ரோட்டும்ப அமில

ரோட்டும்ப அமில

வெளிநாடுகளில் கைதாகும் பாதாள உலக குற்றவாளிகள் !

வெளிநாடுகளில் கைதாகும் பாதாள உலக குற்றவாளிகள் !

இலங்கையில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுக்காக தேடப்பட்டு வந்த ‘ரோட்டும்ப அமில’ என்ற அமில சம்பத் ரஷ்யாவில் கைதானார். மிகுந்த அரசியல் செல்வாக்குடைய இக் குற்றவாளி , அநுர அரசு பதவியேற்றதைத் தொடர்ந்து ரஷ்யாவுக்கு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இவர் விரைவில் இலங்கைக்கு நாடு கடத்தப்படலாம்.

பாதாள உலகக் குற்றவாளி அமில சம்பத் என்கிற 'ரோட்டும்ப அமிலா' ரஷ்யாவில் கைது!  - Ceylonmirror.net

அதேவேளை பிரான்சில் தலைமறைவாகியிருக்கும் புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் கொல்லப்பட்ட கணேமுல்லே சஞ்சீவவின் கூட்டாளியான ‘ நேவி தினேஷ்’ மூன்று பொலிஸ் அதிகாரிகளை குடும்பத்துடன் கொலை செய்யப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளார். கணேமுல்லே சஞ்சீவவின் இறப்பின் பின்னர் , சஞ்சீவ வழிநடத்திய பாதாள உலகக் குழுவுக்கு தலைமை தாங்கி நேவி தினேஷ் கொலை, போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றார். தினேஷ்சின் தந்தை மற்றும் சகோதரர் போதைப்பொருட்களுடன் கம்பஹா பொலிஸார் கைது செய்யதைத் தொடர்ந்தே இவ் கொலை மிரட்டல்கள் தொலைபேசியூடாக விடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் பொடி லெசி உட்பட வேறும் சிலரும் இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்டடனர். இலங்கையில் கிரிமினல் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் உலகின் எந்தப் பாகத்தில் ஒழிந்தாலும் அவர்களை நாடு கடத்துவதற்கு அரச அழுத்தங்களை வழங்கி வருகின்றது.

இதுவரை சிறையில் இருக்க வேண்டியவர்கள் வீதிகளில் சுதந்திரமாக நடமாடினார்கள். இப்போது சிறையிலிருக்க வேண்டியவர்கள் சிறைக்கு அனுப்பப்பட்டுக் கொண்டுள்ளனர். நாட்டில் உள்ள பல சிறைச்சாலைகள் நிரம்பி வழிகின்றது.