பிள்ளையானுடன் தொடர்பு கொள்ள முயன்ற ரணிலின் பாதுகாப்பு அதிகாரிக்கு இடமாற்ற உத்தரவு !
ரணிலின் 23 வருட பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றிய பாதுகாப்பு அதிகாரியான தலைமை காவல் பரிசோதகர் அசோக ஆரியவன்ஸ யாழ்ப்பாணம் காங்கேஸ்சன்துறை காவல் நிலையத்திற்கு இடம் மாற்றப்பட்டுள்ளார்.
குற்றப்புலனாய்வுத் துறையால் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலிலுள்ள பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தனை தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள முற்பட்டமைக்காகவே ஆரியவன்ஸவுக்கு தண்டனையாக இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
