மாத்தளை சுனீத்த ஹாமத்துறு

மாத்தளை சுனீத்த ஹாமத்துறு

தையிட்டி விகாரைக்கு வரலாறு உள்ளது! பொன்னம்பலம் கஜேந்திரகுமார் ஜாதிப் பிரச்சினையை தூண்டக்கூடாது! மாத்தளை சுனீத்த ஹாமத்துறு.

தையிட்டி விகாரைக்கு வரலாறு உள்ளது! பொன்னம்பலம் கஜேந்திரகுமார் ஜாதிப் பிரச்சினையை தூண்டக்கூடாது! மாத்தளை சுனீத்த ஹாமத்துறு

தையிட்டி விகாரை சங்கமித்தை வந்து ஒரு நாள் தங்கிச் சென்ற வரலாறு கொண்ட விகாரை. இலங்கை சுதந்திரமடைந்ததன் பின் கைவிடப்பட்டுள்ளது என்கிறார் மாத்தளை சுனீத்த ஹாமத்துறு. இவர் தேசம்நெற்க்கு அளித்த நேர்காணலில் சட்டவிரோதமாக அந்த விகாரை தையிட்டியில் அமைக்கப்படவில்லை என்றும் ஏற்கனவே விகாரை இருந்த இடத்திலேயே அது மீள் நிர்மாணிக்கப்படுவதாகவும் தெரிவிக்கின்றார். இந்த விடயத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் ஜாதிவாதத்தையூட்டி இதனை ஒரு இன மதப்பிரச்சினையாக்கக் கூடாது என்கிறார் மாத்தளை சுனீத்த ஹாமத்துறு.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனீத்த ஹாமத்துறு தன்னுடைய இளவயதிலேயே துறவறம்கொண்டு மாத்தளை விகாரையில் பணியாற்றுவதுடன் நாமினி ஓயா மத்திய மகாவித்தியாலயத்தில் தமிழ், பாளி மொழி கற்பிக்கின்ற ஆசிரியராகவும் உள்ளார். ஜாதிவாதம் இல்லாத சமாதான பூமியாக இலங்கை உருவாக வேண்டும் என்பதே தன்னுடைய நோக்கம் எனத் தெரிவிக்கும் அவர், தமிழர்கள் பலர் பௌத்தத்தை கடைப்பிடிப்பதாகவும் யாரும் மதம் மாற வேண்டிய அவசியமில்லை என்றும் துப்பாக்கி முனையில் விகாரைகளை பாதுகாப்பது பௌத்தத்திற்கு முரணானது எனவும் தெரிவித்தார். பெரும்பாலும் விகாரைகளில் கணபதி தெய்வம் இருக்கின்றார். சிங்கள மக்கள் சைவத் தெய்வங்களை வழிபடுகிறார்கள். இதில் ஜாதிவாதம் வரத்தேவியில்லை எனவும் அவர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.