பாதாள உலக குழுக்கள்

பாதாள உலக குழுக்கள்

இல்லாத பிரச்சனையை உருவாக்கி நாட்டின் சுற்றுலா பொருளாதாரத்தை அழிக்க முனையும் சஜித் பிரேமதாச !

இல்லாத பிரச்சனையை உருவாக்கி நாட்டின் சுற்றுலா பொருளாதாரத்தை அழிக்க முனையும் சஜித் பிரேமதாச !
கொலைக்கலாசார போக்கு நாட்டின் தேசியப் பாதுகாப்பிற்குப் பிரச்சினையாக காணப்படுதிறது. குற்றவியல் சட்டத்தைப் பயன்படுத்தி இந்த குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்தி எடுக்கும் நடவடிக்கைகள் என்ன..? எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த நிலைமை பொருளாதாரத்தையும் பாதிப்பதாக அமையும் எனவும் இது தொடர்பில் கூடிய கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த நிலையில், இதற்குப் பதிலளித்த சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க, தேசியப் பாதுகாப்பு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையிலும் எதிர்க்கட்சி தலைவர் மாத்திரமே இது குறித்து தொடர்ச்சியாகக் கேள்வி எழுப்பி வருவதாகக் கூறியுள்ளார். தேசியப் பாதுகாப்பு அச்சுறுத்தல் எனக்கூறி கொண்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையைத் தடுப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பலமுறை பதிலளிக்கப்பட்டுள்ள ஒரு கேள்வியைத் தொடர்ந்தும் நாடாளுமன்றத்தில் எழுப்புவதால் எந்த பயனும் இல்லை எனச் சபை முதல்வர் சுட்டிக்காட்டியுள்ளார்.