எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

தேசம்நெற் வன்னி முகாம்களில் மேற்கொள்ளும் கல்வித் திட்டம் – கேள்வியும் பதிலும் & தேசம்நெற் வாசகர்களிடம் ஒரு விண்ணப்பமும்

students.jpgவன்னி முகாம்களில் தங்கியுள்ள 5ம் தர மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்காக மேற்கொள்ளப்பட்ட நூல் விநியோகத்திட்டத்திற்கு இன்னமும் 3 65 000 ரூபாய் (2000 பவுண்) தேவைப்படுகின்றது. மேற்படி தொகையை தேசம்நெற் வாசகர்களிடம் இருந்து எதிர்பார்க்கின்றோம். இத்திட்டத்திற்கு பங்களிக்க விரும்புபவர்கள் தேசம்நெற்றுடன் தொடர்பு கொள்ளவும். தங்களை நேரடியாக இனம்காட்டிக் கொள்ள விரும்பாதவர்கள் மின்அஞ்சலூடாக தொடர்பு கொள்ள முடியும்.

தொடர்பு விபரங்கள்:
தொடர்புகளுக்கு: த ஜெயபாலன் – ரி சோதிலிங்கம்
தொலைபேசி இல – 0044 208 279 0354
கைத் தொலைபேசி இல – 0044 7800 596 786 – 0044 7846 322 369
மின்அஞ்சல் : thesam97@hotmail.com

வன்னி முகாம்களில் தமது புலமைப் பரிசில் பரீட்சையை எதிர்நோக்கி இருக்கும் மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளுக்கு உதவுமுகமாக 28 இலட்சம் (27 77 000) ரூபாய் செலவில் நூல் வழங்கும் திட்டம் ஒன்றை தேசம்நெற் முன்னெடுத்தது அனைவரும் அறிந்ததே. தற்போது இத்திட்டத்தின் இறுதிப் பகுதியில் நாங்கள் உள்ளோம். மேலும் ஓகஸ்ட் நடுப்பகுதியில் பரீட்சைகள் நடக்க இருக்கின்றது. அதனால் இன்னும் சில தினங்களுக்குள் மாணவர்களுக்கான நூல்கள் அனைத்தும் விநியோகிக்கப்பட வேண்டியுள்ளது.

இத்திட்டத்திற்கு இதுவரை பங்களித்தவர்கள் விபரம் வருமாறு:
9 25 000 ரூபாய் : சிந்தனை வட்டம்
7 00 000 ரூபாய் : மத்திய இலங்கை முஸ்லீம் பட்டதாரிகள் ஒன்றியம் (இலங்கை)
5 50 000 ரூபாய் (3000 பவுண்) : அகிலன் பவுண்டேசன் (லண்டன்)
2 00 000 ரூபாய் : தேசம்நெற்    
   37 000 ரூபாய் (200 பவுண்) : பி சோமசுந்தரம் (லண்டன்)
      
24 12 000 ரூபாய் : மொத்தமாக இதுவரை உறுதியளிக்கப்பட்ட தொகை

இவற்றைக் கருத்தில்கொண்டு தேசம்நெற் அதன் வாசகர்களிடம் இந்த உதவி விண்ணப்பத்தை முன் வைக்கின்றது. இத்திட்டம் பற்றிய முழுமையான விபரங்களை கேள்வி பதில் வடிவில் வழங்கி உள்ளோம். மேலதிக விபரங்களுக்கு மேலுள்ள தொடர்பு இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும். இக்கல்வித்திட்டம் தொடர்பாக பரிமாறப்பட்ட கடிதங்களைப் பார்க்க அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்.

தேசம்நெற் முன்னெடுக்கும் 5ம் தர மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சைக்கான கல்வித் திட்டம் – கேள்வியும் பதிலும்

புலமைப் பரிசில் பரீட்சை என்றால் என்ன:
இலங்கையில் அரசாங்கப் பரீட்சை என்ற அடிப்படையில் 03 பிரதான பரீட்சைகள் நடைபெறுகின்றன.
1. தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை
2. க.பொ.த சாதாரணதர பரீட்சை
3. க.பொ.த உயர்தர பரீட்சை

இப்பரீட்சைகளுள் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையை பாடசாலை மாணவனொருவன் எதிர்நோக்கும் முதலாவது பரீட்சையாகும்.

இதனை லண்டனில் நடைபெறும் 11 பிளஸ் பரீட்சைக்கு ஒப்பிடமுடியும்.

இப் பரீட்சையில் சித்தியடைவதால் மாணவர்களுக்குக் கிடைக்கும் நன்மைகள் என்ன:
தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையானது மாணவர்களை உயர்தர பாடசாலைகளுக்குத் தேர்ந்தெடுப்பதற்கும், மாணவர்களுக்கு உதவிப் பணம் வழங்குவதற்குமான பரீட்சையாக அமைந்துள்ளது. இப்பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளைப் பெறும் மாணவர்கள் இலங்கையிலுள்ள மிகவும் பிரபல்யமான பாடசாலைகளுக்கு அனுமதிக்கப்படுவர்.

அதேநேரம், இப்பரீட்சையில் சித்தியடையும் மாணவர்களுக்கு க.பொ.த. உயர்தரம் சித்தியடையும் வரை மாதந்தோறும் (தற்போது) ரூபாய் 500 உதவிப் பணமாக அரசாங்கத்தால் வழங்கப்படும். உரிய மாணவன் பல்கலைக்கழகத்துக்குத் தெரிவு செய்யப்பட்டாலும் இத்தொகை அதிகரிக்கப்பட்டு வழங்கப்படும்.

எத்தனை மாணவர்கள் இப்பரீட்சையில் தோற்றுகின்றனர்:
தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையானது ஒரு போட்டிப் பரீட்சையாகும். சராசரியாக ஆண்டொன்றுக்கு 70 000 மாணவர்கள் மட்டில் அகில இலங்கை ரீதியில் தமிழ்மொழி மூலமாக தோற்றுவர். இவர்களுள் சுமார் 3500 மாணவர்கள் மட்டில் சித்தியடைவர்.

தற்போது இப்பரீட்சையில் தோற்றவுள்ள எத்தனை மாணவர்கள் இடப்பெயர்வு முகாம்களில் உள்ளனர்:
இடப்பெயர்வு முகாம்களில் உள்ள 4872 மாணவர்கள் இப்பரீட்சையில் தோற்ற உள்ளனர்.

இலங்கை இலவசக் கல்வி வழங்கும் நாடாக இருக்கையில் எதற்காக அம்மாணவர்களுக்கு இந்த உதவிகள் வழங்கப்பட வேண்டி உள்ளது:
அண்மைய வருடங்களாக இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தால் கடந்த ஆறு மாதங்கள் முதல் இரண்டு ஆண்டுகள் வரை வன்னிப் பகுதியில் உள்ள பாடசாலைகள் இயங்கவில்லை. அதனால் அந்த மாணவர்களுக்கான பாடப் புத்தகங்களும் விநியோகிக்கப்படவில்லை. தற்போது அவர்கள் அனைத்தையும் இழந்து இடம்பெயர்ந்துள்ள நிலையில் அவர்கள் பாடப் புத்தகங்களைப் பெற்று படிப்பதற்கான வாய்ப்பான சூழல் இடம்பெயர்வு முகாம்களில் இல்லை.

மேலும் இந்நிலைக்கு முன்னதாகவே புலமைப் பரிசில் பரீட்சைக்கான துரித வழிகாட்டல் நூல்களை அரசின் இலவச கல்வித் திட்டத்தின் கீழ் வழங்குவதில்லை. அதனால் மாணவர்கள் அதனை தனிப்பட்ட முறையில் வாங்கியே தமது கற்கைகளை மேற்கொள்கின்றனர்.

ஏற்கனவே கல்வி பாதிக்கப்பட்ட நிலையில் பரீட்சைக்குத் தோற்றும் இம்மாணவர்களுக்கு துரித மீட்டல் செய்வதற்கான வினா விடைத் தொகுப்புகளும் அதற்கான வழிகாட்டி நூல்களும் மிகவும் அவசியம்.

எதற்காச் சிந்தனை வட்டத்தின் வெளியீடுகள் தெரிவு செய்யப்பட்டது:
சிந்தனை வட்டம் கடந்த 15 வருடங்களாக புலமைப் பரிசில் பரீட்சைகளுக்கான நூல்களை வெளியிட்டு வருகின்றது. இலங்கை பூராவும் உள்ள 700க்கும் மேற்பட்ட பாடசாலைகளுக்கு சிந்தனைவட்டம் இந்நூல்களை விநியோகித்து உள்ளது. சிந்தனை வட்டத்தின் நூல்களின் தரம் இத்துறையில் நீண்டகாலம் நிலை பெற்ற காரணங்களினால் விசேட கல்விப் பணிப்பாளர் தனது உதவிக் கோரிக்கையை சிந்தனை வட்டத்திடம் வைத்தார்.

இந்நூல் திட்டத்திற்கு ஏற்படும் செலவு என்ன:
ஒவ்வொரு மாணவருக்கும்
30 வினாத்தாள்கள் கொண்ட வினாத் தொகுப்பு (148 பக்கங்கள்) 180.00 ரூபாய்
வழிகாட்டி நூல் 1 97.50 ரூபாய்
வழிகாட்டி நூல் 2 97.50 ரூபாய்
வழிகாட்டி நூல் 3 97.50 ரூபாய்
வழிகாட்டி நூல் 4 97.50 ரூபாய்

570.00 ரூபாய் : ஒரு மாணவருக்கு இந்நூல் தொகுப்பை வழங்க ஏற்படும் செலவு 
(வழிகாட்டி நூல்கள் இல்லாது 100 பக்கம் கொண்ட வினாத் தொகுப்பின் சந்தை மதிப்பு 200 முதல் 225 ரூபாய்)

27 77 000.00 ரூபாய் : 4872 மாணவர்களுக்கும் தொகுப்பை வழங்க ஏற்படும் செலவு

வெளியீட்டாளர்களான சிந்தனை வட்டம் செலவு தொகையின் மூன்றிலொரு பகுதியைப் பொறுப்பேற்பதுடன் விநியோகத்தையும் மேற்கொள்கின்றனர்.
9 25 000.00 ரூபாய் : சிந்தனை வட்டம் பொறுப்பேற்றசெலவுத் தொகை.

18 52 000.00 ரூபாய் : சிந்தனை வட்டம் பொறுப்பேற்ற பின் நூல்தொகுப்பை வழங்க ஏற்படும் செலவு.

இந்நூல் திட்டத்திற்கான செலவை எவ்வாறு பெற்றுக்கொள்வது:
ஆரம்பித்தில் தேசம்நெற் இம்முயற்சியை முன்னெடுத்திருந்தது. தற்போது மாணவர்களின் தொகை அதிகரித்துள்ள நிலையில் தேசம்நெற் தனித்து இத்திட்டத்தை நிறைவேற்றும் பொருளாதாரப் பலத்தை கொண்டிருக்காததால் வெவ்வேறு உதவி நிறுவனங்கள் தனிநபர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அதன் மூலம் பெறப்பட்ட உதவிகள் வருமாறு

7 00 000 ரூபாய் : மத்திய இலங்கை முஸ்லீம் பட்டதாரிகள் ஒன்றியம் (இலங்கை)
5 50 000 ரூபாய் (3000 பவுண்) : அகிலன் பவுண்டேசன் (லண்டன்)
2 00 000 ரூபாய் : தேசம்நெற்    
   37 000 ரூபாய் (200 பவுண்) : பி சோமசுந்தரம் (லண்டன்)

14 87 000 ரூபாய் : மொத்தமாக இதுவரை உறுதியளிக்கப்பட்ட தொகை.

3 65 000 ரூபாய் (2000 பவுண்) : இத்திட்டத்தினை நிறைவேற்ற இன்னமும் தேவையான நிதி.

இதன் நம்பகத் தன்மையை எவ்வாறு உறுதிப்படுத்துவது:
இந்நூல் திட்டத்திற்கு பங்களிப்பு செய்யதவர்களின் முழுமையான விபரங்கள் செலவீனங்களுக்கான கணக்கு விபரங்கள் நூல்கள் விநியோகிக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் அனைத்தும் தேசம்நெற் இணையத்திலும் லண்டன் குரல் பத்திரிகையிலும் வெளியிடப்படும்.

இத்திட்டத்திற்கு உதவ விரும்புபவர்கள் எவ்வாறு உதவலாம்:
இந்நூல் திட்டத்திற்கு உதவ விரும்புபவர்கள் தேசம்நெற்றுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டு தங்கள் உதவியை வழங்கலாம். உதவி வழங்குபவரின் பெயரும் உதவித்தொகையும் முழுமையான கணக்கு விபரமும் தேசம்நெற் இணையத் தளத்திலும் லண்டன் குரல் பத்திரிகையிலும் பிரசுரிக்கப்படும்.

எப்படித் தொடர்பு கொள்வது:
தொடர்புகளுக்கு: த ஜெயபாலன் – ரி சோதிலிங்கம்
தொலைபேசி இல – 0044 208 279 0354
கைத் தொலைபேசி இல – 0044 7800 596 786 – 0044 7846 322 369
மின்அஞ்சல் : thesam97@hotmail.com

இந்நூல் திட்டத்தின் பயனை எவ்வாறு மதிப்பிட முடியும்:
சூழல் இடம்கொடுத்தால் இம்மாணவர்கள் மாதிரிப் பரீட்சைகளுக்கு அமர்த்தப்பட்டு அவற்றின் மதிப்பீடுகள் உதவி வழங்குபவர்களுக்கு தெரியப்படுத்தப்படும். மேலும் இம்மாணவர்கள் ஓகஸ்ட் நடுப்பகுதியில் நடைபெறவுள்ள புலமைப் பரிசில் பரீட்சைகளில் தோற்றிப் பெறும் பெறுபேறுகள் உதவி வழங்கியவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

சமூக வளர்ச்சியின் அடிப்படை கல்வி!
இளமையில் கல்வி சமூகத்தின் அஸ்திவாரம்!

வட மாகாண பொருளாதார அபிவிருத்திக்கு விசேட கடன் திட்டம்!

வடக்கின் பொருளாதாரத் துறைகளை மீளக் கட்டியெழுப்பும் நோக்கில் மத்திய வங்கியினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள ‘வடக்கின் எழுச்சி ’ விசேட கடன் திட்டத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்திவைத்தார். வடக்கில் விவசாயம், கால்நடை, கடற்றொழில் உள்ளிட்ட பொருளாதாரத் துறைகளைக் கட்டியெழுப்ப வசதியாக இப்புதிய கடன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன் வடக்கு மக்களின் வாழ்வாதாரத்தைத் துரிதமாக மேம்படுத்தவும் இது வழிவகுக்குமென மத்திய வங்கி தெரிவித்தது.

வட மாகாணத்தின் அபிவிருத்திக்காக வங்கிகளின் பங்களிப்பினைப் பெற்றுக்கொள்ளும் வகையில் வங்கித்துறையினர் கலந்துகொண்ட விசேட கலந்துரையாடலொன்று நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெற்றது.

அலரி மாளிகையில் நேற்றுக்காலை இடம்பெற்ற இந்நிகழ்வின்போதே இலங்கை மத்திய வங்கியின்  ‘வடக்கின் எழுச்சி ’ கடன் திட்டத்தை உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி அறிமுகப்படுத்தி வைத்தார். இக்கடன் திட்டத்தின் கீழ் கடன் வழங்குவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட நிதி நிறுவனங்கள் தகுதியெனக் கருதும் சிறிய மற்றும் மத்திய தர வர்த்தக நடவடிக்கைகளுக்காக இலகு வட்டியில் கடன் வழங்கப்படவுள்ளது.

இதற்கென 3.000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வட மாகாணத்தில் பல்வேறு வளங்கள் உள்ளன. அவற்றை முறையாகப் பயன்படுத்தி மக்களின் வாழ்வாதாரத்திற்குப் பயனளிப்பதற்காக அவற்றை மாற்ற வழிவகை செய்யப்படவுள்ளன.

இலங்கையின் வருடாந்த நெல் உற்பத்தியில் பத்துவீதம் வடக்கிலிருந்தே கிடைக்கின்றன. வெங்காயம்,  மிளகாய்,  பயறு,  நிலக் கடலை உட்பட பல்வேறு பயிர்ச் செய்கைகளிலும் வட மாகாணம் சிறந்து விளங்குகிறது.

நாட்டில் கடற்றொழிலில் ஈடுபட்டுள்ளவர்களில் 20 வீதமானோர் வடக்கைச் சார்ந்தவர்கள். அங்கு 219 மீனவர் கிராமங்கள் உள்ளதுடன் 1.29.000 குடும்பங்கள் அங்கு வாழ்கின்றன. இவர்களுக்கு வங்கிக் கடன் வசதிகளை பெற்றுக்கொடுப்பதன் மூலம் அவர்களின் வருமானத்தை அதிகரிக்க முடியுமென மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

ஓய்வு பெற்றுச் செல்லும் பிரதான பாதுகாப்பு அதிகாரி ஜனாதிபதியூடன் சந்திப்பு!

donald_perera.jpgதமது சேவையிலிருந்து ஓய்வு பெற்றுச் செல்லும் பிரதான பாதுகாப்பு அதிகாரி எயார் சீப் மார்ஷல் டொனால்ட் பெரேரா நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்து கலந்துரையாடினார்.

அலரி மாளிகையில் இச்சந்திப்பு இடம்பெற்றது. எயார் சீப் மார்ஷல் டொனால்ட் பெரேராவின் சேவையை கௌரவிக்கும் முகமாக அவருக்கு ஜனாதிபதி நினைவுக் கேடயம் ஒன்றைப் பரிசளித்தார். 

மிஹின்-லங்கா இன்றுமுதல் திருச்சிக்கு புதிய சேவை

mihinlankaflight.jpgமிஹின்- லங்கா விமான நிறுவனம் கொழும்பிலிருந்து இந்தியாவின் திருச்சி நகருக்கான சேவையை இன்றுமுதல் ஆரம்பித்துள்ளது. வாரத்தில் நான்கு தடவைகள் திருச்சிக்கான போக்குவரத்தில் ஈடுபடவுள்ள மிஹின்-லங்கா விமான சேவையில் கத்தோலிக்க பக்தர்களின் வசதியைக் கருத்திற்கொண்டு புதிய சலுகைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக விமான சேவைகள் பிரதி அமைச்சர் சரத் குமார குணரத்ன தெரிவித்துள்ளார்.

இன்று திருச்சிக்குச் செல்லும் விமானத்தில் பிரதி அமைச்சர் சரத் குமார குணரத்னவுடன் கத்தோலிக்க மத குருக்கள் மற்றும் பக்தர்கள் பயணம் செய்யவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் தங்கியிருந்த 37 குடும்பங்கள் இன்று மீள்குடியேற்றம!

உயர் பாதுகாப்பு வலயம் காரணமாக மூதூர் கிழக்கிலிருந்து இடம்பெயர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் தங்கியிருந்த 37 குடும்பங்கைளச் சார்ந்தவர்கள் இன்று கிளிவெட்டியில் மீள் குடியேற்றப்பட்டனர். சத்துருக்கொன்டான் – இலக்கம் 02 முகாமில் கடந்த 3 வருடங்களாக தங்கியிருந்தவர்களில் நான்காவது தொகுதியினராக  37 குடும்பங்கைளச் சேர்ந்த 122 பேர் 7 பஸ் வண்டிகளில் வெருகல் ஊடாக கிளிவெட்டிக்கு அதிகாரிகளினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

சுயவிருப்பத்துடனேயே இக்குடும்பங்கள் கிளிவெட்டி இடைத்தரிப்பு முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். குறிப்பிட்ட உயர் பாதுகாப்பு வலயம் காரணமாக தமது இருப்பிடங்களை இழந்துள்ள குடும்பங்களில் 745 குடும்பங்களைச் சேர்ந்த 2565 பேர் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 11 முகாம்களிலும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளிலும் தங்கியிருந்தனர்.

அதிகாரிகளின் தகவல்களின் படி மட்டக்களப்பு மாவட்டத்தில் இது வரை பலாச்சோலை, மாவடிவேம்பு, கிரிமுட்டி ஆரையம்பதி ஆதிவைரவர் கோவிலடி முகாம் மற்றும் சத்துருக்கொன்டான் இலக்கம் -02 ஆகிய முகாம்கள் மூடப்பட்டு 4 கட்டங்களில் கடந்த யூன் 16 ஆம் திகதி முதல் 155 குடும்பங்களைச் சேர்ந்த 608 பேர் இது வரை அங்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்

அணிசேரா நாடுகளின் உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள ஜனாதிபதி இன்று எகிப்து பயணம்

mahinda-rajapa.jpgஅணிசேரா நாடுகளின் 15ஆவது உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று எகிப்துக்குச் செல்லவுள்ளார். இந்த உச்சிமாநாடு எகிப்தின் ஷாம் அல்-ஷேக் நகரில் நாளை ஆரம்பமாகவுள்ளது. இரண்டு நாட்களுக்கு நடைபெறவுள்ள இம்மாநாட்டின் நாளைய முதல் நாள் அமர்வில் ஜனாதிபதி உரையாற்றவுள்ளார் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த மாநாட்டில் பங்குபற்றுவதற்காக எகிப்து செல்லவுள்ள ஜனாதிபதி தலைமையிலான இலங்கைக் குழுவில் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கலாநிதி பாலித கொஹன மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோர் உட்பட சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

அபிவிருத்திக்கான சமாதானமும் சர்வதேச ஒருமைப்பாடும் எனும் தொனிப்பொருளில் நடைபெறவுள்ள இந்த உச்சிமாநாட்டில் உலகம் எதிர்நோக்கும் சவால்கள், பாதுகாப்பு, ஆயுதக் களைவு, சூழல் மாற்றம், மற்றும் மனித உரிமைகள் உட்பட பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பாக ஆராயப்படவுள்ளன.

இதேவேளை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இம்மாநாட்டில் கலந்துகொள்ளும் அணிசேரா நாடுகளின் தலைவர்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதோடு, இலங்கையின் பயங்கரவாத ஒழிப்பு மற்றும் நாட்டின் சமகால நிலைவரங்கள் என்பன தொடர்பாக இச்சந்திப்புக்களின்போது அவர்களுக்கு விளக்கிக் கூறவுள்ளார் என்றும் வெளிவிவகார அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

அணிசேரா நாடுகள் அமைப்பில் 118 நாடுகள் அங்கத்துவம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் பாகிஸ்தானை வீழ்த்தியது இலங்கை அணி

srilanka-cri.jpg“பாகிஸ் தான் அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 7 விக்கட்டுக்களால் வெற்றியீட்டியது. மூன்று நாட்களில் முடிவடைந்த இந்த டெஸ்ட் போட்டியில் 171 ஓட்டங்கள் எனும் இலகுவான வெற்றி இலக்கை நோக்கி தனது 2ஆவது இன்னிங்ஸக்காகத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 3 விக்கட் இழப்பிற்கு 174ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது

கிரிக்கெட் சுற்றுலா மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் அணிக்கும் இலங்கை அணிக்குமிடையிலான இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டி கொழும்பு பீ. சரவணமுத்து மைதானத்தில் கடந்த 12ஆம் திகதி ஆரம்பமானது.

இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி ஈட்டிய பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. பாகிஸ்தான் அணி தனது முதலாவது இன்னிங்ஸில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 90 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. தொடர்ந்து தனது முதலாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி 240 ஓட்டங்களைப் பெற்று சகல விக்கட்டுக்களையும் இழந்தது.

தொடர்ந்து 150 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த பாகிஸ்தான் அணி 320 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது. இதில் பாகிஸ்தான் அணி சார்பில் தனது கன்னி டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் பவாட் அலாம் தனது கன்னி டெஸ்ட் செஞ்சரியைப் பெற்றார். பவாட் அலாம் பெற்ற ஓட்டங்கள் 168

ஒரு கட்டத்தில் 294 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுக்களை மாத்திரமே இழந்து வலுவான நிலையிலிருந்த பாகிஸ்தான் அணி இலங்கை அணி வீரர்களின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் ஏனைய 7 விக்கட்டுக்களையும் 26 ஓட்டங்களுக்குள் அடுத்தடுத்து இழந்தது.

இலங்கை அணி சார்பாக இரு இன்னிங்ஸிலும் சிறப்பாகப் பந்து வீசிய நுவன் குலசேகர மொத்தமாக 8 விக்கட்டுக்களை வீழ்த்தினார். இவரைத் தவிர இரண்டாவது இன்னிங்ஸில் சுழல் பந்துவீச்சாளர் ரங்கன ஹேரத் 5 விக்கட்டுக்களைக் கைப்பற்றினார்.

171 ஓட்டங்கள் எனும் இலகுவான வெற்றி இலக்கை நோக்கி தனது 2ஆவது இன்னிங்ஸ{க்காகத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 3 விக்கட் இழப்பிற்கு 174ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. வர்ணபுர 54 ஓட்டங்களையும், குமார் சங்கக்கார 46 ஓட்டங்களையும் பெற்றனர்.

இலங்கை அணி அதன் புதிய தலைவரான குமார் சங்கக்கார தலைமையில் தனது இரண்டாவது டெஸ்ட் வெற்றியைப் பெற்றுக்கொண்டதோடு இன்றைய போட்டியின் சிறப்பாட்டக்காரர்களாக பவாட் அலாம், நுவன் குலசேகர தெரிவானர்.

இரு அணிகளுக்குமிடையிலான 3 போட்டிகளைக்கொண்ட இந்த டெஸ்ட் தொடரின் 3 போட்டி எதிர்வரும் 20 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது

நமக்காக நாம் நிதியத்துக்கு அமெரிக்காவிலுள்ள இலங்கையர்கள் 5050 டொலர்; அன்பளிப்பு

பாதுகாப்புப் படைவீரர்களின் நலன்புரி விடயங்களுக்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள நமக்காக நாம்  நிதியத்துக்கு அமெரிக்காவிலுள்ள சமாதானத்துக்கான இலங்கையர்கள் எனும் அமைப்பு 5050 அமெரிக்க டொலர்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் நிவ் இங்லேன்ட் எனும் பகுதியில் வசிக்கும் இலங்கையர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட இந்த நிதி நேற்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது. சமாதானத்துக்கான இலங்கையர்கள் அமைப்பின் பிரதிநிதிகளான ரோஹன பெர்ணான்டோ மற்றும் சுஜீவ டி சில்வா ஆகியோர் இந்த நிதியை பாதுகாப்புச் செயலாளரிடம் கையளித்ததாக அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

பங்ளாதேஷூக்கு வெளிநாட்டில் கிட்டிய முதல் டெஸ்ட் வெற்றி!

cricket.jpgகிரிக்கெட் உலகில் அந்நிய மண்ணில் முதல் டெஸ்ட் வெற்றியை பங்ளாதேஷ் பெற்றுள்ளது.

மேற்கிந்திய தீவுகளுக்கு கிரிக்கெட் சுற்று பயணம் மேற்கொண்டுள்ள பங்ளாதேஷ் அணி 2 டெஸ்ட,  3 ஒருநாள் போட்டி மற்றும் 1 டுவென்டி-20 போட்டிகளில் விளையாடி வருகிறது.

முதல் டெஸ்ட் போட்டி கிங்ஸ்டனில் நடந்தது. முதலில் களம் இறங்கிய பங்ளாதேஷ் அணி முதல் இன்னிங்சில் 238 ஓட்டங்கள் எடுத்தது. மேற்கிந்திய தீவுகள் அணி 302 ஓட்டங்கள் எடுத்தது.

இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த பங்ளாதேஷ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 321 ஓட்டங்கள் எடுத்து ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது.

அதனையடுத்து  களம் இறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 181 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் பங்ளாதேஷ் அணி 95 ஓட்டங்;கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

பங்ளாதேஷ் அணி அந்நிய மண்ணில் பெறும் முதல் டெஸ்ட் வெற்றி இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது

இடம்பெயர்ந்தவர்களில் 60 வீதத்தினரை ஜனாதிபதி தேர்தலுக்கு முன் விடுவிப்பு – அமெரிக்க சஞ்சிகைக்கு ஜனாதிபதி தெரிவிப்பு

mahinda_raajapakse11.jpgயுத்த சுழ்நிலை காரணமாக இடம்பெயர்ந்து அகதி முகாம்களில் தங்கியுள்ள மூன்று இலட்சம் பேரில் குறைந்த பட்சம் 60 வீதமானவர்களை அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் அவர்களின் சொந்த இடங்களில் குடியேற்ற எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நம்பிக்கை தெரிவித்தார். அமெரிக்காவின் ரைம் சஞ்சிகைக்கு அளித்த பேட்டி ஒன்றின்போதே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.

பிரபாகரன் கொல்லப்பட்டதாக அறிந்ததும் இறைவனுக்கும் மும்மணிகளுக்கும் நன்றி தெரிவித்தேன். அது ஒரு வரம். பிரபாகரன் சுடப்பட்டார் என்பது மட்டும் தெரியும் ஆனால் எப்படி சுடப்பட்டார் என்பதில் ஆர்வம் காட்டவில்லை.

பிரபாகரன் தற்போது இல்லை என்பதே முக்கியமானது. அவரை இங்கு அழைத்துவந்து கதைக்க விரும்பினேன். நான் ஒரு போதும் அவரைப் பார்த்ததில்லை. சந்தித்திருந்தல் ஏன் இந்தப் பைத்தியக்காரத்தனம் எனக் கேட்டிருப்பேன். இதைத்தவிர வேறு எதைக் கேட்க முடியும்.

அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் குறுகிய மனப்பான்மை கொண்ட நாடுகள் எனக் கருதவில்லை. பயங்கரவாதத்தை அழிப்பதற்கு எமக்கு உற்சாகமளித்தவர்கள். ஜோர்ஜ் டப்ளியு புஷ்ஷை நாம் பின்பற்றினோம். அவர் விரும்பியதை நாம் நிறைவேற்றினோம். பயங்கரவாதத்தை அழித்த எங்களை அவர்கள் பாராட்ட வேண்டும்