வடக்கு போதைப்பொருள் பாவனை

வடக்கு போதைப்பொருள் பாவனை

வடக்கில் போதைப்பொருளை முடிவுக் கொண்டு வர என்பிபி திடசங்கற்பம் !

வடக்கில் போதைப்பொருளை முடிவுக் கொண்டு வர என்பிபி திடசங்கற்பம் !

 

போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பிலான விசேட மத்திய நிலையமொன்றை வடக்கில் அமைப்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வட்டகல தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இவ் விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த சுனில்,

போதைப்பொருள் ஒழிப்புக்குரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். கடந்த காலங்களில் அரசியல்வாதிகளுக்கும், போதைப்பொருள் வியாபாரிகளுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு காணப்பட்டது. வரலாற்றில் முதல்தடவையாக போதைப்பொருள் வர்த்தகர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையிலான தொடர்பு முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. வைத்தியசாலைகளில் போதைப்பொருள் தொடர்பில் தமிழ் மொழியில் விழிப்புணர்வுகள் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறும் போது, இந்த ஆண்டில் மட்டும் யாழ்ப்பாணத்தில் 104 கிராம் ஐஸ்ப் போதைப்பொருள், 650 கிராம் கேரள கஞ்சா, 26,915 போதைப்பொருள் மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. வடக்கில் ஹெரோயின் போதைப்பொருள் பாவனை குறைவான போக்கில் இருப்பதை காண முடிகிறது என்றார். இருப்பினும் ஏனைய போதைப்பொருள் பாவனை உயர்வடைந்துள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களின் ஆணைக்கு அமைவாக போதைப்பொருள் பாவனையை முழுமையாக இல்லாதொழிப்போம் என சுனில் வட்டகல சூளுரைத்தார்.

போதைப்பொருள் பாவனையில் இருந்து எம் மக்களை காப்பாற்றுங்கள் – சபையில் பா.உ ரவிகரன் !

போதைப்பொருள் பாவனையில் இருந்து எம் மக்களை காப்பாற்றுங்கள் – சபையில் பா.உ ரவிகரன் !

 

வடபகுதியில் அதிகரிந்துள்ள போதைப்பொருள் ஊடுருவல்களாலும், போதைப்பொருள் பாவனைகளாலும் ஒருதொகுதி எதிர்கால சந்ததியினர் அழிவடைத் தொடங்கியுள்ளதாகவும் எனவே சட்டம் ஒழுங்கைச் சீர்ப்படுத்தி எதிர்கால தலைமுறையினரையும், பொதுமக்களையும் பாதுகாக்க விரைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மார்ச் 4 பாராளுமன்ற அமர்வின் போது சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ் மாவட்ட தேசிய மக்கள் சக்தி பா உ ரஜீவன் வடக்கில் போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்தும் தனிநபர் பிரேரணையை நேற்று கொண்டு வருவதை முன்மொழிவது போன்று தமிழரசுக் கட்சியின் வன்னிப் பா உ துரைராசா ரவிகரனின் உரை அமைந்தது.

அங்கு மேலும் பேசிய பா.உ ரவிகரன், போதையால் நாடுமட்டுமல்ல எங்களுடைய மாவட்டங்களும் தள்ளாடிக்கொண்டுதான் இருக்கின்றது. இதுதொடர்பில் ஏற்கனவே நான் பாதுகாப்பு அமைச்சின் குழுநிலை விவாதத்தில்கூட போதைப்பொருட்களின் ஊடுருவல்கள் தொடர்பிலும், அவற்றைக் கட்டுப்படுத்துவது தொடர்பிலும் பேசியிருந்தேன். இந்த விடயத்தில் கூடிய கரிசனைசெலுத்தி போதைப் பொருட்களிடமிருந்து எமது மக்களைக் காப்பாற்றுங்கள். அதற்குரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளுங்கள் என்றார் பா உ துரைராசா ரவிகரன்.

இதற்கிடையே முல்லைத்தீவில் பள்ளி மாணவி கொண்டு சென்ற நீரை அருந்திய பள்ளி மாணவிகள் வாந்தி எடுத்து நோய்வாய்ப்பட்ட சம்பவம் மார்ச் 4ம் திகதி நடைபெற்றுள்ளது. இதனை விசாரிப்பதை விடுத்து மாணவி கசிப்பு கொண்டுவந்துவிட்டார் என்று எண்ணி ஆசிரியர் பள்ளி மாணவியைத் அடித்துள்ளார். தன்னுடைய மகளைத் தாக்கிய ஆசிரியரை அம்மாணவியின் தந்தை போய்த் தாக்கியுள்ளார். இப்பொதுழுது இவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.