பேராசிரியர் ரகுராம்

பேராசிரியர் ரகுராம்

யாழ் பல்கலைக்கழகம் புதிய சிந்தனைக்கு திறக்கப்பட வேண்டும் ! புதிய தலைமை வேண்டும் !

யாழ் பல்கலைக்கழகம் புதிய சிந்தனைக்கு திறக்கப்பட வேண்டும் ! புதிய தலைமை வேண்டும் !

 

பாலியல் சுரண்டல் , பாலியல் இலஞ்சம் கோரும் யாழ் பல்கலை நிர்வாகம் கிளீன் செய்யப்பட வேண்டும்

யாழ் பல்கலைக்கழக முதலாவது மாணவர் ஒன்றியத்தை ஆரம்பித்தன் பின்நின்ற சமூக அரசியல் செயற்பாட்டாளர் நல்லதம்பி ஜெயபாலன்

 

நடிகர் திலகம் ரகுராமின் ராஜினாமா நாடகம் முடிவுக்கு வந்தது – தமிழோ சிங்களமோ அதிகாரம் நன்றாக நாடகம் போடும் !

நடிகர் திலகம் ரகுராமின் ராஜினாமா நாடகம் முடிவுக்கு வந்தது – தமிழோ சிங்களமோ அதிகாரம் நன்றாக நாடகம் போடும் !
பேராசிரியர் சிவசுப்ரமணியம் ரகுராமின் பதவி விலகல் நாடகம் முடிவுக்கு வந்துள்ளது. தேசம்நெற்றில் குறிப்பிட்டது போலவேஇ மீண்டும் ரகுராம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடாதிபதியாக தொடரவுள்ளார். கலைத்துறையின் காமுகப் பேராசிரியர்களுக்கு இருந்த பதட்டங்கள் தணிந்தது. பீடாதிபதி ரகுராம் இருக்கும் வரை அவர்களுக்கு எவ்வித ஆபத்தும் இல்லை. கடந்த காலங்களில் பாலியல் தொல்லைகளுக்கு எதிராக மாணவர்கள் மேற்கொண்ட போராட்டங்கள் எடுபடவில்லை. பல லட்சம் சம்பளத்தோடு அதிகார மையங்களாக இவர்கள் மாணவியரிடம் பாலியல் லஞ்சம் கோரி முகர்ந்து எறிந்துவிடுகின்றார்கள். பல பெண்கள் தற்போதைய நிலையால் அச்சமடைந்து போயுள்ளனர். முத்தையா யோகேஸ்வரி வலிந்து காணாமலாக்கப்பட்டது போல் தங்களுக்கும் நிகழுமோ என அஞ்சுகின்றன.
மாணவர்கள் சிலருக்கு விதிக்கப்பட்டிருந்த வகுப்புத்தடையை பேரவை நீக்கியதையடுத்து பேரவையின் முடிவில் தாம் அதிருப்தியுறுவதாக தெரிவித்து ரகுராம் பதவி விலகியிருந்தார். கலைப்பீடாதிபதி ரகுராமுக்கும் கலைப்பீடத்தில்லிருந்த எஸ் சிவகஜன் அணிக்கும் இருந்த முரண்பாடு போதைவஸ்து எதிரான ரகுராமின் முயற்சிகளுக்கான தடையாக மாற்றப்பட்டு பல்கலைக்கழக காமுகர்களின் செல்வாக்கினால் ஆசிரியர் சங்கம் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்தது. ரகுராமுக்கு சார்பான கலைப்பீட மாணவர் ஒன்றியமும் தனது ஆதரவை வெளிப்படுத்தியிருந்தது.
இதையடுத்து இந்த விவகாரத்தில் கல்வி அமைச்சு தலையிட்டு மாணவர்களுடைய கல்விச் செயற்பாடுகளை சிதைக்க வேண்டாம் எனச் சுட்டிக்காட்டி வேலைநிறுத்தத்தை கைவிடுமாறும் கலந்துரையாடல் மூலம் தீர்வு காணப்படும் என்றும் அறிவித்திருந்தது. சம்பவம் தொடர்பிலான அறிக்கையொன்றையும் கல்வி அமைச்சு கோரியிருந்தது.
சம்பவம் தொடர்பான அறிக்கை கல்வி அமைச்சுக்கு அனுப்பிவைக்கபட்டுள்ளது என்றும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் எனவும் துணைவேந்தர் சிறிசற்குணராஜா தனியார் ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார். விரிவுரையாளர்கள் பேராசிரியர்கள் மாணவிகளை பாலியல் தொந்தரவு செய்கிறார்கள் என்று வெளிப்படையாகக் குற்றம்சாட்டிய துணைவேந்தர் சிவக்கொழுந்து சற்குணராஜாவால் கூட யாழ் பல்கலைக்கழகத்தின் காமுகர்களுக்கு எதிராகச் செயற்பட முடியவில்லை.
ஆசிரியர் சங்கம் வேலைநிறுத்தத்தை கைவிட்டுள்ளதாகவும் துணைவேந்தரை பதவியிலிருந்து நீக்கும் முயற்சிகள் வெற்றிகரமாக மாணவர் ஒன்றியத்தால் முறியடிக்கப்பட்டுள்ளதாகவும் உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்த சிவகஜன் தனது முகநூலில் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் நீதிமன்ற நடவடிக்கைகளை நோக்கி நகரும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
கலைப்பீட மாணவர் ஒன்றியத்திலிருந்து அதன் செயலாளர் ச. ரிசிவரன் மற்றும் பொருளாளர் ச. கிருத்திகன் விலகியுள்ளனர். கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் தலைவர் ம.சோமபாலன் ரகுராமுக்கு ஆதரவாக நடத்திய ஊடகசந்திப்பில் வெளியிட்டுள்ள கலைப்பீடத்தின் அனைத்து அணி மாணவர்களும் தகவல்களை மறுப்பதாகவும், அதற்கு எதிர்ப்பினையும் கண்டனங்களையும் வெளியிடுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் மாணவர்கள் போடும் குழாயடிச் சண்டையில் அவர்களது வண்டவாளங்கள் எல்லாம் வெளிவர ஆரம்பித்துள்ளன. ரகுராமுக்கு ஆதரவு தெரிவித்த சோமபாலன் சக மாணவர்களுக்கு போதைப்பாக்கு வாங்கி கொடுத்தே பதவிக்கு வந்துள்ளதாகவும் சக மாணவர் ஒருவர் முகநூலில் தெரிவித்துள்ளார். மேலும் சோமபாலன் கலைப்பீடாதிபதி ரகுராமிடம் மதுப் போத்தல்களுடன் கையும்களவுமாக பிடிபட்டதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
வெளிவிவருகின்ற தகவல்கள் எல்லாம் கலைப்பீடம் எந்தளவு தூரம் சீரழிந்துபோயுள்ளது என்பதையே வெளிப்படுத்துகின்றன. மாணவர்களை வழிப்படுத்த வேண்டியவர்களும் அதிகாரத்திலிருப்பவர்களும் பாலியல் குற்றவாளிகளாகவும், ஊழல்வாதிகளாகவும், சமூகப் பொறுப்பற்றவர்களாகவும் இருந்தமையால் மாணவர்களின் குற்றங்களை கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர்.
என்.பி.பி அரசாங்கம் கிளீன் சிறிலங்காவின் ஒரு அங்கமாக கிளீன் யப்னா (Clean Jaffna) யுனிவெசிற்றி என்ற திட்டத்தை அமுல்படுத்தி ஒட்டுமொத்த பல்கலைக்கழகத்தையும் திருத்தி எடுக்க வேண்டும். ஒரு பெண் ஹரிணி அமரசூரிய பிரதமராகவும் உயர் கல்வி அமைச்சராகவும் உள்ள இந்த சூழலில் யாழ் பல்கலைக்கழகத்தில் பெண்கள் எவ்வித ஆபத்தும் இல்லாமல பாலியல் லஞ்சம் கேட்டு கொடுமைப்படுத்தப்படாமல் போதைப் பொருள் பயமற்ற ஒரு கல்வி மையமாக யாழ் பல்கலைக்கழகம் மாற்றப்பட வேண்டும். அதற்கு பல்கலைக்கழகத்தில் பாலியல் லஞ்சம் கேட்ட விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள், பீடாதிபதிகள் சட்டத்திற்கு முன் நிறுத்தப்பட வேண்டும். வாய்மையைப் பொய்மை என்றென்றும் வெல்லலமோ ? பாதிக்கப்பட்ட பெண்களின் பாவம் பீடாதிபதி ரகுராமை விடாது துரத்தும்

‘கல்விச் செயற்பாடுகளைத் சீர்குலைக்க வேண்டாம் – வேலை நிறுத்தத்தை நிறுத்துங்கள்’ அமைச்சர் உத்தரவு

‘கல்விச் செயற்பாடுகளைத் சீர்குலைக்க வேண்டாம் – வேலை நிறுத்தத்தை நிறுத்துங்கள்’ அமைச்சர் உத்தரவு

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் விவகாரத்தில் அரசாங்கம் தீர்வை வழங்கும். எனவே வேலை நிறுத்தங்களில் ஈடுபடாது கல்வி செயற்பாடுகளை தடையின்றி முன்னெடுத்துச் செல்ல ஒத்துழைக்குமாறு அரசாங்கம் கோரியுள்ளது. நேற்று செவ்வாய்கிழமை (28) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இவ்வாறு கோரிக்கை விடுத்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்து அறிக்கையொன்றைக் கோருவதற்கு அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டது. கல்வி அமைச்சு வெகு விரைவில் இவ்விவகாரத்தில் தலையிட்டு பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்கும். எனவே எவ்வித வேலை நிறுத்தங்களும் இன்றி பல்கலைக்கழக நடவடிக்கைகளை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்லுமாறு கோருகின்றோம். எந்தவொரு பிரச்சினைக்கும் வேலை நிறுத்தங்களுக்குச் செல்வதற்கு முன்பு எம்முடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க முடியும் எனவும் அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ சுட்டிக்காட்டியுள்ளார்.

விரிவுரையாளர்களானாலும், மாணவர்களானாலும் எந்த சந்தர்ப்பத்திலும் எம்முடன் கலந்துரையாட முடியும். அரசாங்கத்துடன் கலந்துரையாடுவதற்கு யாருக்கும் எவ்வித தடைகளோ கட்டுப்பாடுகளோ இல்லை. கடந்த காலங்களில் பல்வேறு காரணிகளுக்காக வேலை நிறுத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதால் கல்வி கற்பதற்குரிய சந்தர்ப்பங்கள் இழக்கப்பட்டுள்ளன. எனவே பல்கலைக்கழக கட்டமைப்பில் எவ்வித பிரச்சினைகளையும் ஏற்படுத்தாமல், கல்வி செயற்பாடுகளை தடையின்றி முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதே எமது தேவையாகும். அதற்கு தேவையான சகல ஒத்துழைப்புக்களையும் நாம் வழங்குவோம் என்றார் அமைச்சர் நளிந்த.

கலைப்பீடாதிபதி சி ரகுராம், தான் எடுத்த முடிவுக்கு எதிராக பேரவை முடிவெடுத்ததால் கொதிப்படைந்து போட்ட நாடகமே பதவி விலகல். பின்னர் தன்னுடைய சார்பு மாணவர்களைத் தூண்டிவிட்டு, மீண்டும் பதவிக்கு வர கோரிகை வைக்கும் போராட்டத்தை முன்னெடுத்தார். அதற்காக ஆசிரியர் சங்கத்தில் சி ரகுராமுக்கு ஆதரவாக நின்ற காமுகப் பேராசிரியர்கள் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்க, ஏனையவர்களும் வேறு வழியின்றி களத்தில் இறங்க வேண்டியதாயிற்று.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் மாணவிகள் மீது திணிக்கப்பட்டுள்ள பாலியல் லஞ்சம், அங்குள்ள பெண் விரிவுரையாளர்கள் எதிர்கொள்கின்ற பாலியல் லஞ்சம் மற்றும் மோசடிகள் தொடர்பில் சுயாதீன விசாரணை ஒன்றுக்கு கல்வி அமைச்சு உத்தரவிட வேண்டும். உயர்கல்வி வரை இலவசக் கல்வி. ஆனால் பட்டதாரி மாணவர்கள் பேராசிரியர்களின் பழிவாங்கல்களால் மாதக் கணக்கில் வகுப்புத் தடை போடப்படுகின்றனர். தற்போது மாணவர் ஒன்றியத் தலைவர் எஸ் சிவகஜனுக்கு எழுந்தமானமாக வகுப்புத் தடை வழங்கப்பட்டுள்ளது. முன்னர் சி ரகுராமின் செல்லப்பிள்ளையாக இருந்த எஸ் சிவகஜனுக்கும் கலைப்பீடாதிபதி ரகுராமிற்கும் இடையேயான முரண்பாடு, தற்போது போதைப் பொருளுக்கு எதிரானதாக காண்பிக்கப்பட்டு வருகின்றது.

அண்மைய யாழ் பல்கழலக்கழகப் போராட்டம் பெயரளவில் போதைப்பொருளுக்கு எதிரானது என கலைப்பீடாதிபதி ரகுராம் தரப்பால் சொல்லப்பட்டாலும், இப்போராட்டம் முற்றிலுமாக சி ரகுராமின் தனிப்பட்ட நலன்களை முன்நிறுத்தியும், கலைப்பீடாதிபதி ரகுராமிற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களைப் பழிவாங்கவுமே மேற்கொள்ளப்படுகின்றது. யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கமும் மாணவர்களின் நலன்களை முன்நிறுத்தாமல், தனிப்பட்ட கலைப்பீடாதிபதியின் தான்தோன்றித்தனமான செயற்பாடுகளை நியாயப்படுத்தவே போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

இவ்விடயத்தில் அரசு தனது உத்தரவை மிகத் தெளிவாக அறிவுறுத்தியுள்ளது. கடந்த காலங்களில் இவ்வாறான செயற்பாடுகளால் கல்வி கற்றலுக்கான சந்தர்ப்பங்கள் இழக்கப்ட்டுள்ளது. இதனை இனிமேலும் தொடரமுடியாது என அமைச்சர் கோடிட்டு மிகத் தெளிவாகக் காட்டியுள்ளார். நாளை பேரவைக் கூட்டத்தில் இறுதியான முடிவெடுக்கப்படும் எனத் தெரிகின்றது.