வடக்கு தொழிற்சாலைகள்

வடக்கு தொழிற்சாலைகள்

வடக்கு தொழிற்சாலைகளில் வடபகுதி மக்களுக்கே !

வடக்கு தொழிற்சாலைகளில் வடபகுதி மக்களுக்கே !

ஆனையிறவு உள்ளிட்ட சகல தொழிற்சாலைகளும் மீள ஆரம்பிக்கப்பட்டு, வட பகுதி மக்களுக்கு மாத்திரம் தொழில்வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய ஸ்ரீதரன் எம்.பி முன்வைத்த, சில விடயங்களுக்குப் பதிலளிக்கும் போது அவர் இதனை தெரிவித்தார்.

ஆனையிறவு உப்புத் தொழிற்சாலை உற்பத்தி நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் ஆனையிறவு உப்பு சந்தைக்கு விற்பனைக்கு விடப்படும் என்றும் தெரிவித்த அமைச்சர் சுனில், ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலை பண்டார வன்னியனின் பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் உற்பத்தி நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் அவர் சபையில் தெரிவித்தார்.