பாடசாலை மாணவி ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு !
மட்டக்களப்பு கிரான்குளம் பாடசாலை ஒன்றில் க.பொ.த சாதாரண தரத்தில் கல்விகற்று வரும் 16 வயதுடைய மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் வெள்ளி ஏப்ரல் 25 ஆம் திகதி பிற்பகல் 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர். குறித்த மாணவி வழமைபோல சம்பவ தினம் பாடசாலைக்குச் சென்று கற்றல் நடவடிக்கையில் ஈடுபட்டுவந்து நிலையில் வகுப்பறையில் திடீரென மயங்கி வீழ்ந்துள்ளார்.
இதனையடுத்து மாணவியை செட்டிபாளையம் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்று,
அங்கிருந்து களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
