பாடசாலை மாணவி துஷ்பிரயோகம்

பாடசாலை மாணவி துஷ்பிரயோகம்

பாலியல் வன்கொடுமை புரிந்த ஆசிரியர் கைது !

பாலியல் வன்கொடுமை புரிந்த ஆசிரியர் கைது !

 

பொலன்னறுவை, அரலகங்வில பிரதேசத்தில் எட்டு பாடசாலை மாணவிகளை பல தடவைகள் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் கணித ஆசிரியர் ஒருவர் அரலகங்வில பொலிஸாரால் நேற்று வெள்ளிக்கிழமை கைதாகியுள்ளார். இந்த விடயம் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவல்கள் அடிப்படையில் இக்கைது இடம்பெற்றுள்ளது.

இதேமாதிரியான ஒரு சம்பவம் கடந்த 2022ஆம் ஆண்டு முல்லைத்தீவு மாவட்டத்திலும் பதிவாகியிருந்தது. அம் மாவட்டத்தின் பாடசாலை ஒன்றின் கணித பாட ஆசிரியர் தச்துதன் தன்னுடைய தனியார் வகுப்பிற்கு மாணவிகள் மீது பாலியல் துன்புறுத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தமை அம்பலமாகி கைது செய்யப்பட்டார். இதனை தேசம்நெற் அப்போது பகிரங்கப்படுத்தியிருந்தது. ஆனால் சம்பந்தப்பட்ட ஆசிரியர் ஓர் சில மாதங்களிலேயே தன்னுடைய பின்னணி மற்றும் செல்வாக்கினை பயன்படுத்தி தண்டனையிலிருந்து தப்பி விடுதலையாகி விட்டார். இப்போது மீண்டும் ஆசிரியர் சேவையில் உள்ளார். அவருடைய தனியார் வகுப்புகளுக்கு பெண் பிள்ளைகளை பெற்றோர் தொடர்ந்தும் அனுப்பிக் கொண்டு தான் உள்ளனர். இந்த விடயத்தில் கூட பாதிக்கப்பட்ட பெண் மாணவிகளின் நடத்தையே விமர்சிக்கப்பட்டது.

பாடசாலை ஆசிரியர்கள் தொடங்கி பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் வரை பல இடங்களில் சுய ஒழுக்கமும் கட்டுப்பாடும் இல்லாமல் அதிகார துஸ்பிரயோகம் செய்து தம்மிடம் கற்கும் மாணவிகள் மீது பாலியல் சுரண்டல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு பாலியல் குற்றங்களில் ஈடுபடுவர்கள் சட்டத்தின் ஓட்டைகளை பயன்படுத்தி தப்பி விடுகின்றனர். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் சமூகத்தின் பார்வை மற்றும் மனப்பாங்கும் இதற்கு ஒரு காரணமாக உள்ளது .

பாதிக்கப்பட்ட பெண்கள் மீதே பழியை சுமத்தும் நிலை தான் இன்றுவரை காணப்படுகிறது.

இதேவேளை நேற்றைய தினம் சாவகச்சேரியில் மகளிர் தின நிகழ்வில் பங்கேற்றிருந்த வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன் பாலியல் சுரண்டல்கள் தொடர்பான குற்றங்களில் ஈடுபடுவோர் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.