AI – Children

AI – Children

இலங்கை சிறுமிகளுக்கு ஆபத்தாக உருவெடுக்கும் AI ! 

இலங்கை சிறுமிகளுக்கு ஆபத்தாக உருவெடுக்கும் AI !

 

இலங்கையில் ஒரே வயதுடைய சிறுமிகளின் புகைப்படங்கள் எடுக்கப்பட்டு, AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அதனை தகாத புகைப்படங்களாக மாற்றி பகிரப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளதாகவும் இந்த பொருத்தமற்ற செயலை 13 தொடக்கம் 17 வயதுடைய சிறுவர்கள் செய்கிறார்கள் எனவும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் சட்ட அமலாக்க இயக்குநர் வழக்கறிஞர் சஜீவனி அபேகோன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் பிள்ளைகளின் பெற்றோர் முறைப்பாடு செய்வதாகவும் இவை அந்த சிறுமிகளுக்கு தெரியாமல் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி செய்யும் மோசமான செயல் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை AI தொழில்நுட்பத்தைப் பற்றிய விடயங்களும் – விளக்கங்களும் புதிய கல்வி சீர்திருத்தங்களில் கொண்டு வரப்படும் என கல்வி அமைச்சர் தெரவித்துள்ளமையும் கவனிக்கத்தக்கது.