சஜீர் அகமட் பி

சஜீர் அகமட் பி

கவிஞர் ராஜமார்த்தாண்டன் மரணம்

07rajamarthandan-1.jpgகவிஞர் ராஜமார்த்தாண்டன் 06.06.2009 அன்று அகால மரணமடைந்துவிட்டார். ராஜமார்த்தாண்டன் கவிஞர், திறனாய்வாளர். கொல்லிப்பாவை இதழ் ஆசிரியராக இருந்தவர். தினமணியில் உதவி ஆசிரியராக இருந்தவர்.

1 அப்படியே நிற்கட்டும் அந்த மரம் (கவிதைகள், அஜிதா பதிப்பகம்),
2 என் கவிதை (கவிதைகள்),
3 ராஜமார்த்தாண்டன் கவிதைகள் (கவிதைகள், தமிழினி வெளியீடு),
4 கொங்குதேர் வாழ்க்கை – 3 (தொகுப்பு, தமிழினி),
5 புதுக்கவிதை வரலாறு (திறனாய்வு, தமிழினி),
6 புதுமைப்பித்தனும் கயிற்றரவும் (திறனாய்வு, தமிழினி).

நிறைய கவிதைகள் எழுதியிருந்தாலும், ராஜமார்த்தாண்டன் ஒரு சிறந்த கவிதை விமர்சகராகவும், திறனாய்வாளராகவுமே முன்வைக்கப்படுகிறார். தொடர்ந்து கவிதைகளின் போக்கையும், கவிஞர்களையும் அவர் உள்வாங்கிக்கொண்டிருந்ததால், இது அவருக்கு சாத்தியமாகியிருக்கிறது. தொடரந்து கவிதைகளை வாசிக்கும் எவரும் ஒருவித தொடர்ச்சியையோ தொடர்ச்சியின்மையையோ காலப்போக்கில் கண்டுகொண்டுவிடமுடியும். மனமாச்சரியங்களுக்கு ஆட்படாமல் தம் கருத்துகளைச் சொல்லும் திறனாய்வாளர்கள் அருகி வரும் நிலையில் ராஜமார்த்தாண்டனின் இடம் முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது. தமிழினி வாயிலாக கொங்குதேர் வாழ்க்கை என்னும் தமிழின் மரபு-புதுக்கவிதைகளின் தொகுப்பு வந்தபோது, புதுக்கவிதைகளைத் தொகுக்கும் பணியை ராஜமார்த்தாண்டன் செய்தார். கிட்டத்தட்ட 93 கவிஞர்களின் 893 கவிதைகளை அவர் தொகுத்திருந்தார்.

தகவல் :இளைய அப்துல்லா

இலங்கை துடுப்பாட்ட அணியை பகிஸ்கரிக்க கோரி பிரித்தானியாவில் தமிழ் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

20-20landon.jpgபிரித் தானியாவில், மனித உரிமைகளைக் காக்கத் தவறிய நாடுகளை துடுப்பாட்டத்தில் இருந்து விலக்கிவைப்பது போன்று, இலங்கை அணியையும் விலக்கி வைக்க வேண்டுமெனக் கோரி தமிழ் மாணவர்கள் போட்டி ஆரம்ப தினமான நேற்று லோட்ஸ் மைதானத்திற்கு முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கை அரசினால் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட தமிழ் மக்கள் பற்றிய விபரங்கள் தற்போது பிரித்தானிய ஊடகங்களில் வெளிவர ஆரம்பித்துள்ளன.

இந்நிலையில் 20க்கு 20 துடுப்பாட்ட போட்டித் தொடரில் கலந்து கொள்வதற்காக இலங்கை அணி பிரித்தானியாவிற்கு வந்துள்ளது. மனித உரிமைகளைக் காக்கத் தவறும் நாடுகளை துடுப்பாட்டத்தில் இருந்து விலக்கி வைப்பது வழக்கம். அது போன்று இலங்கை அணியையும் விலக்கி வைக்க வேண்டுமெனக் கோரி தமிழ் மாணவர்கள் நேற்று லோட்ஸ் மைதானத்திற்கு முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

20க்கு 20 உலகக் கிண்ண துடுப்பாட்ட போட்டித் தொடரின் நேர அட்டவணை

muralitharan-sri-lankas.jpgபிரித்தா னியாவில்  லோட்ஸ் மைதானத்தில் நேற்று ஆரம்பமான 20க்கு 20  உலகக் கிண்ண துடுப்பாட்ட போட்டித் தொடரின்  நேர அட்டவணை வருமாறு (இலங்கை நேரப்படி) .

ஜுன் 5:  இங்கிலாந்து நெதர்லாந்து பிரிவு – பி  லண்டன் இரவு 10 மணி (நடைபெற்று முடிந்தது. இப்போட்டியில் நெதர்லாந்து வெற்றி பெற்றது.)

ஜுன் 6:  நியுசிலாந்து ஸ்காட்லாந்து பிரிவு – டி லண்டன் பிற்பகல் 2.30 மணி

ஜுன் 6: ஆஸ்திரேலியா மேற்கு இந்தியா பிரிவு – சி லண்டன் மாலை 6.30 மணி

ஜுன் 6: வங்காளதேசம் இந்தியா பிரிவு – ஏ நாட்டிங்காம் இரவு 10.30 மணி

ஜுன் 7: ஸ்காட்லாந்து தென் ஆப்பிரிக்கா பிரிவு – டி லண்டன் மாலை 6 மணி

ஜுன் 7: இங்கிலாந்து பாகிஸ்தான் பிரிவு – பி லண்டன் இரவு 10 மணி

ஜுன் 8: வங்காளதேசம் அயர்லாந்து பிரிவு – ஏ நாட்டிங்காம் மாலை 6 மணி

ஜுன் 8: ஆஸ்திரேலியா இலங்கை பிரிவு – சி நாட்டிங்காம் இரவு 10 மணி

ஜுன் 9: நெதர்லாந்து  பாகிஸ்தான் பிலண்டன் மாலை 6 மணி

ஜுன் 9: நியுசிலாந்து  தென்ஆப்பிரிக்கா பிரிவு – டி லண்டன் இரவு 10 மணி

ஜுன் 10: இலங்கை மேற்குஇந்தியா பிரிவு – சி நாட்டிங்காம் மாலை 6 மணி

ஜுன் 10: இந்தியா அயர்லாந்து பிரிவு – ஏ நாட்டிங்காம் இரவு 10 மணி

ஜுன் 11: டி1 ஏ2 நாட்டிங்காம் மாலை 6 மணி

ஜுன் 11: பி2 டி2 நாட்டிங்காம் இரவு 10 மணி

ஜுன் 12: பி2 சி2 லண்டன் மாலை 6 மணி

ஜுன் 12: ஏ1 சி1 லண்டன் இரவு 10 மணி

ஜுன் 13: சி1 டி2 லண்டன் மாலை 6 மணி

ஜுன் 13: டி1 பி1 லண்டன் இரவு 10 மணி

ஜுன் 14: ஏ2 சி2 லண்டன் மாலை 6 மணி

ஜுன் 14: ஏ1 பி2 லண்டன் இரவு 10 மணி

ஜுன் 15: பி2 சி1 லண்டன் மாலை 6 மணி

ஜுன் 15: பி1 ஏ2 லண்டன் இரவு 10 மணி

ஜுன் 16: டி1 சி2 நாட்டிங்காம் மாலை 6 மணி

ஜுன் 16: டி2 ஏ1 நாட்டிங்காம் இரவு 10 மணி

ஜுன் 18: முதலாவது அரை இறுதி நாட்டிங்காம் இரவு 10 மணி

ஜுன் 19: 2 வது அரை இறுதி லண்டன் இரவு 10 மணி

ஜுன் 21 இறுதிப்போட்டி லண்டன் இரவு 7.30 மணி

‘ருவென்டி-20’ உலகக் கிண்ண கிரிக்கட் தொடர் இன்று இங்கிலாந்தில் ஆரம்பம்

t20-world-cup.jpgஐ.சி.சி. ருவென்டி-20 உலகக் கிண்ண கிரிக்கட் தொடர் இன்று இங்கிலாந்தில் ஆரம்பமாகிறது. கிரிக்கட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் இத்தொடரில் மொத்தம் 12 அணிகள் மோதுகின்றன. இத்தொடரில் டெஸ்ட் அந்தஸ்துப் பெற்றுள்ள 9 நாடுகளுடன் புதிதாக ஸ்கொட்லாந்து,  அயர்லாந்து மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளும் பங்கேற்கின்றன.

இந்த 12 அணிகளும் 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. மொத்தமாக 27 போட்டிகளைக் கொண்ட இத்தொடரில் முதலில் நடைபெறும் 24 லீக் போட்டிகளில் 12 அணிகளும் கலந்துகொள்ளும். லீக் போட்டிகளின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெறும்.

இந்த சுற்றுக்குத் தெரிவாகும் 8 அணிகளும் 2 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு போட்டியிடும். சுப்பர் 8 முடிவில் 2 பிரிவுகளிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெறும்.  இத்தொடரின் அரையிறுதிப் போட்டிகள் எதிர்வரும் 18ஆம் 19ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இறுதிப்போட்டி எதிர்வரும் 21ஆம் திகதி லண்டன்,  லோட்ஸ் மைதானத்தில் நடைபெறும்.

இன்று நடைபெறும் முதலாவது போட்டியில் இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. லண்டன், லோட்ஸ் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி இலங்கை நேரப்படி இரவு 10.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

கடந்த 2007ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாவது ஐ.சி.சி. ருவென்டி-20 உலகக் கிண்ண கிரிக்கட் தொடரில் இந்திய அணி சம்பியனாகியமை குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டுக்கான புக்கர் பரிசு கனடாவை சேர்ந்த பெண் எழுத்தாளர் அலைஸ் முன்றோவுக்கு

alice.jpgகனடாவை சேர்ந்த பெண்  எழுத்தாளர் அலைஸ் முன்றோவுக்கு இந்த ஆண்டுக்கான புக்கர் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. காமன்வெல்த் நாடுகளை சேர்ந்த சிறந்த ஆங்கில இலக்கிய படைப்புக்கான புக்கர் பரிசு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை வழங்கப்படுகிறது. விருதுடன் ரூ. 47 லட்சம் ரொக்க பணமும் அளிக்கப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான புக்கர் பரிசுக்கு கனடாவின் அலைஸ் முன்றோ, இந்தியாவின் மகாஸ்வேதா தேவி, இந்திய வம்சாவளியை சேர்ந்த இங்கிலாந்து எழுத்தாளர் வி.எஸ்.நைபால் உள்ளிட்ட பலரது பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டன.

இது குறித்து நடுவர் குழுவினர் கூறுகையில், அலைஸ் முன்றோ சிறுகதை எழுத்தாளர் என்ற அளவில் தான் அனைவராலும் அறியப்பட்டுள்ளார். ஆனால், அவரது நாவல்கள் அனைத்துமே தலைசிறந்த எழுத்தாளர்களின் தலைசிறந்த எழுத்துக்களை போல் உள்ளது. அவரது புத்தகம் ஒவ்வொன்றையும் படிக்கும் போது நாம் இதுவரை அறிந்திராத புதிய விஷயம் ஒன்றை கற்றுக்கொள்ளலாம் என்றனர்.

இந்த விருது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என முன்றோ தெரிவித்துள்ளார்.

“இடம்பெயர்ந்த முஸ்லிம்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்தால் முஸ்லிம் காங்கிரஸ் போட்டி’

SLMC Gen Sec M T Hasan Aliவட பகுதியிலிருந்து இடம்பெயர்ந்துள்ள முஸ்லிம்கள் அவர்கள் தங்கியுள்ள பகுதியில் வாக்களிக்க வசதி செய்து கொடுக்கப்பட்டால் மாத்திரமே, யாழ்.மாநகர சபைக்கான தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிடுமென அதன் பொதுச் செயலாளர் ஹசன் அலி எம்.பி. தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்; யாழ்ப்பாணம் மாநகர சபைக்கும் வவுனியா நகர சபைக்குமான தேர்தலுக்கான வேட்பு மனு கோரப்பட்டுள்ளது. இந்நிலையில், வடக்கிலிருந்து இடம்பெயர்ந்துள்ள முஸ்லிம்கள் வாக்களிக்க வசதி செய்து கொடுக்கப்பட்டால் மாத்திரமே முஸ்லிம் காங்கிரஸ் இந்தத் தேர்தலில் போட்டியிடும். யாழ்ப்பாணத்தில் மட்டும் வாக்களிப்பு இடம்பெறுமாயின் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்துள்ள முஸ்லிம் மக்கள் வாக்களிக்க முடியாமல் போய்விடும் என்பதாலேயே இம் முடிவினை மேற்கொண்டுள்ளோம்.

இதேவேளை, வவுனியா நகரசபையில் நாம் போட்டியிடவுள்ளோம். இதற்கான வேலைகளை எமது அமைப்பாளர்கள் மூலம் மேற்கொண்டு வருகின்றோம்.  தற்போது வடபகுதி மக்கள் பெருமளவில் இடம் பெயர்ந்துள்ள நிலையில், இந்த உள்ளூராட்சி தேர்தலை நடத்துவதற்கான சூழ்நிலையில்லை. எனவே இத்தேர்தலை காலம் தாழ்த்தி நடத்துமாறு நாம் கேட்கின்றோம்.

அங்கு இடம்பெயர்ந்துள்ள மக்கள் குழப்பத்தின் மத்தியில் உள்ளமையினால் தற்போது இத் தேர்தல் வரவேற்கக் கூடியதல்ல. முதலில் இடம் பெயர்ந்தவர்களை மீளக்குடியேற்றி அவர்களது அச்சத்தை போக்கிய பின்னர் தேர்தலை நடத்துவதன் மூலம் சுதந்திரமான தேர்தலை மேற்கொள்ளலாமென்றார்.

யசூசி அகாஷி 8ஆம் திகதி மீண்டும் இலங்கைக்கு விஜயம்

yasusiakasi.jpgஇலங் கைக்கான ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி அகாஷி எதிர்வரும் 8ஆம் திகதி மீண்டும் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார் என இலங்கையிலுள்ள ஜப்பானியத் தூதரகம் அறிவித்துள்ளது.

எதிர்வரும் 12ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் யசூசி அகாஷி தனது விஜயத்தின்போது அரசாங்க உயர் அதிகாரிகள் மற்றும் எதிர்க்கட்சியினரைச் சந்தித்து மீள்குடியேற்றம்,  அபிவிருத்தி, புனரமைப்பு போன்ற விடயங்கள் தொடர்பாகக் கலந்துரையாடவுள்ளார்.

இலங்கைக்கு 18ஆவது தடவையாக விஜயம் செய்யும் அகாஷி தனது விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்ப முன்னர் எதிர்வரும் 11ஆம் திகதி ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றவுள்ளார் என்றும் தூதரகம் மேலும் குறிப்பிட்டுள்ளது. 

இலங்கை கிரிக்கெட் அணியின் வரவிற்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்

muralitharan-sri-lankas.jpgஐ.சி.சி. 20 க்கு 20 கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்வதற்காக இங்கிலாந்து சென்றுள்ள, இலங்கை கிரிக்கெட் அணியை நாட்டிற்கு திருப்பி அனுப்புமாறு கோரியும், ஏனைய நாடுகள் போட்டியை பகிஷ்கரிக்க கோரியும் லண்டன் வெலிங்டன் வீதியில் லண்டன் வாழ் தமிழர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். நாளை  5ஆம் திகதி லண்டனில் இடம்பெறவுள்ள ஐ.சி.சி. இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டியில் கலந்துகொள்வதற்காக இலங்கை அணி அங்கு சென்றுள்ளது. இதன்போது நேற்று புதன்கிழமை இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் கைகளில் பாதாதைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பினர். இலங்கையில் மனித உரிமை நிலைமைகள் மிகவும் மோசமடைந்துள்ளதனால் உலக அரங்கில் இலங்கை கிரிக்கெட் அணி புறக்கணிக்கப்பட வேண்டுமென ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரியிருந்தனர்.

தென் ஆபிரிக்கா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் லோர்ட்ஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்ற பயிற்சி போட்டியின் போது மைதானத்திற்கு வெளியே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.  மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்காத நாடொன்றை பிரதிநிதித்துவப்படுத்தி கிரிக்கெட் அணி உலக நாடுகளுடன் போட்டியிடுவதனை ஏற்றுக்கொள்ள முடியாதென ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

மனித உரிமை நிலைமைகளை கருத்திற் கொண்டு சிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டிகளை பிரித்தானியா புறக்கணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  போட்டிகள் நடைபெறும் தினங்களில் மைதானங்களுக்கு வெளியே ஆர்ப்பாட்டங்கள் நடைபெறக்கூடிய சாத்தியம் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது

இரத்மலானை பலாலி விமான சேவை வன்னியூடாக நடைபெறும்

airplane.jpgஇரத் மலானை விமான நிலையத்திற்கும் பலாலி விமான நிலையத்துக்குமிடையான பயணிகள் விமான சேவையின் பாதையில் மாற்றம் செய்யப்படவுள்ளது. இதுவரை காலமும் இரத்மலானையில் இருந்து புறப்பட்ட விமானங்கள் கொழும்பு புத்தளம்மன்னார் கடல் வழியாக சென்று குடா நாட்டில் தீவுகளையும் தாண்டி பலாலி விமான நிலையத்தை சென்றடைந்தன. இதனால், அதிகளவு நேரம் பயணம் இடம்பெற்றுவருகிறது.  அதேபோல, பலாலியில் இருந்தும் இதே பாதையூடாகவே இரத்மலானை விமான நிலையத்தை விமானங்கள் வந்தடைந்தன.

வன்னியில் யுத்தம் முடிவுற்றதையடுத்து தற்போது இரத்மலானை விமான நிலையத்திலிருந்து நாட்டின் தரைப்பகுதியூடாக வன்னிப்பகுதியால் வடக்கே விமானங்கள் செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிய பாதையின்படி இச்சேவை நடைபெற்றால் பயணநேரமும் சுமார் 20 நிமிடநேரம் குறையும் எனவும் சம்பந்தப்பட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

20-20 உலகக் கோப்பை போட்டிகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

t20-world-cup.jpgஇங்கி லாந்தில் நடைபெறவுள உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளின் போதான பாதுகாப்பு நடவடிக்கை, கிரிக்கெட் விளையாட்டு சரித்திரத்தில் மிகப்பெரிய பாதுகாப்பு ஏற்பாடுகளாக இருக்கக் கூடும் என்று கூறப்படுகிறது.

லண்டனில் நடைபெறவுள்ள உலக் கோப்பை 20-20 கிரிக்கெட் போட்டிகளுக்கான பயிற்சி ஆட்டத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் புதன்கிழமை மாலை மோதின.

இந்தப் போட்டிக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்துவிட்டன. நடைபெறவுள்ள இந்த உலகக் கோப்பை போட்டிகளின் போது பாதுகாப்புக்கே மிக அதிக அளவில் முன்னுரிமை அளிக்கப்படுவதாக போட்டி ஏற்பாட்டாளர்கள் கூறுகிறார்கள்.

இரண்டு மாதங்களுக்கு பாகிஸ்தானுக்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்த இலங்கை கிரிக்கெட் அணியினர் லாகூர் நகரிலுள்ள விளையாட்டு மைதானத்துக்கு சென்று கொண்டிருந்த போது துப்பாக்கிதாரிகளால் தாக்கப்பட்டனர். கிரிக்கெட் வீரர்களை குறிவைத்து நடத்தப்பட்ட முதல் தாக்குதல் அதுதான்.

இதில் ஆறு போலீசார் பலியாயினர், ஏழு வீரர்கள் காயமடைந்தனர். இதையடுத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன, குறிப்பாக மிக முக்கியமான போட்டிகள் என்று கருதப்படும் போட்டிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பங்கேற்கும் போட்டிகள் இப்படி பட்டியலிடப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு மும்பையில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலுக்கு பின்னரும், லாகூரில் கிரிக்கெட் வீரர்கள் மீதான தாக்குதல் நடைபெற்ற பின்னரும், இந்தியாவும் பாகிஸ்தானும் முதல் முறையாக ஒரு போட்டியில் சந்தித்தன.

இங்கிலாந்தில் நடைபெறவுள்ளள இந்த 20-20 உலகக் கோப்பை போட்டிகள் வெள்ளிக்கிழமைதான் தொடங்குகின்றன என்றாலும் போட்டிகளுக்கான பாதுகாப்பு தொடர்பில் அதிக கவனம் செலலுத்தப்படுவததாக போட்டிகளுக்கான இயக்குநர் ஸ்டீவ் எல்வொர்த்தி தெரிவிக்கிறார்.