வாடகைக் கொலையாளி பிள்ளையான் – ரில்வின்: அஸ்தமனமான பிள்ளையானின் அரசியல் பயணம் ! சிறையில் உயிராபத்து இல்லாமல் உள்ளார் !

வாடகைக் கொலையாளி பிள்ளையான் – ரில்வின்: அஸ்தமனமான பிள்ளையானின் அரசியல் பயணம் ! சிறையில் உயிராபத்து இல்லாமல் உள்ளார் !

வாடகைக் கொலையாளி பிள்ளையான் – ரில்வின்: அஸ்தமனமான பிள்ளையானின் அரசியல் பயணம் ! சிறையில் உயிராபத்து இல்லாமல் உள்ளார் !

வாடகைக் கொலையாளி பிள்ளையான் – ரில்வின்: அஸ்தமனமான பிள்ளையானின் அரசியல் பயணம் ! சிறையில் உயிராபத்து இல்லாமல் உள்ளார் !

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சித் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் மற்றும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஆயுள் கைதியாகும் காலம் சமீபத்திருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. கிருஸ்மஸ் தினத்தில் தேவாலயத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் வழக்கில் 5 வருடங்கள் சிறையிலிருந்து விடுதலையான பிள்ளையான் என்பிபி ஆட்சியில் தப்ப முடியாது எனக் கூறப்படுகிறது. பிள்ளையான் உள்ளே இருப்பதால் அவர் உயிருடன் உள்ளார். இல்லையேல் படுகொலை செய்யப்படும் அபாயமும் உள்ளதாக அவரை நன்கு அறிந்த சிலர் கருதுகின்றனர்.

அமைச்சரவை பேச்சாளரான நளிந்த ஜயதிஸ்ஸ ஊடகவியலாளர் சந்திப்பின் போது பிள்ளையானிடம் தனியே கிழக்குப் பல்கலைக்கழக பீடாதிபதி ரவீந்திரநாத் சிவசுப்பிரமணியம் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் மட்டுமன்றி ஏனைய பல குற்றங்கள் தொடர்பிலும் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்துள்ளார். அத்துடன் பிள்ளையானுக்கு எதிரான வலுவான ஆதாரங்கள் விசாரணைகளில் கிடைத்து வருவதாகவும் கூறியுள்ளார். ஏற்கனவே விசாரிக்கப்பட்ட பல்வேறுபட்ட குற்றவியல் வழக்குகளில் பிள்ளையான் சம்பந்தப்பட்டுள்ளதற்கான வலுவான ஆதாரங்கள் கிடைத்திருப்பதாகவும் அமைச்சர் பகீர் கிளப்பியுள்ளார்.

மேலும் ஈஸ்டர் குண்டுத்தாக்குதல், குற்றப்புலனாய்வுத் துறை மற்றும் நீதிமன்றத்திடம் பாரப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். ஈஸ்டர் குண்டுவெடிப்பு சூத்திரதாரி மற்றும் அதன் வலையமைப்பு தொடர்பான முடிவுகளை குற்றப்புலனாய்வுத்துறை மற்றும் நீதிமன்றம் விரைவில் வெளிப்படுத்தும் என அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

பிள்ளையான் சிறையிலிருந்ததால் தான் குற்றங்களில் ஈடுபடவில்லை எனக் கூறி தப்ப முடியாது. சிறையிலிருந்தபடியே பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் உள்ளார்கள் எனவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் முன்னாள் ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேனவும், மக்களைக் கொன்ற பெரும் குற்றவாளிகளான கருணா மற்றும் பிள்ளையான் போன்றோருக்கு அரசியலில் பதவிகள் வழங்கியமை குற்றம் என தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

குற்றப்புலனாய்வுத் துறையின் தகவல்களின் படி கிழக்கு மாகாணத்தில் பிள்ளையான் செய்த பல அரசியல் கொலைகள் தொடர்பான தகவல்கள் வெளிவந்து கொண்டிருப்பதாக கூறப்படுகின்றது. விடுதலைப் புலிகளிலிருந்து பிரிந்த பிள்ளையான் விடுதலைப் புலிகளுடன் நடத்திய போரில் செய்த கொலைகள் தொடர்பில் விசாரணைகள் நடைபெறவில்லை எனவும் கூறப்படுகிறது.

மாறாக பிள்ளையான் தனது அரசியல் நோக்கங்களுக்காக செய்த, பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொலைகள் உட்பட்ட ஏனைய கொலைகள் மற்றும் சமூகமறியாத மர்மமான குற்றங்கள் தொடர்பான தகவல்களும் விசாரணைகளில் வெளிவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வரும் செய்திகளை வைத்துப் பார்க்கும் போது பிள்ளையானின் எதிர்காலம் கடூழிய சிறையில் தான் கழியும்மோ ? எனக் கூறப்படுகிறது.

இது தொடர்பில் கூட்டத்தில் பேசும்போது குறிப்பிட்ட ஜேவிபி இன் செயலாளர் ரில்வின் சில்வா, பிள்ளையானை ஒரு வாடகைக் கொலையாளியாகக் குறிப்பிட்டார். அதனால் அவரை வாடகைக்கு வைத்து குற்றங்களைச் செய்தவர்கள் சிறையில் பிள்ளையானைத் தொடர்புகொள்ள முயற்சித்தனர். அது சரிவரவில்லை என்றதும் சட்டத்தரணியாக நீதிமன்றமே செல்லாத உதயகம்பன்பில பிள்ளையானின் சட்டத்தரணியாக அவரைக் பார்க்கச் சென்று அதைப் பற்றிச் சொல்லிவிட்டாய? இதைப்பற்றிச் சொல்லி விட்டாயா என்று கேட்டறிவதற்காக அவரை வாடகைக்கு அமர்த்திய ரணிலும் மொட்டுக் கட்சிக்காரரும் உதயகம்பன்பிலவுக்கு கறுப்புக் கோட்போட்டு அனுப்பி உள்ளதாக ரில்வின் சில்வா நளினமாகத் தெரிவித்தார். அவர் மேலும் பேசுகையில் பிள்ளையான் வேறொன்றுக்குமாக அழவில்லை, உதயகம்பன்பில தனக்கு சட்டத்தரணியாக வந்ததை நினைத்தே அழுதார். ஏனென்றொல் நீதிமன்றத்திற்கே போகாத வக்கீல் ஒருவரை போட்டிருக்கிறார்களே என்னுடைய ஆயுள்காலம் முழுக்க இதுக்குள் இருக்க வேண்டி வரப்போகுதே என்பதை எண்ணியே பிள்ளையான் அழுததாகவும் ரில்வின் சில்வா நகைச்சுவையாகத் தெரிவித்தார்.