தமிழ் அடையாளங்களுடன் தமிழர்களாக வாழ வீட்டிற்கு வாக்களிக்க முன்னாள் எம்பி சார்ள்ஸ் கோரிக்கை !
தமிழர்களாகிய நாங்கள் எங்கள் அடையாளங்களுடன் தமிழர்களாக வாழ வேண்டும். எமது வரலாற்றை கொண்டு செல்ல வேண்டிய கடமை எங்களுக்கு உள்ளது. எனவே மாற்றுக் கட்சிகளுக்கு வாக்களிக்காமல் வீட்டுச் சின்னத்திற்கு தமிழரசுக் கட்சிக்கு வாக்களிக்கும்படி வன்னி மாவட்ட முன்னாள் எம்பி இ. சாள்ர்ஸ் நிர்மலநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நானாட்டான் உள்ளூராட்சி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட எம்பி சாள்ர்ஸ் நாட்டில் ஜனாதிபதியாக அநுரகுமார திஸ்ஸநாயக்க இருக்கட்டும். ஆனால் உள்ளூராட்சி என்பது எமது தமிழரசு. அங்கே தமிழர்களாகிய நாங்களே எங்களை ஆள வேண்டும். அப்போது தான் எங்களுடைய அடையாளங்களை பாதுகாக்க முடியும். ஆகவே தமிழர்களாகிய நாங்கள் எங்களுக்கே வாக்களிக்க வேண்டும் என மக்களுக்கு அறிவுரை வழங்கினார்.
