வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி

ரஸ்ய பிரஜைகளளாக மாறி உக்ரைனுக்கு எதிராக போரிடும் இலங்கையர்கள் – வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி

உக்ரைனிற்கு எதிராக போரிடும் இலங்கையை சேர்ந்த கூலிப்படையினரில் பலர் ரஸ்ய பிரஜைகளாக மாறியுள்ளனர் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

அவர்கள் ரஸ்ய பிரஜாவுரிமையைபெற்றுக்கொண்டுள்ளனர் என அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் போர் முனைகளில் சிக்குண்டவர்களை மீட்டுதருமாறு கோரும் 446 முறைப்பாடுகள் இலங்கை வெளிவிவகார அமைச்சிற்கு கிடைத்துள்ளன என அலிசப்ரி தெரிவித்துள்ளார்.

அவர்களில் பலர் ரஸ்ய பிரஜைகளாக மாறியுள்ளனர் ரஸ்ய குடியுரிமையை பெற்றுக்கொண்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

இன்னுமொரு நாட்டின் பிரஜாவுரிமையை நீங்கள் பெற்றுக்கொண்டால் இலங்கையின் பிரஜாவுரிமையை நீங்கள் இழந்துவிடுவீர்கள் நீங்கள் இலங்கை பிரஜை இல்லை என்பதால் உங்களின் சார்பில் பேசுவதற்கு எங்களிற்கு உரிமையில்லை என அலிசப்ரி தெரிவித்துள்ளார்.

சிலர் தவறாக வழிநடத்தப்பட்டுள்ளனர் போல தோன்றுகின்றது முகாம்களில் உதவியாளர்களாக பணியாற்றுவதற்காக சேர்க்கப்படுவதாக தெரிவித்து அவர்களை போருக்குள் சிக்கவைத்துள்ளனர் என அலிசப்ரி தெரிவித்துள்ளார்.ஏனையவர்கள் தெரிந்தே இணைந்துகொண்டுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உக்ரைனிற்கு எதிராக போரிடும் இலங்கையை சேர்ந்த கூலிப்படையினரில் ரஸ்ய பிரஜைகளாக மாறியுள்ளனர் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

அவர்கள் ரஸ்ய பிரஜாவுரிமையைபெற்றுக்கொண்டுள்ளனர் என அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் போர் முனைகளில் சிக்குண்டவர்களை மீட்டுதருமாறு கோரும் 446 முறைப்பாடுகள் இலங்கை வெளிவிவகார அமைச்சிற்கு கிடைத்துள்ளன என அலிசப்ரி தெரிவித்துள்ளார்.

அவர்களில் பலர் ரஸ்ய பிரஜைகளாக மாறியுள்ளனர் ரஸ்ய குடியுரிமையை பெற்றுக்கொண்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

இன்னுமொரு நாட்டின் பிரஜாவுரிமையை நீங்கள் பெற்றுக்கொண்டால் இலங்கையின் பிரஜாவுரிமையை நீங்கள் இழந்துவிடுவீர்கள் நீங்கள் இலங்கை பிரஜை இல்லை என்பதால் உங்களின் சார்பில் பேசுவதற்கு எங்களிற்கு உரிமையில்லை என அலிசப்ரி தெரிவித்துள்ளார்.

சிலர் தவறாக வழிநடத்தப்பட்டுள்ளனர் போல தோன்றுகின்றது முகாம்களில் உதவியாளர்களாக பணியாற்றுவதற்காக சேர்க்கப்படுவதாக தெரிவித்து அவர்களை போருக்குள் சிக்கவைத்துள்ளனர் என அலிசப்ரி தெரிவித்துள்ளார்.ஏனையவர்கள் தெரிந்தே இணைந்துகொண்டுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களை தொடர்ந்தும் நிராகரிப்போம் – வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 46 கீழ் ஒன்று மற்றும் 51 கீழ் ஒன்று ஆகிய தீர்மானங்களை தொடர்ந்தும் நிராகரிக்கும் நிலைப்பாட்டில் அரசாங்கம் உள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

 

ஐ.நா மனித உரிமை பேரவையின் 55 ஆவது கூட்டத்தொடர் கடந்த 26 ஆம் திகதி ஆரம்பமாகியது.

 

இந்த நிலையில், நேற்றைய தினம் (28) நடைபெற்ற கூட்டத்தொடரில் காணொளி வாயிலாக உரையாற்றும் போதே, அலி சப்ரி இதனை தெரிவித்துள்ளார்.

இந்த ஆதாரங்களை சேகரிப்பதற்கான வழிமுறைகள் மனித உரிமைப் பேரவையின் கொள்கைகளிற்கு எதிரானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

இலங்கை தற்போது பொருளாதாரம், தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க செயல்முறை ஆகியவற்றில் பாரிய முன்னேற்றங்களை எட்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், பேரவையின் செயற்பாடுகள் குறுகிய அரசியல் நோக்கங்களைக் கொண்டதாக அமையக்கூடாது என அலி சப்ரி வலியுறுத்தியுள்ளார்.

 

மேலும், இலங்கை மக்களுக்கு பயனளிக்ககூடிய ஆக்கபூர்வமான வேலைத்திட்டங்களை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையுடன் இணைந்து அரசாங்கம் செயற்படுத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் முன்னாள் இராணுவீரர்கள் உக்ரைன் இராணுவத்துடன் இணைந்து செயற்படுவதை எங்களால் கட்டுப்படுத்த முடியவில்லை – வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி

இலங்கையின் முன்னாள் இராணுவீரர்கள் உக்ரைன் இராணுவத்துடன் இணைந்து செயற்படுவதை கட்டுப்படுத்த முடியாத நிலையில் அரசாங்கம் உள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

 

உக்ரைன் இராணுவத்தில் இணைந்து கொள்வதற்கு இலங்கை படையினர் ஆர்வம் காட்டி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுமார் 70 முன்னாள் இராணுவ வீரர்கள் உக்ரைனின் வெளிநாட்டுப் படைப்பிரிவில் இணைந்து கொள்ள விண்ணப்பம் செய்துள்ளனர்.

இந்நிலையில், வெளிநாட்டில் இலங்கையின் முன்னாள் இராணுவீரர்களின் நடவடிக்கைகள் தொடர்பில் அரசாங்கத்தினால் எதுவும் செய்ய முடியாது என அவர் கூறியுள்ளார்.

உக்ரைனின் படையணியினரோடு இலங்கையின் முன்னாள் படைவீரர்கள் இணைந்து செயற்படுவதை தடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்விக்கு அவர்கள் ஓய்வுபெற்ற பின்னர் தங்கள் சொந்த விருப்பத்தில் உக்ரைன் சென்றுள்ளனர்.

இலங்கையர்கள் அனைவருக்கும் நடமாடுவதற்கான சுதந்திரம் உள்ளது மேலும் அவர்கள் அங்கு சென்றதும் இலங்கையால் அவர்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த முடியாது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அவர்கள் தாங்கள் தங்கியுள்ள நாட்டின் சட்டங்களை மீறினால் அல்லது இலங்கையில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட பின்னர் தலைமறைவானால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கலாம் எனவும் வெளிவிவகார அமைச்சர் கூறியுள்ளார்.

உக்ரைனிற்காக போரிட சென்ற முன்னாள் இராணுவவீரர்கள் குறித்த புள்ளிவிபரங்கள் அரசாங்கத்திடம் இல்லை என தெரிவித்துள்ளது.

“அரசு சார்ந்த சந்திப்புக்களுக்கு தன் மகனையும் அழைத்துச் சென்ற விவகாரம்.” – அலிசப்ரி வழங்கியுள்ள புதிய விளக்கம் !

ஐக்கியநாடுகள் பொதுச்சபையின் நிகழ்வுக்காக அமெரிக்காவிற்கு சென்றுள்ள தனக்கு தனது பணிச்சுமையை குறைப்பதற்காக தனது மகன்  உதவினார் அதன் காரணமாக தன்னுடன் சில நிகழ்வுகளில் அவர் கலந்துகொண்டார் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் வெளிவிவகார அமைச்சர் கலந்துகொண்ட நிகழ்வில் அவரது மகனும் காணப்படுவது குறித்து சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் வெளியாகியுள்ள நிலையில் வெளிவிவகார அமைச்சர் டுவிட்டரில் இதனை தெரிவித்துள்ளார்

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

 

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் கூட்டத்தொடரின் ஒரு பகுதியாக இடம்பெற்ற சந்திப்புகளில் என்னுடன் எனது மகன் கலந்துகொண்டது குறித்து சமூக ஊடகங்களில் வெளியான கரிசனைகளை பார்த்தேன்

நான் உண்மைகளை உங்கள் முன்முன்வைக்க விரும்புகின்றேன்.

ஜனாதிபதியின் உயர்மட்ட தூதுக்குழுவிற்கு உதவுவதற்கு அப்பால் வெளிவிவகார அமைச்சர் என்ற அடிப்படையில் வோசிங்டன் ஐ.நாவிற்கான விஜயத்தின் போது நான் பல சந்திப்புகளில் ஈடுபடவேண்டியநிலையேற்பட்டது.

எனது பயணஏற்பாடுகளில் பத்து உரைகள் மூன்று பொதுநிகழ்வுகள் பல இருதரப்பு பலதரப்பு நிகழ்வுகள் சந்திப்புகள் போன்றவை காணப்பட்டன- மிக அதிகமான பணிசுமை காரணமாக பெருமளவிற்கு  ஆராயவேண்டிய எழுதவேண்டிய துல்லியமாக தயார்படுத்தவேண்டிய அவசியம் காணப்பட்டது.

அமைச்சர்கள் தங்கள் கடமைகளை நிறைவேற்ற உதவுவதற்காக ஒவ்வொருவரும் அமைச்சரவை பணியகத்தின் மூலம் நன்மையடைவோம் இதில் தொண்டர்களும் பணம்பெற்றுக்கொண்டு பணியாற்றுபவர்களும் காணப்படுவார்கள்.

எனது மகன் நான் வேண்டுகோள் விடுத்ததன் அடிப்படையில் ஆராய்ச்சி உதவியாளராகவும்  நகல்எழுத்தாளராகவும் எனது மகன் உதவினார். அமெரிக்காவில் அவர் தற்போது கல்விகற்றுவருபவர் என்பதால் அவர் தனது நேரம் நிபுணத்துவத்தை ஒதுக்குவதற்கு முன்வந்தார்.

முக்கிய சந்திப்புகள் நிகழ்வுகளில் எனக்கு அவரது ஆதரவு பெரும் உதவியாக அமைந்தது என்பதை நான் ஏற்றுக்கொள்கின்றேன். இந்த விடயத்தில் இலங்கை அரசாங்கமோ வெளிவிவகார அமைச்சோ ஒரு சதம் கூட செலவிடவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

“உலகின் மிகவும் ஈவிரக்கமற்ற புலிப் பயங்கரவாத அமைப்பை தோற்கடிக்க அமெரிக்காவே உதவியது.” – அமைச்சர் அலி சப்ரி !

“உலகின் மிகவும் ஈவிரக்கமற்ற புலிப் பயங்கரவாத அமைப்பை தோற்கடிக்க அமெரிக்காவே உதவியது.” வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இதெ நேரம் திருகோணமலையில் இராணுவதளமொன்றை ஏற்படுத்துவதற்கான பேச்சு வார்த்தைகளிற்காகவே  சமீபத்தில் அமெரிக்காவின் உயர் மட்ட குழுவினர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டனர் என தெரிவிக்கப்படுவதை வெளிவிவகார அமைச்சர்  நிராகரித்துள்ளார்.

இது முழுமையான முட்டாள்தனம் என பேட்டியொன்றில் அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த பேட்டியில் மேலும் பேசிய அவர்,

நாங்கள் எங்கும் எவரும் இராணுவதளங்களை அமைப்பதற்கு அனுமதிக்கப்போவதில்லை ஆனால் அதன் அர்த்தம் நாங்கள் தனிமையில் வாழ முடியும் என்பதல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடுகளுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பு என்பது நீண்ட காலமாக தொடரும் ஒன்று இது அமெரிக்காவுடன் மாத்திரமானதல்ல என தெரிவித்துள்ள அலி சப்ரி இந்தியா சீனா ஜப்பானுடனும் நீண்டகால பாதுகாப்பு உறவுகள் காணப்படுகின்றன என குறிப்பிட்டுள்ளார்.

அவர்களின் போர்க்கலங்கள் வருகின்றன கூட்டு ஒத்திகைகள் இடம்பெறுகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது புதிய ஒழுங்குமுறையின் ஒரு பகுதி அனைவரும் இதனை அறிந்துகொண்டுள்ளனர் உணர்ந்துகொண்டுள்ளனர் என தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் அதற்கு அப்பால் பல விடயங்கள் குறித்த கருத்துபரிமாற்றத்திற்கான  வலையமைப்பை கொண்டிருப்பது அவசியமானது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

உலகின் மிகவும் ஈவிரக்கமற்ற பயங்கரவாத அமைப்பை தோற்கடிப்பதற்கு அமெரிக்காவின் புலனாய்வு தகவல்களே உதவின என்பது எங்களிற்கு தெரியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எல்லைகளை கடந்து நாங்கள் எங்கள் சர்வதேச சகாக்களுடன் இணைந்து செயற்பட்டிருக்காவிட்டால் எங்களால் விடுதலைப்புலிகளை தோற்கடித்திருக்க முடியாது என  தெரிவித்துள்ள அலிசப்ரி இவ்வாறான செயற்பாட்டின் மூலம் எங்களால் விடுதலைப்புலிகளின் ஆயுதவிநியோகத்தை முடக்க முடிந்தது – அவர்களின் நிதி திரட்டும் நடவடிக்கைகளை முடக்கினோம் சர்வதேச அளவில் அவர்களை தடை செய்தோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நீங்கள் சரியாக நினைவில் வைத்திருப்பீர்கள் என்றால் விடுதலைப்புலிகளின் 9 ஆயுதகப்பல்களை இலங்கை கடற்படை அழித்தது இது எங்களது புலனாய்வு பிரிவினர் அமெரிக்க புலனாய்வு பிரிவினருடன் ஒத்துழைத்ததன்  காரணமாகவே சாத்தியமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

13ஆவது திருத்தச்சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை – வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி

அரசியலமைப்பில் உள்ள 13ஆவது திருத்தச்சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்த் தலைவர்களுடனான பேச்சுவார்த்தைகள் முன்னேற்றகரமாக இடம்பெறுவதாகவும் பிரச்சினைகளுக்கு தீர்வினை அளிக்க வேண்டும் என்பதில் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நீடித்துக்கொண்டிருக்கும் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வினைக் காண வேண்டும் என்பதில் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மிகுந்த கரிசனையுடன் இருக்கின்றார் எனவும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

அந்த வகையில், தற்போது 13ஆவது திருத்தச்சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க ஆரம்பித்துள்ளது.

குறித்த சட்டத்தினை அமுலாக்குவதில் உள்ள நடைமுறைப்பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் சம்பந்தமாக கவனத்தில் கொள்ளப்பட்டு அதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன எனவும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

“அரசாங்கம் வியாபாரம் செய்வதிலிருந்து தங்கள் கைகளை எடுக்க வேண்டும்.” – வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி

“அரசாங்க அதிகாரிகள் மற்றும் தனியார் துறையினருடன் ஒன்றிணைந்து வேலைத்திட்டங்களை அமுல்படுத்தக்கூடிய ஒரு குழு மற்றும் பொறிமுறை இல்லாததே இலங்கையின் பிரச்சினையாகும்.” என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

கொழும்பு சர்வதேச கடல்சார் மற்றும் மூலோபாய மாநாட்டில் இன்று உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

“நாங்கள் மிக நீண்ட காலமாக மூலோபாய இருப்பிடத்தைப் பற்றி பேசி வருகிறோம், அதைப் பற்றி அனைவருக்கும் தெரியும். அதில் அதிக கவனம் செலுத்த எதுவும் இல்லை என நான் நினைக்கிறேன். இருப்பிடம் மிக முக்கியமான விடயங்களில் ஒன்றாகும், ஆனால் அதைத் தாண்டி இன்னும் நிறைய விடயங்கள் உள்ளன. செய்ய வேண்டும். அப்படித்தான் உங்களை நீங்களே மேம்படுத்திக் கொள்கிறீர்கள்? என்ன சட்டங்கள் உள்ளன? மக்களை எப்படி அழைக்கிறீர்கள்?” என தெரிவித்துள்ளார்.

அரசாங்க அதிகாரிகள் மற்றும் தனியார் துறையினருடன் ஒன்றிணைந்து வேலைத்திட்டங்களை அமுல்படுத்தக்கூடிய ஒரு குழு மற்றும் பொறிமுறை இல்லாததே இலங்கையின் பிரச்சினையாகும்.

“அரசாங்கம் வியாபாரம் செய்வதிலிருந்து தங்கள் கைகளை எடுக்க வேண்டும். அரசாங்கம் வணிகம் செய்யும் நாட்கள் போய்விட்டன, அரசாங்கம் ஒரு வசதியாளராக, ஒழுங்குபடுத்துபவர் மற்றும் மூலோபாயங்களை வழங்குபவராக இருக்க வேண்டும் மற்றும் தனியார் துறையை போட்டியிட அனுமதிக்க வேண்டும்,” என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

எவ்வளவு பாரிய நாடுகள் வளர்ச்சியடைந்துள்ளன என்ற உண்மையைக் குறிப்பிட்ட அமைச்சர், இலங்கை தற்போதைய நிலையை எவ்வளவு அதிகமாகப் பிடிக்கிறதோ, அந்த அளவுக்கு இந்த மாற்றங்களைச் செய்வது மிகவும் கடினமாகும் என்றார்.

“ஆனால் நம் நாட்டில் அமைச்சர்கள் மாறுகிறார்கள், தேர்தல்கள் வரலாம், உங்களுக்கு வேலை கொடுக்க வேண்டும், அவர்கள் 1994 இல் 600,000 ஆக இருந்த பொதுச் சேவையை இப்போது 1.5 மில்லியனாகக் கட்டுகிறார்கள். எங்கள் வரி வருவாயில் 90% ஓய்வூதியம், சம்பளம் மற்றும் சமுர்த்திகளுக்குச் செல்கிறது. ஒரு நமது நாட்டை இதிலிருந்து மீட்டெடுக்க நாம் இன்னும் கடினமாக உழைக்க வேண்டிய நேரம் இது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஐ.நா இலங்கையின் உள்விவகாரங்களில் தேவையில்லாமல் தலையிடுகிறது – வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையானது நாட்டின் உள்விவகாரங்களில் தேவையில்லாமல் தலையிடுவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி குற்றம் சாட்டியுள்ளார்.

பொருளாதார குற்றங்களுக்கு யாரேனும் பொறுப்புக் கூறினால் அவர்கள் மீது நாட்டின் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆகவே ஐ.நா.ஆணையாளர்களின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பொருளாதார குற்றங்கள் என்ற சொல்லை இலங்கை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மனித உரிமைகள் பேரவையானது இலங்கையை முன்னோக்கி நகர்த்துவதற்கு இடமளிக்காமல் பலவந்தமாக இலங்கையை நிகழ்ச்சி நிரலில் வைத்திருப்பதாக அலி சப்ரி கடுமையாக சாடியுள்ளார்.

பொருளாதார சீர்திருத்தங்கள் குறித்து இலங்கைக்கு கல்வி கற்பிப்பதற்கான நிபுணத்துவம் மனித உரிமைகள் பேரவைக்கு இருந்தாலும் அது குறித்து சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் நிபுணர்களுடன் இலங்கை கலந்துரையாடி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

ஜெனீவாவில் இலங்கை தொடர்பில் கொண்டு வரப்படும் எந்த தீர்மானமாயினும் ஏற்கப்போவதில்லை – இலங்கை அரசாங்கம்

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் கொண்டுவரப்படும் தீர்மானத்திற்கு உறுப்பு நாடுகள் ஆதரவு வழங்கினாலும் வழங்காவிட்டாலும் இலங்கை அரசாங்கம் அதனை முற்றுமுழுதாக எதிர்க்கும் என இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இலங்கை ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியின் போது  இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ள வரைபு தீர்மானம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அலி சப்ரி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் பேசிய அமைச்சர் அலி சப்ரி,

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் கொண்டுவரப்படும் தீர்மானத்திற்கு உறுப்பு நாடுகள் ஆதரவு வழங்கினாலும் வழங்காவிட்டாலும் இலங்கை அரசாங்கம் அதனை முற்றுமுழுதாக எதிர்க்கும். தற்போதைய தருணத்தில் இந்தத் தீர்மானம் தேவையற்ற ஒன்றாகும். முக்கிய நாடுகளின் இணை அனுசரணையுடன் இலங்கை தொடர்பில் கொண்டுவரப்படும் தீர்மானம், பிளவுபடுத்தும் பொறிமுறை என்பதால், அதனை ஏற்கப் போவதில்லை.

தீர்மானம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் உள்நாட்டுப் பொறிமுறையின் ஊடாக பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் கடமை. இந்த கடமையை நிறைவேற்றும் பணிகள் தொடரும். உள்நாட்டு பொறிமுறைக்கு அப்பால், அரசியலமைப்பை மீறும் எந்தவொரு வெளிப்புற பொறிமுறையையும் நாம் தொடர்ந்து எதிர்ப்போம்.

இலங்கை தொடர்பான புதிய வரைவுத் தீர்மானம், அதிகாரப் பகிர்வு, தேர்தலை நடத்துதல், காணாமல் போனவர்களின் அவல நிலையை நிவர்த்தி செய்தல், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மாற்றுதல், அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் தொடர்பான வன்முறைகளுக்குப் பொறுப்புக்கூறல் ஆகியவற்றின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளது.

இதன்போது அமைச்சரிடம் புலம்பெயர்ந்த அமைப்புக்களுடனான சந்திப்புக்களு் தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்ட போது,

சுவிட்ஸர்லாந்தின் ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை அமர்வுகளில் இலங்கையைச் சேர்ந்த புலம்பெயர் அமைப்புகளுடன் எந்தக் கலந்துரையாடலும் மேற்கொள்ளவில்லை. என தெரிவித்திருந்தார்.

இதற்கிடையில், இலங்கையின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண விரிவான சர்வதேச அணுகுமுறை தேவை என்று நான்கு அமெரிக்க செனட் சபை உறுப்பினர்கள் முன்வைத்த தீர்மானம் குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது,

அது குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் அலி சப்ரி, வெவ்வேறான நபர்கள் இந்த விடயத்தில் பணியாற்றுகின்றார்கள் எனவும் அது எவ்வாறு செயற்படுத்தப்படுகின்றது என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடரின் தீர்மானங்கள் இலங்கை அரசியலமைப்பிற்குப் புறம்பானதாக இருப்பின் ஏற்க தயாரில்லை – அரசாங்கம் அறிவிப்பு !

“ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடரின் தீர்மானங்கள் இலங்கை அரசியலமைப்பிற்குப் புறம்பானதாக இருப்பின் ஏற்க தயாரில்லை.” என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 12 ஆம் திகதி ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில், இதுகுறித்த இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு மற்றும் அடுத்தகட்ட நகர்வுகள் தொடர்பில் கொழும்பிலுள்ள வெளிவிவகார அமைச்சில் திங்கட்கிழமை (5) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் அலி சப்ரி தெளிவுபடுத்தினார்.

அதன்போது அவர் கூறிய முக்கிய விடயங்கள் வருமாறு:

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடரின்போது சர்வதேச நாடுகளுடன் இருதரப்பு மற்றும் பல்தரப்புத்தொடர்புகளைப் பேணுவதற்கும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களுக்கு எமது நாட்டின் அரசியலமைப்பிற்கு உட்பட்டு அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கும் தயாராக இருக்கின்றோம்.

அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்டு எம்மால் எந்தவொரு தீர்வையும் பெற்றுக்கொடுக்கமுடியாது என்பதுடன் அதற்கான அதிகாரங்களும் வழங்கப்படவில்லை. ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கடந்த கூட்டத்தொடரில் முன்வைக்கப்பட்ட ஆதாரங்களைத் திரட்டுவதற்கான வெளியகப்பொறிமுறை குறித்து நாம் ஏற்கனவே எமது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்ததுடன் எமது அந்த நிலைப்பாடு இப்போதும் தொடர்கின்றது.

அந்தவகையில் எதிர்வரும் 12 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள கூட்டத்தொடரின்போது இலங்கை தொடர்பில் இணையனுசரணை நாடுகளால் புதிய தீர்மானமொன்று சமர்ப்பிக்கப்படும் பட்சத்தில், அதில் எமது அரசியலமைப்பிற்குப் புறம்பான விடயங்கள் காணப்படுமாயின் அதனை நாம் முழுமையாக எதிர்ப்பதுடன் அதற்கு ஏனைய சர்வதேச நாடுகளின் ஆதரவை நாடுவோம்.

கடந்த காலத்தில் நல்லிணக்கத்தை நிலைநாட்டுவதை முன்னிறுத்தி காணாமல்போனோர் பற்றிய அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகம் ஆகியன ஸ்தாபிக்கப்பட்டிருப்பதுடன் அவற்றின் செயற்பாடுகளில் குறிப்பிடத்தக்களவிலான முன்னேற்றம் அடையப்பட்டிருக்கின்றது.

இவ்வாறானதொரு பின்னணியில் நீண்டகாலமாகத் தொடரும் இப்பிரச்சினைக்கு உரியவாறு தீர்வுகாணும் நோக்கில் உண்மையைக் கண்டறிவதற்கான பொறிமுறையொன்றை உருவாக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆலோசனை வழங்கியிருக்கின்றார். போரின் விளைவாக தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் அனைவரும் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள்.

எனவே இந்த உண்மையைக் கண்டறிவதற்கான பொறிமுறை என்பது அனைத்துத்தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடியதும் உரியவாறான தீர்வைப்பெற்றுத்தரக்கூடியதுமான பொறிமுறையாக அமையவேண்டும். அதேபோன்று இது ஒரு முடிவைக் கண்டடைவதை நோக்காகக்கொண்டதே தவிர, யார்மீதும் பழிசுமத்துவதை நோக்காகக்கொண்டதல்ல.

ஆகவே சுமார் 13 வருடகாலமாகத் தீர்வின்றித் தொடரும் பிரச்சினைக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனைக்கு அமைவாக அனைத்துத்தரப்பினரும் ஏற்கக்கூடிய உண்மையைக் கண்டறிவதற்கான பொறிமுறையை உருவாக்கி, அதனைப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு அவசியமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன என்று தெரிவித்தார்.