வன்னி அபிவிருத்தி மற்றும் காணி விவகாரங்கள் குறித்து வடக்கு ஆளுநருடன் ரவிகரன் சந்திப்பு !

வன்னி அபிவிருத்தி மற்றும் காணி விவகாரங்கள் குறித்து வடக்கு ஆளுநருடன் ரவிகரன் சந்திப்பு !

வன்னி அபிவிருத்தி மற்றும் காணி விவகாரங்கள் குறித்து வடக்கு ஆளுநருடன் ரவிகரன் சந்திப்பு !

வன்னி அபிவிருத்தி மற்றும் காணி விவகாரங்கள் குறித்து வடக்கு ஆளுநருடன் ரவிகரன் சந்திப்பு !

வன்னிப் பகுதிகளில் காணப்படும் காணி விவாதங்கள் மற்றும் அபிவிருத்தி தொடர்பான விடயங்களை, வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதனாயகனிடம் எடுத்துரைத்துள்ளார். இந்தச் சந்திப்பு நேற்று சனிக்கிழமை (19) யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஆளுநரின் அலுவலகத்தில் இடம்பெற்றது.

சந்திப்பின் பின்னர் கருத்து வெளியிட்ட ரவிகரன், முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மாவட்டங்களில் நிலவும் சிக்கல்கள் குறித்து ஆளுநருடன் விரிவாக கலந்துரையாடியதாக தெரிவித்தார். குறிப்பாக, காணிவிவாதங்கள் மற்றும் வன்னி அபிவிருத்தி தொடர்பான விடயங்களில் ஆளுநர் கவனம் செலுத்துவதாக உறுதியளித்தார் எனவும், இந்தச் சந்திப்பு திருப்திகரமாக அமைந்தது என்றும் அவர் தெரிவித்தார்.