வெளிவந்தது போலி நாணயத்தாள் !
ஏப்ரல் 21 அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து ஒலுவில் – 02 ம் பிரிவில் உள்ள சிறிய சில்லறை கடையில் போலி 5,000 ரூபாய் நாணயத்தாளை வழங்கி பொருட்களை கொள்வனவு செய்து ஏமாற்றிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
எனவே கடை உரிமையாளர்கள், பொது மக்கள் இது தொடர்பாக மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். சந்தேகத்திற்கிடமான நாணயங்கள், இருப்பின் உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் தகவல் வழங்குங்கள் என போலிசார் தெரிவித்துள்ளனர்.
