எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

இலங்கையில் என்றுமில்லாதளவு வெளிநாட்டு கையிருப்பு – 5200 மில் டொலர்; ஆளுநர் தகவல்

இலங்கையில் என்றும் மில்லாத அளவுக்கு வெளிநாட்டு கையிருப்பு சுமார் 5200 மில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளது. இவற்றில் ஒரு பகுதியை கையிருப்பாக தங்கத்தை வைத்திருப்பதற்கு மத்திய வங்கி முடிவு செய்துள்ளது. இதன்படியே தங்கத்தைக் கொள்முதல் செய்ததாக மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார்.

மத்திய வங்கியின் கையிருப்பிலுள்ள தங்கம் பற்றி ஒவ்வொருவரும் தமக்கு வந்ததெல்லாம் கூறிக்கொண்டு இருக்கிறார்கள். இவற்றில் எவ்வித உண்மையுமில்லை எனக் கூறிய ஆளுநர், எமது அயல் நாடான இந்தியா உட்பட உலக நாடுகள் தங்கத்தை கையிருப்பில் வைத்துள்ளன. வைத்திருப்பதில் ஆர்வமும் காட்டுகின்றன.

பணத்தில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களை ஈடுசெய்வதற்கு தங்கத்தின் கையிருப்பு வெகுவாக உதவிபுரியும் என்றும் கூறினார்.வன்னியில் வெள்ளைமுள்ளி வாய்க்கால் பகுதியில் நடைபெற்ற இறுதி யுத்தத்தின்போது கைப்பற்றப்பட்ட ஒரு தொகை தங்கம் தொடர்பாக எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்புகின்றனர். இதன் உண்மைநிலை என்ன? என ஆளுநரிடம் கேட்டபோது;

கைப்பற்றப்பட்ட தங்கம் ஒருபோதும் மத்திய வங்கிக்கு நேரடியாக கிடைப்பதில்லை. அவற்றுக்கு ஒரு சட்டரீதியான நடைமுறைகள் உள்ளன. நீதிமன்றத்தினூடாகவே அவை மத்திய வங்கிக்கு ஒப்படைக்கப்படும். அவ்வாறு ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளனவா? என கேட்டபோது; இதுவரை அவ்வாறான நடைமுறைகள் எடுக்கப்படவில்லை என்றார்.

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கிடைக்கும் நிதி பற்றி கேட்டபோது; சர்வதேச நாணயம் எமக்கு வழங்குவதாக கூறிய நிதியை வழங்கிவருகிறது. எமது இலக்கை சரியான முறையில் பூர்த்தி செய்வதற்கு முடியும் என்றும் ஆளுநர் தெரிவித்தார்.

பொன்சேகாவின் இந்திய விஜயம் குறித்து அரசியல் வட்டாரங்களில் பல்வேறு ஊகங்கள்

sara-pon.jpgஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக களமிறங்கியுள்ள ஜெனரல் சரத் பொன்சேகாவின் இந்திய விஜயம் பல்வேறு ஊகங்களுக்கு வழி வகுத்திருக்கிறது.சமய யாத்திரையை மேற்கொண்டே அவர் இந்தியாவுக்குச் சென்றிருப்பதாகக் கூறப்பட்டாலும் மும்பைக்கு அவர் சென்றிருப்பதாகவும் பீகாரிலுள்ள புத்தகாயாவுக்கு அவர் விஜயம் மேற்கொள்ளக்கூடும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

புதுடில்லி சென்று அவர் இந்தியத் தலைவர்களைச் சந்திப்பாரென்பது பற்றித் தெளிவாகத் தெரியவரவில்லை. ஆனால், புதுடில்லியில் இந்தியத் தலைவர்களுடனான சந்திப்புக்கு ஏற்பாடுகளைச் செய்து தருமாறு அவர் இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் காந்தாவை கோரியிருந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று வெள்ளிக்கிழமை அவர் நாடு திரும்புவாரென அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் கூறியிருந்தன.

இந்தியாவுடன் நெருக்கமாக செயற்படுவதற்கான விருப்பத்தை பொன்சேகா பல வழிகளில் வெளிப்படுத்தி வருகிறார். இந்திய இராணுவத்துடன் தான் நெருக்கமாக இருந்ததாகவும் இந்தியாவின் சகலவற்றையும் நேசிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். ராஜபக்ஷக்கள் பக்கம் இந்தியா சாய்ந்திருப்பதாக இலங்கையின் எதிர்க்கட்சிகள் நம்புகின்ற நிலையில், இந்தியாவுடன் நெருக்கத்தை ஏற்படுத்த பொன்சேகா விரும்புவதாகத் தென்படுவதாக எக்ஸ்பிரஸ் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

அவரின் தீவிரமான பெரும்பான்மை (சிங்கள) தேசியவாத கருத்துகளையிட்டு அவர் தொடர்பாக இந்தியா ஐயுறவுகளைக் கொண்டிருப்பது அறிந்ததொன்றாகும். ஆனால் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர் அவர் முற்றிலும் வித்தியாசமான தொனியில் கருத்துகளைத் தெரிவித்து வருகிறார். இது டில்லி தொடர்பான இரகசியத் திட்டமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. ராஜபக்ஷவின் அரசாங்கத்திடமிருந்து தனக்குப் போதிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை என பொன்சேகா கவலையடைந்திருப்பதாக ஐ.தே.க. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தனக்கு வேண்டிய பாதுகாப்புத் தொடர்பாக இந்திய அதிகாரிகளுடன் கலந்தாலோசிக்க அவர் அங்கு சென்றிருக்கலாமெனவும் அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.

கெப்ரக வாகனத்தில் வந்தோர் அதிரடி படையினராலேயே கைது – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தகவல்

பொரளை சந்தியில் கெப் ரக வாகனத்தில் வந்த நால்வரும் விசேட அதிரடிப் படையினராலேயே கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இரகசிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஐ. எம். கருணாரட்ன தெரிவித்தார்.

ராஜகிரிய பிரதேசத்தைச் சேர்ந்த நால்வர் கெப்ரக வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது பொரளை தேவி பாளிகா கல்லூரிக்கு அருகில் வைத்து விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர். கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருக்கும் நால்வர் மீதும் நடத்தப்படும் இரகசியப் பொலிஸாரின் விசாரணையின் பின்னரே சந்தேக நபர்கள் தொடர்பான விபரங்கள் தெரியவரும் என்றும் பொலிஸ் ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையால் சிறுபான்மை சமூகங்களுக்கு நன்மை இல்லை

sampanthan.jpg1978 இல் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பும் அதனூடாக உருவாக்கப்பட்ட நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையும் இந்த நாட்டின் சிறுபான்மைச் சமூகங்களுக்கு மட்டுமல்ல முழு நாட்டுக்குமே ஆபத்தையும், அழிவையும் ஏற்படுத்தி விட்டிருப்பதாகத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றக் குழுத்தலைவர் ஆர்.சம்பந்தன் நாட்டில் சாதாரண நீதி கூட நடைமுறைச் சாத்தியமாக்கப்படவில்லை எனவும் இன்று காணப்படுவது குழம்பிப்போனதொரு அரசியல் கலாசாரமே எனவும் சுட்டிக்காட்டினார்.

மறைந்த அமைச்சர் லலித் அத்துலத்முதலியின் நினைவையொட்டி ஜனநாயக தலைமைத்துவ நிறுவனமும், பிரட்ரிக் நோமன் மன்றமும் இணைந்து கொழும்பு டீன்ஸ் வீதியிலுள்ள பூக்கர் ரெட்ஸ் மண்டபத்தில் நடத்திய பகிரங்க கலந்துரையாடலில் கலந்து கொண்டு பேசுகையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

“நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஒழிப்பு சிறுபான்மை சமூகங்கள் மீதான அதன் தாக்கம் எனும் தொனிப் பொருளில் இக் கலந்துரையாடல் இடம்பெற்றது.அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த சம்பந்தன் கூறியதாவது;நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறையால் சிறுபான்மைச் சமூகங்கள் மட்டும் பாதிப்படையவில்லை. சிங்கள மக்களும் கூட பிரச்சினைகளை எதிர்கொள்ளவே செய்கின்றனர்.

இந்த 1978 ஆம் ஆண்டின் அரசியலமைப்பின் பிதாமகனாக ஜே.ஆர்.ஜயவர்தன காணப்படுகிறார். அதனூடாகவே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையும் ஏற்படுத்தப்பட்டது. இந்த அதிகார முறையின் பேராபத்தை உணர்ந்து அன்றைய அரசியலிலிருந்த லலித் அத்துலத் முதலி கூட பிற்பட்ட காலத்தில் அதனைக் கடுமையாக எதிர்த்தார். நிறைவேற்று அதிகாரம் இன்று சர்வாதிகாரத் தன்மை கொண்டதாக மாற்றம் பெற்றுள்ளது.என்று இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

மலையக மக்கள் முன்னணி இன்று தீர்மானம்

ஜனாதிபதி தேர்தலில் மலையக மக்கள் முன்னணியின் நிலைப்பா ட்டை தீர்மானிக்க “விரிவுபடுத்தப் பட்ட மத்திய குழு” இன்று சனிக்கிழமை தலவாக்கலையில் கூடி ஆரா ய்கிறது. தமிழர்களின் இனப்பிரச்சினை தொடர்பாகவும் மலையக மக்களின் எதிர்கால அரசியல் உரிமைகள் தொடர்பாகவும் ஜனாதிபதி வேட்பாளர்கள் பகிரங்கப்படுத்தும் தீர்வுகளின் அடிப்படையிலேயே ஜனாதிபதி வேட்பாளரை தமது கட்சி ஆதரிக்க வேண்டுமென மலையக மக்கள் முன்னணியின் சகலமட்ட அங்கத்தவர்களும் முன்னணியின் தலைவரும், அமைச்சருமான பெ. சந்திரசேகரனை சந்தித்து வலியுறுத்தி வருகின்றனர்.

நிவாரணக் கிராமங்களில் 6222 பரீட்சார்த்திகள் – பரீட்சை அனுமதி அட்டை விநியோகம்

schools_stu.jpgஇம்மாதம நடைபெறவுள்ள க. பொ. த சாதாரண தரப் பரீட்சைக்கு வவுனியா நிவாரணக் கிராமங்களில் இருந்து 6222 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர். அவர்களுக்கென 51 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.

இப்பரீட்சைக்கு நிவாரணக் கிராமங்களிலிருந்து 1310 தனிப்பட்ட பரீட்சார்த்திகள் உட்பட 6222 பேர் தோற்றுகின்றனர். இது தவிர வவுனியா மாவட்ட பாடசாலைகளில் 5611 மாணவர்கள் தோற்றுகின்றனர். இவர்களுக்கென 51 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் தமக்குரிய அனுமதி அட்டைகளை பெற்றுக் கொள்ளுமாறு வவுனியா வலயக் கல்வி பணிப்பாளர் ரஞ்ஜனி ஒஸ்வேர்ல்ட் தெரிவிததுள்ளார. 

எவரெஸ்ட் சிகரத்தில் நேபாள அமைச்சரவை கூட்டம் – புவி வெப்பமாற்றம் குறித்து விழிப்புணர்வுக்காக

the-mount-everest.jpgபுவி வெப்பமாற்றம் குறித்து விழிப்புணர்வை உலகம் முழுவதும் ஏற்படுத்த நேபாள அமைச்சரவை கூட்டம் இமயமலையின் எவரெஸ்ட் சிகரத்தில் நடந்தது.  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒக்ஸிஜன் சிலிண்டர் பொருத்தியபடி பல அமைச்சர்கள் பங்கேற்றனர். பாதுகாப்பு படையினர் மற்றும் மருத்துவ குழுவினரும் உடன் சென்றனர். புவியின் வெப்ப நிலை உயர்ந்து வருவதால் பெரும் அழிவை சந்திக்க நேரிடும் சுழல் இருப்பதாக தற்போதைய முக்கிய கவலையாக உள்ளது.

இந்நிலையில் நேபாள அரசு உலகம் முழுவதும் விழிப்புணர்வை ஏற்படுத்த எவரெஸ்ட் சிகரத்தின் அருகில் அமைச்சரவை கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதன்படி நேபாள பிரதமர் மாதவ்குமார் தலைமையில் 24 அமைச்சர்கள் ஹெலிகாப்டர் மூலம் இயமமலையில் உள்ள எவரெஸ்ட்டின் முந்தைய கீழ் தளத்திற்கு சென்றனர்.

அங்குள்ள காலிபத்தார் என்னும் பகுதியில் கூட்டம் நடந்தது. இப்பகுதி கடல் மட்டத்தில் 17 ஆயிரத்து 192 அடி உயரத்தில் உள்ளது. அதவாது 5 ஆயிரத்து 240 மீட்ரர். இந்தகூட்டத்தில் பருவகால மாற்றம் குறித்து விழிப்புணர்வு உருவாக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பபட்டது. இமயமலையில் பனி உருகும் நிலை குறித்து இக்கூட்டத்தில் கவலை தெரிவிக்கப்பட்டது.

உலகம் முழுவதும் இந்த பிரச்னையை முன்வைத்து அனைத்து நாடுகளும் ஒருமித்த கருத்தை ஏற்படுத்த வரும் 7 ம் தேதி டென்மார்க் தலைநகர் கோபன்ஹனில் மாநாடு நடக்கவிருக்கிறது. ஒரு வார காலம் நடக்கும் இந்த மாநாட்டில் உலக அளவில் அமெரிக்கா,  இந்தியா, சீனா, ரஷ்யா என 100 க்கும் மேற்பட்ட நாட்டு தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

இதற்கிடையில் எரிபொருளில் இருந்து வெளியேறும் நச்சுக்காற்றின் அளவை குறைப்பதில் வளர்ந்த மற்றும் வளர்ந்து வரும் நாடுகள் ஒருமித்த கருத்தை ஏற்க மறுத்து வருகின்றன. அதிக அளவு அசுத்தக்காற்றை வெளியிடும் சீனாவும் 40 முதல் 45 சதவீதம் வரை ( 2020 க்குள்) கட்டுப்படுத்த ஒத்துக்கொண்டுள்ளது. இந்தியா வரும் 2020 ம் ஆண்டுக்குள் 20 முதல் 25 சதவீதம் வரை கட்டுப்படுத்த முன்வந்துள்ளது. ஆனால் அனைத்து நாடுகளும் ஒரே சாராம்ச கொள்கையை ஏற்க தயாராக இல்லை.

வரும் கேபன்ஹன் மாநாடு குறித்து ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த கடந்த அக்டோபர் மாதத்தில் மாலத்தீவில் நீருக்கடியில் அமைச்சரவை கூட்டம் நடந்தமை குறிப்பிடத்தக்கது.

டோணி சதம் போட்டதும் இந்தியா ஆட்டத்தை நிறுத்திக் கொண்டது

3-test.jpgஇந்திய அணியின் தலைவர் டோணி மும்பை டெஸ்ட் போட்டியில் 100 ஓட்டங்கள் எடுத்ததும் இந்தியா தனது முதல் இனிங்ஸ் ஆட்டத்தை நிறுத்திக் கொண்டது

மும்பை டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 393 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதையடுத்து ஆடத் தொடங்கிய இந்தியா அபாரமாக ஆடி பெரும் ஓட்டங்களை எடுத்தது. எட்டியது.

வீரேந்திர ஷேவாக் 293 ஓட்டங்களையும், முரளி விஜய் கிருஷ்ணா 87, டிராவிட் 74, சச்சின் 53, வி.வி.எஸ்.லட்சுமண் 62 ஓட்டங்களையும் எடுத்தனர்.

இவர்களின் ஆட்டத்தால் இந்தியா வலுவான நிலையடைந்தது.  இந்த நிலையில்  டோணி நிதானமாக ஆடி 100 ஓட்டங்களைப்பெற்றார்.

இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் டிக்ளேர் செய்யப்பட்டதைத் தொடர்ந்து இலங்கை தனது 2வது இன்னிங்ஸைத் தொடங்கியது.

சாதனையைத் தவற விட்ட ஷேவாக்…

இன்று வீரேந்திர ஷேவாக் முச்சதம் அடித்து புதிய சாதனை படைக்கும் வாய்ப்பை தவற விட்டார். இதற்கு முன்பு பிராட்மேன்இ லாரா ஆகியோர் 2 முச்சதங்களை எடுத்து சாதனை படைத்துள்ளனர். அதேபோல ஷேவாக்கும் 2 முச்சதங்களைப் பெற்றுள்ளார். இன்று மூன்றாவது முச்சதம் எடுத்திருந்தால் புதிய உலக சாதனையாக அது அமைந்திருக்கும்.

Sri Lanka in India Test Series – 3rd Test
Sri Lanka 393 & 11/0 (3.0 ov)
India 726/9d

Sri Lanka 1st innings
 NT Paranavitana  c Dravid b Harbhajan Singh  53 
 TM Dilshan  c Vijay b Harbhajan Singh  109 
 KC Sangakkara*  c †Dhoni b Ojha  18 
 DPMD Jayawardene  c Sehwag b Sreesanth  29 
 TT Samaraweera  c Vijay b Harbhajan Singh  1 
 AD Mathews  run out (Tendulkar/†Dhoni)  99
 HAPW Jayawardene†  c Harbhajan Singh b Ojha  43
 KMDN Kulasekara  c †Dhoni b Khan  12 
 HMRKB Herath  c Dravid b Harbhajan Singh  1
 M Muralitharan  not out  4  
 UWMBCA Welegedara  lbw b Ojha  8 
 Extras (b 4, lb 6, w 2, nb 4) 16     
      
 Total (all out; 94.4 overs; 415 mins) 393 (4.15 runs per over)
Fall of wickets1-93 (Paranavitana, 19.5 ov), 2-128 (Sangakkara, 30.5 ov), 3-187 (DPMD Jayawardene, 47.4 ov), 4-188 (Samaraweera, 48.1 ov), 5-262 (Dilshan, 64.6 ov), 6-329 (HAPW Jayawardene, 79.6 ov), 7-359 (Kulasekara, 84.6 ov), 8-362 (Herath, 87.2 ov), 9-379 (Mathews, 92.4 ov), 10-393 (Welegedara, 94.4 ov) 
        
 Bowling
 Z Khan 19 2 70 1
 S Sreesanth 16 1 82 1
 Harbhajan Singh 32 3 112 4 
 PP Ojha 23.4 1 101 3
 Yuvraj Singh 4 0 18 0        
 
India 1st innings
 M Vijay  lbw b Herath  87 
 V Sehwag  c & b Muralitharan  293 
 R Dravid  c †HAPW Jayawardene b Welegedara  74 
 SR Tendulkar  b Kulasekara  53 
 VVS Laxman  c Kulasekara b Muralitharan  62
 Yuvraj Singh  c Mathews b Herath  23
 MS Dhoni*†  not out  100  
 Harbhajan Singh  b Muralitharan  1
 Z Khan  c Kulasekara b Muralitharan  7 
 S Sreesanth  lbw b Herath  8 
 PP Ojha  not out  5
 Extras (lb 3, nb 10) 13     
      
 Total (9 wickets dec; 163.3 overs; 705 mins) 726 (4.44 runs per over)
Fall of wickets1-221 (Vijay, 39.1 ov), 2-458 (Sehwag, 82.2 ov), 3-487 (Dravid, 89.6 ov), 4-558 (Tendulkar, 114.2 ov), 5-591 (Laxman, 122.4 ov), 6-610 (Yuvraj Singh, 127.2 ov), 7-615 (Harbhajan Singh, 128.2 ov), 8-647 (Khan, 144.6 ov), 9-670 (Sreesanth, 151.4 ov) 
        
 Bowling 
 UWMBCA Welegedara 30 3 131 1
 KMDN Kulasekara 20 1 105 1
HMRKB Herath 53.3 2 240 3
 M Muralitharan 51 4 195 4
AD Mathews 6 0 36 0  
 TM Dilshan 3 0 16 0 
  
  Sri Lanka 2nd innings  
 NT Paranavitana  not out  8  
 TM Dilshan  not out  3 
  Extras  0     
      
 Total (0 wickets; 3 overs) 11 (3.66 runs per over)
        
 

தாய்நாட்டுக்கான கடமைகளை மக்கள் நம்பிக்கையுடன் நிறைவேற்றுவேன் -ஜனாதிபதி

mahinda0.jpgநாட்டு மக்களின் நம்பிக்கையை அடித்தளமாகக் கொண்டு தாய் நாட்டுக்கான கடமைகளை நிறைவேற்றியே தீருவேன் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.

அலரிமாளிகையில் நேற்று நடைபெற்ற சர்வதேச வலது குறைந்தோர் தின நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி நாட்டைப் பற்றிய தீர்மானத்தை எடுக்கும் உரிமை நாட்டு மக்களுக்கே உள்ளது. மக்கள் மீது எமக்கு முழுமையான நம்பிக்கை உண்டு என்று கூறினார்.

நாடு, நாட்டு மக்கள், நாட்டின் எதிர்காலம் ஆகியவை குறித்து சிந்திக்காமல் சுயநலமாகச் சிந்தித்துச் செயற்படுபவர்கள்தான் உண்மையில் அங்கவீனர்கள். நாடு இன்று பல எதிர்பார்ப்புகளுடன் உள்ளது. இந்நிலையில் நாட்டுக்கும் மக்களுக்குமான பொறுப்பை நான் நிறைவேற்றுவேன். எத்தகைய அவதூறுகளை எவர் மேற்கொண்டாலும் நாம் நாட்டைக் கட்டியெழுப்புவதில் உறுதியாகவுள்ளோம்.

என்னை வீட்டுக்கனுப்ப வேண்டும் என நினைப்பவர்கள் எதற்காக அப்படி நினைக்கிறார்கள் என நான் கேட்க விரும்புகிறேன்.

பயங்கரவாதத்திலிருந்து நாட்டை மீட்டு பாதுகாத்ததாலா? நாட்டை ஐக்கியப்படுத்தி அபிவிருத்தி செய்து கட்டியெழுப்பியதாலா? நாட்டின் பொருளாதாரத்தை வளர்ச்சிப்போக்கில் இட்டுச் செல்வதாலா அல்லது அரச ஊழியர்களை வேலைநீக்கம் செய்த யுகத்தை மாற்றி அரச ஊழியர் எண்ணிக் கையை 12 லட்சமாக அதிகரித்ததாலா? இதில் என்ன காரணத்திற்காக என்னைத் துரத்தப்பார்க்கின்றார்கள் என்று நான் கேட்க விரும்புகிறேன். எமக்கெதிராக சூழ்ச்சிகளும் சேறு பூசல்களும் பரவலாக இடம்பெற்று வருகின்றன.

மனித உரிமை மீறல், யுத்தக் குற்றம் என பல்வேறு பொய்க் குற்றச்சாட்டுக்களை எம்மீது சுமத்துகின்றனர். மக்கள் எம் பக்கம் உள்ளனர் எம்மீது மக்களுக்கு நம்பிக்கையுண்டு அரசியல் என்பது மக்கள் நம்பிக்கையே என்பதில் எமக்கு அதீத நம்பிக்கையுண்டு என்றார்.

இன்று பொன்சேகாவுக்கு எதிராக மருதானையில் மறியல் போராட்டம்

ஜனாதிபதித் தேர்தலில் எதிரணி பொது வேட்பாளராகப் போட்டியிடும் ஜெனரல்  சரத் பொன்சேகாவுக்கு எதிராக இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் மறியல் போராட்டமொன்றை முஸ்லிம் இடதுசாரி முன்னணி நடத்தவுள்ளது. மருதானை ஸாஹிரா கல்லூரிக்கு சமீபமாக இன்று பிற்பகல் ஒரு மணியளவில் இந்தப்  போராட்டம் நடைபெறவுள்ளதாக முஸ்லிம் இடதுசாரி முன்னணி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அவர்கள் விடுத்த அறிக்கையில்;

இவர் இராணுவப் பதவியிலிருந்த காலத்தில் இந்த நாடு சிங்கள பௌத்தர்களுக்கே சொந்தம் என்றும் அரசியல் அமைப்பில் 13 ஆவது திருத்தத்துக்கு மேலாக உரிமைகள் வழங்கப்பட்டால் இறுதிவரை போராட வேண்டுமெனக் கூறியிருந்தார். மேலும், தமிழ், முஸ்லிம் மக்கள் இந்த நாட்டில் வந்தார் வசித்தார் எனவும் கூறியிருந்தார். எனவே இப்படிப்பட்ட சிறுபான்மை இன விரோதத்தை பாராட்டுகின்ற ஒருவரை முஸ்லிம் மக்கள் ஒரு போதும் ஆதரிக்க முடியாது. எமது இந்த நிலைப்பாட்டை வலியுறுத்தியே மறியல் போராட்டம் நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.