யோசித ராஜபக்ஷ

யோசித ராஜபக்ஷ

தம்பியை அடுத்து அண்ணன் நாமலுக்கும் அழைப்பாணை !

தம்பியை அடுத்து அண்ணன் நாமலுக்கும் அழைப்பாணை !

ரக்பி விளையாட்டை ஊக்குவிப்பதற்காக இந்திய நிறுவனமான கிரிஷிடமிருந்து 70 மில்லியன் ரூபா பெற்று முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச் சாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் 18 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கொழும்பு உயர் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.

சட்ட மா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகைகளைப் பரிசீலித்த பின்னர்இ கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன இந்த அறிவிப்பை வெளியிட உத்தரவிட்டார்.

முன்னதாக குறித்த வழக்கில் நாமல் ராஜபக்ஷ ஒரு சந்தேக நபராகக் கைது செய்யப்பட்டுஇ கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்ததும் கவனிக்கத்தக்கது.

இதேவேளை நாமல் ராஜபக்சவின் சகோதரரான யோஷித ராஜபக்ஷஇ ரத்மலானை சிறிமல் பிரதேசத்தில் 34 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வீடு மற்றும் காணியை வாங்கிய தொடர்பில்இ அண்மையில் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

இரண்டு வாரங்களில் நாமல் கைது ! – யோஷிதவுக்கு பிணை !

இரண்டு வாரங்களில் நாமல் கைது ! – யோஷிதவுக்கு பிணை !

2029 ஆம் ஆண்டு நாமல் ராஜபக்ஷ ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தற்போதைய அரசாங்கம் அஞ்சுவதானால் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை கைது செய்வதற்கான அரசாங்கத் திட்டம் முன்னெடுக்கப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகச் செயலாளரும் சட்டத்தரணியுமான மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.

இதேவேளை அண்மைய கைதுகள் பற்றி கருத்து தெரிவித்த பா.உ நாமல் ராஜபக்ச, “ஏன் இப்படிச் செய்கிறார்கள் என்று என்னிடம் கேட்காதீர்கள். பிரதிப் பாதுகாப்பு அமைச்சர், காவல்துறை அமைச்சர் மற்றும் நாட்டின் ஜனாதிபதியிடம் கேளுங்கள். ஆனால் அரசாங்கம் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக அரசியல்வாதிகளையும் அவர்களது குடும்பத்தினரையும் வேட்டையாடுவதில் நேரத்தைச் செலவிடுகிறது.” நாட்டின் பாராளுமன்றத்தில் நான்தான் கூச்சலிடுகிறேன். என் சகோதரன் சிறைக்குச் சென்றார் என தெரிவித்துள்ளார்.

முன்னதாக பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்சவை பிணையில் செல்ல கொழும்பு நீதவான் நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

அரசியல் பழிவாங்கலின் அடிப்படையில் யோஷித ராஜபக்ஷ கைதுசெய்யப்படவில்லை என தெரிவித்திருந்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, குற்றச்செயல்கள் ஊழலுடன் தொடர்புடைய அனைவருக்கு எதிராகவும் நடவடிக்கைகள் தொடரும் என தெரிவித்திருந்தார்.