பா உ சிறிதரன்: பா உ இளங்குமரன்

பா உ சிறிதரன்: பா உ இளங்குமரன்

தொடரும் கரண்ட் கம்பமும் கரண்ட் பிரச்சினையும்: கள்ளக் கரண்டில் தன்குடும்பத்தை முன்னேற்றிவிட்டார் பா உ சிறிதரன்: பா உ இளங்குமரன் குற்றச்சாட்டு

தொடரும் கரண்ட் கம்பமும் கரண்ட் பிரச்சினையும்: கள்ளக் கரண்டில் தன்குடும்பத்தை முன்னேற்றிவிட்டார் பா உ சிறிதரன்: பா உ இளங்குமரன் குற்றச்சாட்டு

‘இளங்குமரன் கரணட் கம்பம் என்றால் நாங்கள் கரண்ட். கரண்ட் அடிச்சால் தாங்கமாட்டார் என்று பா உ சிறிதரன் விட்டது கொலை மிரட்டல் எனத் தெரிவிக்கின்றார் பா உ இளங்குமரன். சிறிதரன் (கள்ளக்) கரண்டில் தன் குடும்பத்தை மட்டும் ஒளிமயமாக்கிவிட்டார் மக்களிடம் திருடிவிட்டார் எனக் குற்றம்சாட்டினார் பா உ இளங்குமரன். ஏப்ரல் 18இல் டான் தொலைக்காட்சியின் எதுசரி எது பிழை நிகழ்ச்சிக்கு வழங்கிய நேர்காணலில் பாராளுமன்றம் வரும்போது யாழ்ப்பாணத்தில் ஒரு நிலமும் இல்லாத சிறிவாத்திக்கு இப்போது யாழ்ப்பாணத்தில் எவ்வளவு காணி இருக்கின்றது. 24 மணி நேர சுப்பர்மார்க்கற் இருக்கின்றது எனத் தெரிவித்தார்.

இன்னும் சில விடயங்களை ஹோம்வேர்க் செய்து தேடாமல் சிறிதிரனின் மகன் கொழும்பில் கற்பதாகத் தெரிவித்தார். அவரின் இரு பிள்ளைகள் லண்டனில் கல்வி கற்பதை இளங்குமரன் அறிந்திருக்கவில்லை. மேலும் சிறிதரனின் மகன் யாழ் இந்துக்கல்லூரியில் படிக்கின்ற போது வாள் கொண்டு வெட்டியதையும் இளங்குமரன் சுட்டிக்காட்டியிருந்தார். கரண்ட் கம்பம் – கரண்ட் பிரச்சினையைத் தொடர்ந்து சிறதரனுக்கும் – இளங்குமரனுக்கும் இடையே நேரடி தர்க்கம் இடம்பெற்று வருகின்றது.

பா உ சிறிதரனின் பிரச்சாரப் பிரங்கியான அலன், 16 சிறார்களைப் பாலியல் துஸ்பிரயோகம் செய்த விடயத்தை சிறிதரன் காப்பாற்ற முயன்ற போது இளங்குமரன் விடயத்தை கொழும்புக்குத் தெரியப்படுத்தி இருந்தார். அலனை அடுத்த சில மணி நேரங்களில் கைது செய்ய அழுத்தம் வழங்கியமையே சிறிதரனின் கொந்தளிப்புக்கு காரணம் என்கிறார் பா உ இளங்குமரன்.