பல்கலைக்கழக மாணவன் தற்கொலை ! விபரீதத்தில் முடிந்த விளையாட்டு !
சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பொறியியல் பீடத்தில் இரண்டாம் ஆண்டில் கற்கும் 23 வயதுடைய சரித் தில்ஷான் என்ற மாணவன் தற்கொலை செய்து கொண்டார். பகிடி வதையால் அவமானம் தாங்க முடியாது மனமுடைந்த மாணவர் ஏப்ரல் 29 ஆம் திகதி மாலை தற்கொலை செய்து கொண்டார். கடந்த 27 ஆம் திகதி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது அவருக்கு ஏற்பட்ட தாங்க முடியாத அவமானமே அவரது தற்கொலைக்கு வழிவகுத்ததாக அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதேவேளை, கடந்த இரண்டு வருடங்களாக சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்களால் தனது மகன் பல்வேறு வகையான துன்புறுத்தல்களுக்கு ஆளானதாக சரித்தின் தந்தை குற்றம் சாட்டினர்.
பல்கலைக்கழகங்களில் மாணவர்களின் இவ்வாறான வதையை பகிடி வதை என்று அழைப்பதே தவறு என்று இது மோசமான வதை எனவும் கொழும்புப் பல்கலைக்கழகப் பேராசிரியர் கோபாலப்பிள்ளை அமிர்தலிங்கம் லண்டன் தமிழ் தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்தார்.
