மன்னார் துப்பாக்கி சூடு

மன்னார் துப்பாக்கி சூடு

பழிக்குப் பழி உயிருக்கு உயிர்: சட்டத்தை கையில் எடுத்து மன்னார் நீதிமன்றத்தின் முன் இருவர் சுட்டுக்கொலை !

பழிக்குப் பழி உயிருக்கு உயிர்: சட்டத்தை கையில் எடுத்து மன்னார் நீதிமன்றத்தின் முன் இருவர் சுட்டுக்கொலை !

மன்னார் நீதவான் நீதிமன்றத்துக்கு முன்பாக நேற்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 2022 ஜூன் மாதம் மன்னர் உயிலங்குளம் பகுதியில் இடம்பெற்ற மாட்டு வண்டி சவாரியின் போது ஏற்பட்ட தர்க்கத்தை தொடர்ந்து ஜூன் மாதம் 10ஆம் திகதி சகோதரர்கள் இருவரை மற்றைய தரப்பினர் படுகொலை செய்திருந்தனர். குறித்த சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் மன்னார் நீதிமன்றில் நடைபெற்று வரும் நிலையில், வழக்கு விசாரணைக்காக வருகை தந்த குற்றம் சுமத்தப்பட்டவர்கள் மீதே துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

வெற்றி தோல்விகளை ஏற்றுக்கொள்ளாத சமூகமாக, சர்வசாதாரண பிரச்சினைககும் வன்முறையூடாக தீர்வு காணும் சமூகமாக தமிழர்கள் மாறி வருகின்றார்கள் என்ற அச்சம் அடுத்து வருகின்ற சந்ததியினர்க்கும் மிகுந்த ஆபத்தானதாக அமைய உள்ளது. ஒரு மாட்டுவண்டிச் சவாரி நான்கு குடும்பங்களின் தலைவிதியை தலைகீழாகப் புரட்டிப்போட்டதை புரிந்து கொள்ளாமல், அதனை வைத்து அரசியல் செய்ய முற்பட்டுள்ளார் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் குரல்தரவல்லவர்களில் ஒருவரான சட்டத்தரணி சுகாஸ். இந்த வன்முறைகளின் பின்னால் சட்டத்தரணிகளின் பங்களிப்புகளும் உள்ளதாக பரவலான குற்றச்சாட்டு உள்ளது. வன்முறையாளர்களை பிணையில் வெளியே கொண்டுவரும் சுகாஸ் போன்றவர்கள் அவ்வன்முறையாளர்களை தங்கள் அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவதாகவும் பலமான குற்றச்சாட்டுக்கள் யாழில் உள்ளது.

அண்மையில் யாழ்ப்பாண நீதிமன்றங்களுக்கு முன்பாகவும் சாட்சியமளிக்க வருகை தந்த நபர் மீது வாள்வெட்டு சம்பவம் ஒன்று பதிவாகியிருந்தது. பாதுகாப்பு தேடி சரணடையும் மக்களின் இறுதி முடிவிடமாக நீதிமன்றங்கள் காணப்படும் நிலையில் நீதிமன்றங்களுக்கு இத்தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளது. மேலும் ஊடகவியலாளர் தமிழ்செல்வன் சமூக விரோதிகளால் தாக்கப்பட்டதும் நீங்கள் அறிந்ததே. நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்தில் என்.பி.பி ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடாத்தப்பட்டமையும் கவனிக்கத்தக்கது.