Threads

Threads

எங்கள் ரகசியங்களை திருடி உருவானதே த்ரெட்ஸ் – வழக்கு தொடுக்க ட்விட்டர் நிறுவனம் முடிவு !

த்ரெட்ஸ்(Threads) நிறுவனம் மீது வழக்கு தொடுக்க ட்விட்டர் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

குறித்த முறைபாட்டில் ட்விட்டர் நிறுவன இரகசியங்களை திருடி த்ரெட்ஸ் உருவாக்கப்பட்டதாக புகார் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ட்விட்டர் சார்பாக மெட்டா நிறுவன தலைவர் மார்க் ஸுக்கர்பெர்க்கிற்கு இந்த அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை மெட்டா நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட சமீபத்திய சமூக ஊடக கருவியான (Threads) நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது.

முதல் நான்கு மணி நேரத்தில் 5 மில்லியன் சந்தாதாரர்கள் இணைந்துள்ளதாக நிறுவனத்தின் தலைவர் மார்க் ஸுக்கர்பேர்க் தெரிவித்துள்ளார்.

இந்த புதிய கருவி ட்விட்டர் நெட்வொர்க்கிற்கு கடுமையான அச்சுறுத்தலாக இருக்கலாம் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.

குறிப்பாக ட்விட்டர் உரிமையாளர் எலோன் மஸ்க் செய்த சமீபத்திய மாற்றங்கள் காரணமாக சிலர் அதிருப்தி அடைந்துள்ளனர்,

இத்தகைய பின்னணியில், புதிய கருவி விரைவில் பிரபலமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏழு மணி நேரத்தில் 10 மில்லியன் பயனர்களை பதிவு செய்தது டுவிட்டரின் கொலையாளி என வர்ணிக்கபடும் த்ரெட்ஸ் !

பேஸ்புக் எனப்படும் முகநூல் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மெட்டா நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட தனது புதிய சமூக ஊடக தளமான திரெட்சை அறிமுகப்படுத்தியுள்ளது.

டுவிட்டர் நிறுவனத்துக்கு போட்டியாக உருவாக்கப்ட்ட இந்த புதிய சமூக ஊடகத்தை மெட்டாவின் தலைமை நிர்வாகி மார்க் சுக்கர்பெர்க் அறிமுகப்படுத்தியிருந்தார்.

எலோன் மஸ்க்கிற்கு சொந்தமான டுவிட்டர் சமூக ஊடக தளத்திற்கு மாற்றாக மெட்டா முன்மொழிந்துள்ள த்ரெட்ஸ் என்று அழைக்கப்படும் இந்த செயலியும் டுவிட்டரை போல உரை அடிப்படையிலான உரையாடல் பயன்பாட்டுக்குரிய செயலியாகும்.

இதன் பயனர்கள் 500 எழுத்துகள் வரையிலான இடுகைகளை வெளியிட முடியும், அத்துடன் நிழற்படங்கள் மற்றும் காணொளிக்களை உள்ளடக்கலாம் டுவிட்டரைப் போலவே, சக பயனானிகளின் இடுகைகளுக்கும் பதிலளிக்கலாம், அல்லது மற்றவர்களுக்கு பகிரலாம்.

நேற்று இந்த தளம் ஆரம்பிக்கபட்டதையடுத்து மெட்டாவின் தலைமை நிர்வாகி மார்க் சுக்கர்பெர்க் தனது சொந்த த்ரெட்ஸ் கணக்கைப் பயன்படுத்தி முதல் ஏழு மணி நேரத்தில் 10 மில்லியன் பயனர்களைப் பதிவுசெய்துள்ளார்.

அத்துடன் 2 பில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்ட மெட்டாவின் பிரபலமான நிழற்படங்களின் பகிர்வு தளமான இன்ஸ்ரகிராமுடனும் த்ரெட்ஸ் கணக்குகள் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளன.

100 க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த தளம் வெளியிடப்படுவதாகவும் மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. டுவிட்டரின் கொலையாளி என வர்ணிக்கபடும் த்ரெட்ஸ் எலோன் மஸ்க்கின் டுவிட்டர் நிறுவனத்துக்கு நேரடி அச்சுறுத்தலை ஏற்படுத்துவதால் மெட்டாவின் இந்தப் புதிய நடவடிக்கை சிலிக்கான் பள்ளத்தாக்கின் இரண்டு முக்கிய பில்லியனர்களுக்கு இடையேயான போட்டியை அதிகரித்துள்ளது.

ட்விட்டருக்கு போட்டியாக புதிய செயலியை உருவாக்கும் மெட்டா நிறுவனம் !

ஃபேஸ்புக்கிற்குச் சொந்தமான மெட்டா நிறுவனம் ட்விட்டர் செயலியை போன்று புதிய செயலியை அறிமுகப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது.

எதிர்வரும் வியாழன் அன்று அறிமுகம் செய்யப்பட இருக்கும் Threads எனும் செயலி, வார்த்தை அடிப்படையிலான உரையாடல் செயலியாகும்.

பல ஆண்டுகளாக ட்விட்டர் செயலி இலவசமாக செயல்பாட்டில் இருந்த நிலையில், அண்மையில் அதனை பெரும்பணக்காரரான எலன் மாஸ்க் வாங்கினார்.

சந்தா செலுத்தினால்தான் பிரத்யேக சேவைகள் கிடைக்கும் என்று ட்விட்டர் அறிவித்தது பயனர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

மேலும், தேவையற்ற பதிவுகளை குறைக்கவும், தரவுகள் வீணாவதை குறைக்கும் வகையிலும் ட்விட்டர் பதிவுகளை பார்க்க எலன் மாஸ்க் அண்மையில் கட்டுப்பாடுகளை விதித்து வந்தார்.

இந்நிலையில் மெட்டா நிறுவனத்தின் உரிமையாளர் மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் ட்விட்டரின் உரிமையாளரான எலான் மாஸ்க்கிற்கும் இடையேயான கருத்து மோதலுக்கு மத்தியில் Threads செயலி அறிமுகம் செய்யப்பட்டவுள்ளமை குறிப்பிடத்தக்கது.