தையிட்டி விகாரை விவகாரம் நேர்மையாக அணுகப்படும்: புத்த சாசன அமைச்சு !
யாழ்ப்பாணம்-திஸ்ஸ விகாரையின் பிரச்சினையைத் தீர்க்க அரசாங்கம் மிகவும் நேர்மையாகச் செயல்பட்டு வருகிறது. ஆனால், சிலர் மத நல்லிணக்கத்திற்குத் தீங்கு விளைவிக்க முயற்சித்து வருவதாகவும் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் தெரிவித்துள்ளார்.
அங்கு மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “யாழ்ப்பாண திஸ்ஸ விகாரை பற்றி நிறையச் செய்திகள் இருந்தாலும், அந்த விகாரை தொடர்பான தகவல்களும் எங்கள் தலையீடுகளும் நீண்ட காலமாக நடந்து வருகின்றன. ஓர் அரசாங்கமாக, திஸ்ஸ விகாரை தொடர்பான பிரச்சினையில் தேவையான நேர்மையான தலையீட்டை நாங்கள் எடுத்துள்ளோம். திஸ்ஸவிகாரை தொடர்பில் அப்பகுதி மக்கள் எங்களைச் சந்தித்தனர். அத்துடன், யாழ்ப்பாண மாவட்ட அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனும் எங்களைச் சந்தித்தார். அவர்களுடன் நாங்கள் சுமுகமான கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளோம்.
……………………..
