புதுக்கடை நீதிமன்ற துப்பாக்கிச்சூடு

புதுக்கடை நீதிமன்ற துப்பாக்கிச்சூடு

கொலைகாரன் லவ் க்ரஷ் மெட்டீரியல் ஆக்கிவிட்டீர்கள். விசாரணை எப்போது…? பாராளுமன்றில் சாமர சம்பத் துப்பாக்கியைக் கொடுத்த பெண் இந்தியாவிலா ?

கொலைகாரன் லவ் க்ரஷ் மெட்டீரியல் ஆக்கிவிட்டீர்கள். விசாரணை எப்போது…? பாராளுமன்றில் சாமர சம்பத் துப்பாக்கியைக் கொடுத்த பெண் இந்தியாவிலா ?

ஒருங்கிணைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ள ஒரு குற்றவாளியை இன்று புகைப்படங்களை வெளியிட்டு வீரராக அறிமுகப்படுத்தியமை குறித்து முறையான விசாரணை வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தெரிவித்திருந்தார்.

இது குறித்து நாடாளுமன்றில் கேள்வி பதில் நேரத்தில் நேற்று அவர் கருத்து தெரிவிக்கையில், புதுக்கடை நீதிமன்ற துப்பாக்கிச்சூட்டு பிரதான சந்தேக நபரை 8 மணித்தியாலங்களில் கைது செய்தாக பொலிஸுக்கு பொறுப்பான அமைச்சர் கூறினார். பொலிஸ் திணைக்களம் 8 மணித்தியலங்களில் திறமையாக சந்தேக நபரை கைது செய்தமை தொடர்பில் நாங்கள் மகிழ்ச்சியடைகின்றோம். ஆனால் மற்றைய சந்தேக நபரான பெண்ணை இதுவரை கைது செய்யவில்லை. அந்தப் பெண் நீர்கொழும்புக்கு சென்று துப்பாக்கிதாரியிடம் இருந்து பிரிந்து தனியாக சென்றுள்ளார். ஆனால் பிரதான துப்பாக்கிதாரி மாத்திரமே கைது செய்யப்பட்டுள்ளார்.

எனினும் நீங்கள் இவ்வாறு கூறினாலும் ஊடக செய்திகளில் டுபாயில் இருந்து துப்பாக்கிதாரி காட்டிக்கொடுக்கப்பட்டமையினாலேயே துப்பாக்கிதாரியை கைது செய்தாக கூறப்பட்டுள்ளது. அதன்படி இது எமது திறமையால் அன்றி டுபாயில் இருந்து பாதாள கும்பலால் காட்டிக்கொடுத்தமை ஊடாகவே அவர் கைதாகியுள்ளார். இப்படிதான் ஊடகங்கள் கூறுகின்றன.

இதேவேளை சந்தேக நபரின் படங்களை வெளியிட்டு நாட்டுக்கு வீரராக்கியுள்ளீர்கள். இவ்வாறு புகைப்படங்களை பகிர்வதற்கு இடமளிக்க வேண்டாம். அந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்ட போது பாதுகாப்பு தரப்பினரை பார்த்து சிரித்து, காதல் கொள்வது போல் காணொளிகள், படங்கள் வெளியாகியுள்ளன. கைது செய்யப்பட்ட போது எடுக்கப்பட்ட படங்கள் எவ்வாறு சமூக வலைத்தளங்களுக்கும், ஊடகங்களுக்கும் வெளியாகின என்பது தொடர்பில் விசாரணை செய்யுங்கள் என்றார் சாமர சம்பத்.

நீதிமன்றத்துக்குள் துப்பாக்கியைக் கடத்தி வந்த பெண் சில சமயங்களில் இந்தியாவுக்கு தப்பிச் சென்றிருக்கலாம் என்ற சந்தேகங்களும் தற்போது தெரிவிக்கப்படுகின்றது.