விநாயகமூர்த்தி முரளிதரன்

விநாயகமூர்த்தி முரளிதரன்

போர்க் குற்றவாளிகள் மீது பிரித்தானியா விதித்த தடையை வரவேற்கும் எம்பி சிறிதரன் ! வருத்தப்படும் முன்னாள் எம்பி அலிசப்ரி !

போர்க் குற்றவாளிகள் மீது பிரித்தானியா விதித்த தடையை வரவேற்கும் எம்பி சிறிதரன் ! வருத்தப்படும் முன்னாள் எம்பி அலிசப்ரி !

இலங்கையில் இறுதி உள்நாட்டு போர் முனைப்படைந்த காலங்களில் 58 வது படையணியின் தளபதியாக விளங்கிய சவேந்திர சில்வா, புலிகளில் இருந்து விலகிய விநாயகமூர்த்தி முரளீதரன், முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜெயசூர்யா, முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகோடா ஆகியோர் மீது அண்மையில் பிரித்தானியா தடை விதித்துள்ளது.

இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள தமிழரசுக் கட்சி எம்.பி சிறிதரன், இலங்கையில் தமிழர்கள் மீதான இன அழிப்பு யுத்தத்தில் ஈடுபட்ட இலங்கை ஆயுதப்படையின் முன்னணி தலைவர்கள் மற்றும் கருணா குழுவின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோர் மீது பிரித்தானியா விதித்துள்ள தடை, ஈழத் தமிழர்களின் நீதிக்கான தேடலின் நம்பிக்கைக் கீற்று என்றார். அத்துடன் அந்த அறிவிப்பை தாம் வரவேற்பதாகவும் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

இதனிடையே இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி, பிரிவினைவாத புலம்பெயர்ந்தோர் முன்னர் எப்போதும் இல்லாத அளவிற்கு மிகவும் சுறுசுறுப்பாகவும், மூலோபாயரீதியாகவும், விடாமுயற்சியுடனும் உள்ளனர் என்பதை பிரிட்டனின் தடை அறிவிப்புகள் வெளிப்படுத்துகிறது. உலகின் மிகக்கொடுரமான பயங்கரவாத அமைப்புகளில் ஒன்றை தோற்கடித்து, பல தசாப்தங்களாக இரத்தக்களறியை எதிர்கொண்ட எமது தேசத்திற்கு அமைதியையும் ஸ்திரதன்மையையும், கொண்டுவருவதற்கு பொறுப்பானவர்களின் பாதுகாப்பையும் கண்ணியத்தையும் அரசியல் நோக்கத்திற்காக இலாபத்திற்காக ஆபத்தான முறையில் சமரசம் செய்துவருகின்றோம் என்பது எனக்கு உண்மையிலேயே கவலையளிக்கின்றது என தெரிவித்துள்ளார்.