பாடசாலை மாணவிகளிடம் பாலியல் சேட்டைவிட்ட பொலிஸ் அதிகாரி – முல்லைத்தீவில் சம்பவம்
மது போதையில் அரச பாடசாலைக்குள் பலவந்தமாக நுழைந்து மாணவிகள் முன்னிலையில் தகாத முறையில் நடந்து கொண்ட பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் மல்லாவி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட அதிகாரி முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் கான்ஸ்டபிள் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவரை மல்லாவி பொலிஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் பரிசோதனைக்காக நீதித்துறை வைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டார். அதன் பின்னர் அவர் போதையில் இருந்தது தெரியவந்துள்ளது.
வடக்கில் பொலிஸ் அதிகாரிகள் மீது மக்கள் நம்பிக்கையிழந்துள்ளதாக தங்களிடம் பல தடவைகள் முறைப்பாடு கிடைத்துள்ளதாக அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்திருந்ததும் கவனிக்கத்தக்கது.
