எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உணவு விடுதிகளில் புத்தர் சிலைகள்

உலகின் பிரதான நகரங்கள் பலவற்றில் நடத்தப்பட்டுவரும் ‘புத்த பா’ என்ற உணவு மற்றும் கேளிக்கை விடுதிகள் தொடர்பாக கவனம் செலுத்த புத்த சாசன அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் தி. மு. ஜயரத்ன தீர்மானித்துள்ளார். எனவே, சம்பந்தப்பட்ட உணவு விடுதிகள் தொடர்பாக அந்த நாடுகளில் உள்ள இலங்கை தூதரகருக்கு அறிவுறுத்துவதுடன் அது பற்றிய அறிக்கையொன்றை அனுப்புமாறும் கேட்கப்பட்டுள்ளது.

இவ்விடயத்தில் வெளியுறவு அலுவல்கள் அமைச்சின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ளவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. ‘புத்த பா’ உணவு விடுதிகளில் புத்தர் சிலைகள் நிறுவப்பட்டுள்ளதுடன் அந்த சிலைகளுக்கு அருகில் மதுபாவனை இடம்பெறுகிறது.

இவ்வாறான விடுதிகளில் புத்தர் சிலைகள் எதற்காக வைக்கப்பட்டுள்ளன என்பது பற்றியும், அந்த இடங்களில் உள்ள புத்தர் சிலைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு குறிப்பிட்ட நாடுகளுக்கு ஆலோசனை வழங்குமாறு பிரதமர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

உலகத் தமிழ் செம்மொழி மாநாடு; கோவை நகரம் விழாக்கோலம்

semmoli.jpgஉலகத் தமிழ் செம்மொழி மாநாடு எதிர்வரும் 23ம் திகதி முதல் 27ம் திகதி வரை கோவையில் நடைபெறுகிறது. இந்தியா மட்டும் இன்றி பல்வேறு நாடுகளில் இருந்து மாநாட்டில் எராளமான தமிழ் அறிஞர்கள் கலந்து கொள்கின்றார்கள்.

23ஆம் திகதி (புதன்கிழமை) காலை 10.30 மணிக்கு முதலமைச்சர் கருணாநிதி தலைமமையில் ஜனாதிபதி பிரதீபா பட்டீல் உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டை தொடங்கிவைக்கிறார். மாநாட்டில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் கருணாநிதி இன்று (திங்கட்கிழமை) காலை 11 மணிக்கு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் கோவை செல்கிறார்.  முதலமைச்சர் கருணாநிதி கோவையில் ஒரு வாரம் தங்கி இருப்பார். மாநாட்டுக்காக கொடிசியா வளாகத்தின் முன்புறம் உள்ள மைதானத்தில் 80 ஆயிரம் பேர் அமரும் வகையில் பிரமாண்டமான பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. அரண்மனை போன்ற தோற்றத்தில் பனை ஓலை வேலைப்பாடுகளுடன் பந்தலின் நுழைவு வாயில் அமைக்கப்பட்டுள்ளது. பந்தலின் நடுப்பகுதி மன்னர்கள் காலத்து தர்பார் பண்டபம் போல் அழகுபடுத்தப்பட்டு இருக்கிறது. மாநாட்டு தொடக்க நிகழ்ச்சி நடைபெறும் இந்தப் பந்தலில் 6,400 சதுர அடி பரப்பளவில் மேடை அமைக்கப்பட்டுள்ளது.

மேடையில் ஜனாதிபதி பிரதீபா பட்டீல், முதலமைச்சர் கருணாநிதி, கவர்னர் கர்ஜித்சிங் பர்னாலா உள்ளிட்ட தலைவர்கள, முக்கிய பிரமுகர்கள் ஓய்வு எடுப்பதற்காக தனித்தனி அறைகளும் கட்டப்பட்டுள்ளன.

மாநாட்டையொட்டி சிற்ப வேலைப்பாடுகள், அழகிய நுழைவு வாயில்களுடன் கண்காட்சி அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

மாநாட்டின் முக்கிய அம்சமாக ஆய்வரங்கம் நடைபெறுகிறது. இதற்காக கொடிசியா ஹாலில் 21 ஆய்வரங்கங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு அரங்கிலும் தலா 120 பேர் அமரக்கூடிய வகையில் இடவசதி உள்ளது. 21 ஆய்வரங்கங்களுக்கும் தமிழ்ப் புலவர்களின் பெயர்கள் சூட்டப்பட்டு உள்ளன.

முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் ஆய்வரங்கங்களின் தொடக்க விழா நடை பெறும் முகப்பரங்கம் 5 ஆயிரம் பேர் அமரக்கூடிய வகையில் அமைக்கப்பட்டு உள்ளது. இணையத்தளத்தில் தமிழ் பயன்பாடு பற்றி மாநாட்டுக்கு வரும் பார்வையாளர்கள், பொதுமக்கள் தெரிந்து கொள்வதற்காக தமிழ் இணைய கண் காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாநாட்டின் தொடக்க நாளன்று முக்கிய நிகழ்ச்சியான பேரணி நடைபெறுகிறது. பேரணியில் கொண்டு செல்வதற்காக இனியவை நாற்பது என்ற தலைப்பில் 40 அலங்கார ஊர்திகள் தயார் நிலையில் உள்ளன. உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டையொட்டி கோவை நகரமே விழாக்கோலம் பூண்டு உள்ளது. புதுப்பிக்கப்பட்ட சாலைகள் வண்ண ஓவியங்கள், கூடுதலான மின்விளக்கு வசதிகள் என்று கோவை நகரமே ஜொலிக்கிறது.

தமிழகத்தில் அடுத்தடுத்து நடந்துள்ள ரயில் கவிழ்ப்பு முயற்சி சதிவேலைகளைத் தொடர்ந்து, உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கு உச்சகட்ட பாதுகாப்பு அளிக் கப்படுகிறது. வெடிகுண்டு ஊடுருவலைத் தடுக்க, அதிநவீன தொழில் நுட்ப சாதனங்களுடன் 300 நிபுணர்கள், தமிழகம் முழுவதும் இருந்து கோவை வந்துள்ளனர்.

முக்கிய தகவல்கள், வெளிநாட்டு விருந்தினர் தங்குமிடங்கள், மாநாட்டு வளாகம் மற்றும் அலங்கார அணிவகுப்பில் பங்கேற்கும் வாகனங்களை முன்கூட்டியே வெடிகுண்டு சோதனைக்கு உட்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மாநாட்டு பாது காப்பு மற்றும் வாகன போக்குவரத்தை சீரமைக்கும் பணிக்காக 333 எஸ். பி.க் களைக் கொண்ட பாதுகாப்புப் படை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவர்களின் தலைமையில் 10 ஆயிரம் பொலிஸார் மாநாட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர்.

இலங்கையில் இனப்படுகொலைகள் அதிகரித்துச் செல்கின்றன – கொபி அனான்

இலங்கையில் இனப்படுகொலைகள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன என்று ஐ.நா சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் கொபி அனான் கவலை தெரிவித்துள்ளார். அவர் இனப்படுகொலைகள் தொடர்பான விழிப்பூட்டல் நடவடிக்கைகள் பாடசாலை மட்டத்தில் இருந்தே மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு பேட்டி வழங்கினார்.

வன்னி மாவட்ட அரச அதிபர்களுக்கு அகாஸி பாராட்டு

acasi.jpgமீள் குடியேற்றம் உட்பட வன்னிப் பகுதியில் அரசாங்கம் மேற்கொண்டுவரும் செயற் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் அம்மாவட்டங்களிலுள்ள பெண் அரச அதிபர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாக ஜப்பானிய விசேட தூதுவர் யசூகி அகாஸி பாராட்டினார்.

3 வயது, 5 வயது, 8 வயது: ஒரே குடும்பம் கைவிடப்பட்ட நிலையில் மூன்று பிள்ளைகள் கண்டுபிடிப்பு

குடும்பஸ்தர்களினால் கைவிடப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பிள்ளைகளை ரங்கலை பொலிஸாரினால் நேற்று கண்டெடுக்கப்பட்டுள்ளன. தெல்தெனிய பொலிஸ் பிரிவிலுள்ள தெல்தெனிய – தங்கபுவ எனும் பிரதேசத்தில் வைத்து இக்குழந்தைகள் மூவரும் பொலிஸாரினால் கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.

கண்டெடுக்கப்பட்டுள்ள மூன்று குழந்தைகளும் ஒற்றரை நாட்களாக பசியுடன் இருந்த நிலையிலே பொலிஸார் கண்டெடுத்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3, 5, 8 வயதுகளைக் கொண்டு ஒரு பெண் குழந்தையும் இரு ஆண் குழந்தைகளுமே தமது பெற்றோரினால் கைவிடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

மலையக மக்கள் முன்னணியின் புதிய தலைவராக இராதாகிருஷ்ணன்?

rada.gifஇலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவரான நாடாளுமன்ற உறுப்பினர்  வி.எஸ்.இராதாகிருஷ்ணனுக்கு மலையக மக்கள் முன்னணியின் தலைவர் பதவியை ஏற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டதை உறுதிப்படுத்திய வி.எஸ். இராதாகிருஷ்ணன், இது குறித்து தாம் இன்னும் முடிவெடுக்கவில்லை என்று தெரிவித்தார்.

மலையக மக்கள் முன்னணியின் முன்னாள் தலைவரும் அமைச்சருமான பி.சந்திரசேகரனின் மறைவை அடுத்து அவரின் மனைவி சாந்தி சந்திரசேகரன் தலைமை பதவியை பொறுப்பேற்றார். எனினும், மலையக மக்கள் முன்னணியின் தலைமை பொறுப்பை ஏற்குமாறு தற்போது சாந்தி சந்திரசேகரன் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு எதிராக ஆஸி. செனற்சபையில் பிரேரணை

இலங்கையின் யுத்தக் குற்றங்களுக்கு எதிராக ஆஸ்திரேலிய செனற் சபையில் நாளை பிரேரணை ஒன்று சமர்ப்பிக்கப்பட உள்ளது. ஆஸியின் கிறீன் கட்சியைச் சேர்ந்த செனட்டர் சரா ஹன்சன் யங் இப்பிரேரணையை அங்கு சமர்ப்பித்து உரையாற்ற உள்ளார்.

இலங்கையின் யுத்தக் குற்றங்களுக்கு எதிரான ஆதாரங்களை அவர் செனற்சபைக்கு சமர்ப்பித்து இலங்கைக்கு எதிரான சர்வதேச நீதி விசாரணைக்கு ஆஸ்திரேலியா ஐ.நா சபையில் ஆதரவு வழங்க வேண்டும் என்று அப்பிரேரணையில் கோருவார். இவரின் இந்நடவடிக்கைக்கு கிறீன் கட்சிக்கான தமிழர்கள் அரசியல் அமைப்பு பேராதரவு வழங்க முன்வந்துள்ளது.

பொது மன்னிப்பு வழங்கப்பட்ட ஊடகவியலாளர் திசநாயகம் அமெரிக்காவில்

tissainayagam.bmpஇருபது வருடங்கள் சிறைத்தண்டனை அறிவிக்கப்பட்டு கடந்த மாதம் சனாதிபதி ராஜபக்சவினால் பொது மன்னிப்பு வழங்கப்பட்ட ஊடகவியலாளர் ஜே.எஸ். திசநாயகம் நேற்று அமெரிக்க தலைநகர் வோஷிங்டன் வந்து சேர்ந்துள்ளதாக ஊடகவியலாளர்கள் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.  இது குறித்த அறிக்கை ஒன்றையும் அந்த அமைப்பு விடுத்துள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது.

வோஷிங்டன் அனைத்துலக விமான நிலையத்தில் வந்திறங்கிய திசநாயகத்தை அமெரிக்காவில் உள்ள அவரது நண்பர்களும் ஊடகவியலாளர் பாதுகாப்பு அமைப்பின் பிரதிநிதியும் வரவேற்றனர். ஊடகவியலாளர் திசநாயகம் மிகுந்த இன்முகத்துடன் காணப்பட்டதாகவும் தன் விடுதலைக்கு உதவிய அனைவருக்கும் நன்றியினை தெரிவித்ததாகவும் ஊடகவியலாளர் பாதுகாப்பு அமைப்பின் பிரதிநிதி தெரிவித்தார்.

திசநாயகம் அமெரிக்கா வந்தது வரவேற்கக்கூடிய ஒரு விடயம் என்றும் 30 வருடங்களாக இலங்கையில் நீடித்த போர் முடிவுக்கு வந்த பின்னரும் கூட ஊடகத்துறையினர் மீதான அச்சுறுத்தல்கள் இன்னமும் தொடர்ந்து கொண்டுள்ளது என்பதை அரசு இதன் மூலம் புரிந்து கொள்வதற்கு ஒரு வாய்ப்பாக அமையும் எனவும் இந்த அமைப்பின் செயல் இயக்குனர் ஜோயல் சைமன் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளின் உளவுப் பிரிவு தலைவர் சென்னையில் கைது

தமிழீழ விடுதலைப்புலிகளின் தமிழக உளவுப்பிரிவுத் தலைவர் சிரஞ்சீவி என்ற ராஜூ சென்னையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக பொலிஸார் தெரிவித்துள்ளனர.

விடுதலைப் புலிகள் அமைப்பின் தமிழக தலைவராக செயல்பட்டவர் சிரஞ்சீவி (ராஜூ) இவர், தமிழகத்தில் இருந்து உளவுத் தகவல்களை விடுதலைப் புலிகளுக்கு அனுப்பி வந்தார்.

ஹெல உறுமய தலைவர் பதவியில் மாற்றம்

hala.jpgஜாதிக ஹெல உறுமய கட்சியின் புதிய தலைவராக வணக்கத்துக்குரிய ஓமல்பே சோபித தேரர் நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் பொதுச் செயலாளராக பாட்டலி சம்பிக்க ரணவக்கவும் கட்சியின் தலைவராக வணக்கத்துக்குரிய அதுரலியே ரத்தன தேரரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைவர் பதவியை எல்லாவெல மேதானந்த தேரர் நேற்று இராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் புதைபொருள் ஆராய்ச்சிகளை தொடர்ந்தும் மேற்கொள்ள தீர்மானித்துள்ளார் என்றும் அதனால் இத்தலைவர் பதவியை இராஜினாமா செய்கின்றார் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.