இருபது வருடங்கள் சிறைத்தண்டனை அறிவிக்கப்பட்டு கடந்த மாதம் சனாதிபதி ராஜபக்சவினால் பொது மன்னிப்பு வழங்கப்பட்ட ஊடகவியலாளர் ஜே.எஸ். திசநாயகம் நேற்று அமெரிக்க தலைநகர் வோஷிங்டன் வந்து சேர்ந்துள்ளதாக ஊடகவியலாளர்கள் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்த அறிக்கை ஒன்றையும் அந்த அமைப்பு விடுத்துள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது.
வோஷிங்டன் அனைத்துலக விமான நிலையத்தில் வந்திறங்கிய திசநாயகத்தை அமெரிக்காவில் உள்ள அவரது நண்பர்களும் ஊடகவியலாளர் பாதுகாப்பு அமைப்பின் பிரதிநிதியும் வரவேற்றனர். ஊடகவியலாளர் திசநாயகம் மிகுந்த இன்முகத்துடன் காணப்பட்டதாகவும் தன் விடுதலைக்கு உதவிய அனைவருக்கும் நன்றியினை தெரிவித்ததாகவும் ஊடகவியலாளர் பாதுகாப்பு அமைப்பின் பிரதிநிதி தெரிவித்தார்.
திசநாயகம் அமெரிக்கா வந்தது வரவேற்கக்கூடிய ஒரு விடயம் என்றும் 30 வருடங்களாக இலங்கையில் நீடித்த போர் முடிவுக்கு வந்த பின்னரும் கூட ஊடகத்துறையினர் மீதான அச்சுறுத்தல்கள் இன்னமும் தொடர்ந்து கொண்டுள்ளது என்பதை அரசு இதன் மூலம் புரிந்து கொள்வதற்கு ஒரு வாய்ப்பாக அமையும் எனவும் இந்த அமைப்பின் செயல் இயக்குனர் ஜோயல் சைமன் தெரிவித்துள்ளார்.
Appu hammy
Welcome to freedom, Tissa and Ronnate. Have a happy and peaceful life.Now you are in safe hands !.