ஐஸ்கரீம் விற்பது போல் பாடசாலை மாணவர்களை இலக்குவைத்து போதைப்பொருள் விற்பனை யாழ் இளைஞன் கைது !
பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து விற்பனை செய்யப்படும் கஞ்சா கலந்த மாவா ஒருவகையான பாக்கு தயாரிக்கும் இடமொன்றில் பெருமளவான போதைப்பொருளுடன் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் மார்ச் 7இல் கைது செய்யப்பட்டுள்ளார்.
வண்ணார் பண்ணை சிவன் கோயிலுக்கு பின் மானிப்பாய் வீதியை அண்மித்த பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து கஞ்சா கலந்த மாவா பாக்கு தயாரித்து கொண்டிருந்த போதே சந்தேக நபரான 24 வயதான இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து கஞ்சா கலந்த மாவா 4 கிலோ 250 கிராம் 12 கிலோ 500 கிராம் எடையுடைய பீடித்தூள் மற்றும் வாசனைத் திரவியம் போன்றவை கைப்பற்றப்பட்டுள்ளன.
