாண் கால்பந்தாட்டப் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவுற்றதையடுத்து வடகொரியாவுக்கு இந்த வாய்ப்புக் கிடைத்துள்ளது.

அதன்படி 2010 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலக கிண்ண கால்பந்தாட்ட இறுதிச்சுற்றில் ஆசிய பிராந்தியம் சார்பாக விளையாட வடகொரியா தகுதி பெற்றுள்ளது. தென்கொரியா, ஜப்பான்,அவுஸ்திரேலியா ஆகியன ஆசியா சார்பாக தெரிவு செய்யப்பட்டுள்ள ஏனைய அணிகளாகும்.

பன்றிக் காய்ச்சல் குறித்து அச்சப்படத்தேவை இல்லை – மருந்து தயாராக இருப்பதாக அறிவிப்பு

19swine-flu.jpgஇலங் கையில் முதலாவது பன்றிக்காய்ச்சல் நோயாளி கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், பன்றிக்காய்ச்சலுக்கு சிகிச்சையளிப்பதற்கான மருந்து வகைகள் தயாராக உள்ளதெனவும் இது குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லையெனவும் தொற்று நோய்த் தடுப்புப் பிரிவு வைத்திய அதிகாரி ரிசின பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.

சுகாதாரக் கல்விப் பணியகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே டாக்டர் ரிசின பிரேமரத்ன இவ்வாறு தெரிவித்தார். பன்றிக்காய்ச்சல் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்;

பன்றிக்காய்ச்சல் குறித்து நாம் ஏற்கனவே முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். அத்துடன், சிகிச்சை அளிப்பதற்குரிய மருந்துவகைகளும் தருவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கைக்கு வந்த 8 வயதுச் சிறுவனுக்கு பன்றிக்காய்ச்சல் வைரஸ் உள்ளமை அடையாளங் காணப்பட்டுள்ளது.

இச்சிறுவனுக்கு வைத்தியசாலையின் பிரத்தியேக அறை ஒன்றில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. பன்றிக்காய்ச்சல் ஏற்பட்ட ஒருவருக்கு சாதாரண காய்ச்சலின் போது ஏற்படும் அறிகுறிகளான தடிமன், இருமல், உடல்வலி, வாந்தி என்பவற்றுடன் டயறியாவும் காணப்படலாம். பன்றிக்காய்ச்சலுக்குரிய மருந்துவகைகள் தயாராக உள்ளபோதும் இதற்குரிய ஊசி மருந்து இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை.

பன்றிக்காய்ச்சல் தொற்றிலிருந்து எம்மைநாமே பாதுகாத்துக்கொள்ள சுகாதாரத்தை அதிகூடியளவில் கடைப்பிடிக்க வேண்டும். உணவருந்த முன்னர் கைகளை சவர்க்காரத்தால் கழுவும் அதேநேரம், அடிக்கடி கைகளால் முகத்தை தொட்டுக் கொள்வதையும் தவிர்த்துக் கொள்ளவேண்டும். அத்துடன், சன நெருசல் மிகுந்த இடங்களிற்குச் செல்வதை தவிர்ப்பதுடன், கட்டாயமாகச் செல்ல வேண்டிய நிலை ஏற்படின் வாய் மூக்குப்பகுதியை துணிகளால் மூடிக்கட்ட வேண்டும்.

அத்துடன் சுத்தமான கைக்குட்டைகளையே பயன்படுத்த வேண்டும். இதேவேளை, அதிக போஷாக்குள்ள சுத்தமான உணவுகளை உட்கொள்ள வேண்டும். காய்ச்சலை அடையாளங்காண்பதற்குரிய சாதனமே விமான நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ளது

இச்சாதனத்தின் மூலம் காய்ச்சலுகுக்கு உள்ளானவர்களை மாத்திரம்தான் கண்டுபிடிக்க முடியும். ஆனால், பன்றிக்காய்ச்சல் வைரஸ் தொற்றுக்கு உள்ளானவரை கண்டுபிடிக்க முடியாது. பன்றிக்காய்ச்சலால் பீடிக்கப்பட்டவரிலிருந்து 5 அல்லது 7 நாட்கள் கடந்த நிலையிலேயே சரியான தாக்கத்துக்கு உள்ளானதை கண்டுபிடிக்க முடியும்.

பனடோல் உட்கொண்ட ஒருவர் இச்சோதனைச் சாதனங்களூடு சென்றால் கண்டுபிடிக்க இயலாதெனத் தெரிவித்தார்.

கல்வி நிருவாக சேவையில் பதவி உயர்வு

teacher.jpgகல்வி நிருவாக சேவையில் முதலாம் தர உத்தியோகத்தர்களுக்கான 24 வெற்றிடங்களையும் நிறப்புவதற்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது. அதன்படி கல்வி நிருவாக சேவையில் இரண்டாம் தராத்திலுள்ள 24 பேருக்கு முதலாம் தரத்துக்கான  பதவி உயர்வு வழங்கப்படவுள்ளது.

இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த சமர்பித்திருந்தார்.

நெலுங்குளத்தில் மூன்று புலி உறுப்பினர்கள் சுட்டுக் கொலை – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தகவல்

police_spokesman_ranjith.jpgவவுனியா, நெலுங்குளம் பகுதியில் இன்று காலை மூன்று புலி உறுப்பினர்கள் பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.

இப்பிரதேசத்தில் இன்று காலை தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்ட வவுனியா விஷேட பொலிஸ் பிரிவினர் வாகனம் ஒன்றை சோதணை செய்ய முற்பட்டபோது இந்த மூன்று புலி உறுப்பினர்களும் பொலிஸாரை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர்.

இதனை வெற்றிகரமாக முறியடித்த பொலிஸாரின் பதில் துப்பாக்கிப் பிரயோகத்தில் இம்மூவரும் கொல்லப்பட்டனர். இவர்களின் சடலங்கள் வவுனியா ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்லப்பட்டன என்றும் பொலிஸ் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார். 

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஓகஸ்ட் 11 இல் ஆரம்பம் – ஓகஸ்ட் 23 இல் ஐந்தாம் ஆண்டுக்கான புலமைப் பரிசில் பரீட்சை

examination_department.jpgஇவ் வருடம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை மற்றும் ஐந்தாம் ஆண்டுக்கான புலமைப் பரிசில் பரீட்சை ஆகியவற்றை நடத்துவதற்கான நாட்களை பரீட்சைத் திணைக்களம் முடிவு செய்துள்ளது. அதன்படி கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை எதிர்வரும் ஓகஸ்ட் 11 ஆம் திகதிமுதல் செப்டம்பர் 05 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இதேவேளை ஐந்தாம் ஆண்டுக்கான புலமைப் பரிசில் பரீட்சையை எதிர்வரும் ஓகஸ்ட் 23 ஆம் திகதி நடத்துவதற்கு பரீட்சைத் திணைக்களம் திட்டமிட்டுள்ளது.

அகதி முகாம்களுக்குச் செல்ல அனுமதி மறுப்பு : எதிர்க்கட்சிகள் வழக்குத் தாக்கல்

court-unp.jpgவடக்கில் நடந்து முடிந்த யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டு மக்கள் பலர் முகாம்களில் அகதிகளாக அவலப்பட்டு வாழ்ந்து வருகின்றனர். அவர்களை முகாம்களுக்குச் சென்று பார்வையிட்டு, அவர்களுக்கான உதவிகளை வழங்கும் ஒரு சந்தர்ப்பத்தை எமது நாட்டு எதிர்க்கட்சிகளுக்கோ மற்றும் சிவில் சமூக அமைப்புகளுக்கோ அரசு வழங்கவில்லை.

எமது நாட்டு மக்களின் நிலையை நேரில் சென்று அறிய முடியாத நிலையை அரசு உருவாக்கி உள்ளது. இது தொடர்பில் அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜெயலத் ஜயவர்தன, லஷ்மன் செனவிரத்ன, மங்கள் சமரவீர, ஹசன் அலி, மனோ கணேசன் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு இன்று பிரதம நீதியரசர் அசோக் டி சில்வாவின் முன்னிலையில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

விவாதத்தின் பின்னர் இம்மனு தொடர்பான விசாரணை எதிர்வரும் ஜூலை மாதம் 27 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

கைதான இந்திய மீனவர்கள் விடுதலை

fishermen.jpgஇலங்கைக் கடற்படையினரால் கடந்த 8 ஆம் திகதி கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

விடுவிக்கப்பட்ட இவர்கள் இந்திய கடலோர காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 

சீன அபிவிருத்தி வங்கியால் 25 மில்லியன் டொலர் நிதியுதவி

ranjith_siyambalapitiya.jpgநாட்டின் அபிவிருத்திப் பணிகளுக்கு சீன அபிவிருத்தி வங்கி 25 மில்லியன் டொலரை நிதியுதவியாக வழங்க முன் வந்துள்ளதுடன் அதற்கான பினைச் சாண்றிதழ் ஒன்றை சமர்பிக்க அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை பதில் நிதி அமைச்சரான ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய சமர்பித்திருந்தார்.

இந்தக் கடனுதவித் தொகை மூலம் விவசாயம் மற்றும் அடிப்படை வசதிகளுக்கான திட்டங்களுக்கு நிதியுதவி வழங்க எதிர்பார்க்கப்படுகிறது.