விளாடிமிர் புடின்

விளாடிமிர் புடின்

ரஷ்ய ஜனாதிபதியாக புடின் சாதனை வெற்றி !

ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றுள்ள புடின் புதிய சாதனையை படைத்துள்ளார்.

இதன்படி ரஷ்ய முன்னாள் ஜனாதிபதி ஸ்டாலினுக்கு பின்னர்  பிறகு மீண்டும் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் வென்று ரஷ்யாவின் நீண்ட காலம் பதவியில் இருந்த தலைவராக அவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.

1999 இல் முதன்முதலில் பதவிக்கு வந்த முன்னாள் புலனாய்வுத்துறை தலைவரான லெப்டினன்ட் கேணல் புடின் இன்றுவரை ஆட்சியில் தொடர்ந்த வண்ணம் உள்ளார்.

இதனிடையே ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றுள்ள புடின் மூன்றாம் உலகப் போர் உருவாகும் சூழல் வரும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகளும், ரஷ்யாவும் நேருக்கு நேர் மோதிக்கொள்வது என்பது முழு அளவிலான மூன்றாம் உலகப் போரை நோக்கி ஒரு படி தொலைவில் இருக்கும் என அர்த்தம் என்றும், இது அனைவருக்கும் தெளிவாகத் தெரிகிறது என்றும் புடின் கூறியுள்ளார்.

ரஸ்ய எதிர்கட்சி தலைவர் சிறைச்சாலையில் உயிரிழப்பு – புடினே காரணம் என்கிறார் பைடன் !

ரஸ்ய எதிர்கட்சி தலைவரும் விளாடிமிர் புட்டினை கடுமையாக விமர்சித்துவந்தவருமான  அலெக்சே நவல்னி சிறையில் உயிரிழந்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆர்ட்டிக்கில் உள்ள சிறைச்சாலையில் அவர் உயிரிழந்துள்ளார் என ரஸ்ய சிறைச்சாலை தகவல்கள் தெரிவித்துள்ளன.

வெள்ளிக்கிழமை நவல்னி திடீர் என உடல்நலம் பாதிக்கப்பட்டார் சிறிது நேரத்தில் சுயநினைவிழந்தார் என ரஸ்ய சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அவரை காப்பாற்றுவதற்கான முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை அவர் உயிரிழந்துவிட்டார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன எனரஸ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் ரஸ்ய  ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை கடுமையாக விமர்சித்த எதிர்கட்சி தலைவர் அலெக்சே நவால்னியின்  மரணத்திற்கு ரஸ்ய ஜனாதிபதியே காரணம் என  அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்  வெளிப்படையாக குற்றம்சாட்டியுள்ளார்.

“உக்ரைன் போருக்கு மேற்கு நாடுகளின் ஆணவமே காரணம்.” – புடின் காட்டம் !

கடந்த 1945-ம் ஆண்டு ஜெர்மனியின் நாசி படைகளை வீழ்த்தி வெற்றி பெற்ற தினத்தை ஒவ்வொரு ஆண்டும் வெற்றி தினமாக ரஷ்ய அரசு கொண்டாடி வருகிறது. அதன்படி இந்த ஆண்டு நடைபெற்ற வெற்றி தின கொண்டாட்டத்தின் போது அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புடின் மக்களுக்கு உரையாற்றினார். அப்போது, மேற்குலக நாடுகள் உண்மையான நாசிக்களின் வழிமுறைகளை உருவாக்கி வருவதாக புடின் குற்றம்சாட்டினார்.

ரஷியாவை தாக்குவதற்காக திட்டமிடும் மேற்கு நாடுகள், 2-ம் உலகப்போரின் முடிவுகளை மாற்றியமைக்க முயற்சி செய்வதாகவும், தற்போது நாகரீகத்தின் முக்கியமான திருப்புனையில் நாம் இருக்கிறோம் என்றும் கூறினார். மேலும் உக்ரைன் பிரச்சினைக்கு மேற்கு நாடுகளின் கட்டுப்பாடற்ற இலக்குகளும், ஆணவமும் தான் காரணம் என்று தெரிவித்த அவர், நமது தாய்நாட்டின் மீது உண்மையான போர் நிகழ்த்தப்பட்டு வருகிறது என்று குறிப்பிட்டார்.

“உக்ரைனும் அதன் ஆதரவு மேற்கத்திய நாடுகளும் அமைதி பேச்சுவார்த்தையை ஏற்க மறுக்கின்றன.”- விளாடிமிர் புடின்

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து இன்று 305-வது நாளை எட்டியுள்ளது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே, இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. உக்ரைனுக்கு தேவையான ஆயுத உதவியை வழங்குவதுடன் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்துள்ளன. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் ஆயுத உதவியால் இந்த போர் பல மாதங்களாக நீடித்து வருகிறது.

போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகின்றன. ரஷ்யா-உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும் என்று உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், உக்ரைனுக்கு ஆயுத உதவியை வழங்கி வரும் அமெரிக்கா சமீபத்தில் அதிநவீன ‘பேட்ரியாட்’ வான்பாதுகாப்பு ஏவுகணை, போர் விமானங்களில் பொறுத்தப்படும் அதிநவீன குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் உள்பட மேலும் 1.80 பில்லியன் டொலர்கள் ராணுவ உதவி வழங்க முடிவு செய்துள்ளது. அமெரிக்காவின் ஆயுத உதவியால் போர் தொடந்து நீடித்து வருகிறது. இந்நிலையில், பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இன்று அதிரடியாக அறிவித்துள்ளார். உக்ரைன் போர் தொடர்பாக அனைத்து தரப்புடனும் பேச்சுவாரத்தை நடத்த தயாராக இருப்பதாகவும் ஆனால், உக்ரைனும் அதன் ஆதரவு மேற்கத்திய நாடுகளும் அமைதி பேச்சுவார்த்தையை ஏற்க மறுப்பதாகவும் புதின் தெரிவித்துள்ளார்.

உலக நாடுகள் எதிர்கொள்ளும் உணவு பிரச்சினைக்கு மேற்கத்திய நாடுகளே காரணம் – புடின் குற்றச்சாட்டு !

ரஷ்யா, உக்ரைன் போர் 100வது நாளை தாண்டிய நிலையில், இரு நாடுகளில் இருந்தும் உற்பத்தி செய்யப்பட்ட உணவுப்பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படாமல் இருக்கிறது. இதனால் ஆப்ரிக்க நாடுகள் உள்ளிட்ட உலகின் பல நாடுகளில் உணவு பஞ்சம் ஏற்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளன. இதற்கு ரஷ்யாதான் காரணம் என மேற்கத்திய நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்நிலையில் வளர்ந்து வரு உலகளாவிய உணவு மற்றும் எரிசக்தி நெருக்கடிகளுக்கு மேற்கத்திய நாடுகள்தான் காரணம் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர்,
உலக உணவு சந்தையில் என்ன நடக்கிறது என்பதையும், அது சந்தித்து வரும் பிரச்சனைகளையும் ரஷ்யாவின் மீது திருப்புவதை காண முடிகிறது. மேலும், ரஷ்யாவிற்கு எதிரான மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகள் உலகச் சந்தைகளை மோசமாக்குவதுடன், உற்பத்தியை குறைத்து விலைகளை உயர்த்துகின்றன.
உக்ரைனில் இருந்து தானிய ஏற்றுமதியை ரஷ்யா தடுக்கவில்லை. ஆனால் மேற்கத்திய நாடுகள் உணவு பிரச்சனைகளுக்கு ரஷ்யாவை குற்றம்சாட்டி வருகின்றன. உக்ரைனில் இருந்து தானியங்களை ஏற்றுமதி செய்யும் கப்பல்களுக்கு பாதுகாப்பான பாதையை வழங்குவதற்கான சலுகைகளை தனது அரசாங்கம் வழங்கும். ” இவ்வாறு புதின் கூறினார்.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை சந்திக்க போப் பிரான்சிஸ் கோரிக்கை !

உக்ரைன் போர் தொடர்பாக மாஸ்கோவில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை சந்திக்க கோரிக்கை விடுத்துள்ளதாக போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

உக்ரைனில் நடைபெறுவது கொடூரமான மற்றும் புத்தியில்லாத போர் என்றும் போப் பிரான்சிஸ் பலமுறை  கண்டித்துள்ளார்.

இதுகுறித்து போப் பிரான்சிஸ் கூறியதாவது:-

“உக்ரைன் போர் தொடர்பாக ரஷிய அதிபர் விளாடிமிர் புடினை சந்திக்க நான் மாஸ்கோ செல்ல தயாராக இருக்கிறேன். இதற்காக 20 நாட்களுக்கு முன்பாக தகவல் அனுப்பினேன். எங்களுக்கு இன்னும் பதில் வரவில்லை. இருப்பினும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். புதின் இந்த நேரத்தில் சந்திப்பை நடத்த விரும்பவில்லை என தெரிகிறது.

நான் இப்போதைக்கு கீவ் செல்லவில்லை. நான் போக வேண்டிய இடம் கீவ் இல்லை. நான் முதலில் மாஸ்கோ தான் செல்ல வேண்டும். புதினை சந்திக்க வேண்டும்.” இவ்வாறு அவர் கூறினார்.

போர் பீதியை உருவாக்க வேண்டாம் – மேற்கத்தேய நாடுகளிடம் உக்ரைன் கோரிக்கை !

உக்ரைனின் எல்லைகளைச் சுற்றி ஒரு லட்சம் ரஷ்ய இராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ள நிலையில், போர் மூளுவதை தடுக்க அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நட்பு நாடுகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் போர் பீதியை உருவாக்க வேண்டாம் என்று மேற்கத்திய நாடுகளுக்கு உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி வேண்டுகோள் விடுத்துள்ளார். உக்ரைன் போரின் விளிம்பில் உள்ளது என்ற தவறான கருத்து என்றும் உக்ரைனில் இருந்து அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து குடும்பங்களை திரும்பப் பெறுவதற்கான முடிவுகளை அந்நாட்டு தூதரக ஊழியர்கள் எடுத்திருக்க கூடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
போர் அச்சம் காரணமாக உக்ரைன் பொருளாதாரம் நிதித்துறை பாதிக்கப் பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.கிழக்கு உக்ரைனில் ரஷ்ய ஆதரவு பிரிவினைவாத வன்முறை மற்றும் 2014 இல் கிரிமியாவை ஆக்ரமித்த ரஷ்யாவினால் ஏற்பட்டுள்ள சைபர் தாக்குதல் உள்ளிட்ட பாதிப்பு சூழலில் நாங்கள் எட்டு ஆண்டுகளாக இருந்து வருகிறோம் என்றும் என்றும் அவர் கூறினார்.