ராகுல்காந்தி

ராகுல்காந்தி

ராகுல்காந்திக்கு இரண்டு ஆண்டு சிறை !

ராகுல் காந்தி மீது சூரத் நீதிமன்றத்தில் கிரிமினல் அவதூறு வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்து வந்த சூரத் நீதிமன்றம், இந்த விவகாரத்தில் இன்று தீர்ப்பளித்துள்ளது.

இதில் ராகுல் காந்தி குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் சமயத்தில் ராகுல் காந்தி நாடு முழுக்க பிரசாரம் செய்தார். அந்த காலகட்டத்தில் ராகுல் காந்தி அகில இந்தியா காங்கிரஸ் தலைவராக இருந்த நிலையில், அவரது தலைமையில் காங்கிரஸ் தேர்தலை எதிர்கொண்டது. அந்த தேர்தலில் காங்கிரஸ் மிக மோசமாகத் தோல்வியடைந்து ஒரு பக்கம் இருந்தாலும், அப்போது பிரசார சமயத்தில் பல்வேறு சர்ச்சைகளும் இருந்தன.
ராகுல் காந்தி மக்களவை தேர்தலுக்காகக் கர்நாடக மாநிலத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது மோடி என்ற பெயர் கொண்ட அனைவரும் ஒரே போல இருப்பதாகக் குறிப்பிட்ட ராகுல் காந்தி, அதன் பிறகு சர்ச்சைக்குரிய வார்த்தையைக் குறிப்பிட்டார். இது அப்போதே மிகப் பெரியளவில் சர்ச்சையானது. மோடி என்ற பெயர் வைத்துள்ள அனைவரையும் ராகுல் காந்தி அவமதித்து விட்டதாகப் புகார்கள் எழுந்தன.

கிரிமினல் அவதூறு வழக்கு
இந்த விவகாரத்தில் தான் அவர் மீது கிரிமினல் அவதூறு வழக்கு தொடப்பட்டது. மோடி என்ற பெயர் கொண்ட அனைவர் குறித்தும் ராகுல் காந்தி அவதூறாகப் பேசியுள்ளதாகவும் ராகுல் காந்தி மோடி சமூகத்தையே இழிவுபடுத்திவிட்டதாகவும் குஜராத் பாஜக எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான புர்னேஷ் மோடி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
தீர்ப்பு
நான்கு ஆண்டுகளாக இந்த கிரிமினல் அவதூறு வழக்கு நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் கடைசியாக ராகுல் காந்தி கடந்த அக். 2021இல் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்திருந்தார். இந்த வழக்கில் கடந்த வாரம் தான் இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்தன. இந்த வழக்கில் தான் இன்று தீர்ப்பளிக்கப்படும் என்றும் தீர்ப்பு அளிக்கும் போது ராகுல் காந்தி நீதிமன்றத்தில் இருக்க வேண்டும் என்றும் நீதிபதி குறிப்பிட்டிருந்தார். அதன்படி ராகுல் நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில், அவர் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

“இந்தியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து விட்டன.”- லண்டனில் ராகுல்காந்தி !

“இந்தியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறை பிரச்சினை குறித்து யாரும் பேசுவதில்லை.” என இங்கிலாந்தின் லண்டனில் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவரும் – எம்.பி.யுமான ராகுல்காந்தி ஒரு வார பயணமாக இங்கிலாந்து சென்றுள்ளார். லண்டனில் நிகழ்ச்சி ஒன்றில் போதே பேசிய ராகுல்காந்தி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்திய ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. ஜனநாயகம் மீதான தாக்குதலை நாங்கள் தடுக்க முயற்சித்து வருகிறோம். எனது செல்போனில் பெகசஸ் உளவு மென்பொருள் பயன்படுத்தப்பட்டுள்ளது. நிறைய அரசியல்வாதிகளின் செல்போன்களில் பெகசஸ் உளவு மென்பொருள் பயன்படுத்தப்பட்டுள்லது. செல்போனில் பேசும்போது கவனமாக பேசும்படி எனக்கு அறிவுறுத்தப்பட்டது’ என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

அதேபோல், ஹார்ட்வார்ட் கென்னடி பள்ளி தூதரும், அமெரிக்க முன்னாள் தூதருமான நிலோலஸ் பர்ன்ஸ் உடன் ராகுல்காந்தி  காணொளி மூலம் கலந்துரையாடினார். அப்போது, இந்தியாவில் நடப்பதை பார்த்தும் அமெரிக்கா அமைதியாக உள்ளது என்று ராகுல்காந்தி கூறினார். அமெரிக்க தரப்பில் இருந்து எந்த கருத்தையும் நான் இதுவரை கேட்கவில்லை. ஜனநாயகத்தில் கூட்டாளிகள் என்று நீங்கள் கூறினீர்கள் என்றால் இந்தியாவில் நடப்பது குறித்து உங்கள் கருத்து என்ன? என்று அமெரிக்க முன்னாள் தூதரிடம் கேட்டார்.

நிலோலஸ் பர்ன்ஸ் பேசுகையில், இந்தியாவில் ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதாக கூறினார். மேலும், இந்த விவகாரத்தில் அமெரிக்கா அமைதியாக இருப்பதாக கூறினார்.

இந்நிலையில், லண்டனில் சென்றுள்ள ராகுல்காந்தி , இந்தியாவில் 3 மிகப்பெரிய பிரச்சினைகள் உள்ளது. வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு ஆகிய இரண்டு மிகப்பெரிய பிரச்சினையாகும். 3-வது பிரச்சினையான பெண்களுக்கு எதிரான வன்முறை இந்தியாவில் மறைக்கப்பட்ட பிரச்சினையாகும். இந்தியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறை பிரச்சினை குறித்து யாரும் பேசுவதில்லை. ஆனால், இந்தியா முழுவதும் நடந்து சென்று பார்த்தால் மக்களிடம் பேசினால் பெண்களுக்கு எதிரான வன்முறை மறைக்கப்பட்ட பிரச்சினையாக உள்ளது’ என்றார்.

இதேநேரம் லண்டன் சென்றுள்ள ராகுல்காந்தி இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் அமெரிக்கா தலையிட வேண்டும் என்று கூறுவதாக மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளதுடன்  ராகுல்காந்தியின் லண்டன் பேச்சுக்கு மத்திய மந்திரிகள் கண்டனம் தெரிவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.