எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

96 தமிழ் கைதிகள் விடுதலை

புலிகள் இயக்கத்துடன் தொடர்பு வைத்திருந்ததாக சந்தேகத்தின் பேரில் நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்டிருந்த மேலும் 96 தமிழ் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதோடு 115 பேர் புனர்வாழ்வு அளிப்பதற்காக அனுப்பப்பட்டுள்ளதாக பிரதி நீதி அமைச்சர் வீ. புத்திரசிகாமணி தெரிவித்தார்.

அவசரகாலச் சட்டத்தின் கீழ் கைதாகி தடுத்து வைக்கப்பட்டிருந்த பல தமிழ் கைதிகள் சட்டமா அதிபரின் ஆலோசனையின் பிரகாரம் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர்.

இதுவரை 431 தமிழ் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த பிரதி அமைச்சர் சுமார் 200 கைதிகளே எஞ்சியிருப்பதாகத் தெரிவித்தார்.

‘தேசத்திற்கு மகுடம்’ இன்று நள்ளிரவுடன் முடிவு

deyatakirula_logo.jpgகண்டி பள்ளேகலவில் 04 ஆம் திகதி முதல் நடைபெற்றுவந்த ‘தெயடகிருள’ தேசத்திற்கு மகுடம் கண்காட்சி இன்று நள்ளிரவுடன் முடிவடைகின்றது.

கொழும்பு நகருக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டிருந்த தேசத்திற்கு மகுடம் கண்காட்சி 60 ஏக்கர் காணிப் பரப்பில் அரச மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த 1000 கண்காட்சிக் கூடங்களை கொண்டுள்ளது.

இ.தொ.கா சார்பில் 9 வேட்பாளர்கள்

பொதுத்தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சார்பில் ஒன்பது வேட்பாளர்கள் களமிறங்கவுள்ளதாக காங்கிரஸின் தலைவர் பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம் தெரிவித்தார்.

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பட்டியலில் காங்கிரஸ் போட்டியிடவுள்ள நிலையில் ஒன்பது இடங்கள் தமக்காக ஒதுக்கப்பட்டிருப்பதாக பிரதியமைச்சர் கூறினார். இதன்படி நுவரெலியா மாவட்டத்தில் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், பிரதியமைச்சர்கள் முத்து சிவலிங்கம், எஸ். ஜெகதீஸ்வரன் ஆகியோர் போட்டி யிடுகின்றனர்.

இதன்படி காங்கிரஸ¤க்கு நுவரெலியா மாவட்டத்தில் மூன்று இடங்களும் பதுளையில் இரண்டு இடங்களும் மாத்தளை, இரத்தினபுரி, கண்டி, கொழும்பு ஆகிய மாவட்டங்களில் தலா ஓர் இடமும் ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் சிவலிங்கம் கூறினார்.

புலிகளால் நியமிக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு ரிஎன்ஏ இல் ஆசனம் இல்லை! லண்டனில் ஆர் சம்பந்தன் : த ஜெயபாலன்

Sambandan R TNA MPதமிழ் தேசியக் கூட்டமைப்பில் தமிழீழ விடுதலைப் புலிகளால் நியமிக்கப்பட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆனவர்களுக்கு இம்முறை ஆசனம் வழங்குவதில்லை என லண்டனில் இடம்பெற்ற சந்திப்பில் அக்கட்சியின் தலைவர் ஆர் சம்பந்தன் தெரிவித்ததாக தேசம்நெற்க்கு தெரியவருகின்றது. உறவினர் ஒருவரின் இறுதி நிகழ்வில் கலந்துகொள்வதற்காக லண்டன் வந்திருந்த ஆர் சம்பந்தனை தமிழர் விடுதலைக் கூட்டணியின் லண்டன் கிளையினர் பெப்ரவரி 8ல் சந்தித்து உரையாடி உள்ளனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் இடையே உடன்பாடு ஒன்றை ஏற்படுத்த மேற்கொள்ளப்பட்ட இம்முயற்சியிலேயே சில செய்திகளை ஆர் சம்பந்தன் கசியவிட்டுள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் இடையே உடன்பாடு எட்டப்பட முடியாத இடைவெளி இருப்பதை உணர்ந்த நிலையில் சந்திப்பு நிறைவுபெற்றது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பை தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைத்து உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட வைக்க தமிழர் விடுதலைக் கூட்டணியின் லண்டன் கிளையில் இருந்த சிலர் விரும்பியிருந்தனர். அதையொட்டியே இந்தச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இச்சந்திப்பில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் லண்டன் கிளையின் தலைவர் நிக்லஸ்பிள்ளை, தமிழர் விடுதலைக் கூட்டணியின் காலம்சென்ற தளபதி அ அமிர்தலிங்கத்தின் துணைவியார் மங்கையற்கரசி அமிர்தலிங்கம், தமிழர் விடுதலைக் கூட்டணியின் மத்திய குழு உறுப்பினர் எஸ் அரவிந்தன் உட்பட இன்னும் சிலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழரசுக் கட்சியிலேயே போட்டியிடும் என்றும் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுவது பற்றி பேசுவதிலே அர்த்தமில்லை என ஆர் சம்பந்தன் இச்சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி ஆனந்தசங்கரி சிங்கள மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு மிதவாதத் தலைவர் என்று குறிப்பிட்ட ஆர் சம்பந்தன் ஆனந்தசங்கரிக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பில் ஒரு ஆசனத்தை வழங்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தாங்கள் வி ஆனந்தசங்கரியுடன் உடன்பட்டு செயற்படுவதற்கு முன்நிபந்தனையாக வி ஆனந்தசங்கரி தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீதான கடுமையான விமர்சனங்களை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார். குறிப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரித்தது தொடர்பாக தேர்தல் முடிவுவரை மௌனமாக இருந்த வி ஆனந்தசங்கரி தேர்தல் முடிவுக்குப் பின் கடுமையான விமர்சனத்தை முன்வைத்ததை ஆர் சம்பந்தன் சுட்டிக்காட்டி இருந்தார்.

இச்சந்திப்பின் போது அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட யாருக்கு ஆசனங்கள் வழங்குவது என்பது பற்றியும் சில அபிப்பிராயங்களை ஆர் சம்பந்தன் தெரிவித்துள்ளார். குறிப்பாக ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முடிவுக்கு எதிராக சுயேட்சையாகப் போட்டியிட்ட எம் கெ சிவாஜிலிங்கம், அவருக்கு ஆதரவாக நின்ற என் சிறிகாந்தா ஆகியோருக்கு ரிஎன்ஏ இல் ஆசனம் இல்லை என்றும் அவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் இல்லை என்றும் ஆர் சம்பந்தன் அங்கு கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்துள்ளார்.

மற்றுமொரு கேள்விக்குப் பதிலளித்த ஆர் சம்பந்தன் தமிழீழ விடுதலைப் புலிகளால் ரிஎன்ஏ இல் தேர்தலில் நிறுத்தப்பட்டவர்களுக்கு இம்முறை ஆசனங்கள் வழங்க முடியாது என்ற வகையில் கருத்துத் தெரிவித்து இருந்தார். ரிஎன்ஏ ஆசனங்களுக்கு தகுதி அடிப்படையைக் கொண்டு வருவதன் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளால் நியமிக்கப்பட்டவர்களை ஓரம்கட்டலாம் என்ற வகையிலும் அவருடைய கருத்துக்கள் அமைந்திருந்தது. குறிப்பாக சட்டத்தரணிகள், பொறுப்பான தொழில் தகுதியைக் கொண்டவர்கள், ஊர் மக்கள் மத்தியில் செல்வாக்கானவர்கள் என்ற அடிப்படையில் ஆசனங்கள் வழங்கப்பட்டு தமிழீழ விடுதலைப் புலிகளால் நியமிக்கப்பட்டவர்கள் ஓரம்கட்டப்படுவர் என்ற வகையிலேயே ஆர் சம்பந்தனின் கருத்துக்கள் இருந்தது என தேசம்நெற் க்கு கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

தமிழ் தேசியக் கூட்டமைபின் பாராளுமன்ற உறுப்பினர்களின் விபரங்கள்:
தமிழர் விடுதலைக் கூட்டணி: இரா சம்பந்தன், (திருகோணமலை) மாவை சேனாதிராஜா (யாழ்ப்பாணம்)
ஈபிஆர்எல்எப்(சுரேஸ் அணி): சுரேஸ் பிரேமச்சந்திரன் (யாழ்ப்பாணம்), ஆனந்தன் நடேசு சிவசக்தி (வன்னி)
ரெலோ: செல்வம் அடைக்கலநாதன் (மன்னார்), நோகராதரலிங்கம் சுப்பிரமணியம் (வன்னி), எம் கெ சிவாஜிலிங்கம் (யாழ்ப்பாணம்), நல்லதம்பி சிறிகாந்தா (யாழ்ப்பாணம்)
தமிழ் கொங்கிரஸ்: கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (யாழ்ப்பாணம்)
இவர்கள் ஒன்பது பேரையும் தவிர ஏனைய 13 பாராளுமன்ற உறுப்பினர்களும் தமிழீழ விடுதலைப் புலிகளால் தெரிவு செய்யப்பட்டு பாராளுமன்றம் சென்றவர்கள்: சந்திரகாந்தன் சந்திரநேரு (தேசியப்பட்டியல்), ரி கனகசபை (மட்டக்களப்பு), சேனாதிராஜா ஜெயானந்தமூர்த்தி (மட்டக்களப்பு), தங்கேஸ்வரி கதிர்காமன் (மட்டக்களப்பு), பாக்கியசெல்வம் அரியேந்திரன் (மட்டக்களப்பு), சதாசிவம் கனகரட்ணம் (வன்னி), சிவநாதன் கிசோர் (வன்னி), சதாசிவம் கனகரத்தினம் (வன்னி), கெ துரைரத்தினசிங்கம் (திருகோணமலை), வில்லியம் தோமஸ் (திகாமடுல்ல), கஜேந்திரன் செல்வராஜ் (யாழ்ப்பாணம்), பத்மினி சிதம்பரநாதன் (யாழ்ப்பாணம்), சொலமன் சிறில் (யாழ்ப்பாணம்), ரசீன் மொகமட் இமாம் (தேசியப் பட்டியல்)

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள தமிழர் விடுதலைக் கூட்டணி (சம்பந்தர் அணி), ஈபிஆர்எல்எல் (சுரேஸ்அணி) ஆகியோரின் ஆசனங்களுக்கு பிரச்சினை இராது. ஆனால் தற்போது நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ரெலொவில் செல்வம் அடைக்கலநாதனுக்கு மட்டுமே ஆசனம் வழங்கப்பட வாய்ப்புகள் உள்ளது. தமிழ் கொங்கிரஸ் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளால் தெரிவு செய்யப்பட்ட 9 பாராளுமன்ற உறுப்பினர்களின் அரசியல் எதிர்காலம் ஆர் சம்பந்தன் – மாவை சேனாதிராஜா – சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோரின் கைகளிலேயே உள்ளது.

இவர்களில் பெரும்பாலானவர்கள் தாங்கள் தெரிவு செய்யப்பட்ட தொகுதிகளில் வாழ்ந்த காலத்திலும் பார்க்க அதற்கு வெளியே குறிப்பாக புலம்பெயர் நாடுகளிலேயே கூடுதலாக வாழ்ந்துள்ளனர். அந்நாடுகளிலேயே பெரும்பாலும் இவர்கள் அறியப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு என்று ஒரு அரசியல் அடையாளம் இருந்திருக்கவில்லை. அதனால் இவர்களில் பெரும்பாலானவர்களை ஓரம்கட்டுவதில் ஆர் சம்பந்தனுக்கு பெரும் சவால்கள் இருக்கப் போவதில்லை. ஆனால் எம் கெ சிவாஜிலிங்கம், என் சிறிகாந்தா போன்றவர்கள் ஆர் சம்பந்தனுக்கு தலையிடியாகலாம். தங்கள் தொகுதிகளில் சுயேட்சையாகப் போட்டியிடவும் வாய்ப்புகள் உள்ளது. ரிஎன்ஏ தங்களைக் கட்சியில் இருந்து நீக்க முடியாது என எம் கெ சிவாஜிலிங்கம் தனிப்பட்ட முறையில் தெரிவித்து வருகின்றார். தங்களுக்கும் ரிஎன்ஏ க்கும் இடையே எழுத்து மூலமான உடன்பாடுகள் எதுவும் இல்லாத நிலையில் எந்த அடிப்படையில் தங்களை ரிஎன்ஏ யில் இருந்து நீக்க முடியும் என அவர் கேள்வி எழுப்பி வருகின்றார். இவ்வாறான சர்ச்சைகள் ரிஎன்ஏ யை நீதிமன்றத்திற்கு அலைக்கழித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

தமிழீழ விடுதலைப் புலிகளால் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு ஆசனங்களை வழங்காது வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்ட பின் புதிய நபர்கள் அவ்விடங்களை நிரப்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. புலத்தில் உள்ள சிலர் அது தொடர்பாக பேசி வருவதாகவும் தெரியவருகின்றது. ரிஎன்ஏ இல் மட்டுமல்ல ஏனைய தமிழ் கட்சிகளிலும் புலம்பெயர் இறக்குமதிகள் சில போட்டியிடுவதற்கான வேலைகளை ஏற்கனவே ஆரம்பித்துள்ளனர்.

மேலும் வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் எவ்வாறு வியூகம் அமைக்கலாம் எவ்வாறு ஆசனங்களைத் தக்க வைப்பது என்று கணக்குப் போடுவதில் கட்சிகள் படுபிசியாகி உள்ளன. தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏற்கனவே ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் உடன் உடன்பாட்டுக்கு வந்துள்ளது. அரச ஆதரவான கட்சிகளான ஈபிடிபி, புளொட், ஈபிஆர்எல்எப் ஆகியனவும் ஒரு உடன்பாட்டை எட்ட முயற்சிக்கின்றன. வவுனியா நகரசபையை புளொட் கோட்டைவிட்டு ஒரு பாடத்தைக் கற்றுள்ளது. முன்னர் புளொட், ஈபிஆர்எல்எப் கூட்டணியில் இருந்த வி ஆனந்தசங்கரி தற்போது தனிமைப்பட்டுள்ளார். தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகளும் தனித்துப் போட்டியிட உள்ளது.

இவர்களைவிடவும் தேசியக் கட்சிகளும் உள்ளுர் பிரமுகர்களை தேர்தல் களத்தில் இறக்க உள்ளன. உள்ளுர் வர்த்தகப் புள்ளிகள் சிலரும் தேசியக் கட்சிகளில் போட்டியிட உள்ளனர். இந்த ஆரவாரங்களுடன் வடக்கு கிழக்கு தேர்தலுக்கு தயாராக உள்ளது. வடக்கு கிழக்கில் உள்ள 23 தமிழ் ஆசனங்களுக்கான போட்டியில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு இருந்த ஏகபோகம் இல்லாமல் போய்விடும். ஆனால் வடக்கு கிழக்கில் பெரும்பான்மை ஆசனங்களைக் கொண்ட கட்சியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தன்னை தக்க வைத்துக் கொள்வதற்கான வாய்ப்புகளே அதிகம் உள்ளது. தமிழ் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பை தங்கள் பிரதிநிதிகளாக ஏற்றுக்கொள்கிறார்களோ இல்லையோ அரச மற்றும் அரச சார்புக் குழுக்களின் அரசியல் அராஜகங்களுக்கு எதிரான எதிர்ப்பு வாக்குகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு செல்வதற்கே வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இது ஒரு எண்ணிக்கை விளையாட்டு மட்டுமே.

இலங்கை நாடாளுமன்றம் இன்று கலைக்கப்பட்டது.

parliament.jpgஇலங்கையின் 6 வது நாடாளுமன்றம் இன்று நள்ளிரவு முதல் கலைப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதாகவும், நாடாளுமன்றக் கலைப்பு தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு இன்று நள்ளிரவு  வெளிவருமெனவும் ஜனாதிபதி செயலகத்தின் ஊடகப் பிரிவுப் பொறுப்பாளர் லூசியன் ராஜகருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

அதேவேளை, வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டு 10 நாட்களுக்குள் வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கான தினம் தொடர்பாக உத்தியோகபூர்வ அறிவித்தல் விடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு 5 அல்லது 7 வாரங்களுக்குள் பொதுத்தேர்தல் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியமாக இருப்பதால், பெரும்பாலும் ஏப்ரல் மாதம் முதல்வாரத்தில் தேர்தல் வாக்கெடுப்புகள் இடம்பெறும்.
இலங்கையின் 6 வது நாடாளுமன்றத்திற்கான உறுப்பினர் தெரிவு கடந்த 2004 ம் ஆண்டு ஏப்ரல் 2 ம் திகதி இடம்பெற்ற அதேவேளை, முதலாவது நாடாளுமன்ற அமர்வு அதே மாதத்தின் 22 ம் திகதி இடம்பெற்றது.

ஊடகவியலாளர் ஈவா ரணவீர காலமானார்!

eva_ranaweera.jpgபிரபல எழுத்தாளரும் ஊடகவியலாளருமான ஈவா ரணவீர இன்று காலமானார். மரணிக்கும்போது இவருக்கு வயது 85.  கம்பஹ புனித சிலுவைக் கல்லூரியில் ஆரம்பக் கல்வி பயின்ற இவர் ஒரு பட்டதாரியாவார்.

அரச மொழி திணைக்களத்தில் முதல் நியமனம் பெற்ற இவர் லங்கா தீப பத்திரிகையின் வனிதா வித்தி சஞ்சிகையின் ஆசிரியையாக 10 வருட காலம் சேவையாற்றியதுடன் மகளிர் குரல் என்ற பெண்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக 20 வருட காலம் பொதுப்பணியாற்றியுள்ளார்.

இவர் சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் பல நூல்களை எழுதி விருதுகளும் பெற்றுள்ளார்.

இவரது பூதவுடல் பொரல்ல ஜயரத்ன மலர்ச் சாலையில் இப்போது வைக்கப்பட்டுள்ளது. இம்மாதம் 11 ஆம் திகதி பிற்பகல் 5:00 மணிக்கு இறுதிக் கிரியைகள் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

சரத் பொன்சேகாவுக்கு பலத்த பாதுகாப்பு – பிரசாத் சமரசிங்க தகவல்

prasard.jpgஇராணுவப் பொலிஸாரால் நேற்றுக் கைது செய்யப்பட்ட ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவரது குடும்பத்தினர் சென்று சந்திக்கும் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவ ஊடகப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார். அத்துடன் அவருக்குத் தேவையான வைத்திய வசதிகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.  இது பற்றி அவர் மேலும் தகவல் தருகையில்,

ஜெனரல் சரத் பொன்சேகா இராணுவச் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டின்பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றுச் செல்லும் ஒருவர் தொடர்ந்து ஆறு மாத காலத்துக்கு இராணுவச் சட்டங்களை மதித்து நடக்கவேண்டியது அவசியமாகும் என்றும் கூறினார்.

நாமல் ராஜபக்ஷ அம்பாந்தோட்டை மாவட்டத்தில் போட்டி!

nr.jpgஜனாதிபதி யின் மகன் நாமல் ராஜபக்ஷ எதிர்வரும் பொதுத் தேர்தலில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் பொதுஜன ஐக்கிய முன்னணி சார்பில் போட்டியிடவுள்ளர். இது தொடர்பான விண்ணப்பத்தை அவர் பொதுஜன ஐக்கிய முன்னணி செயலாளருக்கு அனுப்பிவைத்துள்ளதாக ‘இளைஞருக்கு நாளை’ என்ற அமைப்பின் ஊடகச் செயலாளர் அசேல திஸாநாயக்க தெரிவித்தார்.

நாமல் ராஜபக்ஷ தமது 16 வயதிலிருந்தே பொதுநல சேவைகளில் ஆர்வம் காட்டிவந்துள்ளார். ‘இளைஞருக்கு நாளை’ என்ற அமைப்பின் ஊடக அவர் இளைஞர் சமுகத்துக்கு பெரும் சேவையாற்றியுள்ளார். 

ஜனாதிபதி நாடு திரும்பினார்

mr-rusya.jpgரஷ்யாவிற்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை 10.50 மணியளவில் நாடு திரும்பியுள்ளார்.

ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸிற்குச் சொந்தமான விசேட விமானமொன்றின் மூலம் ஜனாதிபதி தலைமையிலான குழுவினர் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக தமிழ் சொலிடாரிட்டியின் கருத்துப் பகிர்வு! : தொகுப்பு ரி சோதிலிங்கம்

Sarath_Fonseka_Posters_in_Jaffnaலண்டன் தமிழ் சொலிடாரிட்டி தனது இலங்கைத் தேர்தல் சம்பந்தமான கருத்துப்பகிர்வினை சோசலிசக் கட்சியின் தொடர் கூட்டத்தில், பெப்ரவரி 4ல் பகிர்ந்து கொண்டது. தமிழ் சொலிடாரிட்டியின் ஒருங்கிணைப்பாளர் சேனன் தமிழ் சொலிடாரிட்டியின் நிலைப்பாட்டை அங்கு வெளியிட்டார்.

”இலங்கையில் நடந்து முடிந்த தேர்தலைப் பற்றி பேசுவதற்கு முன்பு ஒரு சிறு கதை ஒன்றினை இங்கே சொல்ல விரும்புகிறேன் இலங்கையில் புலிகள் அரசுடன் போராடினார்கள் அந்த புலி இயக்கத்தின் முக்கிய தளபதிகள் இருவரை அரசும் எதிர்க்கட்சியுமாக சேர்ந்து பிரித்தெடுத்து அரசு தனது அமைச்சரவையிலும் மாகாண சபையிலும் அமைச்சர்களாக்கியுள்ளது. பின்னர் இவர்களின் உதவியுடனும் புலிகளுக்கு எதிராக சண்டையிட்ட புலிகளை அரசு முற்றாக அழித்துள்ளது. இந்த இறுதி யுத்தத்தில் 250 ஆயிரம் பேர்கள் அகதிகளாக்கப்பட்டும் பல ஆயிரக்கணக்கானவர்கள் சிறையில் அடைக்கப்பட்டும் பாரிய பொருளாதார இழப்புக்களும் நடைபெற்றது. இந்த பாரிய யுத்தத்தை ஆட்சியிலிருந்த மகிந்தாவும் இராணுவத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகாவும் வெற்றிகரமாக நடாத்தி முடித்தனர். அதன் பின்னர் தமது வெற்றி விழாக்களையும் கொண்டாடினர்.

புலிகளால் உருவாக்கப்பட்ட ரிஎன்ஏ என்ற தமிழ் கட்சிகளின் கூட்டணியினர் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சி சார்பில் போட்டியிட்ட இந்த இராணுவத் தளளபதி சரத் பொன்சேகாவிற்கு வாக்களித்து அரசை மாற்றுங்கள் என்று யுத்தத்தில் பாதிப்புற்று நலிவடைந்திருந்த மக்களைப் பார்த்து வேண்டுகோள் விடுத்தனர். தமிழ் மக்களில் மிகச் சிறுபான்மையினர் இந்த தேர்தலில் பங்கு பற்றி தமது மக்களை கொன்றொழித்த அந்த இராணுவத் தளபதிக்கே வாக்களித்துள்ளனர். இப்போது மகிந்தா அரசு இதன் காரணமாக தமிழர்கள் மீது சீற்றம் கொள்ளலாம் எனவும் தற்போது பயப்பிடுகின்றனர்.

இந்த ரிஎன்ஏ யினர் தாம் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் தாமே புலிகளின் பின்னர் தமிழ் மக்களின் ஏகபோகபிரதிநிதிகள் என்றும் தம்மைவிட யாருக்கும் தமிழர் பிரச்சினை பற்றி பேச முடியாது என்றும் வாதிடுகின்றனர்.”

இந்த சிறுகதையை உங்களுக்கு சொல்ல வேண்டியது அவசியம். காரணம் இங்குள்ள பலருக்கு இலங்கையில் அரசியல் கட்சிகளின் தன்மை பாரம்பரியம் என்பன பற்றி தெரியாதவர்கள் அங்குள்ள கடந்த சில வருட நிலைமைகளை தெளிவுபடுத்தவே இதை கூறினேன்.

யாருமே மக்களின் நலனில் அக்கறையற்றவர்களாகவே இருக்கிறார்கள். இதில் கடந்த 40 வருடமாக தமிழர்களுக்காக போராடுகிறோம் என்ற ரிஎன்ஏயும் என்றுமே சாதாரண மக்களின் பிரச்சினையில் அக்கறையில்லாமல் உள்ளனர். தாம் தமது குடும்பங்களை சொத்துக்களை எப்படி காப்பாற்றுவது என்பது தான் இவர்களது கவலை.

தனது ஆட்சிக் காலம் இரண்டு வருடங்கள் உள்ள போதும், இரண்டு வருடங்களின் பின்பு வரவேண்டிய தேர்தலை மகிந்தா அரசு இன்றே தனது புலிகளின் அழிப்பு வெற்றியுடனேயே நடாத்துகிறது. இந்த வெற்றி தனக்கு சாதகமானது என்பதை பயன்படுத்தவே இந்த தேர்தல் இந்த தேர்தலை அடுத்து பாராளுமன்ற தேர்தலும் நடாத்தப்பட உள்ளது.

இந்த ஜனாதிபதியை தெரிவு செய்யும் தேர்தல் அரச ஊடகங்களையும் மக்களின் பொதுச் சொத்துக்களையும் பயன்படுத்தியே தனது வெற்றியை தீர்மானித்துள்னர். எதிர்க்கட்சிகளும் மற்றய 20 வேட்பாளர்களின் படங்களைக்கூட மக்களால் பாத்துக்கொள்ள இடம் அளிக்காமல் இந்த தேர்தலை நடாத்தி முடித்துள்ளனர்.

தேர்தல் காலங்களில் முகாம்களில் இருந்தவர்களில் 40 சதவிகிதமானவர்களே வாக்களிக்க தம்மை பதிவு செய்தனர் என்றும் ஆனால் தேர்தல் வாக்களிக்கும் இடங்களுக்கு எடுத்துவர பஸ்கள் இல்லை எனக் காரணம் காட்டி மக்களை வாக்களிப்பு நிலையங்களுக்கு அழைத்துச் செல்ப்படவில்லை.

இந்த 57 சதவிகித தேர்தல் வெற்றிக்கு பின்னர் மகிந்தா அரசு தொடரந்து தனது ஜனநாயக மறுப்பு நடவடிக்கைகளை தொடர ஆரம்பித்துள்ளது. பத்திரிகைகளுக்கு மூடுவிழா செய்துள்ளது. பத்திரகையாளர்களை கைது செய்துள்ளது. ஆதரவளிக்காதவர்களை அடித்தும் இம்சைப்படுத்தியும் உள்ளனர்.

தேர்தல் காலங்களில் வெளிவந்த பத்திரரைகளின் செய்திகளில் சில

கருணா பிள்ளையான் சிங்களம் படிக்கிறார்கள். மகிந்தா தமிழ் பேசக்கூடியவர் ஆனால் பொது இடங்களில் பேச முடியாதுள்ளது!

சர்வதேச நிதிஉதவிகள் தமிழ் பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய துரித நடவடிக்கை!

இலங்கையில் சிறுபான்மை என்ற இனமே இல்லை நாம் எல்லோரும் இலங்கையர்களே!

இப்படியெல்லாம் செய்திகள் வந்த பிறகு புலிகளுக்கு பல தளபாடங்களையும் பேச்சுவார்த்ததைக்கு என்று கூறி கூட்டி வந்து புலிகளை அடியோடு இல்லாதொழித்த எரிக்சொல்கேயிம் மகிந்தாவிற்கு வாழ்த்துச்செய்தி அனுப்பினார்.

இலங்கை தற்போது உலகின் மிகமுக்கிய உல்லாசப் பிரயாணிகளின் இடம். இது நியுயோர்க் ரைம்ஸ் செய்தி.

இலங்கையில் மக்கள் ஜனநாயக முறைப்படி வாக்களித்து தமது ஜனாதிபதியை தெரிவு செய்துள்ளனர். பயங்கரவாதம் முற்றாக ஒழிக்கப்பட்டு விட்டது. இலங்கையில் தற்போது ஜனநாயகம் முழுமையாக மக்களால் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். – இது அமெரிக்கா வால்ஸ்ரிற் பத்திகைகளின் செய்திகள்.

இப்படி சர்வதேசங்களின் பார்வை இலங்கையில் இருப்பது ஒன்றும் ஒளிவு மறைவு அல்ல. நிறையவே குறைந்த சம்பளத்துக்கு வேலை செய்யும் படையுள்ளது. இதை பயன்படுத்தவும் இலங்கையில் உள்ள சந்தையை நிரப்பவுமே சர்வதேசம் முனைப்பாக உள்ளதும் இதன் அடுத்த பக்கத்தை சீனாவும் இந்தியாவும் நிறைவு செய்யவுமே போட்டிகள் நடைபெறுகின்றன” என தமிழ் சொலிடாரிட்டியின் சார்பில் சேனன் கருத்துத் தெரிவித்தார்.

இதனிடையே சபையிலிருந்து எழுந்த கேள்விகளில்: தமிழர்கள் பல ஆயிரக்கணக்கில் தெருக்களுக்கு வந்து போராடியுள்ளனர், யுத்தத்ததை நிறுத்த முடியவில்லை, போராட்டங்களுக்கு நாம் ஆதரவு அளித்தோம் ஏன் என்று விளங்கிக் கொள்ளவில்லை, ஈராக் யுத்த்தை ஆதரிப்பவர்களை அழைத்து கூட்டம் போட்டு தமக்கு ஆதரவளிக்கும்படி கேட்கிறார்கள், இலங்கை அரசுக்கு ஆயுதம் வழங்க ஒப்புக் கொண்டவர்களை அழைத்து விருந்து கொடுத்து தமக்கு உதவும்படி கேட்கிறார்கள், இவர்கள் எல்லாம் தமிழர்களுக்காகவா போராடினார்கள்? இவர்களுக்கு போராட்டத்தின் அர்த்தம் புரியவில்லை என்று கருத்துக்கள் எழுந்தன.

உலகின் பல நாடுகளில் கொலைகளை செய்த பாராளுமன்றம் முன்போய் நீதி கேட்டது எவ்வளவு தூரம் சரியானது என்று இவர்கள் சிந்திக்கவில்லை?

தமிழர்களின் தலைமைகள் தமிழர்களை கேலிக் கூத்தாக்கியுள்ளனர். இன்றும் தமிழர்கள் யுத்தத்தில் தோல்வியடைந்த மனோநிலையில் இருப்பதையும் இதன் பின்னர் இந்த தேர்தலில் தமது தலைவர்களால் தாம் கேவலப்படுத்தப்பட்டதையும் நினைத்து தலைகுனிவுடன் உள்ளனர் என்றும் கருத்துக்கள் எழுந்தது.

ஜக்கிய இலங்கைக்குள் தமிழ் சிங்கள மக்கள இணைந்து வாழ்வதற்கான அடிப்படையில் மக்கள் ஒன்றிணைக்கப்பட வேண்டும் என்ற கருத்துடன் இக்கூட்ட கருத்துப்பகிர்வு முடிவடைந்தது.