யாழ்ப்பாணம் வாள்வெட்டு

யாழ்ப்பாணம் வாள்வெட்டு

வாள்வெட்டு குழுவினரை பாதுகாத்து பிணை எடுக்கும் சர்ச்சை பெண் சட்டத்தரணி சர்மினி

வாள்வெட்டு குழுவினரை பாதுகாத்து பிணை எடுக்கும் சர்ச்சை பெண் சட்டத்தரணி சர்மினி

 

கொள்ளையை தடுக்க வந்த நபரின் கைவிரல் வெட்டிய சந்தேகத்திற்குரிய பிரதான வாள்வெட்டுக்காரர்கள் மூவர் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த மார்ச் 3ஆம் திகதி கொக்குவில் ஞானபண்டிதா பாடசாலைக்கு அருகில் இடம்பெற்ற வாள் வெட்டில் நபரொருவரின் கைவிரல் வெட்டப்பட்டுள்ளது. இதையடுத்து, காயமடைந்த நபர் யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு கைவிரல் பொருத்தப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் கைதான சந்தேக நபர்களிடமிருந்து வாள்கள் மற்றும் ஹெரோயின் போதைபொருள் கைபற்றப்பட்டுள்ளது. அவர்களிடமிருந்து இரண்டு மோட்டார் சைக்கிள்களும் கையகப்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை இந்த வாள்வெட்டு குழுவின் தலைவனாக செயற்படும் நபரை சட்டத்தரணி சர்மினி பொலிஸில் தன் சொந்த வாகனத்தில் கொண்டு வந்து பாரப்படுத்தியுள்ளார்.

சம்பந்தப்பட்ட வாள் வெட்டுக்குழுவின் வழக்குகளுக்கு சட்டத்தரணி சர்மினியே ஆஜராவதாகவும் தெரியவந்துள்ளது. வழமையாகவே சட்டத்தரணி சர்மினி பாலியல் குற்றவாளிகளுக்கும் , சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் சமூகவிரோதிகளுக்குமே வழக்குகள் பேசுவதாக கூறப்படுகிறது.

இஞ்தேவேளை யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கின் பல பகுதிகளிலும் சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுபடுவோர் தம்முடைய பண பலத்தை பயன்படுத்தி பிணையில் வெளியே வருவது வாடிக்கையாகி விட்டதாக மக்கள் பலரும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். இவ்வாறு பிணையில் வெளியே வருபவர்கள் மீண்டும் தமது வாள்வெட்டு தொடங்கி போதைப்பொருள் கடத்தல் வரையான சமூக சீரழிவு செயற்பாடுகளிலும் தைரியமாக ஈடுபடுவதை அவதானிக்க முடிகிறது. காப்பாற்ற சட்டத்தரணி சர்மினி மற்றும் விஸ்வலிங்கம் திருக்குமரன் மற்றும் கனகரட்ணம் சுகாஷ் போன்றோர் இருக்கும்வரை சமூக விரோத நடவடிக்கைகள் தொடரும் .

யாழ் – மட்டு வாள் வெட்டுச் சம்பவங்கள் பாராளுமன்றத்திலும் எதிரொலித்தது !

யாழ் – மட்டு வாள் வெட்டுச் சம்பவங்கள் பாராளுமன்றத்திலும் எதிரொலித்தது !
யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில்  இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இளைஞனொருவர் கைவிரல் துண்டாடப்பட்ட நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கொக்குவில் பகுதியிலுள்ள கடை ஒன்றின் களஞ்சியசாலையில், களஞ்சியசாலை பொறுப்பாளராக குறித்த இளைஞன் வேலை செய்து வந்துள்ளார்.  இந்நிலையில்  மோட்டார் சைக்கிளில் வாள்களுடன் வந்த இருவர், களஞ்சியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து  இளைஞன் மீது வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளனர்.  வாள்வெட்டில் இளைஞனின் கை விரல் துண்டாடப்பட்டுள்ள நிலையில், இளைஞன் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இதேவேளை நேற்றைய நாடாளுமன்ற அமர்விலும் வடக்கு கிழக்கில் அதிகரித்துள்ள வாள்வெட்ட பிரச்சினைகள் பாரிய பேசுபொருளாக மாறியிருந்ததது. மட்டக்களப்பில் இடம்பெறும் வாள்வெட்டு குறித்து சபையில் கேள்வியெழுப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனை சபாநாயகர் இடைநிறுத்தி, இது ஒரு ஒழுங்கு பிரச்சினை அல்ல ஆகையால் இது தொடர்பில் சபை ஒத்திவைப்பு மீதான பிரேரணையாக கொண்டு வந்து பேசலாம் என தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, சாணக்கியனுக்கு இது தொடர்பில் உரையாடுவதற்கு சபாநாயகரால் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்தநிலையைில், குறுக்கிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் “நாடாளுமன்ற உறுப்பினருக்கு முக்கியமான கேள்விகளை கேட்பதற்கு இடமுண்டு, அதேபோன்று நான் கட்சி தலைவராகவும் இருக்கின்றேன். ஆகவே, நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்க உங்களுக்கு பொறுப்பு இருக்கின்றது, நீங்கள் காது கொடுத்து கேட்க வேண்டும். அங்கு துண்டு துண்டாக மக்கள் வெட்டப்படுகின்றார்கள். அதை இங்கு கூறாமல் எங்கு சென்று கூற முடியும்?
ஆகவே கிழக்கு மாகாணத்தை முன்னிறுத்தி நாடாளுமன்ற உறுப்பினர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் வழங்குங்கள்” என அவர் தெரிவித்தார்.
இந்த வாக்குவாதத்தில் பாராளுமன்ற உரைகள் சிறிது நேரம் தடைப்பட்டது. அப்போது மற்றுமொரு பா உ எழுந்து, முன்னர் ஒருவர் தான் கத்திக்கொண்டிருப்பார், இப்போது இருவராகி விட்டனர் என்ற தொனியில்
சிங்களத்தில் பா உ அர்ச்சுனாவையும் சாணக்கியனையும் சுட்டிக்காட்டி கருத்துத் தெரிவித்தனர்.
அண்மைக்காலமாக வட்டுக்கோட்டையில் சிலர் சாதிய வெறியர்களாக காடைத்தனங்களிலும் ஈடுபட்டு வருவது பாராளுமன்ற உறுப்பினர்களின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டு உள்ளது. சாதிய வெறியாட்டங்கள், கொலை போன்ற செயற்பாடுகளிலும் குருவி என்கின்ற சாதியக் குழு ஈடுபட்டுள்ளமை பரவலாக அறியப்பட்டுள்ளது. குற்றவாளிகள் சுதந்திரமாக திரிவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் வட்டுக்கோட்டைப் பொலிஸார் இவர்கள் தொடர்பில் நடவடிக்கை எழுக்கவில்லை என்றும் பா உ க்களிடம் முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தெற்கில் துப்பாக்கிச்சூடு – யாழில் புலம்பெயர்ந்தவர்களின் பணத்திமிரால் வாள்வெட்டு ! வன்முறைக்கு பஞ்சமில்லை !

“தெற்கில் துப்பாக்கிச்சூடு – யாழில் புலம்பெயர்ந்தவர்களின் பணத்திமிரால் வாள்வெட்டு ! வன்முறைக்கு பஞ்சமில்லை !

 

யாழ். வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் நேற்று மாலை மூவர் மீது மோசமான தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து வருகை தந்த நபர் ஒருவர் குடும்ப தகராறு காரணமாக தனது தந்தை மீதும், சகோதரன் மீதும், சகோதரனின் மகன் மீதும் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரியவருகிறது.

வவுனியா பகுதியில் இருந்து வாகனத்தில் ஆட்களை அழைத்து வந்து வீட்டிற்குள் புகுந்து கம்பி, கற்களால் தாக்குதல் நடாத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாகனத்தில் வருகை தந்த தாக்குதல் கும்பல் வாகனத்திற்குள் வாள்களை மறைத்து வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. அடி காயங்களுக்குள்ளான மூவரும் மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக இருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக மருதங்கேணி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் வாளுடன் பாடசாலை மாணவன் கைது !

யாழில் வாளுடன் பாடசாலை மாணவன் கைது !

யாழ் நகரில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார். வண்ணார்பண்ணையைச் சேர்ந்த 27 வயதான இளைஞனே யாழ் மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடம் இருந்து 60 கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது. யாழில் நீண்டகாலத்தின் பின் கைப்பற்றப்பட்ட பெருந்தொகை ஹெரோயினாக இது கருதப்படுகிறது.

இதேவேளை யாழ்ப்பாணம்  வட்டுக்கோட்டை காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் வாள் ஒன்றுடன் 17 வயது பாடசாலை மாணவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இளம் தலைமுறையினரிடையே அடுத்தடுத்து போதைப்பொருள் பாவனை, வாள்வெட்டு கலாச்சாரம் என்பன மிக வேகமாக தலைதூக்கி வருவதுடன் ஒரு அச்சமான ஓர் சூழல் உருவாகி வருகிறது. யாழ்ப்பாண வாள்வெட்டு பிரச்சினைகள் தொடங்கி போதைப்பொருள் பாவனை தொடர்பான வழக்குகள் வரை அனைத்திலும் அதிகமாக இளைஞர்களே கைதாகின்றமை எதிர்கால தலைமுறையினர் குறித்த அச்சத்தை பலரிடமும் ஏற்படுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.

பெண்களுடன் சேட்டை புரிந்த இளைஞர்களை எச்சரித்த சாரதி மீது வாள்வெட்டு – யாழ்ப்பாணத்தில் சம்பவம்!

யாழ் . மத்திய பேருந்து நிலையத்திற்கு அருகில் பெண்களுடன் சேட்டை புரிந்த இளைஞர்களை எச்சரித்த தனியார் பேருந்து சாரதி மீது வாள் வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

 

பேருந்து சாரதியான வினாசித்தம்பி ஜெகதீஸ்வரன் என்பவர் மீதே நேற்றைய தினம் திங்கட்கிழமை வாள் வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது

 

கொழும்புத்துறை பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பேருந்தில் பயணிகளை ஏற்றி வந்த வேளை மணியந்தோட்டம் பகுதியில் பேருந்தை மறித்து சாரதி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

 

தாக்குதலில் காயமடைந்த சாரதி யாழ் . போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

கடந்த வாரம் யாழ் . மத்திய பேருந்து நிலையத்திற்கு அருகில் 04 பேர் கொண்ட கும்பல் ஒன்று, பேருந்து நிலையத்திற்கு வரும் பெண்களுடன் அநாகரிகமாக நடந்து கொண்டு , தொந்தரவு செய்துள்ளனர்.

 

இதனை அவதனித்த சாரதி, குறித்த இளைஞர்களை கடுமையாக எச்சரித்து , அங்கிருந்து அப்புறப்படுத்தி இருந்தார்.

 

இந்நிலையில் , அன்றைய தினம் பெண்களுடன் அநாகரிகமாக நடந்து கொண்ட இளைஞர்கள் கும்பலை சேர்ந்தவர்கள் இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்து, பயணிகள் சேவையில் ஈடுபட்டிருந்த பேருந்தை மறித்து வாள் வெட்டு தாக்குதலை நடாத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர்.

 

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.