சஜீர் அகமட் பி

சஜீர் அகமட் பி

திருமலை ஆஸ்பத்திரியில் புதன்கிழமையும் 355 பொதுமக்கள் சிகிச்சைக்காக அனுமதி

red-cr.jpgமுல்லைத் தீவிலிருந்து கப்பலில் கூட்டிவரப்பட்டு நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு திருகோணமலை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட 355 பொதுமக்களின் பெயர்கள், விபரங்கள் வருமாறு:

1. பெயர் தரப்படவில்லை (தீவிரசிகிச்சைப் பிரிவில்),

2. பூமாதேவி, நவாலி (வயது 58),

3. ஹரமாசரி, மாத்தலன் (வயது27),

4. தெனுஷிகா, முள்ளிவாய்க்கால், (வயது 5),

5. ஜே.செல்லக்கிளி, பூநகரி, (வயது 46),

6. கே.விஜயலட்சுமி, கிளிநொச்சி, (வயது 24),

7. வி.சுகந்தி, (வயது 32),

8. பி.கிருபாகரன், கிளிநொச்சி, (வயது 28),

9. தேனுஷா, கிளிநொச்சி, (வயது 2.5),

10. உஷாந்தினி, முள்ளியவளை, (வயது 25),

11. தேனுஷி, முள்ளிவாயக்கால், (வயது 2),

12. கே.நாகராசா, சாவகச்சேரி, (வயது 55),

13. வி.ஞானவேல், வட்டக்கச்சி, (வயது 44),

14. ஜி.டினேஷ், வட்டக்கச்சி, (வயது 14),

15. செல்வநாயகி, பூநகரி, (வயது 47),

16. சண்முகலிங்கம், யாழ்ப்பாணம், (வயது 66),

17. சுந்திரகாந்தி, (வயது 38),

18. கே.மகேஸ்வரி, கொடிகாமம், (வயது 60),

19. என்.செல்வராசா, கிளிநொச்சி, (வயது 60),

20. என்.வேலாயுதப்பிள்ளை, பூநகரி, (வயது 59),

21. எஸ்.மனோராசா, மட்டக்களப்பு, (வயது 15),

22. பி.உவின், யாழ்ப்பாணம், (வயது 36),

23. பானு, யாழ்ப்பாணம், (வயது 4),

24. அனிபீபீ, புங்குடுதீவு (வயது 4),

25. மாதம்மா, புங்குடுதீவு, (வயது 30),

26. மரியலாரா, யாழ்ப்பாணம், (வயது 3),

27. திலானி, யாழ்ப்பாணம், (வயது 9),

28. டிலோஜினி, யாழ்ப்பாணம், (வயது 12),

29. எஸ். இரத்தினசிங்கம், பளை, (வயது 69),

30. தனபாலச்சந்திரன், யாழ்ப்பாணம், வேலணை, (வயது 43),

31. என். ராமச்சந்திரன், பரந்தன், (வயது 67),

32. எஸ்.சீதேவி, யாழ்ப்பாணம், (வயது 60),

33. எஸ்.கேமலதா, புதுக்குடியிருப்பு, (வயது 25),

34. யு.ஷபீலா, சுதந்திரபுரம், (வயது 36),

35. யோகராணி, புதுக்குடியிருப்பு, (வயது 45),

36. ஐ.சிற்றம்பலம், யாழ்ப்பாணம், கோண்டாவில், (வயது 70),

37. அல்போன்ஸிரோசலின், கிளிநொச்சி, முள்ளியங்குளம், (வயது 60),

38. கணபதிப்பிள்ளை, முள்ளியவளை, (வயது 53),

39. மனோன்மணி, வற்றாப்பளை, (வயது 69),

40. சிவபாக்கியம், ஆரியவளை, (வயது 57),

41.ஏ.பிரதீபன், கிளிநொச்சி, (வயது 31),

42. ராஜாராம், கிளிநொச்சி, (வயது 72),

43. புஷ்பராசா, கிளிநொச்சி, (வயது 60),

44. எம்.காசிநாதன், முரசுமோட்டை, (வயது 70),

45. கிருதரசன், யாழ்ப்பாணம், (வயது 4),

46.ரி.சோபனா, யாழ்ப்பாணம், அச்சுவேலி, (வயது 28),

47. லக்ஷிகா, யாழ்ப்பாணம், அச்சுவேலி, (வயது 4),

48. வி.குமுதா, யாழ்ப்பாணம், பொலிகண்டி, (வயது 32),

49. எஸ்.புராணம், இரணைமடு, (வயது 60),

50. ஜேசுதாஸ், முல்லைத்தீவு, (வயது 43),

51. இராஜசிங்கம், முல்லைத்தீவு, (வயது 74),

52. ஆர்.கோணேஷ்வரி, முல்லைத்தீவு, (வயது 69)

53. கே.கிருஸ்ணகுமாரி, கோமாரி, அம்பாறை, (வயது 34),

54. ஷர்மின், கோமாரி, அம்பாறை, (வயது 1.5),

55. ஷர்மிலா, கோமாரி, அம்பாறை, (வயது 3),

56. என்.துரைராஜா, வவுனியா, (வயது 24),

57. எஸ்.தனபாலசிங்கம், யாழ்ப்பாணம், (வயது 71),

58. ரி.ராசம்மா, யாழ்ப்பாணம், (வயது 70),

59. ரி.புனிதவதி, அம்பலவாணன், பொக்கணை, (வயது 65),

60. துரைசிங்கம், அம்பலவாணன், பொக்கணை, (வயது 65),

 61. பொன்னம்மா, முள்ளியவளை, (வயது 74),

62. டி. அன்னலெட்சுமி, (வயது 66),

63. ஐ. சரஸ்வதி, பொக்கணை, (வயது 73),

64. கே. யோகேந்திரன், யாழ்ப்பாணம், (வயது 26),

65. கே. திவானிப்பிள்ளை, யாழ்ப்பாணம், (வயது 70),

66. பி. பொன்னம்பலம், முள்ளியவளை, (வயது 73),

67. அல்போன்ஸு, அக்கராயன்குளம், (வயது 58),

68. பி. தங்கத்துரை, குமுழமுனை, (வயது 40),

69. ஏ. ஐயாத்துரை, மீசாலை, (வயது 73),

70. ஆர். தர்மலிங்கம், கிளிநொச்சி, (வயது 64),

71. ரி. கனகம்மா, கிளிநொச்சி, (வயது 67),

72. எஸ். சிசிலியா, அளம்பில், (வயது 80),

73. வை. சுதர்ஷினி, பூநகரி,

74. வை. ஈஸ்வரி, பூநகரி,

75. எஸ். பரமேஸ்வரநாதன், முல்லைத்தீவு, (வயது 58),

76. பி. அன்னலெட்சுமி, கிளிநொச்சி, (வயது 61),

77. பி. அன்னலெட்சுமி, வட்டக்கச்சி, (வயது 61),

78. எஸ். டொமினிக், புதுக்குடியிருப்பு, (வயது 67),

79. கே. வசந்தன், புதுக்குடியிருப்பு, (வயது 52),

80. கே. வீனஸ், புதுக்குடியிருப்பு (வயது 05),

81. ரி. சிங்கராசா, முல்லைத்தீவு, (வயது 67),

82. ஜே. டக்ஷன், முல்லைத்தீவு, (வயது 09),

83. ஜே. ஜோன்சன், முல்லைத்தீவு, (வயது 05),

84. ஜே. உகலிஸ்ரா, முல்லைத்தீவு, (வயது 41),

85. எஸ். பிலாமினி, கிளிநொச்சி (வயது 60),

86. ரி. தர்ஷினி, வவுனியா, (வயது 23),

87. ரி. துஷன், வவுனியா, (வயது 02),

88. எஸ். கனகசிங்கம், கொக்குத்தொடுவாய், (வயது 57),

89. எஸ். வள்ளியம்மா, உடையார் கட்டு, (வயது 68),

90. பெயர் தரப்படவில்லை, உடையார்கட்டு, (வயது 71),

91. தனலட்சுமி, உடையார்கட்டு, (வயது 65),

92. அம்பிகாவதி, புளியங்குளம், (வயது 74),

93. ஆர். சரஸ்வதி, வட்டக்கச்சி, (வயது 24),

94. விவேகானந்தன், முள்ளியவளை, (வயது 60),

95. எஸ். அருள்வாசகம், வலையாறு, (வயது 81),

96. இலங்கைநாதன், யாழ்ப்பாணம் (வயது 65),

97. ஆர். பத்மநாதன், வவுனியா, (வயது 64),

98. வி. நடராசா, குருணிக்கல், (வயது 78),

99. எஸ். வரதாஸ, கிளிநொச்சி, (வயது 75),

100. எம். செபமாலை, அடம்பன், (வயது 73),

101. கே. சாந்தமூர்த்தி, சாவகச்சேரி, (வயது 72),

102. எஸ். சிவஞானதேவி, (வயது 64),

103. எஸ். சியாந்தி, கல்முனை, (வயது 26),

104. கே. பெருமாள், வட்டக்கச்சி, (வயது 77),

105. கே. முனுசாமி, முள்ளியவளை, (வயது 52),

106. தங்கராணி, விஸ்வமடு, (வயது 25),

107. டிலர்ஷன், விஸ்வமடு, (வயது 07),

108. மேரி வசந்தி, இளவாலை, (வயது 32),

109. கே. சிவாஜினி, யாழ்ப்பாணம், (வயது 27),

110. கே. நீலவன், யாழ்ப்பாணம், (வயது 01),

111. வை. ரோஷன், கிளிநொச்சி, (வயது 25),

112. வி. பமிலா, யாழ்ப்பாணம், (வயது 28),

113. மகேஸ்வரி, அடம்பன், (வயது 54),

114. மிது, அடம்பன், (வயது 03),

115. கே. ஸ்ரலின், இளவாலை, (வயது 35),

116. எஸ். அபினயா, இளவாலை, (வயது 04),

117. கே. குணரத்னம், யாழ்ப்பாணம், (வயது 57),

118. யதுஷன், யாழ்ப்பாணம், (வயது 03),

119. யதுஷா, யாழ்ப்பாணம், (வயது 03),

120. ரி. சிவபாக்கியம், (வயது 70),

121. எஸ். முத்துப்பிள்ளை, வவுனியா, (வயது 70),

122. கே.தங்கேஸ்வரி, யாழ்ப்பாணம், (வயது 49),

123. ஆர். சுதர்ஷினி, யாழ்ப்பாணம், (வயது 23),

124. ஆர். தருஹன், யாழ்ப்பாணம், (வயது 3.5),

125. லூர்தம்மா, இரணைப்பாளை, (வயது 75),

126. டி.ராசகுமார், நடுந்துவா, (வயது 29),

127. கனிஸ்டா, நடுந்துவா, (வயது 42),

128. ஏ.அபிஷன், (வயது ஐந்து மாதம்),

129. தமுசூட், (வயது 08),

130. அடையாளம் தெரியாதவர்.

131. எஸ். பூபதி, துணுக்காய், (வயது 59),

132. எஸ். சந்திரவர்மன், யாழ்ப்பாணம், (வயது 36),

133. பி. பாலசிங்கம், துணுக்காய், (வயது 63),

134. கே. நாகேஸ்வரன், வியாலம்குளம், (வயது 67),

135. ஆர். சண்முகநாதன், நெடுங்கேணி, (வயது 67),

136. எஸ். கிறிஸ்டினா, மன்னார், (வயது 37),

137. எஸ். லிவின்ஸா, மன்னார், (வயது 1.5),

138. எஸ். தரோமி, மன்னார், (வயது 10),

139. எஸ். நிரோமி, மன்னார், (வயது 08),

140. எஸ். சிவசுப்பிரமணியம், நெடுங்கேணி, (வயது 70),

141. விநாயகமூர்த்தி, கிளிநொச்சி, (வயது 68),

142. கே.யோகராசா, அனலைதீவு, (வயது 32),

143. வி.லூர்தம்மா, அனலைதீவு, (வயது 61),

144. வி. சிவபாக்கியம், அனலைதீவு, (வயது 80),

145. கே.புவனேஸ்வரி, பளை, (வயது 50),

146. சந்தனம், மாத்தளன், (வயது 79),

147. பெரியவெள்ளையன், உடப்பு, (வயது 57),

148. எஸ். இரத்தினம், மாத்தளன், (வயது 70),

149. எம். ஜெயகுமார், சாவகச்சேரி, (வயது 32),

150. வேலுப்பிள்ளை, முல்லைத்தீவு, (வயது 33),

151.ரி.சுந்தரம், விஸ்வமடு (வயது 55)

152.எஸ்.செல்வராணி, விஸ்வமடு (வயது 52)

153. கே.துரைமணி, துணுக்காய் (வயது 61)

154. வி.மகேஸ்வரி, நேசமடு, (வயது 50)

155. மேரிநெய்சா, மன்னார், (வயது62)

156.ஜோசப், மடு, (வயது 67),

157. ஏ. விமலாதேவி, புதுக்குடியிருப்பு, (வயது 56),

158. என். நிரஜா, புதுக்குடியிருப்பு (வயது 08),

159. பி.புஷ்பா, மன்னார், (வயது 46),

160. அபினயா, மன்னார், (வயது 06),

161. சருயா, மன்னார், (வயது 11),

162. வி. தருஜன், வவுனியா (வயது 04),

163. வி. சாந்தன், வவுனியா, (வயது 06),

164. வி. நாகராணி, வவுனியா, (வயது 32),

165. கிருஷாந்தன், வவுனியா (வயது 08),

166. கீர்த்தனா, வவுனியா, (வயது 08),

167. தீபத்தினி, யாழ்ப்பாணம், (வயது 33),

168. எஸ். மலிஷா, யாழ்ப்பாணம், (வயது 02),

169. கே. திலகராணி, வவுனியா, (வயது 27),

170. கே. சதீஷ், வவுனியா, (வயது 02),

171. எஸ்.தேவமணிதேவி, வட்டக்கச்சி, (வயது 53),

172. அடையாளம் தெரியவில்லை.

173. ஏ.அந்தனிதாஸன், மன்னார், (வயது 61),

174. நித்தியானந்தன், மல்லாவி, (வயது 50),

175. செல்லத்துரை, வட்டக்கச்சி (வயது 60),

176.வளர்மதி, மல்லாவி (வயது 16),

177. சந்திரவதனி, மல்லாவி (வயது 34),

178. டைலக்ஷா, மல்லாவி (வயது 08),

179. எஸ்.துளசி, மல்லாவி (வயது 08),

180. டெரசத், மல்லாவி, (வயது 10),

181. நிதுஷன், மல்லாவி, (வயது 04),

182. எஸ்.கஜேந்திரி, மல்லாவி, (வயது 12),

183. சன்சன், வன்னாராய், (வயது 07),

184. பி.ஜோசப்பின், வன்னாராய், (வயது 43),

185. ரோஷானி, வன்னாராய், (வயது 20),

186. லிங்கேஸ்வரி, வட்டக்கச்சி, (வயது 27),

187. துளசிக்கா, வட்டக்கச்சி (வயது 06),

188. நிலோஜினி, வட்டக்கச்சி (வயது 09),

189. சருஜன், வட்டக்கச்சி (வயது 11),

190. வி.கருணேசன், பூநகரி (வயது 29),

191. ரோஹினி, பூநகரி (வயது 31),

192. கபிலினி, பூநகரி (வயது 03),

193. சிவபாக்கியம், புதுக்குடியிருப்பு (வயது 68),

194. ரி.இராசம்மா, முரசுமோட்டை (வயது 65),

195. என்.மணிக்கம், முல்லைத்தீவு (வயது 75),

196. கே.காசிபதி, புத்தூர் (வயது 67),

197. எல்.இராஜரட்ணம், முறிப்பு (வயது 62),

198. எஸ்.செல்வம், கீரிமலை (வயது 74),

199. ரி.நல்லதம்பி, புதுமுறிப்பு (வயது 84),

200. கே.வேலுப்பிள்ளை, புதுக்குடியிருப்பு (வயது 70),

201. எம்.விஜயலட்சுமி, கிளிநொச்சி (வயது 69),

202. என்.சின்னத்தங்கம், முரசுமோட்டை (வயது 70),

203. வை.நந்தினி, முரசுமோட்டை (வயது 35),

204. வை.கீர்த்திகா, முரசுமோட்டை (வயது 10),

205. வை.திலக்ஷண, முரசுமோட்டை (வயது 08),

206. வை.ஜாழினி, முரசுமோட்டை (வயது 01), 2

07. டபிள்யூ. விஜயதோவி, மடு (வயது 64),

208. எஸ்.பழனி, கிளிநொச்சி (வயது 67),

209. பி.தெய்வானை, கிளிநொச்சி (வயது 60),

210. எஸ்.கணேசன், சாவகச்சேரி (வயது 79),

211. எஸ்.வள்ளியம்மா, புங்குடுதீவு (வயது 65),

212. எஸ்.சவரிமுத்து,மன்னார் (வயது 73),

213. எஸ்.அன்ரனி, அடம்பன் (வயது 70),

214. எஸ்.தொம்மாமரிசன், மன்னார் (வயது 64),

215. கே.பொன்னையா, யாழ்ப்பாணம் (வயது 75),

216. எஸ்.சிவகுமார், முத்தையன் கட்டு (வயது 33),

217. பி.நடேசப்பிள்ளை, யாழ்ப்பாணம் (வயது 75),

218. வை.நமியா, குருநாகல (வயது 45),

219. வி.டிலுக்சி, குருநாகல (வயது 03),

220. சரோஜாதேவி, உடுத்துறை (வயது 44),

221. கே.பொன்னம்மா, உடுத்துறை (வயது 74),

222. யு.அருந்தவம் கொக்கிலாய் (வயது 75),

223. ஜே.கந்தராஜா, யாழ்ப்பாணம் (வயது 65),

224. எஸ்.பென்னம்மா, செம்பியன்பற்று (வயது 70),

225. வள்ளியம்மா, தர்மபுரம் (வயது 48),

226. மீனாட்சி, கட்டைக்காடு (வயது 80),

227. ஏ.தங்கம்மா, பெரியகுளம் (வயது 60),

228. மனோகரன், கட்டைக்காடு (வயது 30),

229. என்.ராஜேஸ்வரி, அம்பலவாணன் பொக்கணை (வயது 57),

230. கே.நஸியம்மா, ஸ்கந்தபுரம் (வயது 66),

231. கே.பரமேஸ்வரி, பூநகரி (வயது 67),

232. வி.கதிரவேலு, பூநகரி (வயது 44),

233. எம்.சிதம்பரப்பிள்ளை, கிளிநொச்சி (வயது 64),

234. கே.இரத்தினசிங்கம், உருத்திரபுரம் (வயது 65),

235. எஸ்.நாகராணி, மானிப்பாய் (வயது 38),

236. விதுஷா, மானிப்பாய் (வயது 10),

237. நிதர்சன், வேலிக்குளம் (வயது 09),

238. யாலன், மானிப்பாய் (வயது 03),

239. கிரிபாமாரிதேவி, முல்லைத்தீவு (வயது 36),

240. யாழினி, புதுக்குடிருப்பு (வயது 04),

241. ஜே.சுவித்திரா, நல்லூர் (வயது 29),

242. சுஜித், யாழ்ப்பாணம் (வயது 11),

243. லக்ஷனா, யாழ்ப்பாணம் (வயது 09),

244. வணயோசப்பினி சொலமன், வலையர்மடம் (வயது 70),

245. மணியம்மா, வட்டக்கச்சி (வயது 33),

246. எஸ்.சிலம்பிசை, வட்டக்கச்சி (வயது 01),

247. எஸ்.வசந்தராசா, மாதலன் (வயது 10), 248. துஷ்யந்தன், மாதவன் (வயது08),

249. தனுஷா, மாதலன் (வயது 12), 250. பகிரதன், மாதலன் (வயது 04),

251. பி.சிதம்பரம், கிளிநொச்சி (வயது 81),

252. பாலசிங்கம், பேசாலை வடக்கு (வயது 81),

253. ரி.சிதம்பரம், பொக்கணை (வயது 64),

254. பி.சிசிலியா, அலம்பில் வடக்கு (வயது 86),

255. ஜே.மரியநாயகி, வவுனியா (வயது 68),

256. லபரூன்,

 257. கனகமணி, துணுக்காய் (வயது 69),

258. திருச்செல்வம், வட்டக்கச்சி (வயது 69),

259. புஷ்பராணி, மல்லாவி (வயது 40),

260. ஜி.கணதர்ஷினி, மல்லாவி (வயது 08),

261. கிருஷ்ணபிள்ளை, வலங்குட்டன் (வயது 72),

262. அப்புத்துரை, யாழப்பாணம் ( வயது 78),

263. எஸ்.தர்மலிங்கம், யாழ்ப்பாணம் (வயது 58),

264. எஸ்.பொன்னம்பலம், கந்தபுரம் (வயது 60),

265. பி.தர்மசெல்வன், கந்தபுரம் (வயது 27),

266. பி.விஜயலட்சுமி, கந்தபுரம் (வயது 54),

267. சோமசுந்தரம், யாழ்ப்பாணம் (வயது 72),

268. வை.கனகயன், கிளிநொச்சி (வயது 79),

269. ஆர்.ஜெகதீஸ்வரி, முத்தையன் கட்டு (வயது 27),

270. எஸ்.கயல்விழி, முத்தையன் கட்டு,

271. பேபிஷாலினி, முத்தையன் கட்டு (வயது 6),

272. எஸ்.சிதம்பரம், முத்தையன் கட்டு (வயது 68),

273. கணேஷ், வட்டக்கச்சி,

274. எஸ்.சுசந்தி, யாழ்ப்பாணம் (வயது 24),

275. சுந்தர், யாழ்ப்பாணம் (வயது 03),

276. கிருஷ்ண மூர்த்தி, கிளிநொச்சி (வயது 32),

277. கறுப்பையா, தேவிபுரம் (வயது 59),

278. ஆர்.தங்கவேல், தர்மபுரம் (வயது 67),

279. ரி.நிதாஜினி, மாங்குளம் (வயது 30),

280. ரி.தரணிகா, மாங்குளம் (வயது 04),

281. ரி.தமிகா, மாங்குளம் (வயது1),

282. கே.கங்கப்பிள்ளை, புதுக்குடியிருப்பு (வயது77).

283. ஐ.யதுகுலேந்திரன், வட்டக்கசி(வயது52).

284. என்.ராசசூரியம், யாழ்ப்பாணம் (வயது68),

285. ஆர்.வசந்ததேவி, துணுக்காய், (வயது61),

286. கே.சரஸ்வதி, கிளிநொச்சி(வயது63),

287. ஐ.குணரத்னம், கிளிநொச்சி, (வயது73),

288. கே.கோபாலரத்னம், யாழ்ப்பாணம், (வயது62),

289. கே.சந்திரதேவி, யாழ்நகர், (வயது48),

290. எஸ்.ராஜேஸ்வரி, கன்னிப்பாடு, (வயது24),

291. எஸ்.இளவரசன், கன்னிப்பாடு, (வயது01),

292. பி.சிவகுரு, வட்டக்கச்சி, (வயது78),

293. வி.காமாட்சி, மாதலன், (வயது70),

 294. எம்.சத்தியவான், மாங்குளம்(வயது64),

295. யு.பாலசிங்கம், கனகராயன்குளம்,(வயது74),

296. கே.ரூபவதி, முரசுமோட்டை (வயது70),

297. வி.பவீஸ்வரி, விஸ்வமடு, (வயது63),

298. வி.தவசேகரி, கிளிநொச்சி, (வயது45),

299.வி.சாமுகவேல், கிளிநொச்சி(வயது01),

300. நிரோஷன், கிளிநொச்சி, (வயது12),

301. நிஷாந்தன், கிளிநொச்சி, (வயது08),

302. ஸ்ரீவாதம், கிளிநொச்சி,(வயது10),

303. ஆர்.முருகையா, தர்மபுரம்,(வயது68),

304. எம்.வெள்ளையம்மா, தர்மபுரம்,(வயது60),

305.கே.கமலதேவி, காரை நகர்,(வயது35),

306. கே.தனுஷா, காரைநகர், (வயது09),

307. ஜே.ஐந்தன், காரைநகர், (வயது10),

308. கே.கிருஷாந்தன், காரைநகர்,(வயது07),

309. எஸ்.அம்பிகை, முல்லைத்தீவு,

310.எஸ்.சிவபாக்கியம், நெடுங்கேணி(வயது60),

311. எஸ்.செல்வரத்தினம், நெடுங்கேணி(வயது60),

312. எஸ்.ராசரத்னம், கிளிநொச்சி,(வயது75),

313. ஏ.சிற்றம்பலம், அச்சுவேலி,(வயது75),

314. செல்வநாயகம், தம்பலகாமம்,(வயது68),

315. சிவலிங்கம், மல்லாவி,(வயது72),

316. என்.கிருஷ்ணபிள்ளை, யாழ்நகர்,(வயது67),

317, எஸ்.முத்துராசா, மல்லாவி,(வயது67),

318. எஸ்.அன்னபூரணம், மல்லாவி(வயது64),

319. எஸ்.சிவகங்கை, தம்பலகமம்,(வயது65),

320. எஸ்.கெகீதரன், யாழ்நகர்,(வயது42),

321. புவனேஸ்வரி, யாழ்நகர்,(வயது60),

322. ஆர்.ஜெகதா, பூநகரி(வயது37),

323. ஆர்.ரேஷ்வரன், பூநகரி,(வயது37),

324. கே.நந்தினி, இரணைப்பா,(வயது39),

325. ரிஸ்விசுனா, இரணைப்பாளை,(வயது02),

326. அன்னமீலன், இரணைப்பாளை,(வயது06),

327. எஸ்.சிந்துஜா, இரணைப்பாளை,(வயது05),

328. எஸ்.திவானை, கிளிநொச்சி,(வயது77),

 329. இ.வெரோனிக்கா, யாழ்நகர்,(வயது64),

330. ரி.அற்புதநாதன், பாலைநகர்(வயது67),

 331. ஆர். மனோன்மணி, கிளிநொச்சி(வயது64),

332. அடையாளம் தெரியாதவர்.

333. கலாவதி, மாதலன்,(வயது23),

334. இந்துஷன், மாதலன்(வயது06),

335. பி.அன்னம்மா, சுண்டிக்குளம்(வயது61),

336. பூராஞ்சனி, சுண்டிக்குளம்(வயது06),

337. கே.வேலாயுதபிள்ளை, திருவையாறு(வயது62),

338. எஸ். திருநாவுக்கரசு, திருவையாறு(வயது61),

339. யு.ராதா, மன்னார்(வயது23),

340. சுந்தர்வண்ணன், மன்னார்(வயது02),

341. தனுசிகா, மன்னார்(வயது5),

342. ரோஸ்மேரி, அளம்பில்(வயது38),

343. டி.சண்முகம், வவுனியா(வயது72),

344. எஸ்.நாகரத
 

ரீ.எம்.வி.பி ஆயுதப்பிரிவு கலைப்பு

tmvp2.jpgதமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் (ரீ. எம். வீ. பி) ஆயுதப் பிரிவு உத்தியோகபூர்வமாகக் கலைக்கப்படுவதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எஞ்சியிருக்கும் ஆயுதங்கள் நாளை மட்டக்களப்பில் வைத்து அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்படுமென ரீ. எம். வீ. பி. கட்சியின் பேச்சாளர் ஆஷாத் மெளலானா தெரிவித்தார். முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் அண்மையில் இடம்பெற்ற கட்சியின் உயர்பீட செயற்குழுக் கூட்டத்திலேயே இம்முடிவு எடுக்கப்பட்டதாகவும், இதன்மூலம் கிழக்கு மாகாணத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முதலமைச்சரின் தலைமையிலான மாகாணசபைக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ரீ. எம். வி. பி. ஆயுதப்பிரிவு உறுப்பினர்களாக இருந்தவர்களின் எதிர்காலம் தொடர்பில் ஐ. ஓ. எம். நிறுவனத்துடனும் பாதுகாப்பு அமைச்சுடனும் முதலமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தி அதன் மூலம் உறுப்பினர்களின் விருப்பத்திற்கேற்ப தொழிற் பயிற்சி அளிக்கப்பட்டு, நிதி உதவிகள் மூலம் சிறந்த எதிர்காலம் உத்தரவாதப் படுத்தப்பட்டிருக்கிறது.

அரச பாதுகாப்புப் படையினருடன் இணைய விரும்புபவர்களும் இதில் இணைந்துகொள்ள முடியும். கிழக்கு மாகாணத்தில் நிலவுகின்ற ஏனைய சட்ட விரோத ஆயுதக் குழுக்களின் ஆயுதங்களை அரசாங்கம் விரைவில் களையுமென தாம் உறுதியாக நம்புவதாகவும் அவர் கூறினார்.

பெல்மதுளை நீதிமன்றத்தில் தீ ; ஆவணங்கள் எரிந்து நாசம்

பெல்மதுளை மஜிஸ்திரேட் நீதவான் நீதிமன்றத்தில் நேற்று இடம்பெற்ற தீ விபத்தில் அங்குள்ள கோவைகள், முக்கிய ஆவணங்கள் எரிந்து சாம்பராகியுள்ளன. இச்சம்பவம் நேற்றுக்காலை இடம் பெற்றிருக்கலாமென விசாரணைகளை மேற்கொண்டுள்ள காவத்தை பொலிஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

கடந்த வெள்ளிக்கிழமை கடமைகள் முடித்து காரியாலயம் அனைத்தும் முறையாக மூடப்பட்டு சென்று நேற்றுக் காலை கடமைக்கு திரும்பிய போது நீதிமன்றக் காரியாலயம் உடைக்கப்பட்டு அதிலுள்ள சில முக்கியமான ஆவணங்கள் கோவைகள் தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளதாக ஊழியர்கள் காவத்தை பொலிஸாருக்கு தெரிவித்தைத் தொடர்ந்து பொலிஸார் விசாரணைகளை ஸ்தலத்திற்கு சென்று மேற்கொண்டு வருகின்றனர்.

சில கோவைகள் களவாடப்பட்டிருக்கலாமென தெரிவிக்கும் பொலிஸார் அங்குள்ள அலுமாரிகள் உடைக்கப்பட்டுள்ளதுடன் அங்கிருந்த ஒரு லட்சம் ரூபா ரொக்கப்பணமும் களவாடப்பட்டுள்ளதாக தெரிவிகின்றனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று நேபாளம் பயணம்

mahinda.jpgஇரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று நேபாளம் பயணமானார். நேபாளப் பிரதமர் புஷ்பகமல் தஹலின் அழைப்பை ஏற்றே ஜனாதிபதி இந்த உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

இவ்விஜயத்தின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலங்கைக்கும், நேபாளத்திற்குமிடையிலான இருபக்க நல்லுறவுகள் குறித்து நேபாள ஜனாதிபதி கலாநிதி ராம்பாரன் யாதெவ், பிரதமர் புஷ்ப கமல் தஹல, வெளி விவகார அமைச்சர் உபேந்திர யாதெவ் உட்பட அந்நாட்டு அரசியல் தலைவர்களுடன் கலந்துரையாடல்களை நடத்த விருக்கிறார்.

ஜனாதிபதியின் இவ்விஜயத்தின் போது இலங்கைக்கும், நேபாளத்திற்குமிடையில் பொருளாதார, அரசியல் மற்றும் கலாசார மேம்பாட்டுக்குமான இரு பக்க உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்படவுள்ளன. இவ்விஜயத்தின் போது ஜனாதிபதி புத்தபிரானின் பிறந்த இடமான லும்பினிக்கும் விஜயம் செய்யவிருக்கிறார்.

ஏ-9 வீதி இன்று திறப்பு

uthaya_nanayakara_.jpgயாழ்ப்பாணம்- கண்டி ஏ-9 வீதி இன்று (02) உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்படவிருப்பதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார நேற்று தெரிவித்தார். 24 வருடங்களின் பின்னர் பாதுகாப்பு படையினரின் போக்குவரத்துக்காகவும், விநியோக நடவடிக்கைகளுக்காகவும் இப்பாதை இன்று திறக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக பிரிகேடியர் உதய நாணயக்கார மேலும் குறிப்பிடுகையில், 1985ம் ஆண்டுக்குப் பின்னர் ஏ-9 வீதியை பாதுகாப்பு படையினர் மீண்டும் பயன்படுத்த ஆரம்பிப்பது இதுவே முதல் தடவையாகும்.

பாதுகாப்பு படையினரின் மனிதாபிமான நடவடிக்கைகள் மூலம் ஏ-9 வீதியிலுள்ள பிரதான நகரங்களான பரந்தன், கிளி நொச்சி, ஆனையிறவு என் பன புலிகளின் பிடியிலிருந்து ஏற்கனவே விடுவிக்கப்பட்டன.

இதன் பயனாக ஏ-9 தரைவழியைத் திறந்து விடக்கூடிய வாய்ப்பு கிடைக்கப் பெற்றிருக்கிறது.

பாதுகாப்பு படையினரின் தரைவழி போக்குவரத்து மற்றும் விநியோக நடவடிக்கைகளுக்காக இப்பாதை முதலில் திறக்கப்படுகின்ற போதிலும் இப்பாதைக்கு அருகிலுள்ள சில பிரதேசங்களில் புதைக்கப்பட்டிருக்கும் கண்ணி வெடிகளை அப்புறப்படுத்தும் பணிகள் பூர்த்தியானதும் பொது மக்கள் போக்குவரத்துக்காகவும் இப்பாதை திறந்துவிடப்படும்.

2002ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கை மூலம் ஏ-9 வீதி பொது மக்கள் போக்குவரத்துக்காக மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே திறக்கப்பட்டது. பொது மக்கள் புலிகளுக்கு வரி என்ற போர்வையில் கப்பம் செலுத்தி மிகுந்த சிரமங்களுடனேயே இப்பாதை வழியாக பயணிக்க இடமளிக்கப்பட்டனர். இச்சமயம் பாதுகாப்பு படையினர் இப்பாதையைப் பயன்படுத்தவில்லை.

பாதுகாப்பு படையினர் ஆகாய மற்றும் கடல் வழியாகவே யாழ். குடாநாட்டுக்கான போக்குவரத்து மற்றும் விநியோக நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர். இப்பாதை திறக்கப்படுவதன் மூலம் பாதுகாப்பு படையினர் பெரிதும் நன்மை பெறுவது போல யாழ்ப்பாணம் உட்பட முழு நாட்டு மக்களும் நன்மை அடைவர். இப்பாதை திறக்கப்படுவதன் மூலம் பொருளாதாரத்துறை பெரிதும் மேம்பாடு அடையும்.

இப்பாதையை உத்தியோகபூர்வமாகத் திறக்கும் வகையில் யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி ஒரு இராணுவ குழுவினரும், வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணத்தை நோக்கி மற்றொரு இராணுவகுழுவும் இன்று பயணத்தை முதலில் ஆரம்பிக்கும் என்றார்.

வவுனியா பூந்தோட்டம் அகதி முகாமில் தீபிடிப்பு; உடைமைகள் நாசம்

poonthotham.jpgவவுனியா பூந்தோட்ட அகதிகள் முகாம் நேற்றுக் காலை தீக்கிரையானது. திடீரென ஏற்பட்ட தீ காரணமாக அகதிகள் தங்கியிருந்த கொட்டில்கள் முற்றாக எரிந்ததுடன் மக்களின் உடைமைகள் அனைத்தும் எரிந்து சாம்பலாகின.

நேற்றுக் காலை சுமார் 10.30 மணியளவில் திடீரென ஏற்பட்ட தீ முகாம் முழுவதும் பரவ ஆரம்பித்தது. இராணுவத்தினர் ஸ்தலத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இத்தீவிபத்து காரணமாக 50 குடும்பங்களைச் சேர்ந்த 160 பேர் பாதிக்கப்பட்டனர்.

சம்பவம் தொடர்பாக மீள் குடியேற்ற அனர்த்த நிவாரண அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் பணிப்பின் பேரில் உடனடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு சமைத்த உணவுகள் வழங்க வவுனியா அரச அதிபர் திருமதி சார்ள்ஸ் நடவடிக்கை எடுத்துள்ளார். தீ பரவுவதற்கான காரணம் என்ன என்பது தொடர்பாக விசாரணைகள் நடைபெறுகின்றன.

1990 ஆம் ஆண்டு முதல் இயங்கிவரும் பூந்தோட்ட முகாமில் கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்துள்ளவர்களே உள்ளனர். காலை 10.30 மணியளவில் இத்தீவிபத்து ஏற்பட்டதால் உயிரிழப்புகள், காயமடைதல் தவிர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இளைஞர்களின் செயல்கள், இலங்கைத் தமிழர்களுக்கு ஆக்க பூர்வமாகப் பயன்பட வேண்டும் – விஜயகாந்த்

vijayagath1.jpgஇளைஞர் களின் செயல்கள், இலங்கைத் தமிழர்களுக்கு ஆக்கபூர்வமாகப் பயன்பட வேண்டும். இலங்கைப் பிரச்சினைக்காக யாரும் தீக்குளித்து தங்கள் உயிரை மாய்த்து கொள்ள வேண்டாம்” என்று கட்சித் தொண்டர்களுக்கு விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து  விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- “தேசிய முற்போக்கு திராவிட கழகம் தொடர்ந்து இலங்கைத் தமிழர்களின் இன்னல்களைத் தீர்க்க ஜனநாயக முறையில் நடத்தி வரும் போராட்டங்களில் கட்சியினர் கலந்து கொள்ள வேண்டுமே தவிர, தனிப்பட்ட முறையில் தீ வைத்து கொண்டு உயிரை மாய்த்து கொள்ளும் முயற்சியில் எக்காரணத்தை முன்னிட்டும் ஈடுபட வேண்டாம் என்று வேண்டுகோள் வைக்கிறேன். இளைஞர்களின் செயல்கள், இலங்கைத் தமிழர்களுக்கு ஆக்க பூர்வமாகப் பயன்பட வேண்டும். அதற்கு மாறாக அவர்களது உயிரைத் தாங்களே மாய்த்துக் கொள்வதை கட்சி ஒரு போதும் ஊக்கப்படுத்தாது.

வேலூர் மாவட்டம், வள்ளி பட்டு ஊராட்சியை சேர்ந்த எனது உயிரினும் மேலான கட்சியின் கிளை செயலாளர் சீனிவாசன் தீக்குளித்தார் என்பதை கேட்டு மிகவும் அதிர்ச்சியடைந்தேன். அவருக்குத் திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர் என்ற செய்தி அறிந்து துயருற்றேன்.

இளைஞர்கள் சாதிக்க பிறந்தவர்களே தவிர, சாவதற்கு பிறந்தவர்கள் அல்ல என்பதை மனதில் கொள்ள வேண்டும். ஒவ்வொரு தொண்டரும் வீட்டிற்கும், நாட்டிற்கும் பயன்படுபவராக இருக்க வேண்டுமென்று நான் அடிக்கடி வலியுறுத்தி வரும் கருத்தாகும். தீக்குளிக்கும் முயற்சியில் தயவு செய்து கட்சியினர் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். தீக்குளிப்பது என்பது இதுவே முதலும், கடைசியுமாக இருக்க வேண்டுமென்று அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.” இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.

சமையல் எரிவாயூவின் விலைகள் நேற்று நள்ளிரவு முதல் குறைப்பு!

gas_silindar.jpgநேற்று நள்ளிரவு முதல் சமையல் எரிவாயுவின் விலைகள் மேலும் குறைக்கப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இதன்படி 12.5 கிலோ கிறேம் கொண்ட லாப் எரிவாயு சிலிண்டர் ஒன்று 334 ரூபாவினாலும் ஷெல் எரிவாயு சிலிண்டர் ஒன்று 310 ரூபாவினலும் குறைக்கப்படும்

கூட்டுறவு மொத்த விற்பனை தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் பந்துல குணவர்தன இதனை அறிவித்தார் கடந்த ஆறு மாத காலத்துக்குள் லாப் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலையை 790 ரூபாவினாலும் ஷெல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலையை 554 ரூபாவினாலும் அரசாங்கம் குறைத்துள்ளதாகவும் அமைச்சர் இங்கு குறிப்பிட்டார்.
 

கமு/ பெரியநீலாவணை விஷ்ணுவில் 4 ஆசிரியர், 29 மாணவர் திடீர் மயக்கம்

medicine-01.jpgகல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட பெரிய நீலாவணை விஷ்ணு மகா வித்தியாலய த்தின் 4 ஆசிரியர்கள் உட்பட 29 மாணவர்கள் திடீர் மயக்கம், மற்றும் உடல் அழற்சி காரணமாக மருதமுனை, கல்முனை ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டனர். இதனால் பெற்றோர் பாடசாலைக்கும் ஆஸ்பத்திரிகளுக்கும் பதற்றத்துடன் ஓடித்திரிந்தனர்.

பாடசாலைக்கருகேயுள்ள தோட்டத்தில் காய்கறிகளுக்கு விசிறிய கிருமிநாசினி காற்றோடு கலந்து பாடசாலை மேல்மாடியில் நின்றுகொண்டிருந்த மாணவர்கள் மேல் பட்டதாலேயே இந்த நிலை ஏற்பட்டது என ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன.

மயக்கம், உடல் எரிவு, அழற்சி காரணமாக மருதமுனை வைத்தியசாலையில் 4 ஆசிரியர்களும் 23 மாணவர்களும் அனுமதிக்கப்பட்டனர். உடனடியாக சிகிச்சையளிக்கப்பட்டதன் பின்னர் இவர்கள் அனைவரும் வீடு திரும்பினர் என மருதமுனை ஆஸ்பத்திரி வட்டாரம் தெரிவித்தது. மேலும், கல்முனை பெரியாஸ்பத்திரியில் இரண்டு மாணவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் இடம்பெற்ற சில வினாடிகளில் மாணவர்களின் பெற்றோர் ஆஸ்பத்திரியை நோக்கி அழுதவண்ணம் படையெடுத்தனர். சிலர் எங்கே எமது பிள்ளைகளை கொண்டு சென்றார்கள் எனத் தெரியாமல் கல்முனை அஷ்ரஃப் ஆஸ்பத்திரிக்கும் சென்று அழுது புலம்பினர்.

கல்முனை பெரியாஸ்பத்திரியிலுள்ள இரண்டு மாணவர்களைத் தவிர ஏனையோர் வீட்டிற்கு அனுப்பப்பட்டுவிட்டனர். மாணவர்கள் வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டதும், வைத்திய சாலை பொறுப்பதிகாரி டாக்டர் ஏ. ஆர். எம். ஹாரிஸ், டாக்டர் மெளலானா, டாக்டர் உவைசுல் பாரி ஆகியோர் கொண்ட குழுவினர், உடனடி சிகிச்சைகளை வழங்கினர்.

குஜராத்தில் திடீரென பரவிய ஹெபடைடிஸ்- பி

aep-hl-hepatitis.jpgஇந்தியா வின் குஜராத் மாநிலத்தில் மொடாஸா மாவட்டத்தில் ஹெபடைடிஸ் – பி ரக வைரஸ் திடீரென பரவியதால் பலர் பாதிக்கப்பட்டனர். அது, அஹமதாபாத் உள்ளிட்ட நகரங்களுக்கும் பரவியது. அந்த வைரஸ் காரணமாக இதுவரை, 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே மருத்துவமனைகளில் மருந்துகள் செலுத்தப் பயன்படுத்தப்பட்ட சிரிஞ்ச் எனப்படும் ஊசிக்குழல்களை மீண்டும் பயன்படுத்தியதே, ஹெபடைடிஸ் – பி வேகமாகப் பரவக் காரணம் என்று கூறப்படுகிறது.

அந்த ஊசிக்குழல்களை, தனியார் மருத்துவமனைகளில் இருந்து வாங்கி, மொத்தமாக விற்பனை செய்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அதுபோன்ற ஊசிகளைப் பயன்படுத்திய தனியார் மருத்துவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், சுகாதாரத்துறை அதிகாரிகள் மாநிலம் முழுவதும் நடத்திய சோதனையில், ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட லட்சக்கணக்கான ஊசிக்குழல்கள் கைப்பற்றப்பட்டன.