பார் லைசென்ஸ் விவகாரம்

பார் லைசென்ஸ் விவகாரம்

ஜனாதிபதி அனுர குமார இலஞ்சத்துக்கு துணை போகின்றார் – சுமந்திரன் குற்றச்சாட்டு !

ஜனாதிபதி அனுர குமார இலஞ்சத்துக்கு துணை போகின்றார் – சுமந்திரன் குற்றச்சாட்டு !

பார் லைசன்ஸ் விவகாரத்தை வெளிப்படுத்துவோம் என்று வந்தவர்கள் இன்று வரை அதனை வெளிப்படுத்தவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த எம்.ஏ. சுமந்திரன் ‘’நாட்டிலே அதிகரித்த மதுபானசாலைகள் தொடர்பில் பல பிரச்சினைகள் எழுந்துள்ளது. அதிகரித்த மதுபான பாவனையால் நேற்றும் பருத்தித்துறையில் வாள்வெட்டு, கத்திக் குத்து இடம்பெற்றுள்ளது. மன்னாரில் நீதிமன்றின் முன் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இருவர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறான நிலை நாட்டிற்கு நல்லதல்ல’’ என தெரிவித்தார்.

முடிந்தால் பார் லைசன்ஸ் விவகாரத்தை உடன் வெளியிடுங்கள் இல்லையேல் நீங்களும் ஊழல்வாதிகள் தான் எனக் குறிப்பிட்டார் எம் ஏ சுமந்திரன். பா உ சிறிதரனுக்கு ஆப்பு வைப்பதற்கு சுமந்திரன் ஆதாரம் கோருகின்றார் என சில தமிழ் அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.