விடுவிக்கப்படாத ஆலயங்கள் விரைவில் விடுவிக்கப்படும் – புத்த சாசன சமய மற்றும் கலாசார அமைச்சர் யாழில் தெரிவிப்பு!
ஆலயங்கள் மற்றும் அவை அமைந்துள்ள விடுவிக்கப்படாத நிலங்கள் உள்ளிட்டவற்றை விரைவில் விடுவிப்பதற்கு நடவடிக்கைகளை எடுப்பேன் என்று புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி தெரிவித்துள்ளார்.
தேசிய பொங்கல் விழாவிற்காக யாழ்ப்பாணம் வருகை தந்துள்ள அமைச்சர் நல்லை ஆதின குருமுதல்வரை சந்தித்து கலந்துரையாடினார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, கொழும்பில் வெவ்வேறு காரணங்களுக்காக மூடிவைக்கப்பட்டிருந்த வீதிகள் இப்போது திறக்கப்பட்டு வருகின்றன. வடக்கிலும் நாம் முக்கியமான வீதியொன்றை திறந்துள்ளோம். ஏனைய வீதிகளும் திறக்கப்படும். ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ள இராணுவ ஆக்கிரமிப்பிலுள்ள ஆலய விபரங்களை பெற்று அடுத்த கட்ட நடவடிக்கைகளை விரைந்து முன்னெடுப்பேன் என்றார்.
