சஜீர் அகமட் பி

சஜீர் அகமட் பி

இலங்கை அணி கஸ்டமான நிலையில் – இரண்டாவது இனிங்சில் 183 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுக்கள்

pakisthan-cri.jpgபாகிஸ் தான் அணியுடனான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறுவதற்கு 492 ஓட்டங்களை இலக்காகக்கொண்டு துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி நேற்று நான்காவது நாள் போட்டி போட்டி நேர முடிவின்போது 3 விக்கட் இழப்பிற்கு 183 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுலா மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணியுடன் 3 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை அணி பங்கேற்றுள்ளது. முதல் இரண்டு போட்டிகளிலும் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ள நிலையில் மூன்றாவது போட்டியிலேனும் தனது ஆறுதல் வெற்றியைப் பெறும் நோக்கில் பாகிஸ்தான் அணி சிறந்த முறையில் துடுப்பெடுத்தாடி தனது இரண்டாவது இன்னிங்சுக்காக அதிக ஓட்டங்களைக் குவித்துள்ளது.

இப்போட்டியில் தனது முதலாவது இன்னிங்ஸில் 299 ஓட்டங்களைப் பெற்ற பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்ஸில் 9 விக்கட் இழப்புக்கு 425 ஓட்டங்களைப் பெற்று ஆட்டத்தை நிறுத்திக்கொண்டது. இலங்கை அணி அதன் முதல் இன்னிங்ஸில் 233 ஓட்டங்களையே பெற்றது. முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணியை விட 66 ஓட்டங்களைக் குறைவாகப் பெற்றிருந்த இலங்கை அணி தற்போது 492 எனும் ஓட்டங்களை இலக்காகக்கொண்டு துடுப்பெடுத்தாடி வருகிறது.

நேற்றைய தினம் இலங்கை அணி ஆட்டநேர முடிவின்போது 03 விக்கட்டுக்களை இழந்து 183 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. ஆரம்ப துடுப்பாட்டக்காரர்களான வர்ணபுர 31 ஓட்டங்களுடனும் பரணவிதாரண 73 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். கிரிக்கட் ரசிகர்களால் மஹேல ஜயவர்தன நேற்றைய தினம் சிறப்பாக ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்டபோதிலும்கூட அவரால் இரண்டு ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது.  ஓப்சைட்டில் சென்ற பந்திற்கு பெட்டை நீட்டியதால் அக்மலிடம் பிடிகொடுத்து இரு ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். ஆட்டமிழக்காது அணித் தலைவர் சங்கக்கார 50 ஓட்டங்களையும் சமரவீர 20 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.

இன்று 5வதும் இறுதியுமான நாளாகும். முதலாவது இனிங்ஸ் துடுப்பாட்டத்தின்போது நெற்றியில் காயமேற்பட்டுள்ள டில்சான் இரண்டாவது இனங்சில் துடுப்பெடுத்தாடுவாரா என்று நேற்று மாலை வரை உறுதிப்படுத்தப்படவில்லை. எஸ்.எஸ்.ஸி மைதானமானது ஐந்தாவது நாள் பந்து வீச்சாளர்களுக்கு சார்பாக இருக்குமென கிரிக்கட் அவதானிகள் தெரிவிக்கின்றனர். எனவே இன்று ஆரம்பமாகும் இரண்டாவது இனிங்சில் இலங்கை தனது வெற்றியிலக்கை அடையுமா என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளது. நேற்றைய ஸ்கோர் விபரம் வருமாறு:

 PAKISTAN 2ND INNINGS (overnight 300-5):
Khurram Manzoor b Herath     2
Fawad Alam c and b Thushara     16
Younus Khan lbw b Kulasekera    19
Mohammad Yousuf c Sangakkara b Herath   23
Misbah-ul Haq c Sangakkara b Mathews   65
Shoaib Malik c sub (Lakmal) b Herath   134
Kamran Akmal c Jayawardene b Kulasekera   74
Umar Gul c Vaas b Herath    46
Danish Kaneria c Thushara b Herath    5
Mohammad Aamer not out     22
Saeed Ajmal not out      3
Extras: (b10, lb2, nb2, w2)    16
Total (for 9 wkts decl, 123 overs)   425
Fall of wickets: 1-16 (Manzoor), 2-22 (Alam), 3-54 (Younus), 4-67 (Yousuf),
5-186 (Misbah), 6-319 (Akmal), 7-371 (Malik), 8-399 (Gul), 9-405 (Kaneria).
Bowling: Kulasekera 20-5-55-2 (w1), Thushara 28-2-121-1 (nb2, w1),
Herath 46-6-157-5, Vaas 19-6-47-0, Mathews 10-1-33-1

SRI LANKA 2ND INNINGS:
T. Paranavitana c Alam b Malik   73
M. Warnapura c Malik b Kaneria   31
K. Sangakkara not out    50
M. Jayawardene c Akmal b Kaneria   2
T. Samaraweera not out    20
Extras: (lb5, nb2)    7
Total (for 3 wkts, 59 overs)   183
To bat: Tillakaratne Dilshan, Angelo Mathews, Rangana Herath, Chaminda Vaas, Thilan Thushara, Nuwan Kulasekera.
Fall of wickets: 1-83 (Warnapura), 2-139 (Paranavitana), 3-155 (Jayawardene).
Bowling: Gul 6-0-27-0 (nb1), Aamer 9-0-20-0, Younus 3-0-16-0, Ajmal 16-1-36-0, Malik 9-1-23-1 (nb1), Kaneria 16-1-56-2.

 

இலங்கை அணிக்கு 492 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

srilanka-cri.jpgபாகிஸ் தான் அணியுடனான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறுவதற்கு 492 ஓட்டங்களை இலக்காகக்கொண்டு இலங்கை அணி தற்போது தனது இரண்டாவது இன்னிங்சுக்காகத் துடுப்பெடுத்தாடி வருகிறது.

இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுலா மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணியுடன் 3 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை அணி பங்கேற்றுள்ளது. முதல் இரண்டு போட்டிகளிலும் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ள நிலையில் மூன்றாவது போட்டியிலேனும் தனது ஆறுதல் வெற்றியைப் பெறும் நோக்கில் பாகிஸ்தான் அணி சிறந்த முறையில் துடுப்பெடுத்தாடி தனது இரண்டாவது இன்னிங்சுக்காக அதிக ஓட்டங்களைக் குவித்துள்ளது.

இப்போட்டியில் தனது முதலாவது இன்னிங்ஸில் 299 ஓட்டங்களைப் பெற்ற பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்ஸில் 9 விக்கட் இழப்புக்கு 425 ஓட்டங்களைப் பெற்று ஆட்டத்தை நிறுத்திக்கொண்டது. இலங்கை அணி அதன் முதல் இன்னிங்ஸில் 233 ஓட்டங்களையே பெற்றது. முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணியை விட 66 ஓட்டங்களைக் குறைவாகப் பெற்றிருந்த இலங்கை அணி தற்போது 492 எனும் ஓட்டங்களை இலக்காகக்கொண்டு துடுப்பெடுத்தாடி வருகிறது.

போட்டியின் நான்காம் நாளான இன்று சற்று நேரத்துக்கு முன்னர் தேநீர் இடைவேளைக்காக ஆட்டம் நிறுத்தப்படும்போது இலங்கை அணி விக்கட் இழப்பின்றி 77 ஓட்டங்களைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

பாகிஸ்தான் அணி வலுவான நிலையில்

pakisthan-cri.jpgஇலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 2 வது இன்னிங்சில் பாகிஸ்தான் 3ம் நாள் ஆட்ட முடிவின்போது 300 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து வலுவான நிலையில் இருந்தது.

பாகிஸ்தான் அணி நேற்று முன்தினம் 16 ஓட்டங்களுக்கு 1 விக்கெட் இழந்த நிலையில் நேற்று மூன்றாவது நாள் ஆட்டத்தில் 67 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து இருந்தது. பின்னர் வந்த மலிக், மிஸ்பா உல் ஹக் ஜோடி பாகிஸ்தான் அணியை சரிவிலிருந்து மீட்டனர்.

இந்த சோடி இணைப்பாட்டமாக 119  ஓட்டங்களைக் குவித்தனர். பாகிஸ்தான் அணி 186 ஓட்டங்களைப் பெற்றிருந்த நேரத்தில் மிஸ்பா 65 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். பின்பு மலிக்குடன் அக்மல் இணைந்து 3ம் நாள் ஆட்ட முடிவின் போது இணைப்பாட்டமாக 114 ஓட்டங்களை பெற்று அணியை மேலும் ஸ்திரனப்படுத்தினர். 3ம் நாள் ஆட்ட முடிவின்போது மலிக் ஆட்டமிழக்காது 106 ஓட்டங்கங்களையும், அக்மல் ஆட்டமிழக்காது 60 ஓட்டங்கங்களையும் பெற்றிருந்தனர்.

பாகிஸ்தான் அணி முதலாவது விக்கெட்டை 16 ஓட்டங்களுக்கும், 2வது விக்கெட்டை 22 ஓட்டங்களுக்கும் 3வது விக்கெட்டை 54 ஓட்டங்களுக்கும் 4 வது விக்கெட்டை 67 ஓட்டங்களுக்கும் 5 வது விக்கெட்டை 186 ஓட்டங்களுக்கும் இழந்தது.

இலங்கை அணியின் சார்பாக பந்து வீச்சில் ஹேரத் 2 விக்கெட்டையும், துஷார, குலசேகர, மெதிவ்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். 3ம் நாள் ஆட்ட முடிவின்போது பாகிஸ்தான் அணி 366 ஓட்டங்கள் முன்னிலை பெற்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Pakistan  1st innings: 299
Sri Lanka 1st innings: 233

PAKISTAN 2nd innings (overnight 16-1)
Khurram Manzoor b Herath    2
Fawad Alam c and b Thushara    16
Younus Khan lbw b Kulasekera    19
Mohammad Yousuf c Sangakkara b Herath    23
Misbah-ul Haq c Sangakkara b Mathews    65
Shoaib Malik not out    106
Kamran Akmal not out    60

Extras: (b6, lb2, w1)     9

TOTAL (for 5 wkts, 95 overs)    300

Fall of wickets: 1-16 (Manzoor), 2-22 (Alam), 3-54 (Younus), 4-67 (Yousuf), 5-186 (Misbah).Bowling: Kulasekera 15-5-33-1 (w1), Thushara 19-2-84-1, Herath 37-6-113-2, Vaas 14-6-29-0, Mathews 10-1-33-1.

பிலியர்ட்ஸ் போட்டியில் கொழும்பு மாவட்ட சாம்பியன் பட்டம் ரவூப் ஹக்கீம் வசம்

akime-2.jpgஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவரும், கொழும்பு மூவர்ஸ் விளையாட்டுக் கழக உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் எம்.பி. கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிலியர்ட்ஸ் ஆட்டத் தொடரின் கொழும்பு மாவட்ட சாம்பியன் பட்டத்தை சுவீகரித்துக்கொண்டார்.

கொழும்பு 7, ரீட் அவனியுவில் அமைந்துள்ள பிலியர்ட்ஸ், ஸ்னூகர் சம்மேளனத்தில் நடைபெற்ற இப்போட்டித் தொடரின் இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய ரவூப் ஹக்கீம் எம்.பி. மூவர்ஸ் விளையாட்டுக் கழகத்தின் ஏ.எச். மனூர்ஜனை 176க்கு 153 புள்ளிகளால் வீழ்த்தினார். இந்த வெற்றியை தொடர்ந்து அகில இலங்கை மட்டத்திலான போட்டியில் விளையாட ரவூப் ஹக்கீம் எம்.பி. தகுதிபெற்றார்.

தனது ஓய்வு நேரத்தின்போது பிலியர்ட்ஸ் விளையாட்டில் நீண்ட காலமாக அதிக அக்கறை காட்டிவந்த ரவூப் ஹக்கீம் கொழும்பு மட்ட பிலியர்ட்ஸ் போட்டிகளில் கலந்துகொண்டது இதுவே முதலாவது சந்தர்ப்பமாகும். இதன்போது அவர் தனது காலிறுதி போட்டியில் வை.எம்.பி.ஏ.கழக வீரர் ஏ.டபிள்யூ.ஏ. ரட்ணசிறியை வீழ்த்தியதோடு, அரையிறுதியில் ஆர்.எஸ்.எஸ். கழக வீரர் என்.எம். ஷாமிலை வெளியேற்றினார்.

கொழும்பு மாவட்ட இறுதிச் சுற்றை தொடர்ந்து கண்டி, காலி மாவட்டங்களுக்கான போட்டிகள் நடைபெறவுள்ளன. இம் மாவட்டங்களுக்கான சாம்பியன் தெரிவுகளை தொடர்ந்து இன்று தொடக்கம் 25 ஆம் திகதி வரை பிலியர்ட்ஸ் ஸ்னூகர் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் அகில இலங்கை மட்டத்திலான போட்டிகள் நடைபெறவுள்ளன.

அகில இலங்கை மட்டத்திலான போட்டிகளுக்கு மொத்தம் 38 வீரர்கள் பங்கு பற்ற உள்ளனர். இவர்களில் 16 பேர் கொழும்பு மாவட்டத்தில் இருந்தும், மேலும் 16 பேர் கண்டி, காலி மாவட்டங்களில் இருந்தும், மிகுதி 6 வீரர்கள் கடந்த வருட சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்குபற்றியவர்களில் இருந்தும் தெரிவுசெய்யப்படுவார்கள்.

பங்களாதேஸ் டெஸ்ட் வரலாற்றில் முதல் டெஸ்ட் தொடர் வெற்றி

bangladesh-cricket.jpgதற்போது மேற்கிந்திய அணிகளுக்கிடையிலான மேற்கிந்தியாவில் நடைபெற்றுவரும் இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் இரண்டு போட்டிகளிலுமே வெற்றிபெற்று பங்களாதேஸ் டெஸ்ட் அணி வரலாற்றில் முதல் டெஸ்ட் தொடர் வெற்றிபெற்றுள்ளது.

கிரினடா சென்ஜோன்ஸ் மைதானத்தில் ஆரம்பமான இரண்டாவது டெஸ்ட்டில் முதலாவது இனிங்சில் மேற்கிந்திய அணி 237 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஸ் அணி முதலாவது இனிங்சில் 232 ஓட்டங்களை பெற்றது. இரண்டாவது இனிங்சில் மேற்கிந்திய அணிகளினால் 209 ஓட்டங்களையே பெறமுடிந்தது. 214 என்ற வெற்றி இலக்கை நோக்கி இரண்டாவது இனிங்சில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஸ் அணி 54.4 ஓவர்களில் 6 விக்கட்டுக்களை இழந்து 217 ஓட்டங்களைப் பெற்று வரலாற்று முக்கியத்துவம் பெற்ற டெஸ்ட் தொடர் வெற்றியை தனதாக்கிக் கொண்டது. ஸ்கோர் விபரம் வருமாறு:

ST GEORGE’S, Grenada

West Indies 1st Innings 237
Bangladesh 1st Innings 232
West Indies 2nd Innings 209

BANGLADESH 2nd Innings

Tamim Iqbal c Walton b Sammy  18
Imrul Kayes c Sammy b Roach   8
Junaid Siddique c Reifer b Sammy  5
Raqibul Hasan c and b Sammy  65
Mohammad Ashraful c Walton b Sammy  3
Shakib Al Hasan not out   96
Mushfiqur Rahim c and b Sammy  12
Mahmadullah not out    0
Extras (b1, lb3, w2, nb4)  10
TOTAL (6 wkts, 256 mins, 54.4 overs) 217

Fall of wickets: 1-27 (Imrul Kayes), 2-29 (Tamim Iqbal),
3-49 (Junaid Siddique), 4-67 (Mohammad Ashraful),
5-173 (Raqibul Hasan), 6-201 (Mushfiqur Rahim).

Bowling: Best 9-0-38-0 (nb1);
  Bernard 9-1-33-0 (nb3);
  Roach 13.4-4-68-1 (w1);
  Sammy 16-1-55-5;
  Austin 3-0-13-0;
  Hinds 4-0-6-0.
 

பாகிஸ்தான் அணி 82 ஓட்டங்கள் முன்னிலை; டில்சான் காயம்

srilanka-cri.jpgஇரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்ஸில் 16 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்தது. பந்து வீச்சில் ஹேரத் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். பாகிஸ்தான் அணி இலங்கை அணியை விட 82 ஓட்டங்கள் முன்னிலை பெற்றது.

பாகிஸ்தானுக்கு எதிரான 3வது மற்றும் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 233 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. முன்னதாக பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 299 ஓட்டங்களுக்கு சுருண்டது. இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி கொழும்பில் நேற்று முன்தினம் துவங்கிய 3வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடியது.

துவக்க வீரர் குர்ரம் மன்சூர் (93), முகமது யூசுப் (90) ஆகியோரின் சிறப்பான பங்களிப் பால் முதல் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் 7 விக்கெட் இழப்புக்கு 289 ஓட்டங்கள் எடுத்தது. 2 ஆம் நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்சைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணி 299 ஓட்டங்களில் சுருண்டது.  தினேஷ் கனேரியா ஒரு ஓட்டத்துடனும், சயீத் அஜ்மல் 8 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.

இதையடுத்து முதல் இன்னிங்சைத் துவக்கிய இலங்கை அணி முதல் பந்திலேயே துவக்க வீரர் வர்னபுரவை இழந்தது. உமர் குல் வீசிய பந்தில் வர்னபுர போல்ட் ஆனார். இதையடுத்து அணித்தலைவர் சங்கக்கார, துவக்க வீரர் பரனவிதானவுடன் இணைந்தார். இதில் பரனவிதான 5 ஓட்டங்கள் எடுத்திருந்த போது யூனிஸ் கான் வீசிய நேர்த்தியான இன்ஸ்விங் பந்தில் போல்ட் ஆனார்.

இதனால் இலங்கை அணி 23 ஓட்டங்களு க்கு 2 விக்கெட்டுகளை இழந்தது. உணவு இடைவேளைக்கு முந்தைய ஓவரில் சங்கக்கார 45 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்ட மிழந்தார். ஜயவர்த்தன 79 ஓட்டங்களையும் எடுத்தார். டில்சான் 44 ஓட்டங்களையும் மெத்திவ்ஸ் 31 ஓட்டங்களையும் பெற்றனர். ஆனால் ஏனைய வீரர்கள் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து சென்றனர்.

இதேவேளை பந்து வீச்சில் தினேஷ் கனேரியா 62 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி இலங்கை அணி முதல் இன்னிங்சை 233 ஓட்டங்களுக்கு மட்டுப்படுத்த அடித்தளமிட்டார். அஜ்மல் 3 விக்கெட்டையும், குல், யூனுஸ்கான் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இலங்கை அணியின் விக்கெட் காப்பாளர் திலகரத்ன டில்சான் காயம் ஏற்பட்டதால் இரண்டாவது இன்னிங்சில் விளையாடவில்லை. அவருக்குப் பதிலாக குமார் சங்கக்கார விக்கெட்காப்பாளராக செயல்பட்டார். டில்சான் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு கன்னப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது.

மூன்றாவது நாள் ஆட்டம் இன்று தொடரும்.

PAKISTAN 1ST INNINGS (overnight 289-7):
Khurram Manzoor c Jayawardene b Vaas  93
Fawad Alam c Dilshan b Thushara  16
Younus Khan b Thushara     2
Mohammad Yousuf run out   90
Misbah-ul Haq c Dilshan b Kulasekera  27
Shoaib Malik lbw b Thushara   45
Kamran Akmal b Thushara    1
Umar Gul b Kulasekera     2
Danish Kaneria lbw b Kulasekera   1
Mohammad Aamer not out     2
Saeed Ajmal b Thushara     8
Extras: (b10, nb2)    12
Total (all out, 89.4 overs)   299

Fall of wickets: 1-34 (Alam), 2-36 (Younus), 3-203 (Manzoor), 4-210
(Yousuf), 5-285 (Malik), 6-285 (Misbah), 7-287 (Gul), 8-289 (Kaneria),
9-289 (Akmal), 10-299 (Ajmal).

Bowling: Vaas 20-6-43-1,
  Kulasekera 16-2-47-3,
  Thushara 20.4-2-83-5 (nb2),
  Herath 23-4-76-0,
  Mathews 8-2-31-0,
  Jayawardene 2-0-9-0.

SRI LANKA 1ST INNINGS:
M. Warnapura b Gul     0
T. Paranavitana b Younus    5
K. Sangakkara lbw b Ajmal   45
M. Jayawardene b Kaneria   79
T. Samaraweera b Ajmal     6
A. Mathews c Misbah b Kaneria   31
C. Vaas lbw b Kaneria     4
T. Dilshan c Akmal b Kaneria   44
N. Kulasekera c Misbah b Ajmal     1
R. Herath lbw b Kaneria    7
T. Thushara not out     5
Extras: (lb2, nb4)     6
Total (all out, 68.3 overs)   233

Fall of wickets: 1-0 (Warnapura), 2-23 (Paranavitana), 3-63 (Sangakkara),
4-82 (Samaraweera), 5-153 (Mathews), 6-171 (Vaas), 7-174 (Jayawardene),
8-181 (Kulasekera), 9-204 (Herath), 10-233 (Dilshan).

Bowling: Gul 10-0-55-1 (nb4),
  Aamer 10-2-34-0,
  Younus 3-1-10-1,
  Ajmal 25-5-70-3,
  Kaneria 20.3-3-62-5.

PAKISTAN 2ND INNINGS:
Khurram Manzoor b Herath    2
Fawad Alam not out     14
Younus Khan not out     0
Extras:  0
Total (for 1 wkt, nine overs)   16

Fall of wicket: 1-16 (Manzoor)

Bowling: Kulasekera 4-2-4-0,
  Thushara 4-1-7-0,
  Herath 1-0-5-1

‘மூன்றரை லட்சம் ஸ்வாத் மக்கள் இருப்பிடம் திரும்பினர்’

200709.jpgபாகிஸ் தானின் ஸ்வாத் பள்ளத்தாக்கை சேர்ந்த இடம்பெயர்ந்த மக்களில் குறைந்தது மூன்று லட்சத்து ஐம்பதினாயிரம் பேர் தமது இருப்பிடங்களுக்கு திரும்பி விட்டதாக அரசாஙங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அந்தப் பிராந்தியத்துக்கு அருகில் உள்ள இரண்டு பெரிய முகாம்கள் மூடப்பட்டுவிட்டன. ஆனால், லட்சக்கணக்கான மக்கள் ஏனைய முகாம்களில் இருப்பதாகவும், தொடரும் பாதுகாப்பு குறித்த அச்சங்கள் காரணமாக அவர்கள் தமது இருப்பிடம் திரும்ப மறுத்து வருவதாகவும் பிபிசி செய்தியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஸ்வாத் பிராந்தியத்தில் அண்மையில் அரசாங்கப் படைகளுக்கும், தலிபான்களுக்கும் இடையில் நடந்த மோதல்கள் காரணமாக இருபது லட்சம் மக்கள் இடம்பெயர்ந்தனர்.

தேர்தல்கள் தொடர்பாக ஆராய இன்று விசேட கூட்டம் – தேர்தல் செயலகம் அறிவிப்பு

election_cast_ballots.jpgஊவா மாகாண சபை மற்றும் யாழ்ப்பாணம்,வவுனியா உள்ளுராட்சி சபைத் தேர்தல்கள் தொடர்பாக ஆராயும் விசேட கூட்டமொன்று இன்று பிற்பகல் கொழும்பில் நடைபெறவுள்ளதாக தேர்தல் செயலகம் அறிவித்துள்ளது.

தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க தலைமையில் தேர்தல் செயலகத்தில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் இந்தத் தேர்தல்களில் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தேர்தல்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் காமினி நவரத்னவும் கலந்துகொள்ளவுள்ள இக்கூட்டத்தில் வாக்களிப்பு தொடர்பான பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

3 ஆவது டெஸ்ட் – முதலாவது இனிங்சில் பாகிஸ்தான் 299 ஓட்டம்

srilanka-cri.jpgஇலங்கை பாகிஸ்தான் அணிகளுக்கிடையே கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நேற்று தொடங்கிய 3 வதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 289 ஓட்டங்கள் எடுத்திருந்தது. இன்று இரண்டாம் நாள் ஆட்டம் ஆரம்பமாகி சிறிது நேரத்தில் சகல விக்கட்டுகளையும் இழந்து 299 ஓட்டங்களைப் பெற்றது.

நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கை அணியின் கப்டன் சங்ககாரா முதலில் பாகிஸ்தானை துடுப்பெடுத்தாடப் பணித்தார். பாகிஸ்தான் அணி 36 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது ஜோடி சேர்ந்த குர்ரம் மன்சூர்முகமது யூசுப் இணைஇ நிதானமாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டது. இருவரும் அரைச்சதங்களைப் பூர்த்தி செய்தனர். இதில் சதத்தை நோக்கி முதலில் முன்னேறிய குர்ரம்இ எதிர்பாராத விதமாக சமிந்தவாஸின் பந்தில் விக்கெட் கீப்பரிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 93 ஓட்டங்கள் எடுத்திருந்தார். அடுத்த சில நிமிடங்களில் முகமது யூசுப் 90 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ரன்அவுட்டானார்.

தற்போது துடுப்பெடுத்தாடும் இலங்கை அணி இலங்கை நேரப்படி 2.30 மணி வரை 4 விக்கெட்டுகளை இழந்து 150 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

யாழ்., வவுனியா தேர்தலில் பசப்பு வார்த்தைகளை நம்பி முஸ்லிம்கள் ஏமாந்துவிடக் கூடாது – அமைச்சர் ரிஷாட்

வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து முஸ்லிம்களுக்குச் சொந்தமான காணியை மீட்டுத் தந்த ஜனாதிபதிக்கு நாம் நன்றிக்கடன் செலுத்தாத பட்சத்தில் அது ஒரு வரலாற்றுத் தவறாகவே கணிக்கப்படும் என மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன் தெரிவித்தார்.

யாழ். மாநகர சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிடும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் வேட்பாளர்களை ஆதரித்து புத்தளம், மலீஹாபுரம் மீள் குடியேற்றத் திட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் பதியுத்தீன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அமைச்சர் பதியுத்தீன் தனதுரையில் மேலும் கூறியதாவது,

இடம்பெயர்ந்த ஒவ்வொரு மகனும் தமது மண்ணை நேசிப்பவனாக இருந்தால் தமது மீள் குடியேற்றத்தில் நம்பிக்கை கொண்டிருந்தால், தமது பிள்ளைகளின் நல்வாழ்வில் அக்கறை கொண்டிருந்தால் அரசுக்கு எதிராக செயற்படவே முடியாது.

மாறாக சில சுயேச்சைக் குழுக்களின் பசப்பு வார்த்தைகளுக்கு ஏமாந்து மாற்றுக் கட்சிகளுக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளும் வாக்காகவே அமையும். ஆகவே ஜனாதிபதியும், அரசும் எம்மீது வைத்துள்ள நம்பிக்கையை பாழ்படுத்தி விடவேண்டாம். அதிகமான போர் வீரர்களை பலி கொடுத்து தாயக மண்ணை மீட்டுக்கொடுத்தமைக்கு இடம் பெயர்ந்த முஸ்லிம்கள் எமக்கு ஆதரவு இல்லையே என்ற பழிச் சொல்லுக்கு வழிவகுத்து விடாதீர்கள்.

இலங்கை வாழ் மக்கள் மட்டுமல்ல அனைத்து உலக மக்களும் உன்னிப்பாக எம்மை அவதானி த்துக்கொண்டிருக்கின்றார்கள். பதிவு செய்யப்பட்டுள்ள 6200 வாக்குகளில் எத்தனை வாக்குகள் வெற்றிலைச் சின்னத்திற்கு அளிக்கப்படுகின்றன என்பதை அனைவரும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றார்கள்.

இன்று தமிழ்ச் சமூகம் சிங்கள சமூகம் என்பன ஜனாதிபதிக்கு பின்னே அணி திரண்டு நிற்கின்றன. ஜம்இய்யத்துல் உலமாக சபையினர் கூட அண்மையில் ஜனாதிபதிக்கு பாராட்டு விழா நடாத்தியுள்ளனர். இப்படியிருக்கும்போது ஏன் இடம்பெயர்ந்த முஸ்லிம்கள் மட்டும் ஜனாதிபதிக்கு தமது முழு ஒத்துழைப்பையும் வழங்க முடியாது.

இன்று கிழக்கு மாகாண மக்கள் சுதந்திரமான காற்றை சுவாசித்தவர்களாக நிம்மதியுடன் வாழும் நிலை ஏற்பட ஜனாதிபதி வழி வகுத்துள்ளார். அதேபோன்று எமது சுதந்திரமான மீள் குடி யேற்றமும் இடம்பெற்று எமது இளம் சமுதாயத்தினர் மகிழ்வுடன் வாழவேண்டுமானால் அனைத்து மக்களும் வெற்றிலைச் சின்னத்திற்கு வாக்களித்து எமது தாயக மண்ணை மீட்டுத் தந்த ஜனாதிபதிக்கு எமது நன்றிக் கடனை செலுத்துவோம் என்றார்.