ஹர்சண நாணயக்கார

ஹர்சண நாணயக்கார

சிறுவர்களை அடிக்க தடை !

சிறுவர்களை அடிக்க தடை !

 

சிறுவர்களுக்கு உடல் ரீதியான தண்டனை வழங்குவதை தடை செய்யும் சட்டமூலம் மிக விரைவில் நிறைவேற்றப்படும் என நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார சமூகத்திற்கு பெண்களின் பங்களிப்பு தொடர்பான விவாத த்தின் போதே இதனை தெரிவித்தார். குழந்தைகளை உடல் ரீதியாக தண்டிப்பது குழந்தைகளின் வளர்ச்சியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும், வன்முறையால் பிரச்சினைகளை தீர்க்க முடியும் என்று குழந்தைகள் நம்பினால், அவர்கள் பெரியவர்களானாலும் அதைத் தொடர்வார்கள் என தெரிவித்தார் அமைச்சர். அந்தவகையில் சிறுவர்களுக்கு உடல் ரீதியாக தண்டனை வழங்குவதை தடை செய்யும் சட்டம் சிறுவர் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களால் பெரிதும் வரவேற்கப்படுகின்றது.

குழந்தை மற்றும் பிள்ளை வளர்ப்பிலும் சரி மற்றும் கல்வி நிலையங்களிலும் சரி உடல் மற்றும் உள ரீதியான வன்முறையை பிரயோகிப்பதை மேற்குநாடுகள் நீண்ட காலத்திற்கு முன்பே சட்டரீதியாக தடைசெய்து விட்டன. பெற்றோர் அதிகாரத்துடன் பிள்ளைகளை அடித்து வளர்க்கும் கலாச்சாரம் முற்றாக ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் கைவிடப்பட்டு விட்டன. இலங்கை, இந்தியா மற்றும் மத்திய கிழக்கு என ஆசிய நாடுகளில் பிள்ளைகளை அடித்து வளர்ப்பது பெற்றோருக்கு இருக்கிற பிரத்தியேக அதிகாரமாக மற்றும் உரிமையாக கருதும் மனப்பாங்கு இருந்து வருகின்றது. பாடசாலைகளில் ஆசிரியர்கள் கூட மாணவர்களுக்கு நல்லொழுக்கம் கற்பிப்பதாக உடலியில் ரீதியான தண்டனைகளை வழங்குகின்றனர்.