பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா

சட்டத்தின் ஓட்டைகளைத் தேடும் பா உ அர்ச்சுனா ! – பா உ சிறிதரனின் கோட்டையான கனிஸ்டாவில் பாலியல் குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியர் கைது !

சட்டத்தின் ஓட்டைகளைத் தேடும் பா உ அர்ச்சுனா ! – பா உ சிறிதரனின் கோட்டையான கனிஸ்டாவில் பாலியல் குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியர் கைது !

பா உ அர்ச்சுனாவுக்கு எதிராக மேலும் மேலும் வழக்குப் பதிவுகள் முறைப்பாடுகள் அதகரித்துச் செல்கின்றது. சகட்டு மேனிக்கு மற்றவர்களைப் பற்றி ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை வைத்தது, மற்றவர்களை தரக்குறைவாக பேசியது என பா உ அர்ச்சுனாவை சட்டங்கள் இறுக்குகின்றன. ரிக் ரொக் சாளினியைச் சொன்னதை சுவஸ்திகா பற்றிச் சொன்னதாக பாராளுமன்றப் பதிவுகள் சுட்டிக்காட்டுவதற்கு சட்டத்தில் உள்ள ஓட்டையை பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் சட்டக்குழு தேடுகின்றது.

மதிப்பிற்குரிய பாராளுமன்ற உறுப்பினர் என சக பாராளுமன்ற உறுப்பினர்களை அழைக்க வேண்டிய இடத்தில் தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட பா உ களை கத்தரித் தோட்டத்து வெருளிகள் என அர்ச்சுனா தெரிவித்து இருந்தார். ஆனால் தற்போது நான் அவர்களை பெயர் சொல்லிச் சொல்லவில்லை என்கிறார். அர்ச்சுனா தற்போது சட்டத்தின் ஓட்டைகளைத் தேடிப்பிடிக்க முயற்சிக்கின்றார்.

அர்ச்சுனாவுடைய போக்குகள் தொடர்பில் அர்ச்சுனா பச்சைக்கொடி காட்டிய தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் அர்ச்சுனாவின் குறளிவித்தைகளைச் சுட்டிக்காட்டியுள்ளது. “எங்களுடைய கட்சிக்கு என்று பண்புகள் இருக்கின்றது. நாங்கள் பெண்களை மதிக்கின்றோம், எங்களுடைய கட்சி சாதி, பிரதேச வேறுபாடுகள். பார்ப்பதில்லை. ஏனைய மதங்களை மதிக்கின்றோம். ஆனால் பா உ அர்ச்சுனா இந்த விடயங்களில் திருந்த வேண்டும்” என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பா உ பொன்னம்பலம் கஜேந்திரகுமார் தெரிவித்துள்ளார். யாழில் இருந்து வெளிவருகின்ற ஜப்னா கலரி காணொலி ஊடகத்துக்கு வழங்கிய நேர்காணலில் இதனைத் தெரிவித்து இருந்தார்.

பா உ அர்ச்சுனா போல் மற்றவர்களைக் கொச்சைப்படுத்தி உரையாற்றிய தமிழரசுக் கட்சியின் பா உ இராசமாணிக்கம் சாணக்கியன் தொடர்பில் பீமல் ரத்நாயக்கா காட்டமான பதிலை பாராளுமன்றத்தில் தெரிவித்து இருந்தார். சாணக்கியனின் அரசியல் வரலாற்றைப் புரட்டிய அமைச்சர் பீமல் ரத்நாயக்கா மோசமான மோசடியாளர்களான ராஜபக்சக்களுடன் அரசியலுக்கு வந்து அவர்களை நியாயப்படுத்தியவர், பாதகமான செய்களில் ஈடுபட்ட பிள்ளையானோடு அரசியல் செய்தவர் என்றெல்லாம் சாணக்கியனை கிழித்துத் தொங்கவிட்டார் அமைச்சர் பீமல் ரத்நாயக்கா. சாணக்கியன் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார். பொன்னம்பலம் கஜேந்திரகுமாரோடு தங்களுக்கு அரசியல் முரண்பாடுகள் இருந்தாலும் அவரின் பண்பாடான நடத்தையை தான் மதிப்பதாகவும் பீமல் அங்கு சுட்டிக்காட்டினார்.

பா உ சிறிதரனின் பாடசாலையாக அறியப்பட்ட கனிஸ்ட்டா மகாவித்தியாலயத்தின் விளையாட்டு பயிற்றுவிக்கும் ஆசிரியர் அலன் நேற்று கிளிநொச்சி அறிவியல் நகர்ப் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். இவர் தற்போது கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த சில நாட்களாகப் பரபரப்புக்குள்ளான இச்செய்தி கிளிநொச்சி பெற்றோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 16 வரையான சிறார்களை அங்கிருந்த மலசலகூடத்திற்கு அழைத்துச்சென்று பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபடுத்தியதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

ஆசிரியர் அலன் பத்து ஆண்டுகளுக்கு முன்னதாக தன்மீதும் பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொண்டதாக தற்சமயம் வெளிநாட்டில் உள்ள ஒருவர் தெரிவித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா ரெஜிவொல்க் என்ற காணொலி ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

ரிக்ரொக் சாளினியால் பாராளுமன்ற சிறப்புரிமையை இழந்த அர்ச்சுனா அதனை மீளக் கோருகின்றார் !

ரிக்ரொக் சாளினியால் பாராளுமன்ற சிறப்புரிமையை இழந்த அர்ச்சுனா அதனை மீளக் கோருகின்றார் !

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, கிளிநொச்சி ரிக் ரொக் சாளினியை விபச்சாரி என்று பாராளுமன்றத்தில் கூறியது தெரிந்ததே. ஒரு பெண்ணை விபச்சாரி என்று கூறியது பாராளுமன்ற விதிமுறைகளுக்கு முரணானது என்றும், இது பெண்களை அவமானப்படுத்தும் செயல் என்றும் பெண்ணியவாதியும் மனித உரிமைவாதியுமான அருளலிங்கம் சுவாஸ்திகா கண்டித்திருந்தார். அத்தோடு இதனை பாராளுமன்ற பதிவுகளிலிருந்து நீக்க வேண்டும் என்றும் சுவாஸ்திகா சுட்டிக்காட்டியிருந்தார்.

இது தொடர்பான விசாரணைகளை பலரும் கோரியிருந்தானர். இந்தப் பின்னணியில் பா உ அர்ச்சுனாவின் பாராளுமன்ற சிறப்புரிமை சிறிதுகாலம் பறிக்கப்பட்டது. அதன்படி அவருடைய பாராளுமன்ற உரைகள் வெளியிடப்படாது. அவரும் அதனை தன்னுடைய காணொலிகளில் பதிவிட முடியாது. இந்தத் தடையை நீக்குமாறு அர்ச்சுனா பாராளுமன்றத்தில் நேற்று எழுத்து மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பா உ அர்ச்சுனாவின் பெண்களுக்கு எதிரான மோசமான கருத்துக்களுக்கு அர்ச்சுனா மட்டும் பொறுப்பல்ல அவருக்கு நிதியை வாரி வழங்கும் புலம்பெயர்ந்த மக்களும் வாக்களித்தவர்களும் கூட, பெண்கள் தொடர்பான ஆணாதிக்க மனநிலையோடு இருப்பதாக சுவஸ்திகா அருளலிங்கம் குற்றம்சாட்டியுள்ளார்.

ரிக்ரொக் சாளினியை அவமானப்படுத்த முயன்று தற்போது அவமானப்பட்டுள்ள பா உ அர்ச்சுனா, தன்னுடைய சிறப்புரிமையை மீள வழங்காவிடில் அதற்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாகவும் சிந்தித்து வருவதாகத் தெரிவித்தள்ளார்.

பா உ அர்ச்சுனாவிற்கு எதிரான குற்றச்சாட்டை பாராளுமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுவந்தவர் பிரதம கொரடாவான விமல் ரத்நாயக்கா. இது தொடர்பில் பாராளுமன்றத்தில் விமல் ரத்நாயக்கா உரையாற்றி இருந்தார். அவர் சுவாஸ்திகா சுட்டிக்காட்டியதை தவறாக சுவாஸ்திகாவை பாராளுமன்றத்தில் அரச்சுனா விபச்சாரி என்று சொன்னதாகக் குறிப்பிட்டார். அதாவது கிளிநொச்சிப் பெண் ரிக்ரொக் சாளினியையே பா உ அர்ச்சுனா பாராளுமன்றத்தில் விபச்சாரி என்று விபரித்தார். அர்ச்சுனா அருளலிங்கம் சுவாஸ்திகாவை பாராளுமன்றத்துக்கு வெளியே விபச்சாரி என்று விபரித்திருந்தார். ஆனால் விமல் ரத்நாயக்கா சாளினி என்று குறிப்பிடாமல் சுவாஸ்திகாவைச் சுட்டிக்காட்டி அர்ச்சுனாவின் சிறப்புரிமையை குறகியகாலம் தடை செய்ய வைத்தார். இதுதொடர்பில் அருளலிங்கம் சுவாஸ்திகா கபிடல் தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணல்:

இந்த அடிப்படையை வைத்துக்கொண்டு பெயரை மாறிச் சாளினி என்று குறிப்பிடுவதற்குப் பதிலாக சுவாஸ்திகா என்று சொன்னதை வைத்துக்கொண்டு தன்மீதான ஒழுங்காற்று நடவடிக்கை தவறு என்றும், தான் தமிழர் என்பதால் திட்டமிட்டமுறையில் தனது குரல் ஒடுக்கப்படுவதாகவும் குறிப்பிட்டு தனது குற்றச்சாட்டை சபாநாயகரிடம் பா உ அர்ச்சுனா இன்று கையளித்தார். அர்ச்சுனா தன்மீது விமர்சனங்கள் குற்றச்சாட்டுக்கள் வருகின்ற போது தான் ஒரு ஒடுக்கப்படுகின்ற இனம், தமிழீழ விடுதலைப் புலிகளை நேசிப்பவர், தேசியத் தலைவரை நேசிப்பவர் என்ற துருப்புச்சீட்டுக்களை வீசி விளையாடுவதில் கைதேர்ந்தவர். இது அவருடைய கபிடல் ரிவி நேர்காணலில் அம்பலமாகி இருந்தது.

யாழ் வேலையற்ற பட்டதாரிகள் வன்னி, மலையகத்தில் பணியாற்றத் தயாரில்லையா ? தமிழகத்திலிருந்து ஆசிரியர்களை வரவழைக்க கோரிக்கை !

யாழ் வேலையற்ற பட்டதாரிகள் வன்னி, மலையகத்தில் பணியாற்றத் தயாரில்லையா ? தமிழகத்திலிருந்து ஆசிரியர்களை வரவழைக்க கோரிக்கை !

வடக்கு – கிழக்கில் ஆயிரக்கணக்கான பட்டதாரிகள் தங்களுக்கு அரசாங்க வேலை வேண்டும் என்று காத்திருக்கின்றனர். ஆனால் வன்னியில், மலையகத்தில் ஆசிரியர்களுக்கான பற்றாக்குறையை நிரப்ப தென்னிந்தியாவில் இருந்து ஆசிரியர்களை கொண்டு வாருங்கள் என்கிறார் முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர் ராதாகிருஷ்ணன். இதே கருத்தை பத்து ஆண்டுகளுக்கு முன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம் கெ சிவாஜிலிங்கம் தேசம்நெற் க்கு வழங்கிய நேர்காணலிலும் தெரிவித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.

“இந்தியாவிலிருந்து ஆசிரியர்களை அழைத்து வந்து பெருந்தோட்டப் பாடசாலைகளில் தமிழ் மொழியில் கற்பிக்க அனுமதிக்க வேண்டும்” என்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் வி. ராதாகிருஷ்ணன் நேற்றையதினம் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

“தோட்டத்துறை பாடசாலைகளில் கற்பிக்க இந்தியாவிலிருந்து ஆசிரியர்களை அழைத்து வருவதற்கான திட்டத்தை நான் முன்வைத்தேன். அரசாங்கம் இதை இப்போது செயல்படுத்தும் என்று நம்புகிறேன். ஆனால் அந்த நேரத்தில் ஜே.வி.பி இந்த நடவடிக்கையை எதிர்த்தது. தற்போதைய அரசாங்கம் இதை இப்போது செயல்படுத்தும் என்று நம்புகிறேன். தோட்டத் துறை பள்ளிகளை மேம்படுத்த இந்தியாவுடன் இணைந்து பணியாற்றுங்கள்” என்று அவர் மேலும் கூறினார்.

இதேவேளை வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஆயிரக்கணக்கான தமிழ் மொழி பட்டதாரிகள் தொழில் வாய்ப்புக்காக காத்திருக்கும் வேளையில் முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சராக செயலாற்றிய எம்.பிய இராதாகிருஷ்ணன் இந்தியாவில் இருந்து தமிழ்மொழி ஆசிரியர்களை கொண்டு வாருங்கள் என நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டிருப்பதானது பல்வேறு கேள்விகளையும் எழுப்புகின்றது.

யாழ்ப்பாணத்தில் போராடும் வேலையில்லாப் பட்டதாரிகள் ஏன் வன்னியில் உள்ள தமிழ் ஆசிரியர்களுக்கான வெற்றிடத்தைக் கூட முடியாதவர்களாக உள்ளனர். இவர்கள் ஏன் மலையகம் சென்று பணியாற்றத் தயாராக இல்லை என்ற கேள்விகள் எழுகின்றது. மேலும் இந்த வேலையற்ற பட்டதாரிகள் பெரும்பாலும் கலைப்பாடங்களை மட்டுமே கற்பிக்கக் கூடியவர்களாகவும் ஏனைய அடிப்படைப் பாடங்களான விஞ்ஞானம், கணிதம், ஆங்கிலம், தமிழ் பாடங்களை கற்பிக்கக்கூடியவர்கள் இல்லை என்றும் தெரியவருகின்றது.

அது மட்டுமல்ல கடந்த காலங்களில் யாழ்ப்பாணத்திலிருந்து மலையகத்துக்கு கற்பிக்கச் சென்றவர்களால் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களால் பிரதி அமைச்சர் வி ராதாகிருஷ்ணன் தென்னிந்தியாவிலிருந்து ஆசிரியர்களை வரவேற்க முனைகின்றாரா என்பதும் கவனிக்கப்பட வேண்டும். அண்மையில் யாழ் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மலையகத்தைச் சேர்ந்த அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரை எழுத்தறவற்றவர் கைநாட்டு கள்ளத் தோணி என்றெல்லாம் இழிவுபடுத்தி இருந்தார். அதேபோல் மற்றுமொரு பா உ எஸ் சிறிதரன் மலையகத் தமிழர்களை வடக்கத்தையான் என விழித்திருந்தார். இவ்வாறான தொடர்ச்சியான இழிவுபடுத்தல்கள் தமிழ் சமூகங்களை தொடர்ந்தும் கூறுபடுத்தி வருகின்றது.

மேலும் இந்த வேலையற்ற பட்டதாரிகளும் அரச வேலை கிடைத்ததும் தாங்கள் செல்கின்ற இடங்களில் மனப்பூர்வமாக பணியாற்றுவது இல்லை என்ற கருத்துக்களும் மேலோங்கியுள்ளது. மலையகத்தில் ஒரு காலும் யாழ்ப்பாணத்தில் ஒரு காலும் வைத்திருப்பார்கள். திங்கள் கிழமை மதியத்திற்கு மேல் பாடசாலைக்குச் சென்று வெள்ளிக்கிழமை மதியத்தோடு யாழ்ப்பாணம் திரும்பிவிடுவார்கள். இவர்கள் தாங்கள் கற்பிக்கின்ற மாணவர்களை முன்னேற்றுவதில் அவ்வளவு அக்கறைகொள்வதில்லை போன்ற குற்றச்சாட்டுகள் இன்றும் உள்ளது.

பாராளுமன்றத்தில் மற்றுமொரு பல்டி அடித்த பா உ அர்ச்சுனா: உள்ளுராட்சி மாகாணசபை தேர்தலுக்கான பிரச்சாரத்தை ஆரம்பித்தார் !

பாராளுமன்றத்தில் மற்றுமொரு பல்டி அடித்த பா உ அர்ச்சுனா: உள்ளுராட்சி மாகாணசபை தேர்தலுக்கான பிரச்சாரத்தை ஆரம்பித்தார் !

 

“தமிழர்களுக்கு அனுர குமார பிச்சை போடத் தேவையில்லை. பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குங்கள் நாங்கள் பிச்சை தருகிறோம் உங்களுக்கு” தனது உள்ளுராட்சி மாகாணசபைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை பாராளுமன்ற வரவு செலவுத்திட்ட விவாத்திலேயே ஆரம்பித்து விட்டார் பா. உ அர்ச்சுனா. வடக்குக்குகான நிதி ஒதுக்கீட்டை வரவேற்றுப் பேசிய அர்ச்சுனா நேற்றைய பாராளுமன்ற விவாதத்தில் தடாலடியாக பல்டி அடித்து எங்களுக்கு பிச்சை வேண்டாம், உங்களுக்கு நாங்கள் பிச்சை போடுகிறோம் என்றார்.

பயங்கரவாதத் தடை சட்டத்தை நீக்கினால் நாட்டிற்கு பில்லியன் கணக்கான முதலீடுகளை எமது சகோதரர்கள் கொண்டு வருவார்கள் என நாடாளுமன்றத்தின் நேற்றைய அமர்வில் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். அர்ச்சுனா மேலும் தெரிவித்துள்ளதாவது, “மொத்த மூலதனச் செலவில் வடக்கு கிழக்கிற்கு ஒதுக்கப்பட்ட நிதி 0.1 வீதம் மட்டுமே ஆகும். இது அநுர அரசாங்கம் தமிழர்களுக்கு போட்ட பிச்சை. 45,000 தமிழர்களை கொன்றுவிட்டு இதுவே எங்களுக்கு போடும் பிச்சை.

இதேவேளை, சுகாதாரத் துறையில் வடக்கிற்கு 0.6 வீதமும் கிழக்கிற்கு 0.8 வீதமும் ஒதுக்கியுள்ளீர்கள். முடிந்தால் பயங்கரவாதத் தடை சட்டத்தை நீக்குங்கள். பில்லியன் கணக்கான பணத்தை நாம் நாட்டிற்குள் கொண்டு வருகின்றோம். நான் இந்த அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் மீது மிகுந்த எதிர்பார்ப்பு வைத்திருந்தேன். ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது” என்றார்.

அடிக்கடி நிறம்மாறும் அர்ச்சுனா விழுகின்ற பக்கம் குறிவைக்கிறார் என்கிறார் அரசியல் ஆய்வாளர் வி சிவலிங்கம். பா உ அர்ச்சுனா வெளியிடும் புள்ளிவிபரங்கள் அவர்களுக்கு ஏற்றவகையில் திரிபுபடுத்தப்பட்டுள்ளது. அதில் உள்ளடக்கம் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை எனத் தெரிவித்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் காலத்தில் 2009 மே 17 வரை சர்வதேச அளவில் புலி உறுப்பினர்களிடம் 300 பில்லியன் டொலர் அசையும் அசையாச் சொத்துக்கள் இருந்தது. அதிலிருந்து ஆண்டுதோறும் 300 மில்லியன் வருமானம் வந்தகொண்டிருந்தது. அனால் 2009 மே18 இல் தலைவர் வந்து கேட்டால் தான் தருவோம் என்று பா உ அர்ச்சுனா குறிப்பிடும் சகோதரர்கள் அறிவித்துவிட்டார்கள்.

புலம்பெயர் தமிழர்கள் தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு வழங்கிய அத்தனை பில்லியன் சொத்துக்களும் ஒரே இரவில் காணாமல் போனது என்கிறார் அரசியல் செயற்பாட்டாளர் ஆய்வாளர் சோலையூரான். முடிந்தால் அர்ச்சுனா வேறு யாருக்கும் பிச்சை போட வேண்டாம் அவர் நேசிக்கும் தலைவனுடைய பாசறையில் வழந்தவர்கள் முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டு 15 வருடங்கள் துன்பத்தில் உளல்கின்றார்கள் அவர்களுக் உதவட்டும். அர்ச்சுனா தன்னுடைய சகோதரர்களைக் கேட்டு உதவச் சொல்வாரா? எனக் கேள்வி எழுப்புகின்றார் பாரிஸில் வாழும் சோலையூரான்.