ஹரின் பெர்னாண்டோ

ஹரின் பெர்னாண்டோ

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ பதுளை பொலிஸாரினால் கைது !

பதுளை நகரில் சட்டவிரோத பேரணி ஒன்றை நடத்திய குற்றச் சாட்டில் முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ பதுளை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தேர்தல் மௌன காலத்தில் பதுளை நகரில் சட்டவிரோத பேரணி ஒன்றை நடத்தியதற்காக முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ பதுளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர், நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார்.

சாதாரண மக்கள் மின்சார கட்டணம் செலுத்தாவிட்டால் உடனடி மின்துண்டிப்பு – பல இலட்சம் ரூபாய் மின்சாரக்கட்டணம் செலுத்தாமல் இருக்கும் இலங்கை அமைச்சர்கள் !

நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில், தமது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக தயாசிறி ஜயசேகர நாடாளுமன்றத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) முறைப்பாடு செய்துள்ளார்.

தான் வசிக்கும் வீட்டின் மின்சாரக் கட்டணம் சுமார் 11 இலட்சம் ரூபாய் நிலுவைகளாக இருப்பதாக கூறி நேற்று அமைச்சர் காஞ்சன விஜயசேகர நாடாளுமன்றத்தில் தெரிவித்தமையானது, தமது சிறப்புரிமையை மீறும் செயல் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தான் மாத்திரமே மின்சாரக்கட்டணத்தை செலுத்தவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் தாம் வசிக்கும் வீட்டின் மின்சாரக்கட்டணம், தாம் பயன்படுத்திய மின்சாரத்திற்கான கட்டணம் அல்ல எனவும், அது ஏற்கனவே அங்கு வசித்த இரண்டு அமைச்சர்களின் கட்டணங்களும் சேர்ந்தது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, ஹரின் பெர்னாண்டோ, கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் ஏ.எல்.எம் அத்தாவுல்லா போன்ற பலர் வசிக்கும் வீடுகளின் பல இலட்சம் ரூபாய் மின்சாரக்கட்டணங்களும் செலுத்தப்படாமல் உள்ளதாக தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

எனினும் அந்த கட்டணங்கள் அவர்களின் சொந்த பயன்பாட்டு கட்டணங்கள் அல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

…………………………….

சாதாரண மக்கள் மின்சார கட்டணங்கள் செலுத்தாவிட்டால் உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்படுகின்றது. ஆனால் ஆளும் தரப்பினர், அரசியல்வாதிகள், அமைச்சர்கள் மின்சார கட்டணங்கள் செலுத்தாது விட்டால் அதற்கு எதிராக மின்துண்டிப்போஅல்லது எந்த சட்ட நடவடிக்கைளுமோ மேற்கொள்ளப்படாமலேயே இருக்கின்றது. இலங்கையில் இந்த நிலை பல காலமாக தொடர்கின்றது. இதனையே நேற்றைய பாராளுமன்ற விவாதம் எடுத்துக்காட்டியுள்ளது.

இலங்கையின் பொருளாதாரத்தை மீட்க இந்தியாவில் வீதிக்கண்காட்சி நடத்த திட்டமிடும் இலங்கை சுற்றுலாத்துறை அமைச்சர் !

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையை கட்டி எழுப்பவும், வெளிநாட்டு அந்நிய செலாவணிகளை பெற்றுக் கொள்ளும் நோக்கிலும், இந்தியாவிலுள்ள முக்கிய ஐந்து நகரங்களில் வீதி கண்காட்சிகளை இலங்கை நடத்த உள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அழகிய கடற்கரைகள், குன்றுகள், அழகான கடலோர நகரங்களுக்கு பெயர் பெற்ற இலங்கை கடந்த ஏழு தசாப்தங்களிலும் மிக மோசமான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது எனவும், பொருளாதார சிக்கல்கள், கொவிட்-19 தொற்று நோய் என்பன காரணமாக சுற்றுலாத்துறை மிகவும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளது எனவும் அமைச்சர் கூறினார்.

22 மில்லியன் மக்கள் வசிக்கும் நாட்டில் அத்தியாவசிய பொருட்களை கூட இறக்குமதி செய்ய தேவையான வெளிநாட்டு கையிருப்பு இல்லாமல் மருந்து உணவு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு நாடு பெரும் பொருளாதார சிக்கலை எதிர்கொண்டுள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்

இருப்பினும் இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் இலங்கைக்கு 61 ஆயிரத்து 951 இந்திய சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர் எனவும், மேலும் இந்திய சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்கு வரவேற்பதில் அரசாங்கம் ஆர்வமாக உள்ளது எனவும் அவர் கூறினார்.

இந்த நெருக்கடியில் இருந்து வெளிவர வேண்டுமானால் இலங்கைக்கு சுற்றுலாத்துறை மூலமாக வருமானம் அதிகரிக்க வேண்டும் எனவும் அது மிகவும் இன்றியமையாத ஒரு வருமானமாக காணப்படும் எனவும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா உட்பட சில நாடுகள் இலங்கைக்கு அத்தியாவசியப் பயணங்களை மட்டுமே மேற்கொள்ளுமாறு குடிமக்களைக் கேட்டுக்கொண்ட போதிலும், கடந்த ஆண்டு 2 இலட்சத்துக்கும் குறைவான சுற்றுலாப் பயணிகளே வந்திருந்ததாகவும் இந்த ஆண்டில் ஒரு மில்லியன் சுற்றுலாப் பயணிகளை எதிர்பார்ப்பதாகவும் சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நாடு தனது கடன் மறுசீரமைப்பு திட்டத்தை ஆகஸ்ட் மாதம் சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) சமர்ப்பிக்க உள்ளதாகவும், இது பொருளாதாரத்தை கட்டி எழுப்பும் திட்டத்தில் ஒரு முக்கியமான படியாக காணப்படும் எனவும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

“ஹரின் பெர்னாண்டோவின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட வேண்டும்” – அமைச்சர் நாமல் ராஜபக்‌ச

“ஹரின் பெர்னாண்டோவின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட வேண்டும்” என இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்‌ச தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ச தனக்குக் கடுமையான உயிர் அச்சுறுத்தல் விடுத்துள்ளதால், தனக்குத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தாமதமின்றி மேற்கொள்ளுமாறு கோரி நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின், நேற்றுமுன்தினம் காவற்துறை மா அதிபருக்குக் கடிதம் அனுப்பியிருந்தார்.

இது குறித்து கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் நாமல் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

“ஐக்கிய மக்கள் சக்தியினுள் ஹரின் பெர்னாண்டோவுக்குப் பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்றன. அவருக்கு மேலதிக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். ஐக்கிய மக்கள் சக்தியின் உள்ளக விடயங்களில் ஹரின் பெர்னாண்டோவுக்கு ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டால், அதற்கும் ஜனாதிபதி பொறுப்புக்கூற வேண்டிய நிலை ஏற்படும்.

எனவே, கட்சியின் உள்ளகப் பிரச்சினைகளைக் கருத்தில்கொண்டு, ஹரின் பெர்னாண்டோவின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட வேண்டும் என குறிப்பிட்டார்.

“எனது தந்தை உட்பட இந்த நாட்டில் ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்ற பிரபாகரனின் மரணத்தில் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை” – சஜித் பிரேமதாச

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ , ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அம்பாறை ஆற்றிய உரை தொடர்பாக பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் ஒன்றை இன்று அனுப்பி வைத்துள்ளார் .

அண்மையில் அம்பாறை , உஹனவில் உள்ள லாத்துகல ள்ள லாத்துகல கிராமத்தில் இடம்பெற்ற ” கிராமத்துடன் உரையாடல் ” நிகழ்வில் ஜனாதிபதி ஆற்றிய உரையானது தனது உயிர் அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் அமைந்துள்ளதாகவும் தனக்கு பாதுகாப்பினை வழங்குமாறும் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில் 82நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ ஆற்றிய உரைக்கு ஜனாதிபதி பதிலளித்தமை தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கண்டனம் வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் குறிப்பிடும் போது ,

ஜனாதிபதியின் இந்த ‘வலுவான’ பதிலை ஒரு ஜனநாயக நாட்டில் நடக்கக் கூடாத ஒரு தீவிர அறிக்கையாக தான் பார்க்கிறேன் என்று கூறியுள்ளார்.

எனது தந்தை உட்பட இந்த நாட்டில் ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்ற பிரபாகரனின் மரணத்தில் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. பிரபாகரன் ஒரு பயங்கரவாதி.

ஆனால் ஹரின் பெர்னாண்டோ இந்த நாட்டின் இளம் தலைவர், இந்த நாட்டின் ஜனநாயக சட்டத்திற்குள் அச்சமின்றி தன்னை வெளிப்படுத்திக் கொண்டார் என சஜித் கூறினார். 8293ஷ

82963.ஹரின் பெர்னாண்டோவுக்கு விடுக்கப்பட்ட இந்த அச்சுறுத்தலை ஐக்கிய மக்கள் சக்தியின் முழு நாடாளுமன்றக் குழுவிற்கும் விடுக்கப்பட்டதாக கருதுவதாக குறிப்பிட்டார்.

மேலும் ஹரின் பெர்னாண்டோவுக்கு ஏதேனும் தீங்கு ஏற்பட்டால் ஜனாதிபதியும் அரசாங்கமும் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.