மனித புதைகுழி

மனித புதைகுழி

மனித புதைகுழிகளை தோன்றுவதற்கு அரச ஆதரவு இல்லை – சிரேஸ்ட சட்டத்தரணி கே.எஸ். ரத்னவேல் குற்றச்சாட்டு

மனித புதைகுழிகளை தோன்றுவதற்கு அரச ஆதரவு இல்லை – சிரேஸ்ட சட்டத்தரணி கே.எஸ். ரத்னவேல் குற்றச்சாட்டு

மனித புதைகுழி விவகாரங்களை இலங்கையின் எந்த அரசாங்கமும் இதுவரை முழுமையான அரசியல் உறுதிப்பாட்டுடன் அணுகவில்லை என சிரேஸ்ட சட்டத்தரணி கே.எஸ். ரத்னவேல் தெரிவித்துள்ளார். காணாமல் போனோரை தேடியறியும் குழுவினர் கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடல் நிகழ்வில் உரையாற்றும்போது அவர் இதனைத் தெரிவித்தார்.

செம்மணி, மன்னார், கொக்குத்தொடுவாய் உள்ளிட்ட பகுதிகளில் மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ள போதிலும், அதற்கான விசாரணைகள் அரசாங்கத்தின் ஊக்கமின்மையால் தடைப்பட்டுள்ளன. நிதி ஒதுக்கீடு இல்லாமை, பொலிஸாரின் ஒத்துழைப்பு பஞ்சம், மற்றும் நிபுணர்களின் ஒருங்கிணைவு பற்றாக்குறை ஆகியவை அகழ்வுப் பணிகளை தடை செய்யும் முக்கிய காரணிகளாக உள்ளன.

மீட்கப்படும் எச்சங்கள் எந்த காலத்துக்கு உரியவை என்பதனை உறுதிப்படுத்த வெளிநாட்டு ஆய்வுகூடங்களுக்கு அனுப்ப வேண்டும். ஆனால் அதற்கும் நிதியளிக்க அரசாங்கங்கள் தயாராக இல்லை. சந்திரிகா, ரணில் போன்ற ஆட்சியாளர்களின் காலகட்டங்களிலும் இந்த விடயத்தில் 100% அரசியல் உறுதிப்பாடு காணப்படவில்லை என்பதே மிக முக்கியமான உண்மை என அவர் மேலும் தெரிவித்தார்.