தாய்கும் நாய்க்கும் முன்னால் காதலி கொலை மிரட்டல் – இலங்கைப் பெண்ணுக்கு நியூசிலாந்து புகழிடம்
இருபாலின ஈர்ப்புக்கொண்ட இலங்கைப் பெண்ணொருவருக்கு நியூசிலாந்து புகழிடம் அளித்துள்ளது. இலங்கை இராணுவ சிப்பாயான அவரது முன்னாள் காதலி அவரது தாயையும் நாயையையும் துப்பாக்கிமுனையில் மிரட்டியதால், உயிர் அச்சுறுத்தல் காரணமாக அவர் தஞ்சம் கோரியதாக தெரியவருகின்றது.
புகழிடக்கோரிக்கையில் குறித்த பெண் தெரிவித்ததன்படி,
அவர் பதின்மவயதில் முன்னாள் காதலியுடன் ரகசிய உறவில் இருந்துள்ளார். 2017ஆம் ஆண்டு இந்த விடயத்தை கண்டுபிடித்த அவரது தாய் அவருக்கு வேறு ஆணுடன் கட்டாயத்திருமணத்தை ஏற்பாடுசெய்துள்ளார். எனினும், அவரது முன்னாள் காதலி அதை ஏற்க மறுத்துவிட்டார்.
பின்னர், 2021ஆம் ஆண்டு, முன்னாள் காதலி இராணுவத்தில் சேர்ந்தபின், மூன்று இராணுவ அதிகாரிகளுடன் வீட்டுக்குள் புகுந்து துப்பாக்கிமுனையில் அவரது தாயையும் அவர்கள் வளர்க்கும் நாயையும் மிரட்டியுள்ளார். அந்த தருணத்தில் குறித்த பெண் வீட்டில் இருக்கவில்லை. பின்னர் அவர் முன்னாள் காதலியின் தாக்குதலிலிருந்து தப்பிக்கவும் கல்விக்காகவும் நியூசிலாந்துக்கு குடிபெயர்ந்திருந்தார். பின்னர், தனது பாலின அடையாளத்தால் இலங்கையில் உயிர் அச்சுறுத்தலுக்கு உள்ளது என நியூசிலாந்தில் தஞ்சம் கோரியுள்ளார். அவரது தஞ்சக்கோரிக்கையை பரிசீலித்த நியூசிலாந்து அதைக் ஏற்றுக்கொண்டு புகழிடம் அளித்துள்ளது
