யாழில் வெப்பநிலை திடீர் அதிகரிப்பு !
யாழ்.குடா நாட்டில் வெப்பநிலை அதிகரித்துள்ளமையால் உடல் வெப்பத்தை தணிக்க கூடிய நீராகாரங்களை அதிகமாக அருந்துமாறு யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய உதவி பணிப்பாளர் என். சூரியராஜா அறிவுறுத்தியுள்ளார்.
இதேவேளை அண்மையில் உடலில் நீர் இழப்பு ஏற்பட்டு இருவர் மரணமடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.
