மது போதையில் வாகனம் செலுத்தியவருக்கு வாகனம் செலுத்த வாழ்நாள் தடை !
மதுபோதையில் தனியார் பேருந்தை ஓட்டியதற்காக, பேருந்து சாரதியின் உரிமத்தை வாழ்நாள் முழுவதும் இரத்து செய்ய பாணந்துறை தலைமை நீதிவான் சம்பிகா ராஜபக் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாணந்துறையிலிருந்து களுத்துறைக்கு ஒரு தனியார் நிறுவனத்தின் ஊழியர்களை ஏற்றிச் சென்ற குற்றம் சாட்டப்பட்டவர், போக்குவரத்து பொலிஸாரால் சோதனை செய்யப்பட்டு அவர், மது போதையில் இருப்பது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து சாரதி தனது பயணிகளின் உயிருக்கு ஆபத்தை விளைவித்ததான வாதத்தின் அடிப்படையில், பாணந்துறை தலைமை நீதிவான் அவரது உரிமத்தை இடைநிறுத்தி அபராதம் விதித்தார்.
